Showing posts with label Athana Raga. Show all posts
Showing posts with label Athana Raga. Show all posts

Tuesday, November 24, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீப ப்ரிய - ராகம் அடா2ணா - Sripa Priya - Raga Athana

பல்லவி
ஸ்ரீப ப்ரிய 1ஸங்கீ3தோபாஸன
சேயவே ஓ மனஸா

அனுபல்லவி
தாபஸ ஜன மானஸ த4னமு 2த்ரி-
தாப
ரஹித ஸப்த ஸ்வர சாரி (ஸ்ரீ)

சரணம்
3ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு
மஞ்ஜுளமகு3னவதாரமுலெத்தி
4மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு
மஹிம தெலியு த்யாக3ராஜ நுதுட3கு3 (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, மாமணாளனுக்கு விருப்பமான இசை வழிபாட்டினைச் செய்வாய்;

  • தவசிகளின் உள்ளச் செல்வமவன்; முவ்வெம்மைகளற்றவன்; ஏழு சுரங்களிலுறைவோன்.


  • களிப்பூட்டும் இராகங்கள், எழிலான வடிவங்களெடுத்து, சதங்கைகள் கலீரென, நடமிடும் பெருமை, தியாகராசன் அறிவான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ப/ ப்ரிய/ ஸங்கீ3த/-உபாஸன/
மா/ மணாளனுக்கு/ விருப்பமான/ இசை/ வழிபாட்டினை/

சேயவே/ ஓ மனஸா/
செய்வாய்/ ஏ மனமே/


அனுபல்லவி
தாபஸ ஜன/ மானஸ/ த4னமு/
தவசிகளின்/ உள்ள/ செல்வம் (அவன்)/

த்ரி-தாப/ ரஹித/ ஸப்த/ ஸ்வர/ சாரி/ (ஸ்ரீ)
முவ்வெம்மைகள்/ அற்ற/ ஏழு/ சுரங்களில்/ உறையும்/ மாமணாளனுக்கு...


சரணம்
ரஞ்ஜிம்ப ஜேஸெடு3/ ராக3ம்பு3லு/
களிப்பூட்டும்/ இராகங்கள்/

மஞ்ஜுளமகு3/-அவதாரமுலு/-எத்தி/
எழிலான/ வடிவங்கள்/ எடுத்து/

மஞ்ஜீரமு/ க4ல்லனி/ நடிஞ்சு/
சதங்கைகள்/ கலீரென/ நடமிடும்/

மஹிம/ தெலியு/ த்யாக3ராஜ/ நுதுட3கு3/ (ஸ்ரீ)
பெருமை/ அறியும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ மாமணாளனுக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஸங்கீ3தோபாஸன - நாதோபாஸனை என்றும் அழைக்கப்படும் இசை வழிபாடு. இது குறித்து மேற்கொண்டு விவரங்கள் அறிய நோக்கவும் - நாதோபாஸன-1; நாதோபாஸன-2

2 - த்ரி-தாப - முவ்வெம்மைகள் - அத்தியாத்துமிகம், ஆதி-தெய்வீகம், ஆதி-பௌதீகம்.

3 - ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு - களிப்பூட்டும் இராகங்கள் - 'ரஞ்ஜயதி இதி ராக3:' (களிப்பூட்டுவது இராகமாகும்) என்பது பழங்காலத்திலிருந்து வழக்கிலுள்ள பொருளாகும். இதனை, தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார். இராகம் பற்றிய விளக்கங்கள் அறிய - இராகம்-1; இராகம்-2

Top

விளக்கம்
1 - உபாஸன - இதற்கு 'வழிபாடு' என்ற சொல்லுக்கும் மிகுதியான பொருளாகும்.

4 - மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு - சதங்கைகள் கலீரென நடிக்கும். அனைவரும் பங்கேற்கும் பாகவத வழிபாட்டு முறையினைக் குறிக்கும்; இன்றைய கச்சேரி முறைக்கு அப்பாற்பட்டதாகும்.

Top


Updated on 24 Nov 2009

Monday, November 23, 2009

தியாகராஜ கிருதி - ராரா ரகு4வீர - ராகம் அடா2ணா - Raara Raghuvira - Raga Athana

பல்லவி
ராரா ரகு4வீர வெண்ட ராரா தோடு3 (ராரா)

சரணம்
சரணம் 1
அனுதி3னமு நினு மனஸுன கனுகொ3னி
ஆனந்த3மாயெ த3யாளோ (ராரா)


சரணம் 2
ஸகல ஸுஜனுலு கொலுசு ஸன்னிதி4 கனி
சல்லனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 3
பலு வித4 செடு3 து3ர்விஷய
சயமுலெட3பா3யனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 4
தொட3ரியடு33டு3கு3கிதி3 பு3த்3தி4யனி
ஸந்தோஷமாயெ த3யாளோ (ராரா)


சரணம் 5
ஸுமுக2முனனு திலகமு செலக33 கனி
ஸொக்கனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 6
1கவகொ3னி ப4வமுன பொரலக நீது3
கார்யமாயெ த3யாளோ (ராரா)


சரணம் 7
31ரத2 தனய ஸு14 சரித பாலித
த்யாக3ராஜ த3யாளோ (ராரா)


பொருள் - சுருக்கம்
இரகுவீரா! தயாளா! தசரதன் மைந்தா! நற்சரிதத்தோனே! தியாகராசனைப் பேணுவோனே!
  • வாருமய்யா, உடன் வாருமய்யா, துணையாக.

    • அனுதினமும் உன்னை மனதினில் கண்டுகொண்டு, ஆனந்தமாயிற்று.

    • அனைத்து நல்லோரும் தொழும் சன்னிதியைக் கண்டு (உள்ளம்) குளிர்ந்தது.

    • பல விதமான, கேடுறும், தீய புலன் நாட்டங்களைக் கைவிட முடிந்தது.

    • (பின்) தொடர்ந்து, ஒவ்வோரடியிலும் (நீ) 'இஃதுகந்தது' என, மகிழ்வாகியது.

    • (உனது) இனிய முகத்தினில் திலகம் திகழக் கண்டு சொக்கினேன்.

    • தொந்தத்தினில் சிக்கி, பிறவிக்கடலினில் உழலாது, உனது பணிக்கானேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ ரகு4வீர/ வெண்ட/ ராரா/ தோடு3/ (ராரா)
வாருமய்யா/ இரகுவீரா/ உடன்/ வாருமய்யா/ துணையாக/


சரணம்
சரணம் 1
அனுதி3னமு/ நினு/ மனஸுன/ கனுகொ3னி/
அனுதினமும்/ உன்னை/ மனதினில்/ கண்டுகொண்டு/

ஆனந்த3மாயெ/ த3யாளோ/ (ராரா)
ஆனந்தமாயிற்று/ தயாளா/


சரணம் 2
ஸகல/ ஸுஜனுலு/ கொலுசு/ ஸன்னிதி4/ கனி/
அனைத்து/ நல்லோரும்/ தொழும்/ சன்னிதியை/ கண்டு/

சல்லனாயெ/ த3யாளோ/ (ராரா)
(உள்ளம்) குளிர்ந்தது/ தயாளா/


சரணம் 3
பலு/ வித4/ செடு3/ து3ர்/-விஷய சயமுல/-
பல/ விதமான/ கேடுறும்/ தீய/ புலன் நாட்டங்களை/

எட3பா3யனாயெ/ த3யாளோ/ (ராரா)
கைவிட முடிந்தது/ தயாளா/


சரணம் 4
தொட3ரி/-அடு33டு3கு3கு/-இதி3/ பு3த்3தி4/-அனி/
(பின்) தொடர்ந்து/ ஒவ்வோரடியிலும்/ (நீ) 'இஃது/ உகந்தது'/ என/

ஸந்தோஷமாயெ/ த3யாளோ/ (ராரா)
மகிழ்வாகியது/ தயாளா/


சரணம் 5
ஸுமுக2முனனு/ திலகமு/ செலக33/ கனி/
(உனது) இனிய முகத்தினில்/ திலகம்/ திகழ/ கண்டு/

ஸொக்கனாயெ/ த3யாளோ/ (ராரா)
சொக்கினேன்/ தயாளா/


சரணம் 6
கவகொ3னி/ ப4வமுன/ பொரலக/ நீது3/
தொந்தத்தினில் சிக்கி/ பிறவிக்கடலினில்/ உழலாது/ உனது/

கார்யமாயெ/ த3யாளோ/ (ராரா)
பணிக்கானேன்/ தயாளா/


சரணம் 7
31ரத2/ தனய/ ஸு14 சரித/ பாலித/
தசரதன்/ மைந்தா/ நற்சரிதத்தோனே/ பேணுவோனே/

த்யாக3ராஜ/ த3யாளோ/ (ராரா)
தியாகராசனை/ தயாளா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - கவ - தொந்தம் - இரட்டை - இன்பம்-துன்பம் முதலானவை. இது குறித்து கீதையில் (5-வது அத்தியாயம், செய்யுள் 3) கண்ணன் கூறுவது -

"விருப்பு, வெறுப்பற்றவன் எவனோ, அவன், 'நித்தியத் துறவி' என அறியப்படுவான்; ஏனெனில், ஓ பெருந்தோள்களோனே! (இன்பம்-துன்பம் ஆகிய) இரட்டைகளினின்று விடுபட்டு, எளிதாக, (பிறவியெனும்) தளையினின்றும் அவன் விடுவிக்கப்பெறுகின்றான்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

விளக்கம்



Updated on 23 Nov 2009

Sunday, November 22, 2009

தியாகராஜ கிருதி - ராம நாமமு ஜன்ம - ராகம் அடா2ணா - Rama Namamu Janma - Raga Athana

பல்லவி
ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு
தாமஸமு ஸேயக ப4ஜிம்பவே மனஸா

அனுபல்லவி
ஸோமாருண நேத்ருடை3ன ஸ்ரீ
ராம சந்த்3ருனிகி ஸரியெவ்வருரா (ராம)

சரணம்
காம கோடி ரூப ராம சந்த்3
காமித ப2லத3 ராம சந்த்3
ஞான ஸ்வரூப ராம சந்த்3
த்யாக3ராஜார்சித ராம சந்த்3ர (ராம)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராம நாமம் பிறவியினைக் காக்கும் மந்திரமாகும்;
  • தாமதிக்காது பஜிப்பாய்;

  • சோமன், அருணனைக் கண்களாயுடைய இராம சந்திரனுக்கு ஈடெவரடா?

  • காம கோடி உருவ இராம சந்திரா!
  • விழைந்த பயனருளும் இராம சந்திரா!
  • மெய்யறிவு வடிவ இராம சந்திரா!
  • தியாகராசன் தொழும் இராம சந்திரா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நாமமு/ ஜன்ம/ ரக்ஷக/ மந்த்ரமு/
இராம/ நாமம்/ பிறவியினை/ காக்கும்/ மந்திரமாகும்/

தாமஸமு ஸேயக/ ப4ஜிம்பவே/ மனஸா/
தாமதிக்காது/ பஜிப்பாய்/ மனமே/


அனுபல்லவி
ஸோம/-அருண/ நேத்ருடை3ன/ ஸ்ரீ/
சோமன்/ அருணனை/ கண்களாயுடைய/ ஸ்ரீ/

ராம/ சந்த்3ருனிகி/ ஸரி/-எவ்வருரா/ (ராம)
ராம/ சந்திரனுக்கு/ ஈடு/ எவரடா/


சரணம்
காம/ கோடி/ ரூப/ ராம/ சந்த்3ர/
காம/ கோடி/ உருவ/ இராம/ சந்திரா/

காமித/ ப2லத3/ ராம/ சந்த்3ர/
விழைந்த/ பயனருளும்/ இராம/ சந்திரா/

ஞான/ ஸ்வரூப/ ராம/ சந்த்3ர/
மெய்யறிவு/ வடிவ/ இராம/ சந்திரா/

த்யாக3ராஜ/-அர்சித/ ராம/ சந்த்3ர/ (ராம)
தியாகராசன்/ தொழும்/ இராம/ சந்திரா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், இப்பாடல், தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்பது ஐயத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பாடல் மேற்கூறிய புத்தகத்தைத் தவிர வேறு புத்தகங்களில் காணப்படவில்லை.

பிறவியினைக் காக்கும் - பிறந்த பயன் வீணாகாது காக்கும் என
சோமன் - மதி
அருணன் - விடியற்காலைப் பரிதி
காம கோடி உருவம் - மதனனைப் போன்ற சிறந்த உருவம்

Top


Updated on 22 Nov 2009

Saturday, November 21, 2009

தியாகராஜ கிருதி - மும்மூர்துலு - ராகம் அடா2ணா - Mummoortulu - Raga Athana

பல்லவி
மும்மூர்துலு கு3மி கூடி3 பொக3டே3 முச்சட வினுகோரே

அனுபல்லவி
ஸம்மதிக3 ராஜு கொடு3கனக3 வினி
ஸம்ஸ1யமு தீரக ஸ்ரீ ராமுனி (மு)

சரணம்
ரோஸமுதோ ரகு4ராமுனி கு3ணமுல
ரூடி33 தம கு3ணமுலனடு வ்ராஸி
த்ராஸுனனிட3 ஸரி நில்வ லேத3னி
1த்யாக3ராஜ நுதுடெ3வடோ3யனுசுனு (மு)


பொருள் - சுருக்கம்
  • மும்மூர்த்திகள் ஒருமித்து, இராமனை, முழுமனதுடன், புகழும், பேச்சினைக் கேளீரே!
    • அரச குமாரனென கேள்விப்பட்டு,
    • ஐயம் தீராது, நாணமுற்று,
    • இரகுராமனின் குணங்களையும், உலகறிந்த தமது குணங்களையும் எழுதி யங்கு
    • தராசிலிட, (தட்டுகள்) சரி நிற்கவில்லையென,
    • 'தியாகராசனால் போற்றப் பெற்றோன் யாரே' யென (வியந்து),

  • மும்மூர்த்திகள் ஒருமித்து, இராமனை, முழுமனதுடன், புகழும் பேச்சினைக் கேளீரே!


    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    மும்மூர்துலு/ கு3மி கூடி3/ பொக3டே3/ முச்சட/ வினுகோரே/
    மும்மூர்த்திகள்/ ஒருமித்து/ புகழும்/ பேச்சினை/ கேளீரே/


    அனுபல்லவி
    ஸம்மதிக3/ ராஜு/ கொடு3கு/-அனக3/ வினி/
    முழுமனதுடன்/ அரச/ குமாரன்/ என/ கேள்விப்பட்டு/

    ஸம்ஸ1யமு/ தீரக/ ஸ்ரீ ராமுனி/ (மு)
    ஐயம்/ தீராது/ ஸ்ரீ ராமனை/ மும்மூர்த்திகள்...


    சரணம்
    ரோஸமுதோ/ ரகு4ராமுனி/ கு3ணமுல/
    நாணமுற்று/ இரகுராமனின்/ குணங்களையும்/

    ரூடி33/ தம/ கு3ணமுலனு/-அடு/ வ்ராஸி/
    உலகறிந்த/ தமது/ குணங்களையும்/ அங்கு/ எழுதி/

    த்ராஸுன/-இட3/ ஸரி/ நில்வ லேது3/-அனி/
    தராசில்/ இட/ (தட்டுகள்) சரி/ நிற்கவில்லை/ என/

    த்யாக3ராஜ/ நுதுடு3/-எவடோ3/-அனுசுனு/ (மு)
    தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ யாரே/ என (வியந்து)/ மும்மூர்த்திகள்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்

    விளக்கம்
    1 - த்யாக3ராஜ நுதுடெ3வடோ3 - தியாகராசனால் போற்றப் பெற்றோன் யாரே - தியாகராஜர், தமது, 'எவரனி நிர்ணயிஞ்சிரி' என்ற கீர்த்தனையில், இதே கேள்வியினைக் கேட்டு, விடையும் தருகின்றார்.

    அனுபல்லவி மட்டும் தனியாக, பொருள் நிறைவுறவில்லை. அனுபல்லவியுடன் சரணத்தினையும் சேர்த்தே முழுமையான பொருள் கொள்ளவியலும்.

    Top


    Updated on 21 Nov 2009
  • Friday, November 20, 2009

    தியாகராஜ கிருதி - ப4ஜன ஸேய ராதா3 - ராகம் அடா2ணா - Bhajana Seya Raada - Raga Athana

    பல்லவி
    4ஜன ஸேய ராதா3 ராம

    அனுபல்லவி
    அஜ ருத்3ராது3லகு ஸததமாத்ம மந்த்ரமைன ராம (ப4)

    சரணம்
    சரணம் 1
    கரகு33ங்கா3ரு வல்வ கடினெந்தோ மெரயக3
    சிரு நவ்வுலு-க31முக2முனு சிந்திஞ்சி சிந்திஞ்சி (ப4)


    சரணம் 2
    அருணாபா44ரமுனு ஸுருசிர த3ந்தாவளினி
    மெரயு கபோல யுக3முனு நிரதமுனனு தலசி தலசி (ப4)


    சரணம் 3
    பா3கு33 மானஸ ப4வ ஸாக3ரமுனனு தரிம்ப
    த்யாக3ராஜு மனவினி வினி தாரகமகு3 ராம நாம (ப4)


    பொருள் - சுருக்கம்
    மனமே!
    • இராம பஜனை செய்யலாகாதா?

      • பிறவிக் கடலினைக் கடக்க, தியாகராசனின் வேண்டுகோளினை யேற்று,
      • பிரமன், உருத்திராதியருக்கு, எவ்வமயமும், தமது மந்திரமான,

    • தாரகமாகிய, இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?

      • உருக்கிய பொன்னாடை இடையில் மிக்கொளிர, புன்சிரிப்பு திகழும் முகத்தினைச் சிந்தித்துச் சிந்தித்து,
      • மிளிரும் சிவந்த உதடுகளை, அழகிய பல்வரிசைகளை, பளபளக்கும் கன்ன இணையினை, என்றும் நினைந்து நினைந்து,

    • இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    4ஜன/ ஸேய ராதா3/ ராம/
    பஜனை/ செய்யலாகாதா/ இராம/


    அனுபல்லவி
    அஜ/ ருத்3ர-ஆது3லகு/ ஸததமு/-ஆத்ம/ மந்த்ரமைன/ ராம/ (ப4)
    பிரமன்/ உருத்திராதியருக்கு/ எவ்வமயமும்/ தமது/ மந்திரமான/ இராம/ பஜனை...


    சரணம்
    சரணம் 1
    கரகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கடினி/-எந்தோ/ மெரயக3/
    உருக்கிய/ பொன்/ ஆடை/ இடையில்/ மிக்கு/ ஒளிர/

    சிரு நவ்வுலு/-க3ல/ முக2முனு/ சிந்திஞ்சி/ சிந்திஞ்சி/ (ப4)
    புன்சிரிப்பு/ திகழும்/ முகத்தினை/ சிந்தித்து/ சிந்தித்து/ (இராம) பஜனை...


    சரணம் 2
    அருண/-ஆப4/-அத4ரமுனு/ ஸுருசிர/ த3ந்த/-ஆவளினி/
    சிவந்த/ மிளிரும்/ உதடுகளை/ அழகிய/ பல்/ வரிசைகளை/

    மெரயு/ கபோல/ யுக3முனு/ நிரதமுனனு/ தலசி/ தலசி/ (ப4)
    பளபளக்கும்/ கன்ன/ இணையினை/ என்றும்/ நினைந்து/ நினைந்து/ (இராம) பஜனை...


    சரணம் 3
    பா3கு33/ மானஸ/ ப4வ/ ஸாக3ரமுனனு/ தரிம்ப/
    நன்கு/ மனமே/ பிறவி/ கடலினை/ கடக்க/

    த்யாக3ராஜு/ மனவினி/ வினி/ தாரகமகு3/ ராம/ நாம/ (ப4)
    தியாகராசனின்/ வேண்டுகோளினை/ யேற்று/ தாரகமாகிய/ இராம/ நாமத்தினை/ பஜனை...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - முக2முனு - மொக4முனு : 'முக2' என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லின் தெலுங்கு வடிவம் 'மொக2மு' ஆகும்.

    மேற்கோள்கள்

    விளக்கம்
    தாரகம் - படகு - பிரணவத்திற்கீடான இராம நாமம்

    Top


    Updated on 20 Nov 2009

    Thursday, November 19, 2009

    தியாகராஜ கிருதி - நாரத3 கா3ன - ராகம் அடா2ணா - Narada Gana - Raga Athana

    பல்லவி
    நாரத3 கா3ன லோல நத ஜன பரிபால

    அனுபல்லவி
    நீரத3 ஸம நீல நிருபம கு3ண ஸீ1ல (நா)

    சரணம்
    1நீவு லேகயே தனுவுலு நிரதமுகா3 நடு3சுனு
    நீவு லேகயே தருவுலு நிக்கமுகா3 மொலுசுனு
    நீவு லேகயே வானலு நித்யமுகா3 2குரியுனு
    நீவு லேக த்யாக3ராஜு நீ கு3ணமுலனெடு பாடு3னு (நா)


    பொருள் - சுருக்கம்
    நாரதரின் இசை விரும்பியே! பணிந்தோரைப் பேணுவோனே! கார்முகில் நிகர் நீலவண்ணா! உவமையற்ற குணசீலனே!
    • நீயின்றி எவ்வுடல்கள் என்றும் நடக்கும்?

    • நீயின்றி எம்மரங்கள் திண்ணமாக வளரும்?

    • நீயின்றி எம்மாரிகள் நிலையாகப் பெய்யும்?

    • நீயின்றி தியாகராசன் உனது குணங்களையெங்ஙனம் பாடுவான்?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    நாரத3/ கா3ன/ லோல/ நத ஜன/ பரிபால/
    நாரதரின்/ இசை/ விரும்பியே/ பணிந்தோரை/ பேணுவோனே/


    அனுபல்லவி
    நீரத3/ ஸம/ நீல/ நிருபம/ கு3ண/ ஸீ1ல/ (நா)
    கார்முகில்/ நிகர்/ நீலவண்ணா/ உவமையற்ற/ குண/ சீலனே/


    சரணம்
    நீவு/ லேக/-ஏ தனுவுலு/ நிரதமுகா3/ நடு3சுனு/
    நீ/ இன்றி/ எவ்வுடல்கள்/ என்றும்/ நடக்கும்/

    நீவு/ லேக/-ஏ தருவுலு/ நிக்கமுகா3/ மொலுசுனு/
    நீ/ இன்றி/ எம்மரங்கள்/ திண்ணமாக/ வளரும்/

    நீவு/ லேக/-ஏ வானலு/ நித்யமுகா3/ குரியுனு/
    நீ/ இன்றி/ எம்மாரிகள்/ நிலையாக/ பெய்யும்/

    நீவு/ லேக/ த்யாக3ராஜு/ நீ/ கு3ணமுலனு/-எடு/ பாடு3னு/ (நா)
    நீ/ இன்றி/ தியாகராசன்/ உனது/ குணங்களை/ எங்ஙனம்/ பாடுவான்/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    2 - குரியுனு - குருசுனு.

    மேற்கோள்கள்
    1 - நீவு லேக - நீயின்றி - ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம் (download) உரைப்பதனை நோக்கவும் -

    "எவன் அனைத்துயிர்களிலும் உறைகின்றானோ, (எவன்) அனைத்துயிர்களின் உள்ளமோ,
    எவனை அனைத்துயிர்களும் அறியாவோ, எவனுக்கு அனைத்துயிர்களும் உடலாமோ,
    எவன் அனைத்துயிர்களையும் உள்ளிருந்து இயக்குகின்றானோ,
    அவனே உனது உள்ளியக்குவோனாம், அழிவற்றோனாம்." (III.vii.15)
    (ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

    Top


    Updated on 19 Nov 2009

    Wednesday, November 18, 2009

    தியாகராஜ கிருதி - செடே3 பு3த்3தி4 - ராகம் அடா2ணா - Chede Buddhi - Raga Athana

    பல்லவி
    செடே3 பு3த்3தி4 மானுரா

    அனுபல்லவி
    இடே3 1பாத்ரமெவரோ ஜூட3ரா (செ)

    சரணம்
    பூ4 வாஸிகி தகு32லமு கல்கு3னனி
    பு3து4லு பல்க வின லேதா3 மனஸா
    2ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு
    சிந்திஞ்சரா த்யாக3ராஜ வினுதுனி (செ)


    பொருள் - சுருக்கம்
    மனமே!
    • கெட்டுப்போகும் புத்தியினைக் கைவிடடா;

    • இங்கு பாத்திரமெவரோ காணடா;

    • புவி வாசிக்கு தகுந்த பயனுண்டாகுமென, அறிஞர்கள் சொல்லக் கேட்டிலையோ?

    • வாசுதேவனே அனைத்துமென சிந்திப்பாயடா, தியாகராசனால் போற்றப் பெற்றோனை.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    செடே3/ பு3த்3தி4/ மானுரா/
    கெட்டுப்போகும்/ புத்தியினை/ கைவிடடா/


    அனுபல்லவி
    இடே3/ பாத்ரமு/-எவரோ/ ஜூட3ரா/ (செ)
    இங்கு/ பாத்திரம்/ எவரோ/ காணடா/


    சரணம்
    பூ4/ வாஸிகி/ தகு3/ ப2லமு/ கல்கு3னு/-அனி/
    புவி/ வாசிக்கு/ தகுந்த/ பயன்/ உண்டாகும்/ என/

    பு3து4லு/ பல்க/ வின லேதா3/ மனஸா/
    அறிஞர்கள்/ சொல்ல/ கேட்டிலையோ/ மனமே/

    ஸ்ரீ வாஸுதே3வ/-ஸர்வமு/-அனுசுனு/
    ஸ்ரீ வாசுதேவனே/ அனைத்தும்/ என/

    சிந்திஞ்சரா/ த்யாக3ராஜ/ வினுதுனி/ (செ)
    சிந்திப்பாயடா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    2 - வாஸுதே3 - வாசுதேவன் - உள்ளியங்கும் (உள்ளியக்கும்) இறைவன் - விஷ்ணு ஸஹஸ்ரநாமம் (332) - 'வாசுதேவன்' என்ற பெயருக்கு விளக்கம் நோக்கவும்.

    2 - ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு - இச்சொற்கள், கீதையில் (7-வது அத்தியாயம், 19-வது செய்யுள்), கண்ணன் உரைத்தபடியே தரப்பட்டுள்ளன.

    "பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடைத்தவன், இவை அனைத்தும் 'வாசுதேவன்' (உள்ளுறை ஆன்மா) என்றுணர்ந்து, என்னை சரண் அடைகின்றான். மிக்கு அரிதாகும் அத்தகைய ஆன்மா." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

    Top

    விளக்கம்
    1 - பாத்ரமெவரோ - பாத்திரம் - உள்ளியக்கும் தலைவன். புத்தகங்களில் இதற்கு 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற வழக்கில் உள்ள 'பாத்திரம்' என்ற சொல்லுக்குடைய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது 'தகுந்தவனா என்றறிந்து பிச்சையிடு' என. ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லிற்கு முன் வரும், 'இடே3' (இங்கு) என்ற சொல்லினால், 'பாத்ர' என்ற சொல் 'உள்ளுறை இறைவனை' (வாசுதேவனை) குறிக்கும் என்று நான் கருதுகின்றேன். இது சரணத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

    இங்கு - இவ்வுடலினில்

    Top


    Updated on 18 Nov 2009

    Sunday, November 15, 2009

    தியாகராஜ கிருதி - கட்டு ஜேஸினாவு - ராகம் அடா2ணா - Kattu Jesinaavu - Raga Athana

    பல்லவி
    1கட்டு ஜேஸினாவு 2ராம ப3ந்து3

    அனுபல்லவி
    மட்டு மிதமு லேனட்டி 3தே3வதா
    மதமுலலோ
    4ஜொரப3டு3தா3மண்டே (க)

    சரணம்
    மா 5மதமுலனு லலாடமுன
    பிதாமஹுடு3 வ்ராய லேத3னுசுனு
    மரி மரி
    6காம மத3முலகு ஹிதவனுசு
    7நிஷ்காம த்யாக3ராஜுகு 8தோசே (க)


    பொருள் - சுருக்கம்
    இராமா!
    • (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.

    • எண்ணிறந்தது போலும், கடவுளரின் மதங்களில் நுழைவோமென்றால், (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.

      • எமது மதத்தினை நெற்றியில் தாதை எழுதவில்லையாதலால், (மற்ற மதங்கள்) ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவையென, பற்றற்ற, தியாகராசனுக்கு, திரும்பத்திரும்பத் தோன்றுகின்றது, (என்னைக்) கட்டியுள்ளாய் 'இராமனின் அடிமை' யென.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கட்டு ஜேஸினாவு/ ராம/ ப3ந்து3/
    (என்னைக்) கட்டியுள்ளாய்/ 'இராமனின்/ அடிமை'/ யென


    அனுபல்லவி
    மட்டு மிதமு லேனி/-அட்டி/ தே3வதா/
    எண்ணிறந்தது/ போலும்/ கடவுளரின்/

    மதமுலலோ/ ஜொரப3டு3தா3மு/-அண்டே/ (க)
    மதங்களில்/ நுழைவோம்/ என்றால்/ (என்னைக்) கட்டியுள்ளாய்...


    சரணம்
    மா/ மதமுலனு/ லலாடமுன/
    எமது/ மதத்தினை/ நெற்றியில்/

    பிதாமஹுடு3/ வ்ராய லேது3/-அனுசுனு/ மரி மரி/
    தாதை/ எழுதவில்லை/ ஆதலால்/ திரும்பத்திரும்ப/

    காம/ மத3முலகு/ ஹிதவு/-அனுசு/
    (மற்ற மதங்கள்) ஆசை/ செருக்கு (ஆகியவற்றிற்கு)/ உகந்தவை/ யென/

    நிஷ்காம/ த்யாக3ராஜுகு/ தோசே/ (க)
    பற்றற்ற/ தியாகராசனுக்கு/ தோன்றுகின்றது/ (என்னைக்) கட்டியுள்ளாய்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    4 - ஜொரப3டு3தா3மண்டே - ஜொரப3டு3தா3மன்ன.

    8 - தோசே - தோசு.

    Top

    மேற்கோள்கள்
    6 - காம மத3முலகு - இச்சை, சினம், பேராசை, மயக்கம், செருக்கு, வெறுப்பு ஆகி உட்பகைகள் ஆறு.

    Top

    விளக்கம்
    1 - கட்டு ஜேஸினாவு - கட்டியுள்ளாய் - சில புத்தகங்களில், 'கட்டு' என்ற சொல்லுக்கு 'வசியக்கட்டு' (magic spell) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

    2 - ராம ப3ந்து3 : 'ப3ந்து3' என்ற சொல்லுக்கு 'கைதி' என்றும் பொருள் கொள்ளலாம். முன்னாளினில், கடனுக்காக, பரம்பரையாக அடிமைகளாக உழைத்தோரை, 'Bonded Labour' என்பர். இத்தகைய அடிமைத்தனத்தைத் தான் தியாகராஜர் குறிப்பிடுவதாக நான் எண்ணுகின்றேன். Bonded Labour ஒழிப்புச் சட்டம் நோக்கவும். எனவே 'அடிமை' என்ற பொருள் ஏற்கப்பட்டது.

    3 - தே3வதா மதமுலலோ - சைவம், வைணவம் ஆகிய ஆறு மதங்கள்.

    5 - மதமுலனு லலாடமுன பிதாமஹுடு3 வ்ராய லேது3 - மதத்தினை, நெற்றியில், தாதை எழுதவில்லை. மதங்கள், மக்களை இணைப்பதற்குப் பதிலாக, பிளவுண்டாக்கப் பயன்படுத்தப்படும் இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், இச்சொல் நினைவுகூறத் தக்கது.

    Top

    6 - காம மத3முலகு ஹிதவு - மற்ற மதங்கள் ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவை. தியாகராஜர், ஆறுவகை மதங்களிடையே வேறுபாடு செய்வோரை, பல கீர்த்தனைகளில் நிந்திக்கின்றார். சைவம், வைணவம் ஆகிய ஆறு மதங்களுக்குமே, 'பக்தி நெறி' பொதுவாகும். எனவே இங்கு, அவர், வைணவத்தைத் தவிர, மற்ற மதங்களைக் குறை கூறுவதாகக் கொள்ளலாகாது. அவர் குறை கூறுவது, 'இச்சைகளுக்காக வேள்விகள் இயற்றும் கரும மார்க்கம்' மற்றும் வினோதமான கோட்பாடுகளுடைய 'கௌல மார்க்கம்' ஆகியவற்றினை எனக்கொளலே பொருந்தும்.

    கண்ணன் கீதையில் (3-வது அத்தியாயம், 9-வது செய்யுள்) கூறவது -

    "வேள்விக்கென்றே அல்லாது, மற்ற நோக்கங்களுடன் இயற்றப்படும் காரியங்களால், இவ்வுலகம் கட்டுப்பட்டதாகின்றது. அதனால், குந்தி மகனே, பற்றினைத் துறந்து, பணிகளைச் செய்வாய்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

    7 - நிஷ்காம - பற்றற்ற - இச்சொல், இறைவனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால், புத்தகங்களில் கூறியபடி, பரம்பரையாக, இச்சொல் தியாகராஜரைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் பொருள் கொள்ளப்பட்டது.

    தாதை - பிரமன்

    Top


    Updated on 15 Nov 2009

    Saturday, November 14, 2009

    தியாகராஜ கிருதி - ஏல நீ த3ய ராது3 - ராகம் அடா2ணா - Ela Nee Daya Raadu - Raga Athana

    பல்லவி
    ஏல நீ த3ய ராது3 பராகு
    1ஜேஸேவேல ஸமயமு காது3

    அனுபல்லவி
    பா3ல கனக மய சேல ஸுஜன
    பரிபால ஸ்ரீ ரமா லோல வித்4ரு2த ஸ1
    ஜால ஸு143 கருணாலவால க4
    நீல நவ்ய 2வன மாலிகா4ரண (ஏ)

    சரணம்
    சரணம் 1
    ராரா தே3வாதி3 தே3வ ராரா மஹானுபா4
    ராரா ராஜீவ நேத்ர ரகு4 வர புத்ர
    ஸாரதர 3ஸுதா4 பூர ஹ்ரு23
    பரிவார ஜலதி43ம்பீ4ர த3னுஜ
    ஸம்ஹார 4மத3ன ஸுகுமார பு34 ஜன
    விஹார ஸகல ஸ்1ருதி ஸார நாது3பை (ஏ)


    சரணம் 2
    ராஜாதி4 ராஜ 5முனி பூஜித பாத3 ரவி
    ராஜ லோசன ஸ1ரண்ய அதி லாவண்ய
    ராஜ த4ர நுத விராஜ துரக3 ஸுர
    ராஜ வந்தி3த பதா3ஜ ஜனக தி3
    ராஜ கோடி ஸம தேஜ த3னுஜ க3
    ராஜ நிசய ம்ரு23 ராஜ ஜலஜ முக2 (ஏ)


    சரணம் 3
    யாக3 ரக்ஷண பரம பா43வதார்சித
    யோகீ3ந்த்3ர ஸுஹ்ரு2த்3பா4விதாத்3யந்த ரஹித
    நாக31யன வர நாக3 வரத3
    6புன்னாக3 ஸும4ர ஸதா34 மோசன
    ஸதா33திஜ த்4ரு27பதா33மாந்த சர
    ராக3 ரஹித ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஏ)


    பொருள் - சுருக்கம்
    • இளைஞனே! பொன்மய ஆடைகளோனே! நல்லோரைப் பேணுவோனே! இலக்குமியிடம் திளைப்போனே! மிக்கு அம்புகளையேந்துவோனே! சீரருள்வோனே! கருணைக் கடலே! கார்முகில் நீலவண்ணா! (என்றும்) புதிய வன மாலையணிவோனே!

    • தேவருக்கும் ஆதி தேவா! பெருந்தகையே! கமலக்கண்ணா! உயர் இரகு குலத் தோன்றலே! மேன்மையானவனே! அமுதம் நிறை உள்ளமுடைச் சுற்றத்தோனே! கடல் நிகர் மாட்சிமையோனே! அரக்கரை யழித்தோனே! மதனன் நிகர் அழகிய இளைனே! அறிஞர்கள் உள்ளுறையே! அனைத்து மறைகளுக்கும் சாரமே! என் மீது

    • அரசர்க்கரசே! முனிவர் தொழும் திருவடியோனே! பரிதி மதி கண்களோனே! (யாவர்க்கும்) புகலே! மிக்கெழிலோனே! பிறையணிவோன் போற்றும், கருட வாகனனே! தேவர் தலைவன் வந்திக்கும் திருவடியோனே! பிரமனை யீன்றோனே! பகலவன் கோடி நிகரொளியோனே! அரக்கரெனும் கரி யரசர்களுக்கு மிருகபதியே! கமல வதனத்தோனே!

    • வேள்வி காப்போனே! பரம பாகவதரால் தொழப்பெற்றோனே! உயர் யோகியர் நல்லிதயங்களில் உணரப்படும் முதல் முடிவற்றோனே! அரவணையோனே! உயர் கரிக்கருள்வோனே! புன்னை மலரணிவோனே! என்றும் பாவங்களைக் களைவோனே! வாயு மைந்தன் பற்றும் திருவடியோனே! ஆகமங்களுள்ளுறையே! பற்றற்றோனே! தியாகராசன் போற்றும் மேலோனே!

      • ஏன் உனது தயை வாராது? அசட்டை செய்வதேன்? இது சமயமன்று.

      • வாராய்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஏல/ நீ/ த3ய/ ராது3/ பராகு/
    ஏன்/ உனது/ தயை/ வாராது/ அசட்டை/

    ஜேஸேவு/-ஏல/ ஸமயமு/ காது3/
    செய்வது/ ஏன்/ (இது) சமயம்/ அன்று/


    அனுபல்லவி
    பா3ல/ கனக/ மய/ சேல/ ஸுஜன/
    இளைஞனே/ பொன்/ மய/ ஆடைகளோனே/ நல்லோரை/

    பரிபால/ ஸ்ரீ ரமா/ லோல/ வித்4ரு2த/ ஸ1ர/
    பேணுவோனே/ இலக்குமியிடம்/ திளைப்போனே/ ஏந்துவோனே/ அம்புகளை/

    ஜால/ ஸு143/ கருணா/-ஆலவால/ க4ன/
    மிக்கு/ சீரருள்வோனே/ கருணை/ கடலே/ கார்முகில்/

    நீல/ நவ்ய/ வன/ மாலிகா/-ஆப4ரண/ (ஏ)
    நீலவண்ணா/ (என்றும்) புதிய/ வன/ மாலை/ அணிவோனே/


    சரணம்
    சரணம் 1
    ராரா/ தே3வ/-ஆதி3/ தே3வ/ ராரா/ மஹானுபா4வ/
    வாராய்/ தேவருக்கும்/ ஆதி/ தேவா/ வாராய்/ பெருந்தகையே/

    ராரா/ ராஜீவ/ நேத்ர/ ரகு4/ வர/ புத்ர/
    வாராய்/ கமலக்கண்ணா/ இரகு (குல)/ உயர்/ தோன்றலே/

    ஸாரதர/ ஸுதா4/ பூர/ ஹ்ரு23ய/
    மேன்மையானவனே/ அமுதம்/ நிறை/ உள்ளமுடை/

    பரிவார/ ஜலதி4/ க3ம்பீ4ர/ த3னுஜ/
    சுற்றத்தோனே/ கடல் (நிகர்)/ மாட்சிமையோனே/ அரக்கரை/

    ஸம்ஹார/ மத3ன/ ஸுகுமார/ பு34 ஜன/
    யழித்தோனே/ மதனன் (நிகர்)/ அழகிய இளைனே/ அறிஞர்கள்/

    விஹார/ ஸகல/ ஸ்1ருதி/ ஸார/ நாது3பை/ (ஏ)
    உள்ளுறையே/ அனைத்து/ மறைகளுக்கும்/ சாரமே/ என் மீது/ ஏன்...


    சரணம் 2
    ராஜ/-அதி4 ராஜ/ முனி/ பூஜித/ பாத3/ ரவி/
    அரசர்க்கு/ அரசே/ முனிவர்/ தொழும்/ திருவடியோனே/ பரிதி/

    ராஜ/ லோசன/ ஸ1ரண்ய/ அதி/ லாவண்ய/
    மதி/ கண்களோனே/ (யாவர்க்கும்) புகலே/ மிக்கு/ எழிலோனே/

    ராஜ/ த4ர/ நுத/ விராஜ/ துரக3/ ஸுர/
    பிறை/ அணிவோன்/ போற்றும்/ கருட/ வாகனனே/ தேவர்/

    ராஜ/ வந்தி3த/ பத3/-அஜ/ ஜனக/
    தலைவன்/ வந்திக்கும்/ திருவடியோனே/ பிரமனை/ யீன்றோனே/

    தி3ன ராஜ/ கோடி/ ஸம/ தேஜ/ த3னுஜ/ க3ஜ/
    பகலவன்/ கோடி/ நிகர்/ ஒளியோனே/ அரக்கர் (எனும்)/ கரி/

    ராஜ நிசய/ ம்ரு23/ ராஜ/ ஜலஜ/ முக2/ (ஏ)
    அரசர்களுக்கு/ மிருக/ பதியே/ கமல/ வதனத்தோனே/


    சரணம் 3
    யாக3/ ரக்ஷண/ பரம/ பா43வத/-அர்சித/
    வேள்வி/ காப்போனே/ பரம/ பாகவதரால்/ தொழப்பெற்றோனே/

    யோகி3/-இந்த்3ர/ ஸு-ஹ்ரு2த்3/-பா4வித/-ஆதி3/-அந்த/ ரஹித/
    யோகியர்/ உயர்/ நல்லிதயங்களில்/ உணரப்படும்/ முதல்/ முடிவு/ அற்றோனே/

    நாக3/ ஸ1யன/ வர/ நாக3/ வரத3/
    அரவு/ அணையோனே/ உயர்/ கரிக்கு/ அருள்வோனே/

    புன்னாக3/ ஸும/ த4ர/ ஸதா3/-அக4/ மோசன/
    புன்னை/ மலர்/ அணிவோனே/ என்றும்/ பாவங்களை/ களைவோனே/

    ஸதா33தி/ஜ/ த்4ரு2த/ பத3/-ஆக3ம/-அந்த சர/
    வாயு/ மைந்தன்/ பற்றும்/ திருவடியோனே/ ஆகமங்கள்/ உள்ளுறையே/

    ராக3/ ரஹித/ ஸ்ரீ/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ)
    பற்று/ அற்றோனே/ மேலோனே/ தியாகராசன்/ போற்றும்/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - ஜேஸேவேல - ஜேஸெத3வேல.

    3 - ஸுதா4 பூர ஹ்ரு23 - ஸுதா4 பூர்ண ஹ்ரு23ய.

    4 - மத3ன ஸுகுமார - த31ரத2 குமார.

    5 - முனி பூஜித பாத3 - முனி பூஜித பத3.

    Top

    மேற்கோள்கள்
    2 - வன மாலிகா - வன மாலை - துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட விஷ்ணுவின் வைஜயந்தி மாலை. மாலைகளைப்பற்றி ஓர் கட்டுரை நோக்கவும்.

    6 - புன்னாக3 ஸும - புன்னை மலர். பூஜைக்குரிய மலர்கள்.

    Top

    விளக்கம்
    7 - ஆக3மாந்த சர (ஆக3ம+அந்த+சர) - ஆகமங்கள் உள்ளுறை - 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்' என்று பொருளுண்டானாலும், இது 'ஆக3மாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன்.

    தியாகராஜர், இராமன் இலக்குவனை, வேள்வி காப்பதற்காக, விசுவாமித்திரருடன் அடவிக்குச் செல்லும் காட்சியினைக் கண்டு, பரவசப்பட்டு, இந்த பாடல் இயற்றியதாக, ஹரிகதை சொற்பொழிவாளர் திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தனது 'தியாகராஜ சரித்திரம்' என்ற ஹரிகதையில் கூறுகின்றார்.

    பிறையணிவோன் - சிவன்
    மிருகபதி - சிங்கம்

    Top


    Updated on 14 Nov 2009

    Thursday, November 12, 2009

    தியாகராஜ கிருதி - ஏ பாபமு - ராகம் அடா2ணா - Epaapamu - Raga Athana

    பல்லவி
    ஏ பாபமு ஜேஸிதிரா ராம
    நீகே பாடைன த3ய ராது3 நே(னே)

    அனுபல்லவி
    நீ பாத3முலனு கன மொரலிடி3தே
    நீ பாடுன வினி 1வினனட்டுண்டு3டகு நே(னே)

    சரணம்
    சரணம் 1
    நாத3 ரூபுட3வனி வினி நே ஸ்ரீ
    நாத2 நின்னு நம்மிதினி
    2நாத3 புரமுனனுண்டி3யு
    நன்னாத3ரிஞ்சக ஊரகுண்டு3டகு நே(னே)


    சரணம் 2
    கா3ரவிம்ப த3ய ராதா3 பாலு
    காரு மோமு ஜூப ராதா3
    ஊரகுண்டு3ட மரியாதா3 3நா
    து3ரா
    தெல்பு-வாரெவ்வரு லேரா (ஏ)


    சரணம் 3
    எந்து3கனுசு ஸைரிந்துரா ராம
    முந்து3 வெனுக தோசது3ரா
    முந்த3ர நிலிசி பலுகுரா
    நாயந்து3 நீகு ஈவரகு மரபுரா (ஏ)


    சரணம் 4
    கன்ன வாரினி வேடி3தினா
    நாயன்ன நின்னாடு3கொன்னானா
    நின்னு நம்மின-வாட3னு கானா முனி
    ஸன்னுத கபடமுலன்னி நாதோனா (ஏ)


    சரணம் 5
    வினவய்ய இன குல த4னமா ராம
    நினு நம்மியிங்க து3ரிதமா
    4பு4வனமுன நீகிதி34னமா நீ
    மனஸிடுவண்டித3னுசுனு தெலுபுமா (ஏ)


    சரணம் 6
    ஸத3யுடை3 இங்க பராகா நா
    ஹ்ரு23ய வாஸுடு3 நீவே கா3
    இதி3 பு3த்3தி4யனுசு தெல்ப லேக நாடு3
    மொத3லுகா3னு ஊரகுன்னாவு கா3க (ஏ)


    சரணம் 7
    ராஜ ஸே125ஸன்னுதாங்க3
    த்யாக3ராஜ 6ஹ்ரு23ப்3 ஸு-ப்4ரு2ங்க3
    ராஜித கருணாபாங்க3 ரதி
    ராஜ ஜனக பாப த்4வாந்த பதங்க3 நே(னே)


    பொருள் - சுருக்கம்
  • இராமா! இலக்குமி மணாளா! எனது தந்தையே! முனிவரால் போற்றப்பெற்றோனே! பரிதி குலச்செல்வமே!

  • பிறையணிவோனால் சிறக்கப் போற்றப் பெற்றோனே! தியாகராசனின் இதயக்கமலத்தின் வண்டே! ஒளிரும் கருணை பார்வையோனே! இரதி பதியினை ஈன்றோனே! பாவ இருளைப் போக்கும் பரிதியே!

    • நானென்ன பாவம் செய்தேனய்யா? உனக்கு எப்பாடாகிலும் தயை வாராது.

    • உனது திருவடிகளைக் காண முறையிட்டால், உன்பாட்டிற்கு, கேட்டும் கேளாதது போன்றிருப்பதற்கு, நான் என்ன பாவம் செய்தேனய்யா?

      • நாத உருவத்தினெனச் செவிமடுத்து நான், உன்னை நம்பினேன்; நாத புரத்தினில் இருந்தும், என்னை யாதரியாது சும்மாயிருப்பதற்கு, நான் என்ன பாவம் செய்தேனய்யா?

      • பரிவுகொள்ள, கருணை வாராதா? பால் வடியும் முகத்தைக் காட்டலாகாதா? சும்மாயிருத்தல் மரியாதையா? எனது துயரைத் தெரிவிப்போர் யாரும் இலரோ?

      • எதற்கெனப் பொறுப்பேனய்யா? முன்பின் தோன்றாதய்யா; முன்னால் நின்று பேசுவாயய்யா; என்னிடம் உனக்கு இதுவரை மறதியய்யா.

      • கண்டவர்களை வேண்டினேனா? உன்னைப் பழித்தேனா? உன்னை நம்பினவன் இல்லையா? வஞ்சனை யாவும் என்னிடமா?

      • கேளய்யா, உன்னை நம்பி இன்னும் துயரமா? புவியில் உனக்கிது பெருமையா? உனது உள்ளம் இத்தகையதென தெரிவிப்பாயய்யா.

      • கருணையுடைத்திருந்தும், இன்னமும் அசட்டையோ? எனது உள்ளத்தினில் குடியிருப்பவன் நீயேயாக இருந்தும், இஃது உகந்ததென தெரிவிக்காது, அன்று முதலாக சும்மாயிருக்கின்றாயன்றோ.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஏ/ பாபமு/ ஜேஸிதிரா/ ராம/
    என்ன/ பாவம்/ செய்தேனய்யா/ இராமா/

    நீகு/-ஏ பாடைன/ த3ய/ ராது3/ நேனு/-(ஏ)
    உனக்கு/ எப்பாடாகிலும்/ தயை/ வாராது/ நான்/ என்ன...


    அனுபல்லவி
    நீ/ பாத3முலனு/ கன/ மொரலு/-இடி3தே/
    உனது/ திருவடிகளை/ காண/ முறை/ இட்டால்/

    நீ/ பாடுன/ வினி/ வினன/-அட்டு/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
    உன்/ பாட்டிற்கு/ கேட்டும்/ கேளாதது/ போன்று/ இருப்பதற்கு/ நான்/ என்ன...


    சரணம்
    சரணம் 1
    நாத3/ ரூபுட3வு/-அனி/ வினி/ நே/ ஸ்ரீ/
    நாத/ உருவத்தினன்/ என/ செவிமடுத்து/ நான்/ இலக்குமி/

    நாத2/ நின்னு/ நம்மிதினி/
    மணாளா/ உன்னை/ நம்பினேன்/

    நாத3/ புரமுன/-உண்டி3யு/
    நாத/ புரத்தினில்/ இருந்தும்/

    நன்னு/-ஆத3ரிஞ்சக/ ஊரக/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
    என்னை/ யாதரியாது/ சும்மா/ இருப்பதற்கு/ நான்/ என்ன...


    சரணம் 2
    கா3ரவிம்ப/ த3ய/ ராதா3/ பாலு/
    பரிவுகொள்ள/ கருணை/ வாராதா/ பால்/

    காரு/ மோமு/ ஜூப ராதா3/
    வடியும்/ முகத்தை/ காட்டலாகாதா/

    ஊரக/-உண்டு3ட/ மரியாதா3/ நா/
    சும்மா/ இருத்தல்/ மரியாதையா/ எனது/

    து3ரா/ தெல்பு-வாரு/-எவ்வரு/ லேரா/ (ஏ)
    துயரை/ தெரிவிப்போர்/ யாரும்/ இலரோ/


    சரணம் 3
    எந்து3கு/-அனுசு/ ஸைரிந்துரா/ ராம/
    எதற்கு/ என/ பொறுப்பேனய்யா/ இராமா/

    முந்து3/ வெனுக/ தோசது3ரா/
    முன்/ பின்/ தோன்றாதய்யா/

    முந்த3ர/ நிலிசி/ பலுகுரா/
    முன்னால்/ நின்று/ பேசுவாயய்யா/

    நாயந்து3/ நீகு/ ஈவரகு/ மரபுரா/ (ஏ)
    என்னிடம்/ உனக்கு/ இதுவரை/ மறதியய்யா/


    சரணம் 4
    கன்ன வாரினி/ வேடி3தினா/
    கண்டவர்களை/ வேண்டினேனா/

    நா/-அன்ன/ நின்னு/-ஆடு3கொன்னானா/
    எனது/ தந்தையே/ உன்னை/ பழித்தேனா/

    நின்னு/ நம்மின-வாட3னு/ கானா/ முனி/
    உன்னை/ நம்பினவன்/ இல்லையா/ முனிவரால்/

    ஸன்னுத/ கபடமுலு/-அன்னி/ நாதோனா/ (ஏ)
    போற்றப்பெற்றோனே/ வஞ்சனை/ யாவும்/ என்னிடமா/


    சரணம் 5
    வினுமு-அய்ய/ இன/ குல/ த4னமா/ ராம/
    கேளய்யா/ பரிதி/ குல/ செல்வமே/ இராமா/

    நினு/ நம்மி/-இங்க/ து3ரிதமா/
    உன்னை/ நம்பி/ இன்னும்/ துயரமா/

    பு4வனமுன/ நீகு/-இதி3/ க4னமா/ நீ/
    புவியில்/ உனக்கு/ இது/ பெருமையா/ உனது/

    மனஸு/-இடுவண்டிதி3/-அனுசுனு/ தெலுபுமா/ (ஏ)
    உள்ளம்/ இத்தகையது/ என/ தெரிவிப்பாயய்யா/


    சரணம் 6
    ஸத3யுடை3/ இங்க/ பராகா/ நா/
    கருணையுடைத்திருந்தும்/ இன்னமும்/ அசட்டையோ/ எனது/

    ஹ்ரு23ய/ வாஸுடு3/ நீவே/ கா3க/
    உள்ளத்தினில்/ குடியிருப்பவன்/ நீயேயாக/ இருந்தும்/

    இதி3/ பு3த்3தி4/-அனுசு/ தெல்ப லேக/ நாடு3/
    இஃது/ உகந்தது/ என/ தெரிவிக்காது/ அன்று/

    மொத3லுகா3னு/ ஊரக/-உன்னாவு/ கா3க/ (ஏ)
    முதலாக/ சும்மா/ இருக்கின்றாய்/ அன்றோ/


    சரணம் 7
    ராஜ/ ஸே12ர/ ஸன்னுத-அங்க3/
    பிறை/ அணிவோனால்/ சிறக்கப் போற்றப் பெற்றோனே/

    த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-அப்3ஜ/ ஸு-ப்4ரு2ங்க3/
    தியாகராசனின்/ இதய/ கமலத்தின்/ வண்டே/

    ராஜித/ கருணா/-அபாங்க3/ ரதி/
    ஒளிரும்/ கருணை/ பார்வையோனே/ இரதி/

    ராஜ/ ஜனக/ பாப/ த்4வாந்த/ பதங்க3/ நேனு/-(ஏ)
    பதியினை/ ஈன்றோனே/ பாவ/ இருளை/ (போக்கும்) பரிதியே/ நான்/ என்ன...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    சில புத்தகங்களில் 'நேனு' என்ற சொல், பல்லவி, அனுபல்லவி மற்றும் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

    சில புத்தகங்களில் 2 மற்றும் 3-வது சரணங்கள் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டளன.

    1 - வினனட்டு - வினனட்லு.

    2 - நாத3 புரமுன - நா தா3புரமுன : 'நா தா3புரமுன' என்பது சரியானால் 'எனது மறைவினில் இருந்தும்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால் அத்தகைய பொருள் சரியல்ல என்று தோன்றுகின்றது.

    3 - நா து3ரா - நா தூ3ர - நா தூ3ரா : எல்லா புத்தகங்களிலும் 'எனது துயர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'தூ3ரா' என்ற சொல் அகராதியில் காணப்படவில்லை. 'தூ3ர' என்ற சொல்லுக்கு 'துயர்' என்ற பொருளில்லை. தெலுங்கு அகராதியின்படி, 'து3ரடில்லு' என்ற சொல்லலுக்கு 'துயருறுதல்' என்று பொருளாகும். எனவே 'து3ரடில்லு', 'து3ர' என்பதன் திரிபாக இருக்கலாம்.

    4 - பு4வனமுன - ப4வமுன.

    6 - ஹ்ரு23ப்3 - ஹ்ரு2தா3ப்3ஜ : 'ஹ்ரு2தா3ப்3ஜ' என்பது சரியல்ல என்று தோன்றுகின்றது.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    2 - நாத3 புரமுன : 'நாத3 புரம்' என்ற சொல்லின் பொருள் என்னவென சரிவர விளங்கவில்லை. திரு C ராமானுஜாசாரியாரின் 'The Spiritual Heritage of Tyagaraja' என்ற புத்தகத்தின் முன்னுரை (ஆராய்ச்சி நூலில்) டாக்டர் V ராகவன் அவர்கள், 'நாத3 புரம்' என்பதனை 'நத3 புரம்' (திருவையாறு) என்ற சொல்லின் சிலேடையாக தியாகராஜர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றார். ஆனால் 'நத3 புரம்' என்ற சொல் இந்த கீர்த்தனையில் காணப்படவில்லை. திருவையாறுக்கு 'நாத3 புரம்' என்ற பெயர் உண்டா என்பது தெரியவில்லை. இங்கு 'திருவையாறு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    5 - ஸன்னுதாங்க3 - 'ஸன்னுத+அங்க3' : இவ்விடத்தில், 'அங்க3' என்ற சொல்லுக்குத் தனிப்பட்ட பொருள் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

    எப்பாடாகிலும் - எவ்விதமாகிலும்
    உன்பாட்டிற்கு - தனது பணியில் ஈடுபட்டு
    இரதி பதி - காமன்

    Top


    Updated on 12 Nov 2009

    Monday, November 9, 2009

    தியாகராஜ கிருதி - இலலோ ப்ரணதார்தி - ராகம் அடா2ணா - Illalo Pranataarti - Raga Athana

    பல்லவி
    இலலோ 1ப்ரணதார்தி ஹருட3னுசு
    பேரெவரிடி3ரே ஸ1ங்கருட3னி நீ(கிலலோ)

    அனுபல்லவி
    தலசி கரகி3 சிர காலமு பத3முன
    3ண்ட3மிடி3ன நாயெட33ய லேதா3யெ (இலலோ)

    சரணம்
    2கர 3சரணயுரமு நொஸலு பு4ஜமுலு
    4ரணி ஸோக ம்ரொக்கக3 லேதா3
    1ரணனுசுனு மொரலிட3 லேதா3
    பஞ்ச நதீ31 த்யாக3ராஜ நுத நீ(கிலலோ)


    பொருள் - சுருக்கம்
    திருவையாற்றப்பா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • புவியில், பணிந்தோர் துயர் களைவோனென, களிப்பருள்வோனென பெயர் யாரிட்டனரோ உனக்கு?

    • நினைந்து, உருகி, பலகாலம் திருவடிகளில் தெண்டனிட்ட என்னிடம் கருணை இலதாயிற்றே;

      • கைகள், கால்கள், மார்பு, நெற்றி மற்றும் தோள்கள் நிலத்தினில் பட வணங்கவில்லையா?

      • புகலளிப்பாயென முறையிடவில்லையா?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    இலலோ/ ப்ரணத/-ஆர்தி/ ஹருடு3/-அனுசு/
    புவியில்/ பணிந்தோர்/ துயர்/ களைவோன்/ என/

    பேரு/-எவரு/-இடி3ரே/ ஸ1ங்கருடு3/-அனி/ நீகு/-(இலலோ)
    பெயர்/ யார்/ இட்டனரோ/ களிப்பருள்வோன்/ என/ உனக்கு/?


    அனுபல்லவி
    தலசி/ கரகி3/ சிர/ காலமு/ பத3முன/
    நினைந்து/ உருகி/ பல/ காலம்/ திருவடிகளில்/

    3ண்ட3மு/-இடி3ன/ நாயெட3/ த3ய/ லேதா3யெ/ (இலலோ)
    தெண்டன்/ இட்ட/ என்னிடம்/ கருணை/ இலதாயிற்றே/


    சரணம்
    கர/ சரண/-உரமு/ நொஸலு/ பு4ஜமுலு/
    கைகள்/ கால்கள்/ மார்பு/ நெற்றி/ (மற்றும்) தோள்கள்/

    4ரணி/ ஸோக/ ம்ரொக்கக3 லேதா3/
    நிலத்தினில்/ பட/ வணங்கவில்லையா/

    1ரணு/-அனுசுனு/ மொரலு/-இட3 லேதா3/
    புகலளிப்பாய்/ என/ முறை/ இடவில்லையா/

    பஞ்ச நதி3/-ஈஸ1/ த்யாக3ராஜ/ நுத/ நீகு/-(இலலோ)
    (திரு) ஐயாறு/ அப்பா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உனக்கு/...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    3 - சரணயுரமு - சரணயுக3மு.

    மேற்கோள்கள்
    2 - கர சரணயுரமு நொஸலு பு4ஜமுலு - ஸாஷ்டாங்க நமஸ்காரம் - உடலின் எட்டு அங்கங்கள் நிலத்தினில் பட வணங்குதல். ஸம்ஸ்கிருதம் மற்றும் தெலுங்கு அகராதியின்படி எட்டு அங்கங்களாவன - கைகள், நெற்றி, மார்பு, முழங்கால்கள், கால்கள். தமிழ் அகராதியின்படி முழங்கால்களுக்குப் பதிலாக தோள்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    Top

    விளக்கம்
    1 - ப்ரணதார்தி ஹர - பணிந்தோர் துயர் களைவோன் - திருவையாற்றில் சிவனின் பெயர்.

    களிப்பருள்வோன் - சங்கரன்

    Top


    Updated on 10 Nov 2009

    தியாகராஜ கிருதி - அம்ம த4ர்ம ஸம்வர்த4னி - ராகம் அடா2ணா - Amma Dharmasamvardhani - Raga Athana

    பல்லவி
    அம்ம த4ர்ம ஸம்வர்த4னியாது3கோவம்ம மா(யம்ம)

    அனுபல்லவி
    இம்மஹினி நீ ஸரியெவரம்ம ஸி1வுனி கொம்ம மா(யம்ம)

    சரணம்
    சரணம் 1
    1தா4த்ரி4ர நாயக ப்ரிய புத்ரி மத3ன கோடி மஞ்ஜுள
    கா3த்ரி அருண 2நீரஜ த3 நேத்ரி நிருபம ஸு14
    கா3த்ரி 3பீட2 நிலயே வர ஹஸ்த த்4ரு2த வலயே பரம
    பவித்ரி ப4க்த பாலன து4ரந்த4ரி 4வீர ஸ1க்தி நே நம்மினா(னம்ம)


    சரணம் 2
    அம்ப3 5கம்பு3 கண்டி2 சாரு 6கத3ம்ப33ஹன ஸஞ்சாரிணி
    பி3ம்பா347தடித்கோடி நிபா44ரி த3யா வாரி நிதே4
    81ம்ப3ராரி வைரி ஹ்ரு2ச்சங்கரி 9கௌமாரி ஸ்வர ஜித
    தும்பு3ரு நாரத3 ஸங்கீ3த மாது4ர்யே து3ரித ஹாரிணி மா(யம்ம)


    சரணம் 3
    4ன்யே 10த்ரயம்ப3கே மூர்த4ன்யே பரம யோகி3 ஹ்ரு23
    மான்யே த்யாக3ராஜ குல ஸ1ரண்யே பதித பாவனி
    காருண்ய ஸாக3ரி ஸதா3 அபரோக்ஷமு காராதா3 ஸஹ்ய
    கன்யா தீர வாஸினி பராத்பரி 11காத்யாயனி ராம ஸோத3ரி மா(யம்ம)


    பொருள் - சுருக்கம்
  • எமது தாயே! அறம் வளர்த்த நாயகியே! சிவனின் இல்லாளே!


  • தாயே! மலையரசனின் செல்ல மகளே! மதனர் கோடி எழில் உடலினளே! இளஞ்சிவப்புத் தாமரையிதழ்க் கண்ணினளே! உவமையற்ற, மங்கள உருவினளே! (புனித) பீடங்களிலுறைபவளே! புனித கரங்களில் வளையல் அணிபவளே! முற்றிலும் புனிதமானவளே! தொண்டரைக் காக்கும் சுமையேற்றவளே! வீர சக்தியே!


  • அம்பையே! சங்குக் கழுத்தினளே! அழகிய கதம்ப வனத்தினில் உறைபவளே! கோவை யிதழ்களுடைய, மின்னல்கள் கோடி நிகர் ஒளியினளே! கருணைக் கடலே! காமன் பகைவனின் இதயத்திலுறை சங்கரியே! கௌமாரியே! தும்புரு மற்றும் நாரதரின் இசை இனிமையினை வெல்லும் குரல் உடையவளே! பாவங்களைக் களைபவளே!


  • மங்களமானவளே! முக்கண்ணினளே! தலைசிறந்தவளே! சிறந்த யோகியர் இதயத்தில் மதிக்கப்பெற்றவளே! தியாகராசனின் குலப் புகலே! வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே! கருணைக் கடலே! பொதிகைக் கன்னியின் கரையிலுறைபவளே! பராபரியே! காத்தியாயினியே! இராமனின் சோதரியே!


    • இப்புவியில் உனக்கீடெவரம்மா?

    • நான் (உன்னை) நம்பியுள்ளேனம்மா.

    • ஆதரிப்பாயம்மா.

    • எவ்வமயமும் (எனக்கு) புலப்படலாகாதா?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    அம்ம/ த4ர்ம/ ஸம்வர்த4னி/-ஆது3கோ/-அம்ம/ மா/-(அம்ம)
    தாயே/ அறம்/ வளர்த்த நாயகியே/ ஆதரிப்பாய்/ அம்மா/ எமது/


    அனுபல்லவி
    இம்-மஹினி/ நீ/ ஸரி/-எவரு/-அம்ம/ ஸி1வுனி/ கொம்ம/ மா/-(அம்ம)
    இப்புவியில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ சிவனின்/ இல்லாளே/ எமது/ தாயே..


    சரணம்
    சரணம் 1
    தா4த்ரி/ த4ர/ நாயக/ ப்ரிய/ புத்ரி/ மத3ன/ கோடி/ மஞ்ஜுள/
    தாயே/ மலை/ அரசனின்/ செல்ல/ மகளே/ மதனர்/ கோடி/ எழில்/

    கா3த்ரி/ அருண/ நீரஜ/ த3ள/ நேத்ரி/ நிருபம/ ஸு14/
    உடலினளே/ இளஞ்சிவப்பு/ தாமரை/ இதழ்/ கண்ணினளே/ உவமையற்ற/ மங்கள/

    கா3த்ரி/ பீட2/ நிலயே/ வர/ ஹஸ்த/ த்4ரு2த/ வலயே/ பரம/
    உருவினளே/ (புனித) பீடங்களிலுறைபவளே/ புனித/ கரங்களில்/ அணிபவளே/ வளையல்/ முற்றிலும்/

    பவித்ரி/ ப4க்த/ பாலன/ து4ரந்த4ரி/ வீர/ ஸ1க்தி/ நே/ நம்மினானு/-(அம்ம)
    புனிதமானவளே/ தொண்டரை/ காக்கும்/ சுமையேற்றவளே/ வீர/ சக்தியே/ நான்/ (உன்னை) நம்பியுள்ளேன்/


    சரணம் 2
    அம்ப3/ கம்பு3/ கண்டி2/ சாரு/ கத3ம்ப3/ க3ஹன/ ஸஞ்சாரிணி/
    அம்பையே/ சங்கு/ கழுத்தினளே/ அழகிய/ கதம்ப/ வனத்தினில்/ உறைபவளே/

    பி3ம்ப3/-அத4ர/ தடித்/-கோடி/ நிப4/-ஆப4ரி/ த3யா/ வாரி நிதே4/
    கோவை/ இதழ்களுடைய/ மின்னல்கள்/ கோடி/ நிகர்/ ஒளியினளே/ கருணை/ கடலே/

    1ம்ப3ர-அரி/ வைரி/ ஹ்ரு2ச்/-சங்கரி/ கௌமாரி/ ஸ்வர/ ஜித/
    காமன்/ பகைவனின்/ இதயத்தில் (உறை)/ சங்கரியே/ கௌமாரியே/ குரல்/ வெல்லும்/

    தும்பு3ரு/ நாரத3/ ஸங்கீ3த/ மாது4ர்யே/ து3ரித/ ஹாரிணி/ மா/-(அம்ம)
    தும்புரு/ (மற்றும்) நாரதரின்/ இசை/ இனிமையினை/ பாவங்களை/ களைபவளே/ எமது/ தாயே...


    சரணம் 3
    4ன்யே/ த்ரயம்ப3கே/ மூர்த4ன்யே/ பரம/ யோகி3/ ஹ்ரு23ய/
    மங்களமானவளே/ முக்கண்ணினளே/ தலைசிறந்தவளே/ சிறந்த/ யோகியர்/ இதயத்தில்/

    மான்யே/ த்யாக3ராஜ/ குல/ ஸ1ரண்யே/ பதித/ பாவனி/
    மதிக்கப்பெற்றவளே/ தியாகராசனின்/ குல/ புகலே/ வீழ்ந்தோரை/ புனிதமாக்குபவளே/

    காருண்ய/ ஸாக3ரி/ ஸதா3/ அபரோக்ஷமு/ காராதா3/ ஸஹ்ய/
    கருணை/ கடலே/ எவ்வமயமும்/ (எனக்கு) புலப்படல்/ ஆகாதா/ பொதிகை/

    கன்யா/ தீர/ வாஸினி/ பராத்பரி/ காத்யாயனி/ ராம/ ஸோத3ரி/ மா/-(அம்ம)
    கன்னியின்/ கரையில்/ உறைபவளே/ பராபரியே/ காத்தியாயினியே/ இராமனின்/ சோதரியே/ எமது/ தாயே...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    2 - நீரஜ த3 - வாரஜ த3ள.

    Top

    மேற்கோள்கள்
    1 - தா4த்ரி - "பெயரும், உருவமுமான இவ்வுலகத்தின் அடிப்படையும், அனைத்து விதமான அனுபவங்களுக்கு ஆதாரமும், வெளியுலக அனுவங்கள் எனும் படத்திற்கு வெள்ளித்திரையுமான பரம்பொருள்." (தமிழாக்கம்) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (43) 'தா4தா'

    3 - பீட2 நிலயே - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (833) அம்மையின் பெயர் - 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' - 50 பீடங்களின் வடிவானவள் - இதையே, தீக்ஷிதர், தமது 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' என்ற கீர்த்தனையிலும் குறிப்பிடுகின்றார்.

    இந்த 50 1க்தி பீட2ங்கள் (1); 1க்தி பீட2ங்கள் (2) சிவனின் மனைவி ஸதியின் உடல் பாகங்களென்றும், மொழியின் 50 ஆதார ஒலி வடிவங்களென்றும் கூறப்படும்.

    Top

    4 - வீர ஸ1க்தி - 'கௌளம்' மற்றும் 'சாக்தம்' எனப்படும் 'சக்தி வழிபாட்டு முறை'யில், 'வீர சக்தி' என்பதற்குத் தனிப்பட்ட பொருளுண்டு. தியாகராஜர், 'வீர' என்ற சொல்லினைப் பொதுவாக பயன்படுத்தியுள்ளாரா அல்லது சாக்தத்தின் சிறப்புச் சொல்லாகவா என்பது விளங்கவில்லை. சக்தியும் சாக்தமும்

    4 - 1க்தி - எட்டு சக்திகள் - இந்திராணி, வைஷ்ணவி, சாந்தா, பிரம்மாணி, கௌமாரி, நாரஸிம்ஹி, வாராஹி, மாஹேஸ்வரி.

    6 - கத3ம்ப33ஹன ஸஞ்சாரிணி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர், 'கத3ம்ப3 வன வாஸினி' (60) - மதுரையம்பதி, கதம்ப வனம் எனப்படும். கதம்ப மரம் அங்கு தல விருக்கமாகும்.

    Top

    8 - 1ம்ப3ராரி வைரி - சிவன் - 'ஸம்பரன்' என்ற அரக்கனை, காமனின் மறு பிறப்பென கருதப்படும், கண்ணன் - ருக்மிணியின் மகனான, 'பிரத்யும்நன்' கொன்றான். எனவே காமன், ஸம்பரனின் எதிரியாகும். சிவன், காமனின் எதிரியாகும். பிரத்யும்நனின் கதையினை பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 55-வது அத்தியாயம்) நோக்கவும்.

    9 - கௌமாரி - குமரனின் சக்திக்கு கௌமாரி என்று பெயராகும். மேற்கூறிய எட்டு சக்திகளில் ஒன்று.

    10 - த்ரயம்ப3கே - முக்கண்ணினள் - த்ரி லோசனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (477). சிவனுக்கும், விஷ்ணு அவதாரமான, நரசிங்கத்திற்கும் முக்கண்கள் உள்ளதனால் 'த்ரயம்பக' என்று அழைக்கப்படுவர். சிவனின் த்ரயம்பகேஸ்வர அம்பதி 'கோதாவரி' நதி பிறக்கும் 'நாஸிக்' என்ற இடத்தில் உள்ளது.

    11 - காத்யாயனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (556) - "அனைத்து தேவதைகளின் ஒருமித்த சுடரொளி" எனப்பொருளாகும். (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்).

    தேவி புராணத்தில் காத்யாயனி என்ற சொல்லின் விளக்கம் நோக்கவும்.

    Top

    விளக்கம்
    5 - கம்பு3 கண்டி2 - சங்குக் கழுத்தினள் - மூன்று வரிகளுள்ள கழுத்து

    7 - தடித் - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'மின்னல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஸம்ஸ்கிருத அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடி3த்' என்பது சொல்லாகும். ஆனால், தெலுங்கு அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடித்' என்பதே ஸம்ஸ்கிருதச் சொல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'தடில்லதா ஸமருசி:' - 'மின்னற் கொடி போன்ற காந்தியுடையவள்' என்று பெயராகும்.

    அறம் வளர்த்த நாயகி - (த4ர்மஸம்வர்த4னி) - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

    பொதிகைக் கன்னி - காவிரி

    Top


    Updated on 09 Nov 2009

    Saturday, November 7, 2009

    தியாகராஜ கிருதி - அனுபம கு3ண - ராகம் அடா2ணா - Anupama Guna - Raga Athana

    பல்லவி
    அனுபம கு3ணாம்பு3தி4யனி நின்னு நெர நம்மி-
    யனுஸரிஞ்சின வாட3னைதி

    அனுபல்லவி
    மனுபகயேயுன்னாவு 1மனு பதீ வ்ராஸி
    மேமனுப மாகெவரு வினுமா த3ய ரானி (அ)

    சரணம்
    சரணம் 1
    ஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை
    ஜனக ஜாலமு சாலு சாலுனு ஹரி (அ)


    சரணம் 2
    கனக பட த4ர நன்னு கன கபடமேல தனு
    கனக பட2னமு ஸேது கானி 3பூனி (அ)


    சரணம் 3
    4கலலோன நீவே ஸகல லோக நாத2
    5கோகலு லோகுவ கனிச்சி காசினதி3 வினி (அ)


    சரணம் 4
    ராஜ குல கலஸா1ப்3தி4 ராஜ ஸுர பால க3
    ராஜ ரக்ஷக த்யாக3ராஜ வினுத (அ)


    பொருள் - சுருக்கம்
  • மானவர் தலைவா! தந்தையே! அரியே! பொன்னாடையணிவோனே! பல்லுலகிற்கும் தலைவா!
  • அரச குலக் கடலில் தோன்றிய மதியே! வானோரைக் காப்போனே! கரியரசனைக் காத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • சனகனின் மருமகன் நீ! சானகியை யீன்றவள் (போலும்) நீ;

    • (துரோபதையின்) தலைகுனிவு கண்டு, சேலைகளளித்துக் காத்ததைச் செவிமடுத்து,உவமையற்ற பண்புக்கடலென உன்னை மிக்கு நம்பி, விரதமேற்று பின்பற்றியவனாகினேன்;

    • கனவிலும் நீயே;

    • கவனிக்காமலேயுள்ளாய்; எழுதி, யாம் அனுப்ப, எமக்கெவருளர்?
    • ஏய்த்தது போதும், போதும்;
    • என்னைக் காணக் கள்ளமேன்?
    • உன்னைக் காணாது, (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்;

    • கேளாய்; தயை வரட்டும்.


    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    அனுபம/ கு3ண/-அம்பு3தி4/-அனி/ நின்னு/ நெர/ நம்மி/-
    உவமையற்ற/ பண்பு/ கடல்/ என/ உன்னை/ மிக்கு/ நம்பி/

    அனுஸரிஞ்சின வாட3னைதி/
    பின்பற்றியவனாகினேன்/


    அனுபல்லவி
    மனுபகயே/-உன்னாவு/ மனு/ பதீ/ வ்ராஸி/
    கவனிக்காமலே/ உள்ளாய்/ மானவர்/ தலைவா/ எழுதி/

    மேமு/-அனுப/ மாகு/-எவரு/ வினுமா/ த3ய/ ரானி/ (அ)
    யாம்/ அனுப்ப/ எமக்கு/ எவர் (உளர்)/ கேளாய்/ தயை/ வரட்டும்/


    சரணம்
    சரணம் 1
    ஜனக/ ஜாமாதவை/ ஜனகஜா/ மாதவை/
    சனகனின்/ மருமகன் நீ/ சானகியை/ யீன்றவள் (போலும்) நீ/

    ஜனக/ ஜாலமு/ சாலு/ சாலுனு/ ஹரி/ (அ)
    தந்தையே/ ஏய்த்தது/ போதும்/ போதும்/ அரியே/


    சரணம் 2
    கனக/ பட/ த4ர/ நன்னு/ கன/ கபடமு/-ஏல/ தனு/
    பொன்/ ஆடை/ அணிவோனே/ என்னை/ காண/ கள்ளம்/ ஏன்/ உன்னைக்

    கனக/ பட2னமு ஸேது/ கானி/ பூனி/ (அ)
    காணாது/ (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்/ ஆயினும்/ விரதமேற்று/ உவமையற்ற...


    சரணம் 3
    கலலோன/ நீவே/ ஸகல லோக/ நாத2/
    கனவிலும்/ நீயே/ பல்லுலகிற்கும்/ தலைவா/

    கோகலு/ லோகுவ/ கனி/-இச்சி/ காசினதி3/ வினி/ (அ)
    சேலைகள்/ (துரோபதையின்) தலைகுனிவு/ கண்டு/ அளித்து/ காத்ததை/ செவிமடுத்து/ உவமையற்ற...


    சரணம் 4
    ராஜ/ குல/ கலஸ1-அப்3தி4/ ராஜ/ ஸுர/ பால/ க3ஜ/
    அரச/ குல/ (கலச) கடலில்/ (தோன்றிய) மதியே/ வானோரை/ காப்போனே/ கரி/

    ராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/ வினுத/ (அ)
    அரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - மனு பதீ - மனு பதி.

    4 - கலலோன - கலலோனு.

    5 - கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    2 - ஜனகஜா மாதவை - சானகியை யீன்றவள் - பூதேவி : சானகியை யீன்றவள் போலும் நீ - பொறுமையில் பூமி நிகரென. இதனை, இருவிதமாகப் பொருள்கொள்ளலாம். (1) 'பூமி நிகர் பொறுமையானவன் நீ. எனவே, எனது பிழைகளை மன்னிப்பாய்' என்றும் (2) 'எவ்வளவு வேண்டினாலும் இரங்காது, பூமி நிகர் அசையாமல் (பொறுமையாக) உள்ளவன் என'. அனுபல்லவியில், 'என்னைக் கவனியாதுள்ளாய்' எனக் கூறியுள்ளதைக் கருதி, இரண்டாவது பொருள் பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

    3 - பூனி - விரதமேற்று : இச்சொல்லுக்கு, சரணத்துடன் பொருள் கொள்வதா, அல்லது பல்லவியுடன் இணைத்து பொருள் கொள்வதா, என்று விளங்கவில்லை. ஆயினும், இச்சொல்லுக்கு முன் வரும் 'கானி' சரணத்தினை நிறைவுறச் செய்வதனால், இச்சொல்லை (பூனி) பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.

    Top


    Updated on 07 Nov 2009

    Friday, November 6, 2009

    தியாகராஜ கிருதி - அட்ல பலுகுது3வு - ராகம் அடா2ணா - Atla Palukuduvu - Raga Athana

    பல்லவி
    1அட்ல பலுகுது31விட்ல பலுகுது3-
    வந்து3கேமி ஸேது ராம நீ(வட்ல)

    அனுபல்லவி
    2தொட்லனர்ப4குலனூதுவு மரி மரி
    1தோசினட்லு கி3ல்லுது3வு ஸ்ரீ ராம நீ(வட்ல)

    சரணம்
    ஜீவுல ஸி1க்ஷிஞ்சக3 நேர்துவு
    சிரஞ்ஜீவுலுகா3 ஜேய நேர்துவுரா
    பா4வமெரிகி3 ப்3ரோதுவு ஸத்34க்த
    பா43தே4ய ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (அட்ல)


    பொருள் - சுருக்கம்
    இராமா! உயர் தொண்டர்களின் பேறே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • நீ அப்படியும் பேசுவாய்; இப்படியும் பேசுவாய்; அதற்கு நானென்ன செய்ய?

      • தொட்டிலில் பிள்ளையையாட்டுவாய்; பின்னர் தோன்றியபடி கிள்ளுவாய்;

      • உயிர்களை தண்டிக்கச் செய்வாய்; நீண்ட ஆயுளுடையோராக்கவும் செய்வாயய்யா;

    • நோக்கமறிந்து காப்பாய்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    அட்ல/ பலுகுது3வு/-இட்ல/ பலுகுது3வு/-
    அப்படியும்/ பேசுவாய்/ இப்படியும்/ பேசுவாய்/

    அந்து3கு/-ஏமி/ ஸேது/ ராம/ நீவு/-(அட்ல)
    அதற்கு/ (நான்) என்ன/ செய்ய/ இராமா/ நீ/ அப்படியும்...


    அனுபல்லவி
    தொட்லனு/-அர்ப4குல/-ஊதுவு/ மரி மரி/
    தொட்டிலில்/ பிள்ளையை/ ஆட்டுவாய்/ பின்னர்/

    தோசினட்லு/ கி3ல்லுது3வு/ ஸ்ரீ ராம/ நீவு/-(அட்ல)
    தோன்றியபடி/ கிள்ளுவாய்/ ஸ்ரீ ராமா/ நீ/ அப்படியும்...


    சரணம்
    ஜீவுல/ ஸி1க்ஷிஞ்சக3/ நேர்துவு/
    உயிர்களை/ தண்டிக்க/ செய்வாய்/

    சிரஞ்ஜீவுலுகா3/ ஜேய/ நேர்துவுரா/
    நீண்ட ஆயுளுடையோராக/ ஆக்கவும்/ செய்வாயய்யா/

    பா4வமு/-எரிகி3/ ப்3ரோதுவு/ ஸத்3-/ப4க்த/
    நோக்கம்/ அறிந்து/ காப்பாய்/ உயர்/ தொண்டர்களின்/

    பா43தே4ய/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (அட்ல)
    பேறே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ அப்படியும்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - அட்ல, இட்ல, தோசினட்லு - அட்ட, இட்ட, தோசினட்டு.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    2 - தொட்லனர்ப4குலனூதுவு கி3ல்லுது3வு - தொட்டிலில் பிள்ளையை ஆட்டுவாய், பின்னர் கிள்ளுவாய். 'பிள்ளையைக் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுதல்' எனும் தமிழ் வழக்கினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.

    இச்சைகள் - அவை நிறைவேறுதல் - இச்சைகளினால் ஏற்படும் துயரம் - அவற்றின் நிவர்த்தி - மறுபடியும் இச்சைகள் - இங்ஙனம் ஒரு சுழற்சியாக வருதலை தியாகராஜர் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது. திருமலையானின் பெரும் தொண்டரான 'அன்னமய்ய' தனது 'நானாடி ப3துகு' என்ற கீர்த்தனையில் கூறுவது 'பாவங்கள் அறா, புண்ணியங்கள் தீரா' என. 'அந்தர்யாமி' என்ற கீர்த்தனையில் 'நீ நிறுத்தாது, இவை (பாவங்களும் புண்ணியங்களும்) நில்லா' எனவும் கூறுகின்றார்.

    Top


    Updated on 06 Nov 2009