எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே
அனுபல்லவி
1மடு-மாய ப4வமுனு மனத3னி2யெஞ்சக
3வட பத்ர ஸ1யனுனி பாத3 யுக3முலந்து3 (எடு)
சரணம்
சரணம் 1
4வித்3யா க3ர்வமுலேல
5நீவவித்3யா வஸ1மு கானேல
6க2த்3யோதான்வய திலகுனி புரமேலு
7பு3த்3தி4யாஸு1க3 தோசதே3ல ஓ மனஸா (எடு)
சரணம் 2
ராம நாமமு ஸேய ஸிக்3கா3 காரா-
தே3மி பல்கவு புண்டி பு3க்3கா3
8பா4மல கர தா3டகயுண்டே 9ஜக்3க3
பாமர மேனு நம்மக 10நீடி பு3க்3க3 (எடு)
சரணம் 3
11போ4க3 பா4க்3யமுலந்து3 நிஜ
12பா4க3வதுலகௌ நீ பொந்து3
த்யாக3ராஜ வரது3னி நீயந்து3
பா3கு3க3 த்4யானிஞ்சு ப4வ ரோக3 மந்து3 (எடு)
பொருள் - சுருக்கம்
- ஓ மனமே!
- எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
- கண்கட்டு மாய உலக வாழ்வினை நமதென எண்ணாது, ஆலிலையிற் றுயில்வோனின் திருவடி இணையினில் எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
- கல்விச் செருக்கேனோ? நீ அவித்தையின் வயப்படுவதேனோ?
- பரிதி குலத் திலகத்தின் நகர் செல்லும் எண்ணம் சடுதியில் தோன்றாததேனோ?
- இராம நாம (செபம்) செய்ய நாணமோ? செய்யக் கூடாதோ? பேசமாட்டாயோ? புண் வாயோ?
- பெண்டிர் கரை தாண்டாதிருந்தால், மிக்க நன்று;
- அறிவிலியே! உடலை நம்பாதே; (அது) நீர்க் குமிழி
- இன்பம், பேறு - இவற்றிற்கிடையும், உண்மையான தொண்டர்களுடன் இருக்கட்டும் உனது தொடர்பு;
- தியாகராசனுக் கருள்வோனை உன்னுள் நன்கு தியானிப்பாய்;
- உலக வாழ்வெனும் நோய்க்கு (அதுவே) மருந்து.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எடுலைன/ ப4க்தி/ வச்சுடகே/ யத்னமு ஸேயவே/
எப்படியாகிலும்/ பக்தி/ வருதற்கே/ முயற்சிப்பாய்/
அனுபல்லவி
மடு-மாய/ ப4வமுனு/ மனதி3/-அனி/-எஞ்சக/
கண்கட்டு மாய/ உலக/ வாழ்வினை/ நமது/ என/ எண்ணாது/
வட/ பத்ர/ ஸ1யனுனி/ பாத3/ யுக3முலு-அந்து3/ (எடு)
ஆல்/ இலையில்/ துயில்வோனின்/ திருவடி/ இணையினில்/ எப்படியாகிலும்...
சரணம்
சரணம் 1
வித்3யா/ க3ர்வமுலு/-ஏல/ நீவு/-
கல்வி/ செருக்கு/ ஏனோ/ நீ/
அவித்3யா/ வஸ1மு கானு/-ஏல/
அவித்தையின்/ வயப்படுவது/ ஏனோ/
க2த்3யோத/-அன்வய/ திலகுனி/ புரமு/-ஏலு/
பரிதி/ குல/ திலகத்தின்/ நகர்/ செல்லும்/
பு3த்3தி4/-ஆஸு1க3/ தோசது3/-ஏல/ ஓ மனஸா/ (எடு)
எண்ணம்/ சடுதியில்/ தோன்றாதது/ ஏனோ/ ஓ மனமே/
சரணம் 2
ராம/ நாமமு/ ஸேய/ ஸிக்3கா3/ காராது3-/
இராம/ நாம (செபம்)/ செய்ய/ நாணமோ/ செய்ய கூடாதோ/
ஏமி/ பல்கவு/ புண்டி/ பு3க்3கா3/
என்ன/ பேசமாட்டாயோ/ புண்/ வாயோ/
பா4மல/ கர/ தா3டக/-உண்டே/ ஜக்3க3/
பெண்டிர்/ கரை/ தாண்டாது/ இருந்தால்/ மிக்க நன்று/
பாமர/ மேனு/ நம்மக/ நீடி/ பு3க்3க3/ (எடு)
அறிவிலியே/ உடலை/ நம்பாதே/ (அது) நீர்/ குமிழி/
சரணம் 3
போ4க3/ பா4க்3யமுலு/-அந்து3/ நிஜ/
இன்பம்/ பேறு - இவற்றிற்கு/ இடையும்/ உண்மையான/
பா4க3வதுலகௌ/ நீ/ பொந்து3/
தொண்டர்களுடன் இருக்கட்டும்/ உனது/ தொடர்பு/
த்யாக3ராஜ/ வரது3னி/ நீ-அந்து3/
தியாகராசனுக்கு/ அருள்வோனை/ உன்னுள்/
பா3கு3க3/ த்4யானிஞ்சு/ ப4வ/ ரோக3/ மந்து3/ (எடு)
நன்கு/ தியானிப்பாய்/ உலக வாழ்வெனும்/ நோய்க்கு/ (அதுவே) மருந்து/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - பு3த்3தி4யாஸு1க3 - பு3த்3த்4யாஸு1ன - பு3த்3த்4யாஸு1க3.
8 - பா4மல கர தா3டகுமண்டே - பா4மல கர தா3டகயுண்டே - பா4மல கர தா3டகயுண்டி3ன : அடுத்து வரும் 'ஜக்3க3' (நன்று) என்ற சொல்லையும், 'மேனு நீடி புக்3க3' (உடம்பு நீர்க்குமிழி) என்ற சொற்களையும் இணைத்து நோக்குகையில், 'பா4மல கர தா3டகுமண்டே' சரியெனப்படுகின்றது.
10 - நீடி பு3க்3க3 - நீர் பு3க்3க3 : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.
11 - போ4க3 பா4க்3யமுலந்து3 - போ4க3 பா4க்3யமுலயந்து3.
12 - பா4க3வதுலகௌ நீ பொந்து3 - பா4க3வதுலு கானி பொந்து3 ரோஸி : பிற்குறிப்பிட்ட வேறுபாட்டிற்குப் பொருளேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
Top
மேற்கோள்கள்
3 - வட பத்ர ஸ1யன - ஆலிலையில் துயில்வோன் - பிரளய காலத்தில், இறைவன், நீரில், ஆலிலையில், குழந்தையாக, கால் விரலை சப்பிக்கொண்டு, மிதப்பதாக. இது குறித்து, பாகவத புராணம், 12-வது புத்தகம், 8-வது அத்தியாயம், 4-வது செய்யுள் மற்றும் பாகவத புராணம், 3-வது புத்தகம், 33-வது அத்தியாயம், 4-வது செய்யுள் (தேவஹூதியின் தோத்திரம்) நோக்கவும்
5 - அவித்3யா வஸ1மு கானேல - அவித்தை - மெய்யறிவின்மை - இச்சொல், முன் கூறிய 'வித்3யா' எனும் 'கல்வியறிவு' இன்மை என்று பொருளல்ல. 'பதஞ்சலி யோக சூத்திர'த்தி்ல் கூறியபடி -
"நிலையற்றதை நிலையானதென்றும், மாசினை தூயதென்றும், துன்பமளிப்பதனை இன்பமளிப்பதென்றும், ஆன்மா அல்லாததை ஆன்மா என்றும் கருதுதல் அவித்தையாகும்." (II.5)
இந்த நோக்கத்தில், முன்னம் கூறிய 'வித்3யா' எனும் கல்வியறிவு கூட 'அவித்தை'யையே சேரும். 'நாரத பக்தி சூத்திரம்' செய்யுள் 64-ல் கூறியபடி "செருக்கு, தற்பெருமை மற்றும் இதர தீமைகளைக் கைவிடல் வேண்டும்."
'வித்3யா - அவித்3யா' பற்றிய விளக்கத்தினை ஸ்வாமி விரேஷ்வரானந்தாவின் பிரம்ம சூத்திர விளக்கவுரையின் 12 - 16 பக்கங்களில் காணவும். ஸ்வாமி சிவானந்தாவின் பிரம்ம சூத்திர விளக்கவுரை (download)
Top
விளக்கம்
1 - மடு-மாய - கண்கட்டு மாயை.
2 - எஞ்சக - இதற்கு 'எண்ணாது' என்றோ, 'எண்ணாதே' என்றோ பொருள் கொள்ளலாம்.
4 - வித்3யா க3ர்வமு - இவ்விடத்தில் 'வித்3யா' என்ற சொல், அடுத்து வரும் 'கருவம்' என்ற சொல்லினால், 'கல்வி மற்றும் உலகவியல் அறிவினை'க் குறிக்கும்.
6 - க2த்3யோதான்வய திலகுனி புரமேலு - பரிதி குலத்திலகம் - இராமன் : பரிதி குலத்திலகத்தின் நகர் - அயோத்தி - இங்கு வைகுண்டத்தைக் குறிக்கும்
9 - ஜக்3க3 - 'ஜக்3கு3' என்ற சொல்லுக்கு 'நேர்த்தி' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லுக்குப் பொருள் சரிவர விளங்கவில்லை.
பெண்டிர் கரை தாண்டாதிருந்தால் - பெண்டிரின் இணக்கத்தினைத் தவிர்த்தல்
Top
Updated on 09 Aug 2009
3 comments:
அன்புள்ள கோவிந்தன் அவர்களே
பா4மல/ கர/ தா3டக/-உண்டே/ ஜக்3க3/- ’ட்சக்க’ (tcakka) என்பதற்கு ‘ஸுந்தரமு’ ‘ருஜுவு’ என்றும் ‘ட்ஜக்3கு3’ (tjaggu) என்பதற்கு ‘தளதள’ ப்ரகாஸி1ஞ்சுடயந்த3கு3 நனுகரணமு’ என்றும் பொருள்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
ட்சக்ககா என்பது வழக்கிலுள்ளது.
கோவிந்தசாமி
திரு கோவிந்தன் அவர்களே
பா4மல கர தா3டகுமண்டே - பா4மல கர தா3டகயுண்டே - பா4மல கர தா3டகயுண்டி3ன என்று மூன்று பாடாந்தரங்களைக் கொடுத்துள்ளீர் இவற்றுள் மூன்றாவது சரியென்று எனக்குத் தோன்றுகிறது பா4மல கர தா3டகயுண்டே3 என்பது சரியானபாடம் என்று நான் எண்ணுகிறேன்
நன்றி
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'ஜக்3க3' என்ற சொல் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'சக்க' என்ற சொல்லின் பொருள் இவ்விடத்தில் பொருந்தாது என்று நான் நினைக்கின்றேன்.
'தா3டகயுண்டி3ன' - இது சரியா, தவறா என்ற கூறுவது மிகவும் கடினமாக உள்ளது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் விளக்கம் கூறியுள்ளேன்.
வணக்கம்,
கோவிந்தன்.
Post a Comment