Sunday, March 20, 2011

தியாகராஜ கிருதி - வினயமுனனு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Vinayamunanu - Raga Saurashtram

பல்லவி
வினயமுனனு கௌஸி1குனி வெண்ட
சனினாங்க்4ருலனு ஜூசுனதெ3ன்னடிகோ அந்து3
வெனுக ராதினி நாதி ஜேஸின
சரணமுலனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)

சரணம்
சரணம் 1
4னமைன 1ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின
பாத3முனு
ஜூசுனதெ3ன்னடிகோ 2
ஜனக
ராஜு 3பால கடி3கி3யா
காள்ளனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 2
சனுவுன ஸீதனு பொ3ட்டு கட்டின
கரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
கோபமுன ப்4ரு2கு3 ஸுது 4சாப ப3லமந்து3கொன்ன
5பா3ஹுவு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 3
வனமுன சனி விராது4னி சம்பின
சேதுலனு ஜூசுனதெ3ன்னடிகோ அல்ல
முனி ஜனுலனு கனி அப4யமிச்சின
ஹஸ்தமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 4
6தனகு தானே காகாஸுருனி காசின
1ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
க்ஷணமுன ப3ஹு 7ரத2முல பொடி3 சேஸின-
யஸ்த்ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 5
4ன ப3லுடை3ன வாலினி சம்பின
பா3ணமுனு ஜூசுனதெ3ன்னடிகோ ஆ
8வனதி4 மத33ர்வமணசின
ஸாயகமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 6
கனி கரமுன விபீ4ஷணுனி ஜூசின
கன்னுலனு ஜூசுனதெ3ன்னடிகோ
ராவணுனி கொட்டி 9பேத3 கபுலு லேவ ஜூசு
த்3ரு2ஷ்டினி ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 7
வன சராதி4புனி சல்லக3 ஜூசின
நேத்ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
10தி3னமுனு லங்க வர்தி4ல்லனு ஜூசு
லோசனமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 8
4னமைன புஷ்பகமுன ராஜில்லின
ஸொக3ஸுனு ஜூசுனதெ3ன்னடிகோ
4ரதுனி கனி 11சே பட்டுகொனி வச்சின
வேடு3கனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 9
12கனக ஸிம்ஹாஸனமுன நெலகொன்ன
டீ2வினி ஜூசுனதெ3ன்னடிகோ 13வர
முனுலு
ராஜுலு கூடி3 ஸேயு
அலங்காரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)


சரணம் 10
ஆக3ம வினுதுனி ஆனந்த3 கந்து3னி
பா33 ஜூசுனதெ3ன்னடோ3 பரம
பா43வத ப்ரியுனி நிர்விகாருனி
14ராக ஜூசுனதெ3ன்னடோ3 (வி)


சரணம் 11
ஸாக3ர ஸ1யனுனி கருணா 15ஜல நிதி4னி
வேக3 ஜூசுனதெ3ன்னடோ3 வர
16த்யாக3ராஜாதி3 தே3வதலு பொக3டு3கொன்ன
லாகு3 ஜூசுனதெ3ன்னடோ3 (வி)


பொருள் - சுருக்கம்
  • பணிவுடன் கௌசிகரின் பின் சென்ற திருவடிகளைக் காண்பதென்றைக்கோ?
  • அதன் பின்னர், கல்லைப் பெண்ணாக்கிய சரணங்களைக் காண்பதென்றைக்கோ?
  • பெருத்த, சிவனின் வில்லை முறித்த பாதங்களைக் காண்பதென்றைக்கோ?
  • அந்த சனக மன்னன் பாலினால் கழுவிய அந்தக் கால்களைக் காண்பதென்றைக்கோ?
  • காதலுடன் சீதைக்குத் தாலி கட்டிய கரங்களைக் காண்பதென்றைக்கோ?
  • கோபத்துடன், பிருகு மைந்தன் வில் பலத்தைப் பறித்துக்கொண்ட கைகளைக் காண்பதென்றைக்கோ?
  • வனத்திற்குச் சென்று, விராதனை வதைத்த கைகளைக் காண்பதென்றைக்கோ?
  • அந்த முனிவர்களையும் கண்டு அபயமளித்த கரத்தினைக் காண்பதென்றைக்கோ?
  • தனக்குத் தானே காக்கையசுரனைக் காத்த அம்பினைக் காண்பதென்றைக்கோ?
  • நொடியில் எண்ணற்ற தேர்களைப் பொடி செய்த அத்திரத்தினைக் காண்பதென்றைக்கோ?
  • பெரும் பலவானாகிய வாலியைக் கொன்ற கணையினைக் காண்பதென்றைக்கோ?
  • அந்த கடலரசனின் மத கருவத்தினை அடக்கிய சாயகத்தினைக் காண்பதென்றைக்கோ?
  • அன்புடன் விபீடணனை நோக்கிய கண்களைக் காண்பதென்றைக்கோ?
  • இராவணனைக் கொன்று, ஏழைக் குரங்குகளெழக் காணும் பார்வையினைக் காண்பதென்றைக்கோ?
  • வானரர் தலைவனைக் குளுமையாக நோக்கிய நேத்திரங்களைக் காண்பதென்றைக்கோ?
  • தினமும் இலங்கை செழித்திடக் காணும் கண்களைக் காண்பதென்றைக்கோ?
  • சிறந்த புட்பகத்தினில் திகழ்ந்த ஒயிலினைக் காண்பதென்றைக்கோ?
  • பரதனைக் கண்டு, கைப் பிடித்துக் கொண்டு வந்த வேடிக்கையைக் காண்பதென்றைக்கோ?
  • தங்க சிங்காதனத்தில் நிலைபெற்ற மாட்சிமையினைக் காண்பதென்றைக்கோ?
  • உயர் முனிவர்களும், அரசர்களும் குழுமியுள்ள அலங்காரத்தினைக் காண்பதென்றைக்கோ?
  • ஆகமங்கள் போற்றுவோனை, ஆனந்தக் கிழங்கனை, நன்கு காண்பதென்றோ?
  • பரம பாகவதர்களுக்கு இனியோனின், மாற்றமற்றோனின் வருகையைக் காண்பதென்றோ?
  • (பாற்) கடற்றுயில்வோனை, கருணைக் கடலினை, வேகமே காண்பதென்றோ?
  • உயர் தியாகராசன் முதலான தேவதைகள், புகழந்துகொண்ட வகையினைக் காண்பதென்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினயமுனனு/ கௌஸி1குனி/ வெண்ட/
பணிவுடன்/ கௌசிகரின்/ பின்/

சனின/-அங்க்4ருலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ அந்து3/
சென்ற/ திருவடிகளை/ காண்பது/ என்றைக்கோ/ அதன்/

வெனுக/ ராதினி/ நாதி/ ஜேஸின/
பின்னர்/ கல்லை/ பெண்/ ஆக்கிய/

சரணமுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
சரணங்களை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம்
சரணம் 1
4னமைன/ ஸி1வுனி/ சாபமு/ த்3ருஞ்சின/
பெருத்த/ சிவனின்/ வில்லை/ முறித்த/

பாத3முனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ ஆ/
பாதங்களை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/

ஜனக/ ராஜு/ பால/ கடி3கி3ன/-ஆ/
சனக/ மன்னன்/ பாலினால்/ கழுவிய/ அந்த/

காள்ளனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கால்களை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 2
சனுவுன/ ஸீதனு/ பொ3ட்டு/ கட்டின/
காதலுடன்/ சீதைக்கு/ தாலி/ கட்டிய/

கரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
கரங்களை/ காண்பது/ என்றைக்கோ/

கோபமுன/ ப்4ரு2கு3/ ஸுது/ சாப/ ப3லமு/-அந்து3கொன்ன/
கோபத்துடன்/ பிருகு/ மைந்தன்/ வில்/ பலத்தை/ பறித்துக்கொண்ட/

பா3ஹுவு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கைகளை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 3
வனமுன/ சனி/ விராது4னி/ சம்பின/
வனத்திற்கு/ சென்று/ விராதனை/ வதைத்த/

சேதுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ அல்ல/
கைகளை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/

முனி ஜனுலனு/ கனி/ அப4யமு/-இச்சின/
முனிவர்களையும்/ கண்டு/ அபயம்/ அளித்த/

ஹஸ்தமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 4
தனகு/ தானே/ காக/-அஸுருனி/ காசின/
தனக்கு/ தானே/ காக்கை/ யசுரனை/ காத்த/

1ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
அம்பினை/ காண்பது/ என்றைக்கோ/

க்ஷணமுன/ ப3ஹு/ ரத2முல/ பொடி3/ சேஸின/-
நொடியில்/ எண்ணற்ற/ தேர்களை/ பொடி/ செய்த/

அஸ்த்ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
அத்திரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 5
4ன/ ப3லுடை3ன/ வாலினி/ சம்பின/
பெரும்/ பலவானாகிய/ வாலியை/ கொன்ற/

பா3ணமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ ஆ/
கணையினை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/

வனதி4/ மத3/ க3ர்வமு/-அணசின/
கடலரசனின்/ மத/ கருவத்தினை/ அடக்கிய/

ஸாயகமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
சாயகத்தினை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 6
கனி கரமுன/ விபீ4ஷணுனி/ ஜூசின/
அன்புடன்/ விபீடணனை நோக்கிய/

கன்னுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
கண்களை/ காண்பது/ என்றைக்கோ/

ராவணுனி/ கொட்டி/ பேத3/ கபுலு/ லேவ/ ஜூசு/
இராவணனை/ கொன்று/ ஏழை/ குரங்குகள்/ எழ/ காணும்/

த்3ரு2ஷ்டினி/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
பார்வையினை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 7
வன சர/-அதி4புனி/ சல்லக3/ ஜூசின/
வானரர்/ தலைவனை/ குளுமையாக/ நோக்கிய/

நேத்ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
நேத்திரங்களை/ காண்பது/ என்றைக்கோ/

தி3னமுனு/ லங்க/ வர்தி4ல்லனு/ ஜூசு/
தினமும்/ இலங்கை/ செழித்திட/ காணும்/

லோசனமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கண்களை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 8
4னமைன/ புஷ்பகமுன/ ராஜில்லின/
சிறந்த/ புட்பகத்தினில்/ திகழ்ந்த/

ஸொக3ஸுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
ஒயிலினை/ காண்பது/ என்றைக்கோ/

4ரதுனி/ கனி/ சே/ பட்டுகொனி/ வச்சின/
பரதனை/ கண்டு/ கை/ பிடித்துக் கொண்டு/ வந்த/

வேடு3கனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
வேடிக்கையை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 9
கனக/ ஸிம்ஹ/-ஆஸனமுன/ நெலகொன்ன/
தங்க/ சிங்காதனத்தில்/ நிலைபெற்ற/

டீ2வினி/ ஜூசுனதி3/-என்னடிகோ/ வர/
மாட்சிமையினை/ காண்பது/ என்றைக்கோ/ உயர்/

முனுலு/ ராஜுலு/ கூடி3/ ஸேயு/
முனிவர்களும்/ அரசர்களும்/ குழுமி/ (யுள்ள) செய்யும்/

அலங்காரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
அலங்காரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/


சரணம் 10
ஆக3ம/ வினுதுனி/ ஆனந்த3/ கந்து3னி/
ஆகமங்கள்/ போற்றுவோனை/ ஆனந்த/ கிழங்கனை/

பா33/ ஜூசுனதி3/-என்னடோ3/ பரம/
நன்கு/ காண்பது/ என்றோ/ பரம/

பா43வத/ ப்ரியுனி/ நிர்விகாருனி/
பாகவதர்களுக்கு/ இனியோனின்/ மாற்றமற்றோனின்/

ராக/ ஜூசுனதி3/-என்னடோ3/ (வி)
வருகையை/ காண்பது/ என்றோ/


சரணம் 11
ஸாக3ர/ ஸ1யனுனி/ கருணா/ ஜல நிதி4னி/
(பாற்) கடல்/ துயில்வோனை/ கருணை/ கடலினை/

வேக3/ ஜூசுனதி3/-என்னடோ3/ வர/
வேகமே/ காண்பது/ என்றோ/ உயர்/

த்யாக3ராஜ/-ஆதி3/ தே3வதலு/ பொக3டு3கொன்ன/
தியாகராசன்/ முதலான/ தேவதைகள்/ புகழந்துகொண்ட/

லாகு3/ ஜூசுனதி3/-என்னடோ3/ (வி)
வகையினை/ காண்பது/ என்றோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
பல்லவி மற்றும் முதல் 9 சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடிகோ - ஜூசேதெ3ன்னடிகோ.

10 மற்றும் 11-வது சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடோ3 - ஜூசேதெ3ன்னடோ3.

1 - சாபமு - சாபமுனு.

2 - ஆ ஜனக - ஜனக.

5 - பா3ஹுவு - பா3ஹுனு.

8 - வனதி4 - வன நிதி4.

10 - தி3னமுனு - அனு தி3னமு.

11 - சே பட்டுகொனி - செயி பட்டுகொனி - சை பட்டுகொனி : 'சை' என்பது சரியென்று தோன்றவில்லை.

12 - கனக - கனகபு.

13 - வர முனுலு - வன முனுலு : இவ்விடத்தில் 'வர' என்பதே பொருந்தும்.

15 - ஜல நிதி4னி - ஜலதி4னி.

16 - த்யாக3ராஜாதி3 தே3வதலு - த்யாக3ராஜாதி4 தே3வதலு : 'த்யாக3ராஜாதி3 தே3வதலு' என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்
1 - ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின பாத3முனு - வால்மீகி ராமாயணத்தின்படி (பால காண்டம், 67-வது அத்தியாயம்), ராமன், வில்லின் நடுப்பகுதியைப் பிடித்து, நாணேற்றி, வில்லை வளைக்க, அது நடுவில் முறிந்தது. நாணேற்றுவதற்கும், வில்லை வளைப்பதற்கும், காலினால் அதனை அழுத்துதல் முறை என்று நினைக்கின்றேன். எனவேதான், தியாகராஜர், 'வில்லை முறித்த கால்' என்று குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, 'ஸ்ரீ ராம ரகு4ராம' என்ற யதுகுல காம்போஜி கீர்த்தனையிலும், 'ராமனின் திருவடிகளைத் தொட, சிவனின் வில் என்ன தவம் செய்ததோ?' என்று கேட்கின்றார்.

4 - சாப ப3லமந்து3கொன்ன - வால்மீகி ராமாயணம் (பால காண்டம், 76-வது அத்தியாயம்) நோக்கவும். பரசுராமனின் வில், விஷ்ணுவின் வில்லாகும். பத்ம புராணத்தில் கூறப்பட்டபடி -

"தேவி, இங்ஙனம் கூறி, விஷ்ணுவின் சக்தியுினை, பணிவுடனும், விளையாட்டாகவும், விஷ்ணுவின் வில்லுடன் பறித்துக்கொண்டான்."

பரசுராமனின் வில்லினைப் பறித்தல்

Top

7 - ரத2முல பொடி3 சேஸின - தேர்களைப் பொடி செய்த - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 26-30 அத்தியாயங்கள் நோக்கவும்.

8 - வனதி4 மத33ர்வமு - கடலரசனின் மத செருக்கு - பரசுராமனைத் தோற்கடித்தபின், ராமன், அந்த விஷ்ணு வில்லினை, கடலரசனிடம், பாதுகாப்பதற்காக, ஒப்படைத்தான். எனவே, கடலரசனுக்கு, ராமனின் வல்லமை என்னவென்று தெரியும். ஆயினும், கடல்மீது பாலம் அமைக்க, கடலரசனின் உதவியினை ராமன் வேண்டியும், அவன் கண்டுகொள்ளாமல் இருந்ததனால், ராமன், கோபம் கொண்டு, கடலரசன் மீது பிரமாத்திரத்தினை ஏவினான். அதன் பின்னரே, கடலரசன் ராமனிடம் சரணடைந்து, பாலம் கட்டுவதற்கு உதவ இசைந்தான். வால்மீகி ராமாயாணம், யுத்த காண்டம், 21, 22-வது அத்தியாயங்கள் நோக்கவும்.

9 - பேத3 கபுலு லேவ ஜூசு - ஏழைக் குரங்குகள் உயிர்த்தெழக் காணும். ராமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திரன், போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த குரங்குகளை, உயிர்த்தெழச் செய்தான். வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 120-வது அத்தியாயம் நோக்கவும்.

வால்மீகி ராமாயணம் - மொழிபெயர்ப்பு

Top

விளக்கம்
3 - பால கடி3கி3 - பாலினால் கழுவிய - வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஏதும் கூறப்படவில்லை. ஆயினும், திருமணத்தின்போது, பாணிக்கிரகணத்திற்கு முன், 'வர பூஜை' எனப்படும் சடங்கில் மணமகனின் கால்களை, பெண்ணின் தந்தை, பாலினால் கழுவி அழைத்துச் செல்வார். அதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.

6 - தனகு தானே காகாஸுருனி காசின - தனக்குத் தானே காக்கை அசுரனைக் காத்த. சீதையின் தனங்களைக் கொத்திய காக்கை அசுரன் மீது, ராமன் பிரமாத்திரம் தொடுத்தான். காக்கையசுரன், மூவுலகங்களிலும், தன்னைக் காப்பவர் யாருமில்லை எனத் தெரிந்து, ராமனிடமே சரணடைந்தான். ராமன், அவனைக் கொல்லாது. அந்த அத்திரம், அவனுடைய ஒரு கண்ணை மட்டும் பறிக்கச் செய்தான்.

14 - ராக ஜூசுனதி3 - வருகையைக் காண்பது - இதனை, ராமன் 'வருவதனைக் காண்பது' என்றோ, 'வருகையினை எதிர்நோக்குவது' என்றோ பொருள் கொள்ளலாம். பிற்கூறியதே, அதிகம் பொருந்தும்.

16 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் சிவனைக் குறிக்கும்.

Top

கௌசிகர் - விசுவாமித்திரர்
பெண்ணாக்கிய - அகலிகையைக் குறிக்கும்
பிருகு மைந்தன் - பரசுராமன்
சாயகம் - அம்பு
குரங்குகளெழ - குரங்குகள் உயிர்த்தெழ
வானரர் தலைவன் - சுக்கிரீவன்
புட்பகம் - விமானம்
தியாகராசன் - இங்கு (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்

Top


Updated on 20 Mar 2011

Sunday, March 13, 2011

தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Rara Nannelukora - Raga Saurashtram

பல்லவி
ராரா நன்னேலுகோரா ஸ்ரீ ரகு4-
வீர நன்னேச மேரா (ரா)

அனுபல்லவி
ஸாராஸாரோதா3ர அகி2-
லாதா4ராத்3பு4த கு3ண தா4ராளமுக3 (ரா)

சரணம்
சரணம் 1
தா4ரா த4ராப41ரீர நாயெட3 நீவு
நேரமென்னகயாது3கோரா ஸ்ரீ ராம
ஸம்ஸார கானன விஹாருடை3ன நாகு
ஸாரமௌ நாமமே தாரகமௌரா (ரா)


சரணம் 2
ஸீதா ஹ்ரு2த்-கமல க2த்3யோதாப்த ஜன பாரி-
ஜாதாக4 வனதி4 போதாப்3ஜ ஹித குல
ஜாத ரக்ஷிஞ்சு விதா4த ஜனக இஷ்ட
தா3தவைன ஸாகேதாகா3ர (ரா)


சரணம் 3
ரா ஜாகே314ர ஜாமாதவை
நா
ஜாலெரிகி3 ஓ ஆ-ஜானு பா3ஹுட3
2விராஜமான த்3விஜ ராஜானன ஸுர
ராஜார்சித த்யாக3ராஜ நுதாஜ (ரா)


பொருள் - சுருக்கம்
  • இரகுவீரா!
  • சார-சாரமற்ற பொருளே! உதார குணத்தோனே! பல்லுலக ஆதாரமே! வியத்தகு குணங்களோனே!
  • கார்முகில் நிகருடலோனே! இராமா!
  • சீதையின் இதயக்கமலத்தின் பகலவனே! வேண்டியவர்களின் பாரிசாதமே! பாவக் கடலின் கலமே! கமல நண்பன் குலத் தோன்றலே! நான்முகனை யீன்றோனே! விரும்பியது அருள்வோனாகிய, சாகேத நகருறைவோனே!
  • முழந்தாள் நீளக் கைகளோனே! ஒளிர்விடும் மதி முகத்தோனே! வானோர் தலைவன் வழிபடும், தியாகராசன் போற்றும், பிறவாதவனே!

  • வாருமய்யா, என்னையாளுமய்யா.
  • என்னைத் துன்புறுத்தல் முறையோ?

    • என்னிடம் நீ தவறுகளை எண்ணாது ஆதரியுமய்யா.
    • சமுசாரமெனும் அடவியில் உறைவோனாகிய எனக்கு சாரமான (உனது) நாமமே (அதனைக்) கடத்துவிப்பதாகுமய்யா.
    • காப்பாய்.
    • பூமியின் மருகனாகி, எனது துயரறிந்தும், தாமதமேன்?


  • தாராளமாக வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ நன்னு/-ஏலுகோரா/
வாருமய்யா/ என்னை/ யாளுமய்யா/

ஸ்ரீ ரகு4வீர/ நன்னு/-ஏச/ மேரா/ (ரா)
ஸ்ரீ ரகுவீரா/ என்னை/ துன்புறுத்தல்/ முறையோ/


அனுபல்லவி
ஸார/-அஸார/-உதா3ர/ அகி2ல/-
சார/-சாரமற்ற பொருளே/ உதார குணத்தோனே/ பல்லுலக/

ஆதா4ர/-அத்3பு4த/ கு3ண/ தா4ராளமுக3/ (ரா)
ஆதாரமே/ வியத்தகு/ குணங்களோனே/ தாராளமாக/ வாருமய்யா...


சரணம்
சரணம் 1
தா4ரா த4ர/-ஆப4/ ஸ1ரீர/ நாயெட3/ நீவு/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/ என்னிடம்/ நீ/

நேரமு/-என்னக/-ஆது3கோரா/ ஸ்ரீ ராம/
தவறுகளை/ எண்ணாது/ ஆதரியுமய்யா/ ஸ்ரீ ராமா/

ஸம்ஸார/ கானன/ விஹாருடை3ன/ நாகு/
சமுசாரமெனும்/ அடவியில்/ உறைவோனாகிய/ எனக்கு/

ஸாரமௌ/ நாமமே/ தாரகமு/-ஔரா/ (ரா)
சாரமான/ (உனது) நாமமே/ (அதனைக்) கடத்துவிப்பது/ ஆகுமய்யா/


சரணம் 2
ஸீதா/ ஹ்ரு2த்/-கமல/ க2த்3யோத/-ஆப்த ஜன/
சீதையின்/ இதய/ கமலத்தின்/ பகலவனே/ வேண்டியவர்களின்/

பாரிஜாத/-அக4/ வனதி4/ போத/-அப்3ஜ/ ஹித/ குல/
பாரிசாதமே/ பாவ/ கடலின்/ கலமே/ கமல/ நண்பன் (பரிதி)/ குல/

ஜாத/ ரக்ஷிஞ்சு/ விதா4த/ ஜனக/ இஷ்ட/
தோன்றலே/ காப்பாய்/ நான்முகனை/ யீன்றோனே/ விரும்பியது/

தா3தவைன/ ஸாகேத/-ஆகா3ர/ (ரா)
அருள்வோனாகிய/ சாகேத நகர்/ உறைவோனே/


சரணம் 3
ரா/ ஜாகு3/-ஏல/ த4ர/ ஜாமாதவை/
வாருமய்யா/ தாமதம்/ ஏன்/ பூமியின்/ மருகனாகி/

நா/ ஜாலி/-எரிகி3/ ஓ/ ஆ-ஜானு/ பா3ஹுட3/
எனது/ துயர்/ அறிந்தும்/ ஓ/ முழந்தாள் நீள/ கைகளோனே/

விராஜமான/ த்3விஜ ராஜ/-ஆனன/ ஸுர/
ஒளிர்விடும்/ மதி/ முகத்தோனே/ வானோர்/

ராஜ/-அர்சித/ த்யாக3ராஜ/ நுத/-அஜ/ (ரா)
தலைவன்/ வழிபடும்/ தியாகராசன்/ போற்றும்/ பிறவாதவனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ர ஜாமாதவை நா - புத்தகங்களில் 'த4ர ஜாமாதவைன' என்றும் 'த4ர ஜாமாதவை ந' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும், 'ஜாலெரிகி3' (துயர் அறிந்து) என்பதுடன் இணைப்பதற்கு, 'நா' எனது என்றிருக்கவேண்டும். எனவே, 'த4ர ஜாமாதவை நா' என்று ஏற்கப்பட்டது. எதுகை-மோனைகளை நோக்கினால், அதுவே பொருந்துமெனத் தோன்றுகின்றது.

Top

மேற்கோள்கள்
2 - த்3விஜ ராஜ - இருமுறை பிறந்த - பறவைக்கும் (முட்டையாகவும், மறுபடி குஞ்சாகவும் பிறப்பதனால்) சந்திரனுக்கும் (அத்ரி ரிஷி - அனுசூயாவுக்கும், பின்னர் பாற்கடலைக் கடைந்தபோதும் பிறந்ததனால்), இந்தப் பெயர் பொருந்தும். சந்திரன், அத்ரி ரிஷிக்குப் பிறந்த கதை.

Top

விளக்கம்
2 - விராஜமான த்3விஜ ராஜானன - தியாகராஜர், 'விராஜ' என்ற சொல்லை, 'கருடனை'க் குறிக்க, பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இவ்விடத்தில், இது, 'விராஜமான' (ஒளிர்விடும்) என்ற தெலுங்கு சொல்லாகும். மேற்கூறியபடி, 'த்3விஜ ராஜ' என்பது கருடனையும், சந்திரனையும் குறிக்கும். ஆனால், அடுத்து வரும் 'ஆனன' (முகத்தோன்) என்ற சொல்லினால், 'சந்திரன்' என்ற பொருளே பொருந்தும்.

சார-சாரமற்ற பொருள் - பரம்பொருளின் இலக்கணம்
இதயக்கமலத்தின் பகலவன் - மலரச்செய்வதனால்
பாரிசாதம் - விரும்பியதை வழங்கும் வானோர் தரு
கடலின் கலம் - கடலைக் கடத்துவிப்பதற்கு
கமல நண்பன் - பரிதி

Top


Updated on 14 Mar 2011

Wednesday, March 9, 2011

தியாகராஜ கிருதி - ராம ராம கோ3விந்த3 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Rama Rama Govinda - Raga Saurashtram

பல்லவி
ராம ராம கோ3விந்த3 1நனு ரக்ஷிஞ்சு முகுந்த3
சரணம்
சரணம் 1
கலி யுக3 மனுஜுலு நீகு 2மஹாத்ம்யமு
கலது3 லேத3னே காலமாயெகா3 (ரா)


சரணம் 2
காமுனி தா3ஸுலு நா பலுகுல வினி
காவலஸினடுலனாட3னாயெ கதா3 (ரா)


சரணம் 3
பாமருலனு கனி ஸிக்3கு3 படு3சு மரி
மோமு மருகு3 ஜேஸி திருக3னாயெனு (ரா)


சரணம் 4
க்ரொவ்வு க3ல நருல கொனியாட33 3சிரு
நவ்வுலதோ
நனு 4ஜூட3னாயெ கதா3 (ரா)


சரணம் 5
மதி ஹீனுலு ஸ்ரீ பதி தா3ஸுலகீ
3தி ராராத3னி பல்கனாயெ கதா3 (ரா)


சரணம் 6
நம்மினாட3னே பேருகைன நீ
தம்முனிதோனைன 5பல்கவைதிவி (ரா)


சரணம் 7
6கார்யாகார்யமு ஸமமாயெனு நீ
ஸௌ1ர்யமெந்து3 தா3சுகொண்டிவய்யோ (ரா)


சரணம் 8
7ராக ராக 8ப்3ரதுகிட்லாயெனு ஸ்ரீ
த்யாக3ராஜ நுத தருணமு காது3 (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா! கோவிந்தா! முகுந்தா!
  • தியாகராசன் போற்றுவோனே!

  • என்னைக் காப்பாய்.

    • கலியுக மனிதர்கள் உனக்கு மகிமை உண்டு, இல்லையெனும் காலம் வந்ததன்றோ!
    • காமனின் அடிமைகள் எனது சொற்களைக் கேட்டு, (தமக்கு) வேண்டியவாறு பேசலாயிற்றன்றோ!
    • இழிந்தோரைக் கண்டு, வெட்கப்பட்டுக் கொண்டு, முகத்தை மறைத்துத் திரியவேண்டியதாயிற்று!
    • கொழுப்புடைய மனிதர்களைப் புகழ்ந்ததனால், (கேலிப்) புன்னகையுடன் என்னை நோக்கலாயிற்றன்றோ!
    • அறிவீனர்கள், அரியின் தொண்டர்களுக்கு, இந்த கதி வரவேண்டாமெனப் பேசலாயிற்றன்றோ!

    • (உன்னை) நம்பினானெனும் பேருக்காகிலும், உனது தம்பியிடமாவது, சொல்லாதவன் ஆகினாய்!
    • செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள் சமமாகின.
    • உனது வீரத்தையெங்கு ஒளித்துக்கொண்டாய், ஐயகோ?

    • வர வர, பிழைப்பு இவ்விதமானது.
    • இது தருணமன்று.


  • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ கோ3விந்த3/ நனு/ ரக்ஷிஞ்சு/ முகுந்த3/
இராமா/ இராமா/ கோவிந்தா/ என்னை/ காப்பாய்/ முகுந்தா/


சரணம்
சரணம் 1
கலி/ யுக3/ மனுஜுலு/ நீகு/ மஹாத்ம்யமு/
கலி/ யுக/ மனிதர்கள்/ உனக்கு/ மகிமை/

கலது3/ லேது3/-அனே/ காலமு/-ஆயெகா3/ (ரா)
உண்டு/ இல்லை/ யெனும்/ காலம்/ வந்ததன்றோ/


சரணம் 2
காமுனி/ தா3ஸுலு/ நா/ பலுகுல/ வினி/
காமனின்/ அடிமைகள்/ எனது/ சொற்களை/ கேட்டு/

காவலஸின-அடுல/-ஆட3னாயெ/ கதா3/ (ரா)
(தமக்கு) வேண்டியவாறு/ பேசலாயிற்று/ அன்றோ/


சரணம் 3
பாமருலனு/ கனி/ ஸிக்3கு3 படு3சு/ மரி/
இழிந்தோரை/ கண்டு/ வெட்கப்பட்டுக் கொண்டு/ மேலும்/

மோமு/ மருகு3 ஜேஸி/ திருக3னு/-ஆயெனு/ (ரா)
முகத்தை/ மறைத்து/ திரியவேண்டியது/ ஆயிற்று/


சரணம் 4
க்ரொவ்வு க3ல/ நருல/ கொனியாட33/
கொழுப்புடைய/ மனிதர்களை/ புகழ்ந்ததனால்/

சிரு நவ்வுலதோ/ நனு/ ஜூட3னாயெ/ கதா3/ (ரா)
(கேலிப்) புன்னகையுடன்/ என்னை/ நோக்கலாயிற்று/ அன்றோ/


சரணம் 5
மதி ஹீனுலு/ ஸ்ரீ/ பதி/ தா3ஸுலகு/-ஈ/
அறிவீனர்கள்/ இலக்குமி/ மணாளன் (அரியின்)/ தொண்டர்களுக்கு/ இந்த/

3தி/ ராராது3/-அனி/ பல்கனாயெ/ கதா3/ (ரா)
கதி/ வரவேண்டாம்/ என/ பேசலாயிற்று/ அன்றோ/


சரணம் 6
நம்மினாடு3/-அனே/ பேருகு/-ஐன/ நீ/
(உன்னை) நம்பினான்/ எனும்/ பேருக்கு/ ஆகிலும்/ உனது/

தம்முனிதோனு-ஐன/ பல்கவு/-ஐதிவி/ (ரா)
தம்பியிடமாவது/ சொல்லாதவன்/ ஆகினாய்/


சரணம் 7
கார்ய-அகார்யமு/ ஸமமு/-ஆயெனு/ நீ/
செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள்/ சமம்/ ஆகின/ உனது/

ஸௌ1ர்யமு/-எந்து3/ தா3சுகொண்டிவி/-அய்யோ/ (ரா)
வீரத்தை/ யெங்கு/ ஒளித்துக்கொண்டாய்/ ஐயகோ/


சரணம் 8
ராக/ ராக/ ப்3ரதுகு/-இட்லு/-ஆயெனு/
வர/ வர/ பிழைப்பு/ இவ்விதம்/ ஆனது/

ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ தருணமு/ காது3/ (ரா)
ஸ்ரீ தியாகராசன்/ போற்றுவோனே/ (இது) தருணம்/ அன்று/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலாவது சரணம், அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - நனு ரக்ஷிஞ்சு - ரக்ஷிஞ்சு.

2 - மஹாத்ம்யமு - மாஹாத்ம்யமு : 'மாஹாத்ம்ய' என்ற சம்ஸ்கிருதச் சொல், தெலுங்கில், 'மஹாத்ம்யமு' என்று வழங்கும்.

5 - பல்கவைதிவி - பல்கனைதிவி : புத்தகங்களில், இதற்கு, 'சொல்ல மாட்டாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது 'பல்கவு' என்று இருக்கவேண்டும். எனவே, 'பல்கவைதிவி' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
6 - கார்யாகார்யமு - செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள் - இது குறித்து, கண்ணன் கீதையில் (அத்தியாயம் 16, செய்யுள் 24) கூறியது -

"அதனால், செய்ய வேண்டியு மற்றும் செயத்தாகத காரியங்களை அறிந்துகொள்ள, சாத்திரங்கள் உனக்கு பிரமாணமாக இருக்கட்டும். சாத்திரங்களின் கூற்றுக்களை அறிந்துகொண்டு, இங்கு பணிகள் இயற்றுவாயாக." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
3 - சிரு நவ்வுலதோ - புன்னகையுடன் - கேலிப் புன்னகை.

4 - ஜூட3னாயெ - நோக்கலாயிற்று. இச்சொல் வரும் இடத்தினைப் பொருத்து, இது 'கொழுப்புள்ள மனிதர்கள் கேலிப் புன்னகையுடன் நோக்குகின்றனர்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், மனிதர்களைப் புகழ்ந்ததனால், 'இறைவன், தியாகராஜரை கேலியாக நோக்கினான்' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top

7 - ராக ராக - வர வர - புத்தகங்களில் கொள்ளப்பட்டுள்ள இந்தப் பொருளை அனுசரித்து, அதற்கான தெலுங்குச் சொல் 'ரானு ரானு' ஆகும். ஆனால், எல்லா புத்தகங்களிலும் 'ராக3 ராக3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும். இது, 'வர வர' என்ற தமிழ் வழக்கினை, நேராக தெலுங்கில், 'ராக ராக' என்று கொள்ளப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எனவே, 'ராக ராக' என்று ஏற்கப்பட்டது.

8 - ப்3ரதுகிட்லாயெனு - பிழைப்பு இப்படியானது - இதற்கு முந்தைய சரணங்களில் கூறியவற்றைக் குறிக்கும்.

மகிமை உண்டு, இல்லை - ஐயப்படுதல் - வாதித்தல்

Top


Updated on 10 Mar 2011

Tuesday, March 8, 2011

தியாகராஜ கிருதி - மேலு மேலு ராம நாம - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Melu Melu Rama Nama - Raga Saurashtram

பல்லவி
மேலு மேலு ராம நாம ஸுக2மீ த4ரலோ மனஸா
பா2ல லோசன வால்மீகாதி3
1பா3லானிலஜாது3லு ஸாக்ஷிக3

சரணம்
சரணம் 1
நிண்டு3 தா3ஹமு கொன்ன மனுஜுலகு
நீரு த்ராகி3ன ஸுக2ம்பு3 கண்டே
சண்ட3 தா3ரித்3ர மனுஜுலகு த4
பா4ண்ட3மப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 2
2தாபமு ஸைரிஞ்சனி ஜனுலகம்ரு2
வாபியப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே 33ரி
தா3பு
லேக ப4யமந்து3 வேளல
தை4ர்யமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 3
ஆகலி வேளல 4பஞ்ச ப4க்ஷ்ய
பரமான்ன
மப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே
ஸ்ரீ கருடௌ3 ஸ்ரீ ராமுனி 5மனஸுன
சிந்திஞ்சு
ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 4
ஸார ஹீனமௌ க்ரோத4 ஸமயமுன
ஸா1ந்தமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
நேரனி மூடு4லகு ஸகல வித்3யா
பாரமு தெலியு ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 5
ராமுனிபை நிஜ ப4க்தி கலிகி3 கா3
ரஸமு தெலிஸின ஸுக2ம்பு3 கண்டே
பாமர செலிமி ஸேயனி வாரி
பா4வமு லோனி ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 6
சேய தகு3 வேதா3ந்த விசாரண
சேயக3 கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
6பா3யக நிர்கு3ண பா4வமு க3ல பர-
ப்3ரஹ்மானுப4
ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 7
7ராஜஸ தாமஸ கு3ணமு லேனி
பூஜலு
கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
8ராஜ ஸி1கா2 மணியைன த்யாக3-
ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3
கண்டே (மே)


பொருள் - சுருக்கம்
  • மனமே!

  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.

    • மிக்கு நீர் வேட்கை கொண்ட மனிதர்களுக்கு நீரருந்தின சுகத்தினை விட,
    • மிக்கு வறிய மனிதர்களுக்கு, செல்வப் பெட்டகம் கிடைத்த சுகத்தினை விட,

    • (முவ்)வெம்மை தாங்காத மக்களுக்கு அமிழ்தக் குளம் கிடைத்த சுகத்தினை விட,
    • போக்கு, புகலின்றி அச்சமுறுவமயம், துணிவுண்டாகும் சுகத்தினை விட,

    • பசி வேளையில், ஐவகை உண்டியும், பாயசமும் கிடைத்த சுகத்தினை விட,
    • நலனருளும், இராமனை மனத்தினில் சிந்திக்கும் சுகத்தினை விட,

    • சாரமற்ற சீற்ற சமயத்தில் சாந்தம் உண்டாகும் சுகத்தினை விட,
    • கல்லாத மூடர்களுக்கு, அனைத்து வித்தைகளிலும் கரைகாணத் தெரியும் சுகத்தினை விட,

    • இராமனிடம் உண்மையான பக்தி உண்டாகி, இசை ரசனையும் தெரியும் சுகத்தினை விட,
    • பாமரர்களின் இணக்கம் கொள்ளாதவரின் இயல்பினிலுள்ள சுகத்தினை விட,

    • செயத்தகு வேதாந்த விசாரணை செய்வதினால் உண்டாகும் சுகத்தினை விட,
    • இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவ சுகத்தினை விட,

    • இராசத, தாமத குணங்களற்ற வழிபாடு ஏற்படும் சுகத்தினை விட,
    • பிறையணிவோனாகிய தியாகராசனுக்கு (இராமன்) வழங்கும் சுகத்தினை விட,

  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.

  • நெற்றிக்கண்ணன், வால்மீகி முதலாக, பார்வதி, அனுமன் ஆகியோர் சாட்சியாக.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலு/ மேலு/ ராம/ நாம/ ஸுக2மு/-ஈ/ த4ரலோ/ மனஸா/
மேலாம்/ மேலாம்/ இராம/ நாம/ சுகம்/ இந்த/ புவியில்/ மனமே/

பா2ல/ லோசன/ வால்மீகி/-ஆதி3/
நெற்றி/ கண்ணன்/ வால்மீகி/ முதலாக/

பா3லா/-அனிலஜ/-ஆது3லு/ ஸாக்ஷிக3/
பார்வதி/ அனுமன்/ ஆகியோர்/ சாட்சியாக/


சரணம்
சரணம் 1
நிண்டு3/ தா3ஹமு/ கொன்ன/ மனுஜுலகு/
மிக்கு/ நீர் வேட்கை/ கொண்ட/ மனிதர்களுக்கு/

நீரு/ த்ராகி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/
நீர்/ அருந்தின/ சுகத்தினை/ விட/

சண்ட3/ தா3ரித்3ர/ மனுஜுலகு/ த4ன/
மிக்கு/ வறிய/ மனிதர்களுக்கு/ செல்வ/

பா4ண்ட3மு/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
பெட்டகம்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 2
தாபமு/ ஸைரிஞ்சனி/ ஜனுலகு/-அம்ரு2த/
(முவ்)வெம்மை/ தாங்காத/ மக்களுக்கு/ அமிழ்த/

வாபி/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/ த3ரி/
குளம்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/ போக்கு/

தா3பு/ லேக/ ப4யமு/-அந்து3/ வேளல/
புகல்/ இன்றி/ அச்சம்/ உறு/ அமயம்/

தை4ர்யமு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
துணிவு/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 3
ஆகலி/ வேளல/ பஞ்ச/ ப4க்ஷ்ய/
பசி/ வேளையில்/ ஐவகை/ உண்டியும்/

பரமான்னமு/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/
பாயசமும்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/

ஸ்ரீ/ கருடௌ3/ ஸ்ரீ ராமுனி/ மனஸுன/
நலன்/ அருளும்/ ஸ்ரீ ராமனை/ மனத்தினில்/

சிந்திஞ்சு/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
சிந்திக்கும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 4
ஸார/ ஹீனமௌ/ க்ரோத4/ ஸமயமுன/
சாரம்/ அற்ற/ சீற்ற/ சமயத்தில்/

ஸா1ந்தமு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
சாந்தம்/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/

நேரனி/ மூடு4லகு/ ஸகல/ வித்3யா/
கல்லாத/ மூடர்களுக்கு/ அனைத்து/ வித்தைகளிலும்/

பாரமு/ தெலியு/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
கரைகாண/ தெரியும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 5
ராமுனிபை/ நிஜ/ ப4க்தி/ கலிகி3/ கா3ன/
இராமனிடம்/ உண்மையான/ பக்தி/ உண்டாகி/ இசை/

ரஸமு/ தெலிஸின/ ஸுக2ம்பு3/ கண்டே/
ரசனையும்/ தெரியும்/ சுகத்தினை/ விட/

பாமர/ செலிமி/ ஸேயனி வாரி/
பாமரர்களின்/ இணக்கம்/ கொள்ளாதவரின்/

பா4வமு லோனி/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
இயல்பினிலுள்ள/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 6
சேய/ தகு3/ வேதா3ந்த/ விசாரண/
செய/ தகு/ வேதாந்த/ விசாரணை/

சேயக3/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
செய்வதினால்/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/

பா3யக/ நிர்கு3ண/ பா4வமு/ க3ல/
இடையறாது/ நிர்க்குண/ இயல்பு/ உள்ள/

பர-ப்3ரஹ்ம/-அனுப4வ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
பரம்பொருளின்/ அனுபவ/ சுகத்தினை/ விட/, மேலாம்...


சரணம் 7
ராஜஸ/ தாமஸ/ கு3ணமு/ லேனி/
இராசத/ தாமத/ குணங்கள்/ அற்ற/

பூஜலு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
வழிபாடு/ ஏற்படும்/ சுகத்தினை/ விட/

ராஜ/ ஸி1கா2 மணியைன/ த்யாக3ராஜுகு/
மதி/ (பிறை) யணிவோனாகிய/ தியாகராசனுக்கு/

ஒஸங்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
(இராமன்) வழங்கும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - 3ரி தா3பு - தா3பு.

Top

மேற்கோள்கள்
1 - பா3லா - 16 வயதுக்குட்பட்ட பெண். மகா திரிபுர சுந்தரியின் 9 வயதுடைய மகள். அவள் பண்டாசுரனை வதைத்தாள். லலிதா ஸஹஸ்ர நாமம் (74 மற்றும் 965) நோக்கவும்.

4 - பஞ்ச ப4க்ஷ்ய - ஐவகை உண்டி - இது ஐந்து விதமாக - குதப்பி, சப்பி, நக்கி, உறிஞ்சி, குடித்து - அருந்தப்படும் உணவு வகைகளினை, அல்லது அறு சுவை உண்டிகளை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவற்றினை - குறிக்கும். இவற்றில், இனிப்பு, தனியாக, 'பரமான்னம்' (பாயசம்) என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
2 - தாபமு - இதற்கு, 'வெம்மை' என்று பொருளாகும். வெறும் வெம்மையானால், மழை அல்லது நீரினால் தணியும். ஆனால், இங்கு, தியாகராஜர் 'அமிழ்துக் குளம்' என்று கொடுத்திருப்பதனால், இச்சொல், 'ஆத்யாத்மிக' (தன்னால்), 'ஆதிதைவிக' (தெய்வத்தினால்), 'ஆதிபௌதிக' (இயற்கையினால்) உண்டாகும் முவ்வெம்மையினைக் குறிக்கும் என நம்புகின்றேன்.

4 - பஞ்ச ப4க்ஷ்ய பரமான்னம் - இது தென்னாட்டில் பெரும் விருந்தினைக் குறிக்கும்.

5 - மனஸுன சிந்திஞ்சு - மனதினில் சிந்திக்கும் சுகத்தினை விட - இராம தியானம் செய்வதனைக்கூட, தியாகராஜர், நாமம் உரைப்பதினும் தாழ்ந்ததாகக் கருதுவது வியக்கத் தக்கது.

Top

6 - பா3யக நிர்கு3ண பா4வமு க3ல பர-ப்3ரஹ்மானுப4 - இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவம் - இத்தகைய அனுபவம், புவியில், பெரும் பேறு படைத்த சிலருக்கே கிட்டியுள்ளது. எனவே, இதனை, அறிவு பூர்வமாக வருணிக்க இயலாததுடன், அத்தகைய முயற்சி, அந்த அனுபவத்தினை இழிவு படுத்துவதாகும் என்று நான் கருதுகின்றேன்.

7 - ராஜஸ தாமஸ கு3ணமு லேனி பூஜலு - இராசத குண வழிபாடு - இச்சைகளுக்காக இயற்றப்படுபவை; தாமத குண வழிபாடு - பிறருக்குக் கேடு செய்ய இயற்றப்படுபவை

Top

8 - ராஜ ஸி1கா2 மணியைன த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - சில கீர்த்தனைகளில், தியாகராஜர், தனது 'தியாகராஜ' என்ற முத்திரையினை, (திருவாரூர்) சிவனைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளார்.

8 - த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - காசியில் மரணம் அடைவோருக்கு, சிவன், அவர்கள் காதுகளில், 'ராம' என்ற 'தாரக நாம'த்தினை ஓதுவதாக முக்திகா உபநிடதம் கூறும்.

நெற்றிக்கண்ணன் - சிவன்
பிறையணிவோனாகிய தியாகராசன் - சிவன்

Top


Updated on 08 Mar 2011

Saturday, March 5, 2011

தியாகராஜ கிருதி - மேலுகோ த3யா நிதீ4 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Meluko Daya Nidhi - Raga Saurashtram

பல்லவி
மேலுகோ 13யா நிதீ4 மேலுகோ தா31ரதீ2

அனுபல்லவி
மேலுகோ 13யா நிதீ4 மித்ரோத3யமௌ வேள (மே)

சரணம்
சரணம் 1
வென்ன பாலு ப3ங்கா3ரு கி3ன்னலோ நேனுஞ்சினானு
2தின்னகா3ரகி3ஞ்சி தேட கன்னுலதோ 3நன்னு ஜூட3 (மே)


சரணம் 2
நாரதா3தி3 முனுலு ஸுருலு வாரிஜ ப4வுடி3ந்து3 கலா
4ருடு3 நீ 4ஸன்னிதி4லோ கோரி 5கொலுவு காசினாரு (மே)


சரணம் 3
ராஜ ராஜாதி3 தி3க்3-ராஜுலெல்ல வச்சினாரு
6ராஜ நீதி தெலிய த்யாக3ராஜ வினுத நன்னு ப்3ரோவ (மே)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் போற்றுவோனே!

  • கண்விழிப்பாய் கருணாநிதீ! கண்விழிப்பாய் தாசரதீ!

    • பொழுது புலரும் நேரமிது.

  • கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • வெண்ணையும், பாலும் பொற் கிண்ணங்களில் நான் வைத்துள்ளேன்;

  • கருணையுடன் ஏற்றருளி, தெளிந்த கண்களினால் என்னைக் நோக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • நாரதாதி முனிவர்கள், வானோர், மலரோன், மதிப் பிறை அணிவோனும் உனது சன்னிதியில், வேண்டி, கொலுவு காத்துள்ளனர்.

  • கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • மன்னாதி மன்னர், மற்றும் திசை மன்னர்கள் யாவரும் வந்துள்ளனர், அரச நீதி அறிய;

  • என்னக் காக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலுகோ/ த3யா/ நிதீ4/ மேலுகோ/ தா31ரதீ2/
கண்விழிப்பாய்/ கருணா/ நிதீ/ கண்விழிப்பாய்/ தாசரதீ/


அனுபல்லவி
மேலுகோ/ த3யா/ நிதீ4/ மித்ர/-உத3யமௌ/ வேள/ (மே)
கண்விழிப்பாய்/ கருணா/ நிதீ/ பொழுது/ புலரும்/ நேரம் (இது)/


சரணம்
சரணம் 1
வென்ன/ பாலு/ ப3ங்கா3ரு/ கி3ன்னலோ/ நேனு/-உஞ்சினானு/
வெண்ணையும்/ பாலும்/ பொற்/ கிண்ணங்களில்/ நான்/ வைத்துள்ளேன்/

தின்னக3/-ஆரகி3ஞ்சி/ தேட/ கன்னுலதோ/ நன்னு/ ஜூட3/ (மே)
கருணையுடன்/ ஏற்றருளி/ தெளிந்த/ கண்களினால்/ என்னை/ நோக்க/ கண்விழிப்பாய்...


சரணம் 2
நாரத3-ஆதி3/ முனுலு/ ஸுருலு/ வாரிஜ ப4வுடு3/-இந்து3/ கலா/
நாரதாதி/ முனிவர்கள்/ வானோர்/ மலரோன்/ மதி/ பிறை/

4ருடு3/ நீ/ ஸன்னிதி4லோ/ கோரி/ கொலுவு/ காசினாரு/ (மே)
அணிவோனும்/ உனது/ சன்னிதியில்/ வேண்டி/ கொலுவு/ காத்துள்ளனர்/


சரணம் 3
ராஜ/ ராஜ/-ஆதி3/ தி3க்/-ராஜுலு/-எல்ல/ வச்சினாரு/
மன்னாதி/ மன்னர்/ மற்றும்/ திசை/ மன்னர்கள்/ யாவரும்/ வந்துள்ளனர்/

ராஜ/ நீதி/ தெலிய/ த்யாக3ராஜ/ வினுத/ நன்னு/ ப்3ரோவ/ (மே)
அரச/ நீதி/ அறிய/ தியாகராசன்/ போற்றுவோனே/ என்ன/ காக்க/ கண்விழிப்பாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதலிரண்டு சரணங்களும், வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

1 - 3யா நிதீ4 - த3யா நிதே4.

2 - தின்னகா3ரகி3ஞ்சி - தின்னக3னாரகி3ஞ்சி.

3 - நன்னு ஜூட3 - நன்னு ப்3ரோவ.

4 - ஸன்னிதி4லோ - ஸன்னிதி4னே.

5 - கொலுவு - கொலுவ.

Top

மேற்கோள்கள்
6 - ராஜ நீதி தெலிய - அரச நீதி அறிய - வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 100-வது அத்தியாயம்), ராமன், பரதனுக்கு, அரச நீதி குறித்து விவரிப்பதனை நோக்கவும்.

Top

விளக்கம்
தாசரதி - தசரதன் மகன்
மலரோன் - பிரமன்
மதிப் பிறை அணிவோன் - சிவன்

Top


Updated on 05 Mar 2011

Friday, March 4, 2011

தியாகராஜ கிருதி - பாஹி மாம் ஹரே - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Pahi Mam Hare - Raga Saurashtram

பல்லவி
1பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4

சரணம்
சரணம் 1
பாஹி ராமயனுசு ரேயு பக3லு கொலிசிதி
பாஹி ராம 2நீவனு ஸம்பத3னு வலசிதி (பா)


சரணம் 2
பாஹி ராமயனுசு பாரி பாரி கோரிதி
பாஹி ராம நாம 3முக்தா ப2லமுலேரிதி (பா)


சரணம் 3
பாஹி ராமயனுசு பு4வினி பா33 புட்டிதி
பாஹி ராமயனுசு 43ட்டி பட்டு பட்டிதி (பா)


சரணம் 4
பாஹி ராமயனுசு நீது3 பத3மு நம்மிதி
பாஹி ராமயனுசு 5மனஸு பா33 க்3ரம்மிதி (பா)


சரணம் 5
பாஹி ராமயனுசு 6நீது3 பத3மு பாடி3தி
பாஹி ராமயனுசு பரம பத3மு வேடி3தி (பா)


சரணம் 6
பாஹி ராமயனுசு த்4யான பருட3னைதினி
பாஹி த்யாக3ராஜ வினுத ப4க்துடை3தினி (பா)


பொருள் - சுருக்கம்
  • ஓ பெருந்தகையே, ராகவா!
  • இராமா!
  • தியாகராசன் போற்றுவோனே!

  • காப்பாய், காப்பாயென்னை.

    • 'காப்பாய், இராமா' யென இராப்பகலாய் சேவித்தேன்;
    • நீயெனும் செல்வம் விரும்பினேன்;

    • 'காப்பாய், இராமா' யெனத் திரும்பத் திரும்பக் கோரினேன்;
    • இராம நாம முக்திப் பழங்களைப் பொறுக்கினேன்;

    • 'காப்பாய், இராமா' யெனப் புவியில் சிறக்கப் பிறந்தேன்;
    • 'காப்பாய், இராமா' யென கெட்டியான பிடி பிடித்தேன்;

    • 'காப்பாய், இராமா' யென உனது திருவடிகளை நம்பினேன்;
    • 'காப்பாய், இராமா' யென மனத்தினை நன்கு நிறைத்தேன்;

    • 'காப்பாய், இராமா' யென உனது பாடல்களைப் பாடினேன்;
    • 'காப்பாய், இராமா' யென பரம பதம் வேண்டினேன்;

    • 'காப்பாய், இராமா' யென தியான பரனாகினேன்;
    • தொண்டனாகினேன்.


  • காப்பாய், காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஹரே/ மஹானுபா4வ/ ராக4வ/
காப்பாய்/ என்னை/ ஓ/ பெருந்தகையே/ ராகவா/


சரணம்
சரணம் 1
பாஹி/ ராம/-அனுசு/ ரேயு/ பக3லு/ கொலிசிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ இரா/ பகலாய்/ சேவித்தேன்/

பாஹி/ ராம/ நீவு/-அனு/ ஸம்பத3னு/ வலசிதி/ (பா)
காப்பாய்/ இராமா/ நீ/ யெனும்/ செல்வம்/ விரும்பினேன்/


சரணம் 2
பாஹி/ ராம/-அனுசு/ பாரி/ பாரி/ கோரிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ திரும்ப/ திரும்ப/ கோரினேன்/

பாஹி/ ராம/ நாம/ முக்தா/ ப2லமுலு/-ஏரிதி/ (பா)
காப்பாய்/ இராம/ நாம/ முக்தி/ பழங்களை/ பொறுக்கினேன்/


சரணம் 3
பாஹி/ ராம/-அனுசு/ பு4வினி/ பா33/ புட்டிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ புவியில்/ சிறக்க/ பிறந்தேன்/

பாஹி/ ராம/-அனுசு/ க3ட்டி/ பட்டு/ பட்டிதி/ (பா)
'காப்பாய்/ இராமா/ யென/ கெட்டியான/ பிடி/ பிடித்தேன்/


சரணம் 4
பாஹி/ ராம/-அனுசு/ நீது3/ பத3மு/ நம்மிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ உனது/ திருவடிகளை/ நம்பினேன்/

பாஹி/ ராம/-அனுசு/ மனஸு/ பா33/ க்3ரம்மிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ மனத்தினை/ நன்கு/ நிறைத்தேன்/ (பா)


சரணம் 5
பாஹி/ ராம/-அனுசு/ நீது3/ பத3மு/ பாடி3தி/
'காப்பாய்/ இராமா/ யென/ உனது/ (திருவடியினை) பாடல்களை/ பாடினேன்/

பாஹி/ ராம/-அனுசு/ பரம/ பத3மு/ வேடி3தி/ (பா)
'காப்பாய்/ இராமா/ யென/ பரம/ பதம்/ வேண்டினேன்/


சரணம் 6
பாஹி/ ராம/-அனுசு/ த்4யான/ பருட3னு/-ஐதினி/
'காப்பாய்/ இராமா/ யென/ தியான/ பரன்/ ஆகினேன்/

பாஹி/ த்யாக3ராஜ/ வினுத/ ப4க்துடு3/-ஐதினி/ (பா)
காப்பாய்/ தியாகராசன்/ போற்றுவோனே/ தொண்டன்/ ஆகினேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4 - சில புத்தகங்களில், பல்லவி இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

2 - நீவனு ஸம்பத3னு - நீவனுசு ஸம்பத3னு : பிற்கூறியது சரியெனப்படவில்லை.

4 - 3ட்டி பட்டு பட்டிதி - க3ட்டி பட்டு க3ட்டிதி : பிற்கூறியது சரியெனப்படவில்லை.

5 - மனஸு பா33 க்3ரம்மிதி - மனஸு பா3கு3 க்3ரம்மிதி - மனஸு பா3கு33 நம்மிதி : சரணத்தின் முதற்பகுதியில் 'நம்மிதி' கொடுக்கப்பட்டுள்ளதால் 'க்3ரம்மிதி' ஏற்கப்பட்டது. ஆனால், 'பா33' - 'பா3கு3' - 'பா3கு33' - இவற்றில் எது சரியெனத் தெரியவில்லை. 'பா33' மற்றும் 'பா3கு33' - இவ்விரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். ஆனால், 'பா3கு3' என்பது சரியானால், 'மனத்தின் நலன் பெற்றேன்' என்று மொழிபெயர்க்கப்படும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - முக்தா ப2லமுல - 'முக்தா' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'முத்து' என்றும் 'முக்தி' என்றும் பொருள்கள் உண்டு. இவ்விடத்தில், இச்சொல்லை, தியாகராஜர், சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே 'முக்திப் பழங்கள்' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'ராம' எனும் நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் 'தாரகம்' எனப்படும். 'ராம' - தாரக நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம்

6 - நீது3 பத3மு பாடி3தி - உனது பாடல்களைப் பாடினேன் - 'உனது திருவடியினைப் பாடினேன்' என்றும் கொள்ளலாம்.

பரம பதம் - வைகுண்டம்
தியான பரன் - தியானத்தில் முழுதும் ஈடுபட்டோன்
தியாகராசன் போற்றுவோன் - இராமன்

Top


Updated on 04 Mar 2011

Thursday, March 3, 2011

தியாகராஜ கிருதி - பாஹி பாஹி தீ3ன ப3ந்தோ4 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Pahi Pahi Dina Bandho - Raga Saurashtram

பல்லவி
பாஹி பாஹி தீ3ன ப3ந்தோ4 மாம்
பாஹி பரானந்த3 ஸிந்தோ4

சரணம்
சரணம் 1
1தாரகாஸுர 2வைரி நுத ராம
தாரக ஸு14-கர சரித (பா)


சரணம் 2
ப்3ரஹ்ம ருத்3ராதி3 ஸபே4ஸா1ரீப4
ஸிம்ஹானன ஜித பே41 (பா)


சரணம் 3
1க்ராரி ஜனக ஸம்ஹரண ஸ1ங்க2
சக்ராதி3 34ராஸ்1ரித சரண (பா)


சரணம் 4
ராக4வான்வய ஸுப்ரதீ3ப ஸு-
கராக4 வன குடா2ர ரூப (பா)


சரணம் 5
1ர ஸ14ஜக3தா3தா4
அகி2லாஸ1ர ஸ1ரதா3ஸு13 தீ4ர (பா)


சரணம் 6
குவலய த3ள ஸம நேத்ர பாலித
குவலய த3ளிதாமித்ர (பா)


சரணம் 7
கமலா ஹித கு3ண ப4ரித ராம
கமலாஹித த4ர வினுத (பா)


சரணம் 8
த்யாக3ராஜ நுத சரண
நித்யாக3 ராஜ த4ர ஸுகு3ண (பா)


பொருள் - சுருக்கம்
  • எளியோர் சுற்றமே! பேரானந்தக் கடலே!
  • தாரகாசுரன் பகைவன் போற்றும் இராமா! (பிறவிக் கடலைத்) தாண்டுவிப்போனே! நலமருளும் சரிதத்தோனே!
  • பிரமன், ருத்திராதியர் அவைத்தலைவனே! பகையெனும் யானைக்கு சிங்கமே! தாரை யரசனை வெல்லும் முகத்தோனே!
  • இந்திரன் பகைவன் தந்தையை வதைத்தோனே! சங்கு, சக்கிரம் ஆகியவை யேந்துவோனே! சார்ந்தோர் புகல் திருவடிகளோனே!
  • இரகு குல ஒளி விளக்கே! நலன் அருள்வோனே! பாவ அடவியை யழிக்கும் கோடரி உருவே!
  • புல் பாணத்தோனே! அண்டத்தின் ஆதாரமே! அனைத்து அரக்கரெனும் முகிலை விரட்டும் புயலே! தீரனே!
  • தாமரையிதழ் நிகர் கண்ணா! குவலயத்தினைப் பேணுவோனே! பகைவரை வெட்டி வீழ்த்துவோனே!
  • கமலைக்கு இனியவனே! குணங்கள் நிறைந்த இராமா! கமலப் பகை (பிறை) சூடுவோன் போற்றுவோனே!
  • தியாகராசன் போற்றும் திருவடிகளோனே! அழிவற்றோனே! மலை யரசனைச் சுமந்தோனே! நற்குணத்தோனே!

    • காப்பாய், காப்பாய் என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ பாஹி/ தீ3ன/ ப3ந்தோ4/ மாம்/
காப்பாய்/ காப்பாய்/ எளியோர்/ சுற்றமே/ என்னை/

பாஹி/ பர-ஆனந்த3/ ஸிந்தோ4/
காப்பாய்/ பேரானந்த/ கடலே/


சரணம்
சரணம் 1
தாரக-அஸுர/ வைரி/ நுத/ ராம/
தாரகாசுரன்/ பகைவன்/ போற்றும்/ இராமா/

தாரக/ ஸு14/-கர/ சரித/ (பா)
(பிறவிக் கடலைத்) தாண்டுவிப்போனே/ நலம்/ அருளும்/ சரிதத்தோனே/


சரணம் 2
ப்3ரஹ்ம/ ருத்3ர-ஆதி3/ ஸபா4/-ஈஸ1/-அரி/-இப4/
பிரமன்/ ருத்திராதியர்/ அவை/ தலைவனே/ பகையெனும்/ யானைக்கு/

ஸிம்ஹ/-ஆனன/ ஜித/ ப4/-ஈஸ1/ (பா)
சிங்கமே/ முகம்/ வெல்லும்/ தாரை/ யரசனை/


சரணம் 3
1க்ர/-அரி/ ஜனக/ ஸம்ஹரண/ ஸ1ங்க2/
இந்திரன்/ பகைவன்/ தந்தையை/ வதைத்தோனே/ சங்கு/

சக்ர/-ஆதி3/ த4ர/-ஆஸ்1ரித/ சரண/ (பா)
சக்கிரம்/ ஆகியவை/ யேந்துவோனே/ சார்ந்தோர்/ புகல்/ திருவடிகளோனே/


சரணம் 4
ராக4வ/-அன்வய/ ஸுப்ரதீ3ப/ ஸு/-
இரகு/ குல/ ஒளி விளக்கே/ நலன்/

கர/-அக4/ வன/ குடா2ர/ ரூப/ (பா)
அருள்வோனே/ பாவ/ அடவியை/ (யழிக்கும்) கோடரி/ உருவே/


சரணம் 5
1ர/ ஸ1ர/ ஜக3த்/-ஆதா4ர/ அகி2ல/-
புல்/ பாணத்தோனே/ அண்டத்தின்/ ஆதாரமே/ அனைத்து/

ஆஸ1ர/ ஸ1ரத3/-ஆஸு13/ தீ4ர/ (பா)
அரக்கரெனும்/ முகிலை/ விரட்டும்/ புயலே/ தீரனே/


சரணம் 6
குவலய/ த3ள/ ஸம/ நேத்ர/ பாலித/
தாமரை/ யிதழ்/ நிகர்/ கண்ணா/ பேணுவோனே/

குவலய/ த3ளித/-அமித்ர/ (பா)
குவலயத்தினை/ வெட்டி வீழ்த்துவோனே/ பகைவரை/


சரணம் 7
கமலா/ ஹித/ கு3ண/ ப4ரித/ ராம/
கமலைக்கு/ இனியவனே/ குணங்கள்/ நிறைந்த/ இராமா/

கமல/-அஹித/ த4ர/ வினுத/ (பா)
கமல/ பகை (பிறை)/ சூடுவோன்/ போற்றுவோனே/


சரணம் 8
த்யாக3ராஜ/ நுத/ சரண/
தியாகராசன்/ போற்றும்/ திருவடிகளோனே/

நித்ய/-அக3/ ராஜ/ த4ர/ ஸுகு3ண/ (பா)
அழிவற்றோனே/ மலை/ யரசனை/ சுமந்தோனே/ நற்குணத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வைரி நுத - வைரி வினுத.

4 - ஜக3தா3தா4 - ஆதா4ர.

Top

மேற்கோள்கள்
1 - தாரகாஸுர - முருகனால் கொல்லப்பட்ட அசுரன்.

Top

விளக்கம்
3 - ஆஸ்1ரித சரண - இங்ஙனமே அனைத்து புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'சரண' என்பதற்கு பதிலாக, 'ஸ1ரண' என்று இருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

தாரகாசுரன் பகைவன், பிறை சூடுவோன் - சிவன்
தாரை யரசன் - மதி
இந்திரன் பகைவன் - இந்திரசித்து
இந்திரன் பகைவன் தந்தை - இராவணன்
புல் பாணம் - காக்கை யரக்கனை அழித்த நிகழ்ச்சி
குவலயம் - புவி
கமலை - இலக்குமி
கமலப் பகை - மதி
மலையரசன் - மந்தர மலை

Top


Updated on 03 Mar 2011