Thursday, January 27, 2011

தியாகராஜ கிருதி - ஸுதா4 மாது4ர்ய - ராகம் ஸிந்து4 ராமக்ரிய - Sudha Madhurya - Raga Sindhu Ramakriya

பல்லவி
ஸுதா4 மாது4ர்ய பா4ஷண ஸுதா4கரானன

அனுபல்லவி
1கதா2ம்ரு2தமு சே3ஹு காலமு
2ஆகலி தீரியுன்னானு ப்3ரோவுமு (ஸு)

சரணம்
3து3ராத்முலகு3 பூ4-கிராதகுல
சேர ராத3னுசு ஸுந்த3ராகார நீ
பராயணுல செலிமி ரா கோரு த்யாக3-
ராஜ நுத ஓ பராத்பர ஸுகு3ண (ஸு)


பொருள் - சுருக்கம்
  • அமிழ்தினியச் சொல்லோனே! தண்மதி முகத்தோனே!
  • எழிலுருவே! தியாகராசன் போற்றும், ஓ பராபரமே! நற்குணத்தோனே!

    • பல காலம், (உனது) சரிதை (எனும்) அமிழ்துண்டு, பசியாறியுள்ளேன்;
    • தீய உள்ளத்தோராகிய, புவியின் இழிந்தோரைச் சேரலாகாதென, உனது தொண்டு பூண்டோரின் இணக்கம் பெறக் கோருகின்றேன்.
    • (என்னைக்) காவுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுதா4/ மாது4ர்ய/ பா4ஷண/ ஸுதா4-கர/-ஆனன/
அமிழ்து/ இனிய/ சொல்லோனே/ தண்மதி/ முகத்தோனே/


அனுபல்லவி
கதா2/-அம்ரு2தமு/ சே/ ப3ஹு/ காலமு/
(உனது) சரிதை/ (எனும்) அமிழ்து/ உண்டு/ பல/ காலம்/

ஆகலி/ தீரி/-உன்னானு/ ப்3ரோவுமு/ (ஸு)
பசி/ யாறி/ யுள்ளேன்/ (என்னைக்) காவுமய்யா/


சரணம்
து3ராத்முலகு3/ பூ4/-கிராதகுல/
தீய உள்ளத்தோராகிய/ புவியின்/ இழிந்தோரை/

சேர ராது3/-அனுசு/ ஸுந்த3ர/-ஆகார/ நீ/
சேரலாகாது/ என/ எழில்/ உருவே/ உனது/

பராயணுல/ செலிமி/ ரா/ கோரு/
தொண்டு பூண்டோரின்/ இணக்கம்/ பெற/ கோரும்/

த்யாக3ராஜ/ நுத/ ஓ பராத்பர/ ஸுகு3ண/ (ஸு)
தியாகராசன்/ போற்றும்/ ஓ பராபரமே/ நற்குணத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - து3ராத்முலகு3 - து3ராத்முலகு : இவ்விடத்தில் 'து3ராத்முலு' என்பது, அடுத்து வரும், 'கிராதகுல' என்பதன் அடைமொழியாகும். எனவே, 'து3ராத்முலகு3' (தீய உள்ளத்தோராகிய) என்பதே பொருந்தும். 'து3ராத்முலகு' (தீய உள்ளத்தோருக்கு) என்று கொண்டால், சரணத்திற்கு சரிவரப் பொருள் கொள்ள இயலாது.

Top

மேற்கோள்கள்
1 - கதா2ம்ரு2தமு சே - உனது கதையெனும் அமிழ்துண்டு. தியாகராஜர், துருவன், இறைவனிடம் கூறியதனை (பாகவத புராணம், 4-வது புத்தகம், 11-வது செய்யுள்) எதிரொலிக்கின்றார் -

"உனது கதையெனும், அமுது பருகிய உன்மத்தனாகி, இந்தக் கொடிய, துயரம் நிறை, பிறவிக்கடலினை நான் கடப்பதற்கு, அளவிடற்கரியோனே!
உனது பக்தி இடையறாது செய்யும், உள்ளத் தூய்மை உடைய, பெரியோர்களின் நல்லிணக்கம், எனக்கு உண்டாவதாக."

2 - ஆகலி தீரியுன்னானு - பசியாறியுள்ளேன். கீழ்க்கண்ட திருக்குறள் செய்யுள் நோக்குக -

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் (412)

Top

விளக்கம்



Updated on 27 Jan 2011

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

சரணத்தில் செலிமி ரா கோரு
என்பதில் கோரு என்பதற்கு ’கோரும்’ என்பது தானே பொருள். பதவுரையில் சரியாகக் ’கோரும்’ என்று பொருள் கொடுத்துள்ளீர். ஆனால் பொருள் சுருக்கத்தில் ’கோருகின்றேன்’ என்று கொடுத்துள்ளீர்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜரின் பல கிருதிகளில், மிக நீளமான வாக்கியங்களைக் குறுக்க வேண்டியதாகின்றது. அதனால் சில இடங்களில் நான், இம்முறையைக் கையாண்டுள்ளேன். இதனால் பொருள் ஏதும் மாறாததால், தவறில்லை என்று கருதி அங்ஙனம் செய்துள்ளேன்.

வணக்கம்,
கோவிந்தன்.