Sunday, January 30, 2011

தியாகராஜ கிருதி - என்னடு3 ஜூதுனோ - ராகம் கலாவதி - Ennadu Jutuno - Raga Kalaavati

பல்லவி
என்னடு3 ஜூதுனோ இன குல திலக நி(ன்னெ)

அனுபல்லவி
பன்னக31யன ப4க்த ஜனாவன
புன்னம சந்து3ரு போலு முக2முனு (எ)

சரணம்
4ரணிஜா ஸௌமித்ரி ப4ரத ரிபுக்4
வானர யூத2 பதி வருடா3ஞ்ஜனேயுடு3
1கருணனு ஒகரிகொகரு வர்ணிம்ப-
நாத3ரணனு பிலிசே 2நின்னு த்யாக3ராஜார்சித (எ)


பொருள் - சுருக்கம்
  • பரிதி குலத்திலகமே!
  • அரவணையோனே! தொண்டர்களைக் காப்போனே!
  • தியாகராசன் தொழுவோனே!

  • என்று காண்பேனோ, உன்னை?
  • முழுமதி போலுமுனது முகத்தினை என்று காண்பேனோ?

    • புவிமகள், சௌமித்திரி, பரதன், சத்துருக்கினன், வானரர்கள் தலைவன், மேலோன் அனுமன் (ஆகியோர்) கருணையடன், ஒருவருக்கொருவர் (உன்னை) வருணிக்க,

  • ஆதரவுடன் அழைக்கும் உன்னை, என்று காண்பேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னடு3/ ஜூதுனோ/ இன/ குல/ திலக/ நின்னு/ (எ)
என்று/ காண்பேனோ/ பரிதி/ குல/ திலகமே/ உன்னை/


அனுபல்லவி
பன்னக3/ ஸ1யன/ ப4க்த ஜன/-அவன/
அரவு/ அணையோனே/ தொண்டர்களை/ காப்போனே/

புன்னம/ சந்து3ரு/ போலு/ முக2முனு/ (எ)
முழு/ மதி/ போலும்/ (உனது) முகத்தினை/ என்று...


சரணம்
4ரணிஜா/ ஸௌமித்ரி/ ப4ரத/ ரிபுக்4ன/
புவிமகள்/ சௌமித்திரி/ பரதன்/ சத்துருக்கினன்/

வானர யூத2/ பதி/ வருடு3/-ஆஞ்ஜனேயுடு3/
வானரர்கள்/ தலைவன்/ மேலோன்/ அனுமன்/ (ஆகியோர்)

கருணனு/ ஒகரிகி/-ஒகரு/ வர்ணிம்பனு/-
கருணையடன்/ ஒருவருக்கு/ ஒருவர்/ (உன்னை) வருணிக்க/

ஆத3ரணனு/ பிலிசே/ நின்னு/ த்யாக3ராஜ/-அர்சித/ (எ)
ஆதரவுடன்/ அழைக்கும்/ உன்னை/ தியாகராசன்/ தொழுவோனே/ என்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நின்னு - நினு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கருணனு - கருணையுடன். இச்சொல் அமைந்திருக்கும் இடத்தினைக் கருத்தில் கொண்டு, இதனை, 'வருணிக்க' என்பதன் அடைமொழியாக (கருணையுடன் வருணிக்க) என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், 'கருணனு' என்பதற்கு 'கருணையினை' என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, இது, 'இறைவனுடைய கருணையினை' அவர்கள் வருணிப்பதாகவும் கொள்ளலாம். முற்கூறியபடி, 'கருணையுடன் வருணிக்க' என்பதில் 'கருணை' என்பது 'உருக்கமாக' என்று பொருள்படும்.

புவிமகள் - சீதை
சௌமித்திரி - சுமித்திரை மகன் - இலக்குவன்
வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்

Top


Updated on 30 Jan 2011

No comments: