Tuesday, July 13, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ க3ண நாத2ம் - ராகம் கனகாங்கி - Sri Gana Natham - Raga Kanakangi

பல்லவி
ஸ்ரீ க3ண நாத2ம் ப4ஜாம்யஹம்
ஸ்ரீ-கரம் சிந்திதார்த22லத3ம்

அனுபல்லவி
ஸ்ரீ கு3ரு கு3ஹாக்3ரஜம் அக்3ர பூஜ்யம்
ஸ்ரீ-கண்டா2த்மஜம் ஸ்1ரித ஸாம்ராஜ்யம் (ஸ்ரீ)

சரணம்
ரஞ்ஜித நாடக ரங்க3 தோஷணம்
ஸி1ஞ்ஜித வர மணி-மய பூ4ஷணம்
1ஆஞ்ஜனேயாவதாரம் 2ஸு-பா4ஷணம்
குஞ்ஜர முக2ம் த்யாக3ராஜ போஷணம் (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • கண நாதனை தொழுவேனே நான்.

    • சீரருள்வோனை,
    • எண்ணியவற்றின் பயனருள்வோனை,

    • குரு குகனுக்கு மூத்தோனை,
    • முதலில் வழிபடப்படுவோனை,
    • நஞ்சு மிடற்றோன் மைந்தனை,
    • சார்ந்தோரின் பேரரசினை,

    • (உலக) வண்ண நாடக அரங்கினில் களிப்போனை,
    • கிண்கிணிக்கும் சிறந்த மணிமயமான அணிகலன்களோனை,
    • ஆஞ்சனேயனாக அவதரித்தோனை,
    • இனிய சொல்லோனை,
    • யானை முகத்தோனை,
    • தியாகராசனைப் பேணுவோனை,

  • கண நாதனை தொழுவேனே நான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ க3ண/ நாத2ம்/ ப4ஜாமி/-அஹம்/
ஸ்ரீ கண/ நாதனை/ தொழுவேனே/ நான்/

ஸ்ரீ/-கரம்/ சிந்தித-அர்த2/ ப2லத3ம்/
சீர்/ அருள்வோனை/ எண்ணியவற்றின்/ பயனருள்வோனை/ ஸ்ரீ கண...


அனுபல்லவி
ஸ்ரீ கு3ரு/ கு3ஹ/-அக்3ரஜம்/ அக்3ர/ பூஜ்யம்/
ஸ்ரீ குரு/ குகனுக்கு/ மூத்தோனை/ முதலில்/ வழிபடப்படுவோனை/

ஸ்ரீ/-கண்ட2/-ஆத்மஜம்/ ஸ்1ரித/ ஸாம்ராஜ்யம்/ (ஸ்ரீ)
நஞ்சு/ மிடற்றோன்/ மைந்தனை/ சார்ந்தோரின்/ பேரரசினை/ ஸ்ரீ கண...


சரணம்
ரஞ்ஜித/ நாடக/ ரங்க3/ தோஷணம்/
(உலக) வண்ண/ நாடக/ அரங்கினில்/ களிப்போனை/

ஸி1ஞ்ஜித/ வர/ மணி/- மய/ பூ4ஷணம்/
கிண்கிணிக்கும்/ சிறந்த/ மணி/ மயமான/ அணிகலன்களோனை/

ஆஞ்ஜனேய/-அவதாரம்/ ஸு/-பா4ஷணம்/
ஆஞ்சனேயனாக/ அவதரித்தோனை/ இனிய/ சொல்லோனை/

குஞ்ஜர/ முக2ம்/ த்யாக3ராஜ/ போஷணம்/ (ஸ்ரீ)
யானை/ முகத்தோனை/ தியாகராசனை/ பேணுவோனை/ ஸ்ரீ கண...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸு-பா4ஷணம் - 2ஸு-பூ4ஷணம்.

Top

மேற்கோள்கள்
1 - ஆஞ்ஜனேயாவதாரம் - ஆஞ்சனேயனாக அவதரித்தோன் : 'ஸங்க்ரஹ ராமாயணத்தில்' இங்ஙனம் கூறப்பட்டுள்ளதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமுள்ள பாடல்களின் பட்டியலில், இப்பாடலும் இடம் பெற்றுள்ளது.

நஞ்சு மிடற்றோன் - சிவன்
குரு குகன் - முருகன்
முதலில் வழிபடப்படுவோன் - எந்த சடங்கிற்கு முன்பும்

Top


Updated on 13 Jul 2010

1 comment:

Sivamjothi said...

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html