Wednesday, June 2, 2010

தியாகராஜ கிருதி - நிதி4 சால - ராகம் கல்யாணி - Nidhi Chala - Raga Kalyani

பல்லவி
நிதி4 சால ஸுக2மா ராமுனி
ஸன்னிதி4 ஸேவ ஸுக2மா 1நிஜமுக3 பல்கு மனஸா

அனுபல்லவி
3தி4 நவனீத க்ஷீரமுலு 2ருசியோ
தா31ரதி2 த்4யான ப4ஜன ஸுதா4 ரஸமு 2ருசியோ (நி)

சரணம்
33ம ஸ1மனு க3ங்கா3 ஸ்நானமு ஸுக2மா
கர்த3ம து3ர்விஷய கூப ஸ்நானமு ஸுக2மா
4மமத3ந்த4ன யுத நர ஸ்துதி ஸுக2மா
5ஸுமதி த்யாக3ராஜ நுதுனி கீர்தன ஸுக2மா (நி)


பொருள் - சுருக்கம்
  • மனமே!

  • உண்மையாகச் சொல்வாய் -

    • செல்வம் மிக்கு சுகமாமோ அன்றி இராமனின் சன்னிதி சேவை சுகமாமோ?
    • தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவையாமோ? தாசரதியின் தியானம், பஜனையெனும் அமுதச் சாறு சுவையாமோ?
    • மனவொடுக்கம், மனவமைதியெனும் கங்கை நீராடல் சுகமாமோ? அருவருப்பான, தீய விடயங்களெனும் கிணற்று நீராடல் சுகமாமோ?
    • அகந்தைக் கட்டுண்ட மனிதர்களின் புகழ்ச்சி சுகமாமோ? நல்லுள்ள, தியாகராசன் போற்றுவோனின் கீர்த்தனை சுகமாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிதி4/ சால/ ஸுக2மா/ ராமுனி/
செல்வம்/ மிக்கு/ சுகமாமோ/ (அன்றி) இராமனின்/

ஸன்னிதி4/ ஸேவ/ ஸுக2மா/ நிஜமுக3/ பல்கு/ மனஸா/
சன்னிதி/ சேவை/ சுகமாமோ/ உண்மையாக/ சொல்வாய்/ மனமே/


அனுபல்லவி
3தி4/ நவனீத/ க்ஷீரமுலு/ ருசியோ/
தயிர்/ வெண்ணெய்/ பால் ஆகியவை/ சுவையாமோ/

தா31ரதி2/ த்4யான/ ப4ஜன/ ஸுதா4/ ரஸமு/ ருசியோ/ (நி)
தாசரதியின்/ தியானம்/ பஜனையெனும்/ அமுத/ சாறு/ சுவையாமோ/


சரணம்
3ம/ ஸ1மமு/-அனு/ க3ங்கா3/ ஸ்நானமு/ ஸுக2மா/
மனவொடுக்கம்/ மனவமைதி/ யெனும்/ கங்கை/ நீராடல்/ சுகமாமோ/

கர்த3ம/ து3ர்/-விஷய/ கூப/ ஸ்நானமு/ ஸுக2மா/
அருவருப்பான/ தீய/ விடயங்களெனும்/ கிணற்று/ நீராடல்/ சுகமாமோ/

மமத/ ப3ந்த4ன யுத/ நர/ ஸ்துதி/ ஸுக2மா/
அகந்தை/ கட்டுண்ட/ மனிதர்களின்/ புகழ்ச்சி/ சுகமாமோ/

ஸுமதி/ த்யாக3ராஜ/ நுதுனி/ கீர்தன/ ஸுக2மா/ (நி)
நல்லுள்ள/ தியாகராசன்/ போற்றுவோனின்/ கீர்த்தனை/ சுகமாமோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ருசியோ - ருசோ.

4 - மமத - மமதா.

Top

மேற்கோள்கள்
3 - 3ம ஸ1 - ஷட்3-கு3ண ஸம்பத் (ஆறு பண்புகளெனும் செல்வம்) - மனவொடுக்கம் (த3ம), மனவமைதி (ஸ1ம), பொறுமை(திதீக்ஷ), சமநோக்கு(ஸமாதா4ன), பற்றின்மை(உபராதி), நம்பிக்கை (ஸ்1ரத்3தா4).

Top

விளக்கம்
1 - நிஜமுக3 பல்கு - உண்மையாகச் சொல்வாய் - நம் உள்ளத்தில் எழும் அறப் போராட்டங்களை இச்சொல் குறி்க்கின்றது. இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

நன்மை, இன்பம் - இவ்விரண்டும் மனிதனை அணுகுகின்றன.
இவற்றினை ஆராய்ந்து, நுண்ணறிவுடையவன், பிரிக்கின்றான்.
நன்மையினை, இன்பத்தினின்றும் மேம்பட்டதென, தீரன் தேர்ந்தெடுக்கின்றான்.
இன்பத்தினை, உலக சௌகரியங்களுக்காக, மந்த புத்தியுடையவன் தேர்ந்தெடுக்கின்றான்.(I-ii-2)
(ஸ்வாமி கம்பீரானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

5 - ஸுமதி - நல்லுள்ள - இறைவனையோ, தியாகராசரையோ குறிப்பதாகக் கொள்ளலாம்

Top

சன்னிதி - சமுகம்
தாசரதி - இராமன்
பஜனை - இறைவனின் புகழைப் பாடும் கூட்டு வழிபாடு
விடயங்கள் - புலன்களால் நுகரப் படுபவை

Top


Updated on 02 Jun 2010

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
நான் புரிந்துகொண்ட வரை ஸம்ஸ்க்ருதத்தில் பெரும்பாலான வேற்றுமையுருபுகள் தொக்கி நிற்கின்றன. ஆதலால் தமிழில் பொருளை விரிவாகக் கூறுவது நன்று.
1 மமத/ ப3ந்த4ன - அகந்தை கட்டுண்ட என்பதற்குப் பதில் அகந்தையில் கட்டுண்ட என்பது தெளிவாக இருக்கும்.
2 ஸுமதி என்பதற்கு நல்லுள்ள என்னும் பொருள் தெளிவாக இல்லை. நல்லுள்ளத்தோன் என்று பொருள் கொடுத்துள்ளீர். நல்லுள்ள என்பது வழக்கிலில்லை. இது யாரைக்குறிக்கும் என்பதுவும் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளீர்.
ஸு+மதி என்றால் நல்ல உள்ளம் என்று தானே பொருள்.
தமிழில் ’நல்ல உள்ளம் தியாகராஜன்’ என்று கூறுவது சரியல்ல. தெலுங்கிலும் அவ்வாறே. ஆனால் தியாகராஜரின் பாடல்கள் ‘ஸம்ஸ்க்ருதாந்த்3ரத்திலுள்ளன’ என்று படித்துள்ளேன். (சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மணிப்பிரவாளம் இருந்தது போல்).

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தாங்கள் கூறுவது உண்மையே. வேறு சில இடங்களிலும் இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன். முழுக்க வசன நடையில் எழுதினால்தான் நீங்கள் எதிர்ப்பார்ப்பது போன்ற விரிவான பொருள் கூற இயலும். அதனால்தான் எங்கெல்லாம் ஐயம் எழுவதற்கான வாய்ப்பு உள்ளதோ, அங்கு விளக்கம் கூறியுள்ளேன்.

'ஸுமதி' என்பது 'நல்லுள்ளத்தோன்' என்று பொருள்படும். ஆனால், அதனுடன் 'தியாகராஜ' என்பதனையும் இணைத்து, 'நல்லுள்ள' என்று பொருள் கூறியுள்ளேன். ஆயினும், இது இறைவனையும் குறிக்கலாம் என்று விளக்கமும் கூறியுள்ளேன்.

'நல்லுள்ள' என்ற சொல் வழக்கில் இல்லை என்று நீங்கள் கூறுவது சரியா என நான் அறியேன். எனக்குத் தெரிந்தவரை, 'நல்ல' என்பதன் சுருக்கமான 'நல்' என்ற prefix தமிழில் பொதுவாக வழக்கிலுள்ளது.

தியாகராஜர், தனது பாடல்களில், தெலுங்கில் இல்லாத ஸம்ஸ்கிருதச் சொற்களையெல்லாம், தெலுங்கு இலக்கணப்படியே பயன்படுத்துகின்றார். உதாரணமாக 'ஆஹ்லாத3' என்பது முழுக்க முழுக்க ஸம்ஸ்கிருதச் சொல்லாகும். அதனை 'ஆஹ்லாத3மு' என்று தியாகராஜர் பயன்படுத்துகின்றார்.

எனவே, மொழிபெயர்ப்பில் நிறைய குழப்பங்கள் உள்ளன. ஏதோ எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் முயற்சி செய்திருக்கின்றேன்.

மேற்கொண்டு, யாராவது நல்ல தமிழில், இப்பாடல்களை மொழிபெயர்த்து, அவர் பாடல்களுக்கு மெருகூட்டுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு

நான் கூறவந்தது என்னவெனின் நல்லுள்ள தியாகராஜ என்பதற்குப் பதிலாக நல்லுள்ளமுடைய என்று கூறலாமே என்று தான். உள்ள/ உடைய என்பன ஒரே பொருளுடைய சொற்கள். உள்ளம் +உடைய எனில் பொருள் தெளிவாக உள்ளது. ஆனால் நல் +உள்ள என்றால் என்ன உள்ள என்ற ஐயம் எழும். தெலுங்கில் ஸுமதி த்யாகராஜ என்பதற்கு ‘மஞ்சி மனஸு த்யாகராஜ’ என்று கூறினால் பொருள் இல்லை. ஸுமதி என்னும் சொல்லைத் தெலுங்கு வழக்கப்படி மஞ்சி மனஸு க3ல என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஸுமதி எனும் ஒரு சொல், நல்ல உள்ளம் உடைய என்று பொருள் தரும் என்பது இந்த மொழியைக் கல்லாத எனக்குத் வியப்பளிக்கிறது.
.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'ஸுமதி', 'குமதி', இவை 'நல்ல', 'கெட்ட உள்ளத்தை'யும், 'உள்ளமுடையவனை'யும் குறிக்கும்.உதராணமாக 'குந்த3 ரத3ன' என்பது 'முல்லைப் பற்களையும்', 'அத்தகைய பற்களுடையவனை'யும் குறிக்கும். அதனால் தான் அத்தகைய பதங்களை மொழிபெயர்ப்பதற்கு, நீண்ட விளக்கங்கள் கூற வேண்டியுள்ளது.

'உள்ள' என்ற சொல் 'நல்' - உடன் சேர்ந்தால், 'மனதை'த்தான் குறிக்குமே தவிர, 'உடைய' என்ற பொருள் தராது.

வணக்கம்.
கோவிந்தன்.