Wednesday, July 1, 2009

தியாகராஜ கிருதி - த3ய ரானி - ராகம் மோஹனம் - Daya Raani - Raga Mohanam

பல்லவி
3ய ரானி த3ய ரானி தா31ரதீ2 ராம

சரணம்
சரணம் 1
விவரிம்ப தரமா 1ரகு4வீரானந்த3மு (த3ய)


சரணம் 2
தலசிதே மேனெல்ல புலகரிஞ்செனு ராம (த3ய)


சரணம் 3
கனுகொனனானந்த3மை கன்னீரு நிண்டெ3னு (த3ய)


சரணம் 4
ஆஸிஞ்சு வேள ஜக3மந்த த்ரு2ணமாயெனு (த3ய)


சரணம் 5
சரண கௌகி3லி வேள செலகி3 மை மரசெனு (த3ய)


சரணம் 6
செந்தனுண்ட33 நாது3 சிந்தலு தொலகெ3னு (த3ய)


சரணம் 7
மர்ம ஹீனுல கூட3 2கர்மமனனய்யெனு (த3ய)


சரணம் 8
3தனகை ஸ்ரீ ராமாவதாரமெத்திதிவோ (த3ய)


சரணம் 9
நாவண்டி தா3ஸுல ப்3ரோவ வெட3லிதிவோ (த3ய)


சரணம் 10
மூடு3 மூர்துலகாதி3 மூலமு நீவே ராம (த3ய)


சரணம் 11
ஸ்ரீ த்யாக3ராஜுனி செலிகாடு3 நீவே ராம (த3ய)


பொருள் - சுருக்கம்
தாசரதீ, இராமா! இரகுவீரா!
  • தயை வரட்டும்; தயை வரட்டும்;

  • விவரிக்க இயலுமா, ஆனந்தத்தினை?

  • (உன்னை) நினைத்தாலே உடலெல்லாம் புல்லரித்தது;

  • (உன்னைக் ) காண, ஆனந்தமாகி, கண்ணீர் நிறைந்தது;

  • (உன்னை) காமுறும் வேளை, உலகமெல்லாம் துரும்பானது;

  • திருவடிகளை அணைத்தவமயம், ஒளிர்ந்து, மெய்ம்மறந்தது;

  • (நீ) அருகிலிருக்க, எனது கவலைகள் தொலைந்தன;

  • (உனது) மருமம் அறியாதவரைக் கூடுதலும் கருமமெனலாயிற்று;

  • எனக்காக இராமனாக அவதரித்தாயோ?

  • என்னைப் போன்ற தொண்டர்களைக் காக்க எழுந்தருளினாயோ?

  • மும்மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் நீயே;

  • தியாகராசனின் உற்ற நண்பன் நீயே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய/ ரானி/ த3ய/ ரானி/ தா31ரதீ2/ ராம/
தயை/ வரட்டும்/ தயை/ வரட்டும்/ தாசரதீ/ இராமா/


சரணம்
சரணம் 1
விவரிம்ப/ தரமா/ ரகு4வீர/-ஆனந்த3மு/ (த3ய)
விவரிக்க/ இயலுமா/ இரகுவீரா/ ஆனந்தத்தினை/


சரணம் 2
தலசிதே/ மேனு/-எல்ல/ புலகரிஞ்செனு/ ராம. (த3ய)
(உன்னை) நினைத்தாலே/ உடல்/ எல்லாம்/ புல்லரித்தது/ இராமா/


சரணம் 3
கனுகொன/-ஆனந்த3மை/ கன்னீரு/ நிண்டெ3னு/ (த3ய)
(உன்னைக் ) காண/ ஆனந்தமாகி/ கண்ணீர்/ நிறைந்தது/


சரணம் 4
ஆஸிஞ்சு/ வேள/ ஜக3மு/-அந்த/ த்ரு2ணமு/-ஆயெனு/ (த3ய)
(உன்னை) காமுறும்/ வேளை/ உலகம்/ எல்லாம்/ துரும்பு/ ஆனது/


சரணம் 5
சரண/ கௌகி3லி/ வேள/ செலகி3/ மை/ மரசெனு/ (த3ய)
திருவடிகளை/ அணைத்த/ அமயம்/ ஒளிர்ந்து/ மெய்/ மறந்தது/


சரணம் 6
செந்தனு/-உண்ட33/ நாது3/ சிந்தலு/ தொலகெ3னு/ (த3ய)
(நீ) அருகில்/ இருக்க/ எனது/ கவலைகள்/ தொலைந்தன/


சரணம் 7
மர்ம/ ஹீனுல/ கூட3/ கர்மமு/-அனனு/-அய்யெனு/ (த3ய)
(உனது) மருமம்/ அறியாதவரை/ கூடுதலும்/ கருமம்/ எனல்/ ஆயிற்று/


சரணம் 8
தனகை/ ஸ்ரீ ராம/-அவதாரமு-எத்திதிவோ/ (த3ய)
எனக்காக/ ஸ்ரீ ராமனாக/ அவதரித்தாயோ/


சரணம் 9
நாவண்டி/ தா3ஸுல/ ப்3ரோவ/ வெட3லிதிவோ/ (த3ய)
என்னைப் போன்ற/ தொண்டர்களை/ காக்க/ எழுந்தருளினாயோ/


சரணம் 10
மூடு3/ மூர்துலகு/-ஆதி3/ மூலமு/ நீவே/ ராம/ (த3ய)
மூன்று/ மூர்த்திகளுக்கும்/ ஆதி/ மூலம்/ நீயே/ இராமா/


சரணம் 11
ஸ்ரீ த்யாக3ராஜுனி/ செலிகாடு3/ நீவே/ ராம/ (த3ய)
ஸ்ரீ தியாகராசனின்/ உற்ற நண்பன்/ நீயே/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆனந்த3மு - ஆனந்த3முனு

2 - கர்மமனனய்யெனு - கர்மமனனைதினி

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - தனகை ஸ்ரீ ராமாவதாரமெத்திதிவோ - எனக்காக ராமனாக அவதரித்தாயோ? இப்பாடல் பிரகலாதன் அரியினை நோக்கிப் பாடுவதாக. எனவே, இங்கு ராமாவதாரம் பற்றி கூறப்படுவது வியப்பாக இருந்தாலும், தியாகராஜர், இந்த மாதிரி பல பாடல்களில், தான் பிரகலாதனாகவே மாறி, தன்னுள்ளப்பாங்கினை வெளிப்படுத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றி, பிரகலாதனே, தியாகராஜனாக உருக்கொண்டானோ, என்று வியக்குமளவுக்கு பாடல்களின் அமைப்பு உள்ளது.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

தாசரதீ - தசரதன் மைந்தன்
கருமம் - விரும்பாத, ஆயின் தள்ளவியலாத, செயல்

Top


Updated on 01 Jul 2009

No comments: