Saturday, January 24, 2009

தியாகராஜ கிருதி, எவரிகை - ராகம் தே3வ மனோஹரி - Evarikai - Raga Deva Manohari

பல்லவி
1எவரிகை அவதாரமெத்திதிவோ
இபுடை3ன தெலுபவய்ய 2ராமய்ய (எவரிகை)

அனுபல்லவி
அவனிகி ரம்மனி பிலிசின 3மஹராஜெவடோ3
வானிகி 4ம்ரொக்கெத3 ராம (எவரிகை)

சரணம்
5வேத3 வர்ணனீயமௌ நாமமுதோ
விதி4 ருத்3ருலகு மேல்மியகு3 ரூபமுதோ
மோத3 ஸத3னமகு3 படு சரிதமுதோ
6முனி ராஜ வேஷியௌ 7த்யாக3ராஜ நுத (எவரிகை)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! முனியரச வேடமணிந்த, தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
  • மறைகளில் வருணிக்கப்பெற்ற பெயருடனும்,

  • விதி, உருத்திரர்களினும் மேன்மையான வடிவத்துடனும்,

  • களிப்பின் உறைவிடமாகும் உயரிய சரிதத்துடனும்,

எவருக்கென அவதாரமெடுத்தாயோ! இப்போழ்தேனும் தெரிவியுமய்யா;

அவனிக்கு வாயென்றழைத்த மகராசன் எவனோ அவனை வணங்குகின்றேன்


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரிகை/ அவதாரமு/-எத்திதிவோ/
எவருக்கென/ அவதாரம்/ எடுத்தாயோ/

இபுடை3ன/ தெலுபு/-அய்ய/ ராமய்ய/
இப்போழ்தேனும்/ தெரிவியும்/ அய்யா/ இராமய்யா/


அனுபல்லவி
அவனிகி/ ரம்மு/-அனி/ பிலிசின/ மஹராஜு/-எவடோ3/
அவனிக்கு/ வா/ என்று/ அழைத்த/ மகராசன்/ எவனோ/

வானிகி/ ம்ரொக்கெத3/ ராம/ (எ)
அவனை/ வணங்குகின்றேன்/ இராமா/


சரணம்
வேத3/ வர்ணனீயமௌ/ நாமமுதோ/
மறைகளில்/ வருணிக்கப்பெற்ற/ பெயருடனும்/

விதி4/ ருத்3ருலகு/ மேல்மியகு3/ ரூபமுதோ/
விதி/ உருத்திரர்களினும்/ மேன்மையான/ வடிவத்துடனும்/

மோத3/ ஸத3னமகு3/ படு/ சரிதமுதோ/
களிப்பின்/ உறைவிடமாகும்/ உயரிய/ சரிதத்துடனும்/

முனி/ ராஜ/ வேஷியௌ/ த்யாக3ராஜ/ நுத/ (எ)
முனி/ அரச/ வேடமணிந்த/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ எவருக்கென...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ராமய்ய (எவரிகை) - ராமய்ய நீ(வெவரிகை)

4 - ம்ரொக்கெத3 - ம்ரொக்கெனு : 'ம்ரொக்கெத3' பொருந்தும்.

7 - த்யாக3ராஜ நுத (எவரிகை) - த்யாக3ராஜ நுத நீ(வெவரிகை)

Top

மேற்கோள்கள்
6 - முனி ராஜ வேஷியௌ - முனியரசன் வேடமணிந்த - முனிவனின் மனப்பாங்குடைய அரசனாக - கைகேயி, ராமனை அடவிக்குச் செல்ல கட்டளையிட்ட போழ்து, தன்னைக் குறித்து, ராமன் அவளிடம் பகர்ந்த சொற்களை (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 19, செய்யுள் 20) நோக்கவும் -
"தேவி! இவ்வுலகத்தில் நான் பொருளாசைக்கு அடிமையாக வாழ்வதை விரும்பவில்லை; தூய அறநெறி நிற்கும் இருடிகளுக்கு நிகராக என்னைக் கருதுவாயாக."

Top

விளக்கம்
1 - எவரிகை அவதாரமெத்திதிவோ - தலைசிறந்த பாகவத சொற்பொழிவாளர், திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தன்னுடைய 'தியாகராஜ ராமாயணம்' என்னும் ஹரிகதையில், தியாகராஜர், ராவணனை நினைவிற்கொண்டு இப்பாடலைப் பாடியதாகக் கூறுகின்றார். ராவணன் இல்லாமற்போனால் ராமனின் அவதாரம் ஏற்பட்டிருக்காதன்றோ!

Top

3 - மஹராஜெவடோ3 - மகராஜன் எவனோ - தமிழில் 'மகராசன்', 'மகராசி' என்ற சொற்கள் வாழ்த்துக்களாகும்.
ராவணன் தலைசிறந்த சிவ பக்தன். சாமகானம் பாடி, தனது பத்து தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து, சிவனிடம் வரம் பெற்றவன். அவனுடைய ஆளுகையில், மறையோதல் சிறந்தமுறையில் நடந்துவந்ததை, அனுமன், தனது இலங்கைப் பயணத்தில் கண்டான்.

சீதையைத் தொட்டு, அபகரித்து, அவளை தனது மடிமீதிருத்தி, ஆகாய மார்க்கத்தில் கொண்டு சென்று, சிறையிட்டு, ஒரு வருடம் அவகாசம் கொடுத்து, அவளை, தனது பட்டராணியாகும்படி வேண்டினான். ஆனால், 'பெண்ணாசை கொண்டவன்' என்ற பெயர் பெற்ற அவன், சீதையை பலாத்காரம் செய்யாததும், தண்டகாரண்யத்தில், ஒற்றர்களை அனுப்பி, ராமனைப் பற்றி உளவு பார்த்த அவன், ராமனும் வானரப் படைகளும் பாலம் கட்டி இலங்கைக்குள் புகும்வரை சும்மாயிருந்ததும், ராவணனுடைய இயற்கையினைக் காட்டுவதாக இல்லை. அவன் சீதையைக் குறித்தும் ராமனைக் குறித்தும் அறிந்தே புரிந்த செயல்களாகத்தான் தோன்றுகின்றன. அதனால் தியாகராஜர் ராவணனை இப்பாடலில் புகழ்வது பொருந்தும்.

Top

5 - வேத3 வர்ணனீயமௌ நாமமுதோ - மறைகளில் வருணிக்கப்பெற்ற பெயருடன் - மறைகள் ராமனைப் புகழ்ந்துள்ளனவாயெனத் தெரியவில்லை. ஆனால் 'ராம' என்ற பெயரின் ஈரெழுத்துக்களும், 'நாராயணாய' என்ற சொல்லின் உயிராகிய 'ரா', மற்றும் 'நமசிவாய' என்ற சொல்லின் உயிராகிய 'ம' என்ற எழுத்தின் சேர்க்கை என்றும், இச்சொல், 'ஓம்' எனும் பிரணவத்திற்கு நிகரான 'தாரகம்' - அதாவது பிறவிக் கடலை கடத்துவிப்பது - என்றும் கருதப்படுகின்றது. இது குறித்து, காஞ்சி மாமுனிவரின் உரையினை நோக்கவும்.

விதி - பிரமன்

உருத்திரர் - சிவன்

சரிதம் - நடத்தை என்றும் கொள்ளலாம்

Top


Updated on 24 Jan 2009

No comments: