Saturday, January 3, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ நாரத3 நாத3 - ராகம் கானட3 - Sri Narada Nada - Raga Kaanada

பல்லவி
ஸ்ரீ நாரத3 நாத3 ஸரஸீருஹ ப்4ரு2ங்க3 ஸு1பா4ங்க3

அனுபல்லவி
தீ3ன மான ரக்ஷக 1ஜக3தீ31 2பே41 ஸங்காஸ1 (ஸ்ரீ)

சரணம்
3வேத3 ஜனித வர வீணா வாத3 தத்வக்3
கே23 ஹர 4த்ரி-தாப ரஹித 5கே2சர வினுத
யாத3வ குலஜாப்த ஸதா3 மோத3 ஹ்ரு236முனி வர்ய
ஸ்ரீ-த3 த்யாக3ராஜ வினுத ஸ்ரீ-கர மாம் பாலய (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
நாரதரே! நாதமெனும் கமலத்தின் (தேனுண்ணும்) வண்டே! மங்களமான அங்கங்களுடையவரே!

எளியோரின் மானத்தைக் காப்பவரே! உலகத்திற்கீசரே! தாராதிபனுக்கு நிகரான(ஒளியுடைய)வரே!

மறைகளிலுதித்த உயர் வீணையிசையில் தேர்ந்தவரே! துன்பங்களைக் களைபவரே! முவ்வெம்மைகளற்றவரே! தும்புருவால் போற்றப் பெற்றவரே! யாதவ குலத்துதித்தோனுக் கினியவரே! எவ்வமயமும் களித்திருக்கும் இதயமுடைத்தவரே! முனிவர்களால் வேண்டப்படுபவரே! சீரருள்வோரே! தியாகராசனால் போற்றப் பெற்றவரே! மங்களமருள்பவரே!

என்னைக் காப்பீராக.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ நாரத3/ நாத3/ ஸரஸீருஹ/ ப்4ரு2ங்க3/ ஸு14/-அங்க3/
ஸ்ரீ நாரதரே/ நாதமெனும்/ கமலத்தின்/ வண்டே/ மங்களமான/ அங்கங்களுடையவரே/


அனுபல்லவி
தீ3ன/ மான/ ரக்ஷக/ ஜக3த்3/-ஈஸ1/ ப4-ஈஸ1/ ஸங்காஸ1/ (ஸ்ரீ)
எளியோரின்/ மானத்தை/ காப்பவரே/ உலகத்திற்கு/ ஈசரே/ தாராதிபனுக்கு/ நிகரானவரே/


சரணம்
வேத3/ ஜனித/ வர/ வீணா/ வாத3ன/ தத்வக்3ஞ/
மறைகளில்/ உதித்த/ உயர்/ வீணை/ இசையில்/ தேர்ந்தவரே/

கே23/ ஹர/ த்ரி-தாப/ ரஹித/ கே2சர/ வினுத/
துன்பங்களை/ களைபவரே/ முவ்வெம்மைகள்/ அற்றவரே/ தும்புருவால்/ போற்றப் பெற்றவரே/

யாத3வ/ குலஜ/-ஆப்த/ ஸதா3/ மோத3/ ஹ்ரு23ய/ முனி/ வர்ய/
யாதவ/ குலத்துதித்தோனுக்கு/ இனியவரே/ எவ்வமயமும்/ களித்திருக்கும்/ இதயமுடைத்தவரே/ முனிவர்களால்/ வேண்டப்படுபவரே/

ஸ்ரீ/-த3/ த்யாக3ராஜ/ வினுத/ ஸ்ரீ/-கர/ மாம்/ பாலய/ (ஸ்ரீ)
சீர்/ அருள்வோரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவரே/ மங்களம்/ அருள்பவரே/ என்னை/ காப்பீராக/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - பே41 - தாராதிபன் - மதி

3 - வேத3 ஜனித வர வீணா வாத3 - வீணையின் சிறப்புகளைப் பற்றி இந்த web site-களில் நோக்கவும். வீணையின் பெருமை; நாரதரின் வீணை - மஹதி.

4 - த்ரி-தாப - முவ்வெம்மை - அத்தியாத்துமிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக.

6 - முனி வர்ய - ராமாயண காவியத்தினை இயற்றிய வால்மீகி முனிவருக்கும் அவரைப்போன்று மற்றும் பல முனிவர்களுக்கமு நாரதரே ஆசானாவார். நாரதரின் கதை. நாரத பக்தி சூத்திரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
Top

விளக்கம்
1 - ஜக3தீ31 - உலகிற்கீசரே - இந்த அடைமொழியை தியாகராஜர் பயன்புடுத்துவதன் நோக்கம் விளங்கவில்லை. கீதையில் கண்ணன் 'தேவ-ரு2ஷிகளில் நான் நாரதர்' (10:26) என்கிறான். என்றாலும் இந்த அடைமொழி பொதுவாக இறைவனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது.

5 - கே2சர - தும்புரு - கந்தருவர் (வானோரின் இசைக் கலைஞர்கள்) தலைவன். ஹடயோகத்தில் கேசரி முத்திரை

யாதவ குலத்துதித்தோன் - கண்ணன்
Top


Updated on 04 Jan 2009

No comments: