Showing posts with label Sri Ranjani Raga. Show all posts
Showing posts with label Sri Ranjani Raga. Show all posts

Wednesday, March 18, 2009

தியாகராஜ கிருதி - ஸொக3ஸுகா3 ம்ரு2தங்க3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sogasugaa Mrdanga - Raga Sri Ranjani

பல்லவி

ஸொக3ஸுகா3 ம்ரு23ங்க3 தாளமு ஜத கூர்சி நினு
ஸொக்க ஜேயு தீ4ருடெ3வ்வடோ3

அனுபல்லவி

1நிக3ம ஸி1ரோர்த2மு கல்கி3
நிஜ வாக்குலதோ ஸ்வர ஸு1த்34முதோ (ஸொ)

சரணம்

2யதி 3விஸ்1ரம ஸத்34க்தி
விரதி த்3ராக்ஷா ரஸ 4நவ-ரஸ
யுத க்ரு2திசே 54ஜியிஞ்சு
யுக்தி த்யாக3ராஜுனி தரமா 6ஸ்ரீ ராம (ஸொ)


பொருள் - சுருக்கம்

ஸ்ரீ ராமா
  • சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!

  • மறைமுடியின் பொருளுடைய, உண்மையான சொற்களுடனும், சுரத் தூய்மையுடனும், சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!

  • யதி, விஸ்ரமம், தூய பக்தி, (உலகப்) பற்றின்மை, திராட்சைச் சாறு (நிகர்) நவரசம் கூடிய பாடல்களுடன் வழிபடும் முறைமை தியாகராசனின் தரமா?



பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி

ஸொக3ஸுகா3/ ம்ரு23ங்க3/ தாளமு/ ஜத/ கூர்சி/ நினு/
சொகுசாக/ மிருதங்க/ தாளத்தினை/ சோடு/ கட்டி/ உன்னை/

ஸொக்க/ ஜேயு/ தீ4ருடு3/-எவ்வடோ3/
சொக்க/ வைக்கும்/ தீரன்/ எவனோ/


அனுபல்லவி

நிக3ம/ ஸி1ரோ/-அர்த2மு/ கல்கி3ன/
மறை/ முடியின்/ பொருள்/ உடைய/

நிஜ/ வாக்குலதோ/ ஸ்வர/ ஸு1த்34முதோ/ (ஸொ)
உண்மையான/ சொற்களுடனும்/ சுர/ தூய்மையுடனும்/ சொகுசாக...


சரணம்

யதி/ விஸ்1ரம/ ஸத்3-ப4க்தி/
யதி/ விஸ்ரமம்/ தூய பக்தி/

விரதி/ த்3ராக்ஷா/ ரஸ/ நவ/-ரஸ/
(உலகப்) பற்றின்மை/ திராட்சை/ சாறு/ (நிகர்) நவ/ ரசம்/

யுத/ க்ரு2திசே/ ப4ஜியிஞ்சு/
கூடிய/ பாடல்களுடன்/ வழிபடும்/

யுக்தி/ த்யாக3ராஜுனி/ தரமா/ ஸ்ரீ ராம/ (ஸொ)
முறைமை/ தியாகராசனின்/ தரமா/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

5 - 4ஜியிஞ்சு - ப4ஜியிஞ்சே

6 - ஸ்ரீ ராம - ராம

Top

மேற்கோள்கள்

1 - நிக3ம ஸி1ரோ - மறை முடி - உபநிடதங்கள் - மறைமுடி

2 - யதி - இடைவெளி : யதி-1 : யதி-2 : திருவாளர் AS பஞ்சாபகேசய்யரின் 'கர்நாடக சங்கீத சாஸ்த்ரம்' நோக்கவும்

3 - விஸ்1ரம - அமைதி : விஸ்ரம

யதி, விஸ்ரமம் - இசைக்கலையின் சிறப்புச் சொற்கள் - இவற்றிற்க்கீடான தமிழ்ச் சொற்களென்ன?

4 - நவ-ரஸ - நவரசம் - அற்புதம், சினம், கருணை, அருவருப்பு, அமைதி, சிங்காரம், அச்சம், பெருநகை, வீரம்

Top

விளக்கம்

இக்கீர்த்தனையில் தியாகராஜர் இசைக்கலையின் சிறப்புச் சொற்களைப் (Technical Terms) பயன்படுத்தியுள்ளார். எனக்கு இசையறிவு இல்லையாகையால் கூடியவரைக்கும் முன்கூறப்பட்ட ஆதாரங்களை வைத்து மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

Top


Updated on 18 Mar 2009

Sunday, March 15, 2009

தியாகராஜ கிருதி - ஸரியெவ்வரே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sariyevvare - Raga Sri Ranjani

பல்லவி
ஸரியெவ்வரே ஸ்ரீ ஜானகி நீ

அனுபல்லவி
1பரமாத்முனிகை க3டி3தேரி ஸதா3
ஸிருலிச்சுடகு சேரி கொலிசின நீ (ஸரி)

சரணம்
2வனமந்து34யங்கரமைன
தாவுன நில்துனனி
மனஸு தெலிஸி
கனகாங்கி3யந்த3ந்து3ன ராஜ ஸுக2ம்பு3னு
கல்க3 ஜேஸிதிவே த்யாக3ராஜ நுதே (ஸரி)


பொருள் - சுருக்கம்
தாயே ஜானகி! பொன்னங்கத்தினளே! தியாகராசனால் போற்றப் பெற்றவளே!
    நிகர் யாரே, உனக்கு?
  • பரம்பொருளுக்கென தகுதிபெற்று, எவ்வமயமும் சுகமளிக்க, உடனிருந்து சேவை செய்தனை;

  • பயங்கரமான வனத்தினில் நிற்பேனென, (அவன்) உளமறிந்து, ஆங்காங்கு அரச சுகங்களினை உண்டாக்கினையே!

  • நிகர் யாரே, உனக்கு?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரி/-எவ்வரே/ ஸ்ரீ ஜானகி/ நீ/
நிகர்/ யாரே/ ஸ்ரீ ஜானகி/ உனக்கு/


அனுபல்லவி
பரமாத்முனிகை/ க3டி3தேரி/ ஸதா3/
பரம்பொருளுக்கென/ தகுதிபெற்று/ எவ்வமயமும்/

ஸிருலு/-இச்சுடகு/ சேரி/ கொலிசின/ நீ/ (ஸரி)
சுகம்/ அளிக்க/ உடனிருந்து/ சேவை செய்த/ உனக்கு/ நிகர்...


சரணம்
வனமந்து3/ ப4யங்கரமைன/
வனத்தினில்/ அச்சமூட்டும்/

தாவுன/ நில்துனு/-அனி/ மனஸு/ தெலிஸி/
இடத்தினில்/ நிற்பேன்/ என/ (அவன்) உளம்/ அறிந்து/

கனக/-அங்கி3/-அந்த3ந்து3ன/ ராஜ/ ஸுக2ம்பு3னு/
பொன்/ அங்கத்தினளே/ ஆங்காங்கு/ அரச/ சுகங்களினை/

கல்க3 ஜேஸிதிவே/ த்யாக3ராஜ/ நுதே/ (ஸரி)
உண்டாக்கினையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - வனமந்து3 நில்துனனி - ராமன் சீதையை வனத்திற்கு அழைத்துச் செல்ல மறுக்கவே, சீதை, தனக்குத் திருமணமாகுமுன்பே, ஒரு பிக்ஷிணி, தான் வனத்திற்குச் செல்லப்போவதைப் பற்றி முன் கூட்டியே மொழிந்ததைக் கூறினாள். அப்படியும், ராமன் இணங்காகததனால், அவனை (ராமனை) 'நீ ஆண் மகனா?' என்று கூசாமல் கேட்டாள். அதன் பின்னரே, ராமன் சீதையை உடன் அழைத்துச் செல்ல சம்மதிக்கின்றான். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயங்கள் 28 - 30 நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பரமாத்முனிகை க3டி3தேரி - பரம்பொருளுக்கென தகுதிபெற்று - இராமனுக்கு இல்லாளாக இருக்க - பரம்பொருளை கணவனாக அடைதல் அத்தனை எளிதா? மகாபாரதத்தில், ருக்மிணி கண்ணனுக்கு அந்தணன் மூலமாக அனுப்பிய ஓலையில் கூறியது -

"நான், பரம புருஷனை, தக்க அளவுக்கு, நல்ல காரியங்கள், வேள்விகள், கொடை, நோன்புகள், விரதங்களினால் வழிபட்டதும், மற்ற தெய்வங்களையும், அந்தணர்களையும், ஆசான்களையும் தொழுததும் உண்மையானால், கண்ணன் எனது கைப்பற்றட்டும் - மற்றெவருமல்ல."

(ஒரு பிறவியில் மட்டுமே யாரும் கண்ணனை அடைந்துவிடமுடியாது என ருக்மிணிக்குத் தெரியும். அதனால், பணிவுடன் தான் முற்பிறவிகளில் செய்த தவங்களைக் குறித்து குறிப்பிடுகிறாள் - என உரையாசிரியர் விளக்குகின்றார்.) ஸ்வாமி பக்தி வேதாந்தம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 52, செய்யுள் 40

Top


Updated on 15 Mar 2009

Friday, March 13, 2009

தியாகராஜ கிருதி - மாரு பல்கக3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Maaru Palkaga - Raga Sri Ranjani

பல்லவி
மாரு பல்ககு3ன்னாவேமிரா
மா மனோ-ரமண

அனுபல்லவி
1ஜார சோர4ஜன ஜேஸிதினா
ஸாகேத ஸத3ன (மா)

சரணம்
2தூ3ர-பா4ரமந்து3 நா ஹ்ரு23-
யாரவிந்த3மந்து3
3நெலகொன்ன
4தா3ரினெரிகி3 ஸந்தஸில்லி-
னட்டி த்யாக3ராஜ நுத (மா)


பொருள் - சுருக்கம்
  • இலக்குமியின் உள்ளத்தினை மகிழ்விப்போனே! சாகேத நகருறைவோனே!

  • நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் (நீ) நிலைபெற்றுள்ள தன்மையினை யறிந்து களித்திருப்பவனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • (அல்லது)

  • நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் நிலைபெற்றுள்ள, நெறியினை யறிந்து களித்திருப்பவனாகிய, தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • காமுகரையும், கள்வரையுமா புகழ்ந்தேன்?

    • மறுமொழி பகராதிருப்பதென்னவைய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாரு/ பல்கக3/-உன்னாவு/-ஏமிரா/
மறுமொழி/ பகராது/ இருப்பது/ என்னவைய்யா/

மா/ மனோ/-ரமண/
இலக்குமியின்/ உள்ளத்தினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
ஜார/ சோர/ ப4ஜன ஜேஸிதினா/
காமுகரையும்/, கள்வரையும்/ புகழ்ந்தேனா/

ஸாகேத/ ஸத3ன/ (மா)
சாகேத/ நகருறைவோனே/


சரணம்
தூ3ர-பா4ரமந்து3/ நா/ ஹ்ரு23ய/-
நெடுந்தூரத்திலும்/ எனது/ இதய/

அரவிந்த3மந்து3/ நெலகொன்ன/
கமலத்திலும்/ (நீ) நிலைபெற்றுள்ள/

தா3ரினி/-எரிகி3/ ஸந்தஸில்லின-அட்டி/
தன்மையினை (நெறியினை)/ யறிந்து/ களித்திருப்பவனாகிய/

த்யாக3ராஜ/ நுத/ (மா)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - தூ3ர-பா4ரமந்து3 நா ஹ்ரு23யாரவிந்த3மந்து3 - நெடுந்தூரத்திலும், எனது இதயக் கமலத்திலும் - இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றான். பகவத் கீதையில் (அத்தியாயம் 13, செய்யுள் 15) கண்ணன் உரைப்பது -

"அனைத்து சீவன்களிலும் உள்ளும், புறமுமமாக, அசைவதும், அசையாததுவுமாக, நுண்மையினால் புலப்படாமலும் (அறியப்படாமலும்), நெடுந்தூரத்திலும், அருகிலும் உள்ளது." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்).

Top

விளக்கம்
1 - ஜார சோர - காமுகன் - கோபியரின் உள்ளம் கொள்ளை கொண்டதால், கண்ணனுக்கும் அப்படி யொரு பெயருண்டு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதி 'மார ரதி ப்ரியம்' - 'ரதி ப்ரியா' ராகம், மற்றும் தியாகராஜரின் கிருதி 'வர லீல கா3ன' - ராகம் ஸங்கராபரணம் நோக்கவும்.

1 - சோர - திருடன் - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'அழகிய பெண்' என்று ஒரு பொருளும் உண்டு. இங்கு 'திருடன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

3 - நெலகொன்ன - சரணத்தினை இருவிதமாக மொழிபெயர்க்கலாம். இரண்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முதலில் கூறப்பட்டுள்ள பொருள் மிக்கு பொருந்தும் என கருதுகின்றேன்.

4 - தா3ரி - பொதுவாக, இச்சொல்லுக்கு 'நெறி', 'வழி' என்று பொருள். ஆனால் 'தன்மை' என்றும் பொருளுண்டு. சரணத்தின் இரண்டுவிதமான மொழிபெயர்ப்புகளிலும், இரண்டு பொருட்களுமே 'நெறி', 'தன்மை', சந்தர்ப்பத்திற்கேற்ப, ஏற்கப்பட்டுள்ளது.

நெடுந்தூரம் - அங்கிங்கெனாது எங்கும்.
எனது இதயக் கமலத்திலும் நிலைபெற்றுள்ள - இது இறைவனைக் குறிக்கும்.
நெறி - இறைநெறி
Top


Updated on 13 Mar 2009

Thursday, March 12, 2009

தியாகராஜ கிருதி - ப்3ரோசேவாரெவரே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Brocevaarevare - Raga Sri Ranjani

பல்லவி
1ப்3ரோசேவாரெவரே ரகு4 பதீ

சரணம்
சரணம் 1
நினு வினா (ப்3ரோ)


சரணம் 2
ஸ்ரீ ராம நெனருன (ப்3ரோ)


சரணம் 3
ஸகல லோக நாயக (ப்3ரோ)


சரணம் 4
நர வர நீ ஸரி (ப்3ரோ)


சரணம் 5
தே3வேந்த்3ராது3லு மெச்சுடகு லங்க
3யதோ தா3னமொஸங்கி3 ஸதா3 (ப்3ரோ)


சரணம் 6
முனி 2ஸவம்பு3 ஜூட3 வெண்ட சனி 32
மாரீசாது3ல ஹதம்பு3 ஜேஸி (ப்3ரோ)


சரணம் 7
வாலினொக்க கோலனேஸி ரவி
பா3லுனி ராஜுக3 காவிஞ்சி ஜூசி (ப்3ரோ)


சரணம் 8
4வாப்3தி4 தரணோபாயமு 4நேரனி
த்யாக3ராஜுனி கரம்பி3டி3 (ப்3ரோ)


பொருள் - சுருக்கம்
இரகுபதீ! இராமா! மானவரிற் சிறந்தோனே! பல்லுலகிற்கும் தலைவா!
  • காப்பவர் யாரே?

  • உன்னையன்றி, காப்பவர் யாரே?

  • அன்புடன், காப்பவர் யாரே?

  • உனக்கு நிகர் காப்பவர் யாரே?

  • தேவேந்திரன் முதலானோர் மெச்ச, இலங்கையினை தயையுடன் கொடையளித்து, எவ்வமயமும் காப்பவர் யாரே?

  • முனிவனின் வேள்வியைக் காக்க, (அவர்) பின் சென்று, கொடிய மாரீசன் முதலானோரை யழித்து, காப்பவர் யாரே?

  • வாலியை ஓரம்பெய்து (கொன்று), பரிதி மைந்தனை யரசனாக ஆக்கிக் கண்டு, காப்பவர் யாரே?

  • பிறவிக் கடலைத் தாண்டும் வழிமுறை யறியாத தியாகராசனினின் கைப் பற்றி, காப்பவர் யாரே?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோசேவாரு/-எவரே/ ரகு4 பதீ/
காப்பவர்/ யாரே/ இரகுபதீ


சரணம்
சரணம் 1
நினு/ வினா/ (ப்3ரோ)
உன்னை/ யன்றி/ காப்பவர்...


சரணம் 2
ஸ்ரீ ராம/ நெனருன/ (ப்3ரோ)
ஸ்ரீ ராமா/ அன்புடன்/ காப்பவர்...


சரணம் 3
ஸகல லோக/ நாயக/ (ப்3ரோ)
பல்லுலகிற்கும்/ தலைவா/ காப்பவர்...


சரணம் 4
நர/ வர/ நீ/ ஸரி/ (ப்3ரோ)
மானவரிற்/ சிறந்தோனே/ உனக்கு/ நிகர்/ காப்பவர்...


சரணம் 5
தே3வ-இந்த்3ர/-ஆது3லு/ மெச்சுடகு/ லங்க/
தேவேந்திரன்/ முதலானோர்/ மெச்ச/ இலங்கையினை/

3யதோ/ தா3னமு/-ஒஸங்கி3/ ஸதா3/ (ப்3ரோ)
தயையுடன்/ கொடை/ யளித்து/ எவ்வமயமும்/ காப்பவர்....


சரணம் 6
முனி/ ஸவம்பு3/ ஜூட3/ வெண்ட/ சனி/ க2ல/
முனிவனின்/ வேள்வியை/ காண (காக்க)/ (அவர்) பின்/ சென்று/ கொடிய/

மாரீச/-ஆது3ல/ ஹதம்பு3 ஜேஸி/ (ப்3ரோ)
மாரீசன்/ முதலானோரை/ யழித்து/ காப்பவர்


சரணம் 7
வாலினி/-ஒக்க/ கோலனு/-ஏஸி/ ரவி/
வாலியை/ ஓர்/ அம்பு/ எய்து (கொன்று)/ பரிதி

பா3லுனி/ ராஜுக3/ காவிஞ்சி/ ஜூசி/ (ப்3ரோ)
மைந்தனை/ யரசனாக/ ஆக்கி/ கண்டு/ காப்பவர்...


சரணம் 8
4வ/-அப்3தி4/ தரண/-உபாயமு/ நேரனி/
பிறவி/ கடலை/ தாண்டும்/ வழிமுறை/ யறியாத/

த்யாக3ராஜுனி/ கரம்பு3/-இடி3/ (ப்3ரோ)
தியாகராசனினின்/ கை/ பற்றி/ காப்பவர்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசேவாரெவரே - ப்3ரோசுவாரெவரே
2 - ஸவம்பு3 - ஸவனமு : 'ஸவமு', 'ஸவனமு' - இரண்டு சொற்களுக்குமே 'வேள்வி' என்று பொருள்
3 - 2 - கல : 'கல' - தவறாகும்
4 - நேரனி - லேரனி : 'லேரனி' - தவறாகும்
Top

மேற்கோள்கள்

விளக்கம்

இலங்கையினை கொடையளித்து - விபீடணனுக்கு
முனிவன் - விசுவாமித்திரர்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

Top


Updated on 12 Mar 2009

Wednesday, March 11, 2009

தியாகராஜ கிருதி - பு4வினி தா3ஸுட3னே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Bhuvini Daasudane - Raga Sri Ranjani

பல்லவி
பு4வினி தா3ஸுட3னே பேராஸசே
பொ3ங்குலாடி3தினா பு34 மனோ-ஹர

அனுபல்லவி
அவிவேக மானவுல கோரி கோரி
அட்33 த்3ரோவ த்ரொக்கிதினா
ப்3ரோவவே (பு4)

சரணம்
சால ஸௌக்2யமோ கஷ்டமோ நேனு
ஜாலி ஜெந்தி3தினா ஸரி வாரிலோ
1பால முஞ்சின நீட முஞ்சின
பத3முலே க3தி த்யாக3ராஜ நுத (பு4)


பொருள் - சுருக்கம்
அறிஞருள்ளம் கவர்வோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • புவியில் (உனது) அடியவன் எனப்பட, பேராசையினால் பொய்ப் பகர்ந்தேனா?

  • பகுத்தறிவற்ற மனிதரை மிக்கு விழைந்து, குறுக்கு வழி சென்றேனா?

  • மிக்கு இன்பமோ, துன்பமோ, நான் துயருற்றேனா?

  • ஈடானோரில், உயர்த்தினாலும், தாழ்த்தினாலும், திருவடிகளே புகல்.

காப்பாயய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பு4வினி/ தா3ஸுடு3/-அனே/ பேராஸசே/
புவியில்/ அடியவன்/ எனப்பட/ பேராசையினால்/

பொ3ங்குலு/-ஆடி3தினா/ பு34/ மனோ/-ஹர/
பொய்/ பகர்ந்தேனா/ அறிஞர்/ உள்ளம்/ கவர்வோனே/


அனுபல்லவி
அவிவேக/ மானவுல/ கோரி கோரி/
பகுத்தறிவற்ற/ மனிதரை/ மிக்கு விழைந்து/

அட்33/ த்3ரோவ/ த்ரொக்கிதினா/ ப்3ரோவவே/ (பு4)
குறுக்கு/ வழி/ சென்றேனா/ காப்பாயய்யா/


சரணம்
சால/ ஸௌக்2யமோ/ கஷ்டமோ/ நேனு/
மிக்கு/ இன்பமோ/ துன்பமோ/ நான்/

ஜாலி/ ஜெந்தி3தினா/ ஸரி வாரிலோ/
துயர்/ உற்றேனா/ ஈடானோரில்/

பால/ முஞ்சின/ நீட/ முஞ்சின/
பாலில்/ அமிழ்த்தினாலும்/ நீரில்/ அமிழ்த்தினாலும்/

பத3முலே/ க3தி/ த்யாக3ராஜ/ நுத/ (பு4)
திருவடிகளே/ புகல்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பால முஞ்சின நீட முஞ்சின - பாலில் அமிழ்த்தினாலும் நீரில் அமிழ்த்தினாலும் - இஃதொரு தெலுங்கு வழக்கு என்று கருதுகின்றேன். இதன் நேரிடையான பொருள் விளங்கவில்லை. ஆயினும், இந்த சந்தர்ப்பத்தினை கருத்தில் கொண்டு, 'உயர்த்தினாலும், தாழ்த்தினாலும்' என்று பொருள் கொள்ளப்பட்டது

Top


Updated on 12 Mar 2009