வரமைன நேத்ரோத்ஸவமுனு கனுகொ3ன
தரணி வெட3லெ ஜூட3ரே
அனுபல்லவி
த4ரனு விதீ4ந்த்3ருலு கர சாமரமுல-
னிரு-க3ட3லனு மெரய
நிரதமுனனு க3க3னமுன ஸுருல சேதி
விருல வான குரிய (வ)
சரணம்
சரணம் 1
பரம பா4க3வத சயமுலு பா3கு3க3
ஹரி நாமமு ஸேய
து3ரமுன 1ப்ரஹ்லாது3டு3 கனிகரமுன
ஹரியனி தல-போய (வ)
சரணம் 2
வாரிதி4 ராஜு நாரத3 ஸனகாது3லு
ஸாரெகு நுதியிம்பக3
வாரமு ஸ்ரீ த்யாக3ராஜ வரது3ட3ல்ல
வாரல கனி ப்3ரோவக3 (வ)
பொருள் - சுருக்கம்
காணீரே!
- கண்ணுக்குப் பெரும் விருந்தினைக் கண்டுகொள்ளப் பகலவன் எழுந்தனன்.
- புவியில், பிரமனும், இந்திரனும் கை சாமரங்களுடன் (அரியின்) இருபக்கமும் திகழ,
- விடாது, வானிலிருந்து, வானோர் கைகளினின்று மலர் மழை பொழிய,
- பெரும் பாகவதக் குழுமங்கள், சிறக்க அரியின் நாமங்களை யுரைக்க,
- வேகமாக, பிரகலாதன் கனிவுடன் 'அரி' யென தியானிக்க,
- கடலரசன், நாரதர் மற்றும் சனகாதியர்கள் இடையறாது அரியினைப் போற்ற,
- என்றும் தியாகராசனுக்கருள்வோன், அவர்கள் யாவரையும் கண்டு, காத்தருள,
- புவியில், பிரமனும், இந்திரனும் கை சாமரங்களுடன் (அரியின்) இருபக்கமும் திகழ,
- கண்ணுக்குப் பெரும் விருந்தினைக் கண்டுகொள்ளப் பகலவன் எழுந்தனன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வரமைன/ நேத்ர/-உத்ஸவமுனு/ கனுகொ3ன/
பெரும்/ கண்ணுக்கு/ (விழாவினை) விருந்தினை/ கண்டுகொள்ள/
தரணி/ வெட3லெ/ ஜூட3ரே/
பகலவன்/ (புறப்பட்டனன்) எழுந்தனன்/ காணீரே/
அனுபல்லவி
த4ரனு/ விதி4/-இந்த்3ருலு/ கர/ சாமரமுலனு/-
புவியில்/ பிரமனும்/ இந்திரனும்/ கை/ சாமரங்களுடன்/
இரு/-க3ட3லனு/ மெரய/
(அரியின்) இரு/ பக்கமும்/ திகழ/
நிரதமுனனு/ க3க3னமுன/ ஸுருல/ சேதி/
விடாது/ வானிலிருந்து/ வானோர்/ கைகளினின்று/
விருல/ வான/ குரிய/ (வ)
மலர்/ மழை/ பொழிய/ பெரும்...
சரணம்
சரணம் 1
பரம/ பா4க3வத/ சயமுலு/ பா3கு3க3/
பெரும்/ பாகவத/ குழுமங்கள்/ சிறக்க/
ஹரி/ நாமமு/ ஸேய/
அரியின்/ நாமங்களை/ யுரைக்க/
து3ரமுன/ ப்ரஹ்லாது3டு3/ கனிகரமுன/
வேகமாக/ பிரகலாதன்/ கனிவுடன்/
ஹரி/-அனி/ தல-போய/ (வ)
'அரி'/ யென/ தியானிக்க/ பெரும்...
சரணம் 2
வாரிதி4/ ராஜு/ நாரத3/ ஸனக-ஆது3லு/
கடல்/ அரசன்/ நாரதர்/ (மற்றும்) சனகாதியர்கள்/
ஸாரெகு/ நுதியிம்பக3/
இடையறாது/ (அரியினை) போற்ற/
வாரமு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வரது3டு3/-
என்றும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ அருள்வோன்/
அல்ல வாரல/ கனி/ ப்3ரோவக3/ (வ)
அவர்கள் யாவரையும்/ கண்டு/ காத்தருள/ பெரும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்ரஹ்லாது3டு3 - ப்ரஹ்லாது3.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இந்த கீர்த்தனை, 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் கடைசி (மங்களம் தவிர) பாடலாகும்.
சனகாதியர் - பிரமனின் மைந்தர்கள் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர்
இவர்களில் சனத்குமாரர் முருகனெனப்படுவார்.
தியாகராசனுக்கருள்வோன் - அரியினைக் குறிக்கும்.
Top
Updated on 24 Dec 2010
No comments:
Post a Comment