Sunday, October 24, 2010

தியாகராஜ கிருதி - இதி3 நீகு மேர - ராகம் புன்னாகவராளி - Idi Niku Mera - Raga Punnagavarali

பல்லவி
இதி3 நீகு மேர 1காது3ரா ஸ்ரீ ராம நா
மதி3 2தல்லடி3ல்லெனுரா

அனுபல்லவி
3பதி3லமுகா3 கொலிசிதே
பா4வமு வேரையுன்னதி3 (இ)

சரணம்
சரணம் 1
3தி லேனி வாரினி கட3 தேர்சு தை3வமனி
பதித பாவன நம்மிதி ஸ்ரீ ராம
நின்னதி வேக3முன வேடி3தி ஸந்ததமு
ஸம்மதினி நின்னே 4கோரிதி ஸீதா ராம (இ)


சரணம் 2
பரம த3யாளுவனி பாலன ஸேதுவனி
ஸரகு3ன தே3வ ராய கொலிசின நாபை
கருண லேத3னி கன்னீராயெ ஜூசி நீ மனஸு
கரக3தெ3ந்து3குரா ஓ ஸீதா ராம (இ)


சரணம் 3
அன்னிட நிண்டி3ன அத்3பு4தானந்த34
மன்னன ஸேய ராதா3 ஸ்ரீ ராம
நீகென்ன ரானி 5புண்யமு ராதா3 ஸ்ரீ த்யாக3ராஜ
ஸன்னுத நீவாட3னு காதா3 6ஸீதா ராம (இ)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • வீழ்ந்தோரை மீட்போனே! சீதாராமா!
  • வானோர் தலைவா!
  • அனைத்திலும் நிறை, வியத்தகு ஆனந்த வடிவே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • இது உனக்குத் தகாதய்யா.
  • எனது உள்ளம் தத்தளிக்கின்றதய்யா.

    • தவறாது, (உன்னை) சேவித்தால், (உனது) நோக்கம் வேறாயுள்ளது.

    • போக்கற்றோரைக் கடைத்தேற்றும் தெய்வமென நம்பினேன்.
    • உன்னை வெகு ஊக்கத்துடன் வேண்டினேன்.
    • எப்போதும் முழு மனதுடன் உன்னையே கோரினேன்.

    • பரம தயாளனென, (என்னைப்) பேணுவாயென, தீவிரமாகச் சேவித்த என் மீது கருணையில்லையென, கண்ணீருகுத்தேன்.
    • கண்டும் உனதுள்ளம் உருகாததேனய்யா?

    • (என்னிடம்) ஈரங் கொள்ளலாகாதா?
    • உனக்கு எண்ணற்ற புண்ணியம் சேராதா?
    • உன்னவனன்றோ?


  • இது உனக்குத் தகாதய்யா.
  • எனது உள்ளம் தத்தளிக்கின்றதய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதி3/ நீகு/ மேர காது3ரா/ ஸ்ரீ ராம/ நா/
இது/ உனக்கு/ தகாதய்யா/ ஸ்ரீ ராமா/ எனது/

மதி3/ தல்லடி3ல்லெனுரா/
உள்ளம்/ தத்தளிக்கின்றதய்யா/


அனுபல்லவி
பதி3லமுகா3/ கொலிசிதே/
தவறாது/ (உன்னை) சேவித்தால்/

பா4வமு/ வேரை/-உன்னதி3/ (இ)/
(உனது) நோக்கம்/ வேறாக/ உள்ளது/


சரணம்
சரணம் 1
3தி/ லேனி வாரினி/ கட3/ தேர்சு/ தை3வமு/-அனி/
போக்கு/ அற்றோரை/ கடை/ தேற்றும்/ தெய்வம்/ என/

பதித/ பாவன/ நம்மிதி/ ஸ்ரீ ராம/
வீழ்ந்தோரை/ மீட்போனே/ நம்பினேன்/ ஸ்ரீ ராமா/

நின்னு/-அதி/ வேக3முன/ வேடி3தி/ ஸந்ததமு/
உன்னை/ வெகு/ ஊக்கத்துடன்/ வேண்டினேன்/ எப்போதும்/

ஸம்மதினி/ நின்னே/ கோரிதி/ ஸீதா ராம/ (இ)
முழு மனதுடன்/ உன்னையே/ கோரினேன்/ சீதாராமா/


சரணம் 2
பரம/ த3யாளுவு/-அனி/ பாலன ஸேதுவு/-அனி/
பரம/ தயாளன்/ என/ (என்னைப்) பேணுவாய்/ என/

ஸரகு3ன/ தே3வ/ ராய/ கொலிசின/ நாபை/
தீவிரமாக/ வானோர்/ தலைவா/ சேவித்த/ என் மீது/

கருண/ லேது3/-அனி/ கன்னீரு/-ஆயெ/ ஜூசி/ நீ/ மனஸு/
கருணை/ இல்லை/ என/ கண்ணீர்/ உகுத்தேன்/ கண்டும்/ உனது/ உள்ளம்/

கரக3து3/-எந்து3குரா/ ஓ ஸீதா ராம/ (இ)
உருகாதது/ ஏனய்யா/ ஒ சீதாராமா/


சரணம் 3
அன்னிட/ நிண்டி3ன/ அத்3பு4த/-ஆனந்த3/ க4ன/
அனைத்திலும்/ நிறை/ வியத்தகு/ ஆனந்த/ வடிவே/

மன்னன ஸேய ராதா3/ ஸ்ரீ ராம/
(என்னிடம்) ஈரங் கொள்ளலாகாதா/ ஸ்ரீ ராமா/

நீகு/-என்ன ரானி/ புண்யமு/ ராதா3/ ஸ்ரீ த்யாக3ராஜ/
உனக்கு/ எண்ணற்ற/ புண்ணியம்/ சேராதா/ ஸ்ரீ தியாகராசனால்/

ஸன்னுத/ நீவாட3னு/ காதா3/ ஸீதா ராம/ (இ)
போற்றப் பெற்றோனே/ உன்னவன்/ அன்றோ/ சீதாராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காது3ரா - காது3ர.

2 - தல்லடி3ல்லெனுரா - தல்லடி3ல்லெனுர.

3 - பதி3லமுகா3 - பதி3லமுக3.

4 - கோரிதி ஸீதா ராம - கோரிதி ஸ்ரீ ராம.

6 - ஸீதா ராம - ஸ்ரீ ராம ஸீதா ராம.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
5 - புண்யமு ராதா3 - புண்ணியம் சேராதா - இறைவன் புண்ணிய, பாவங்களுக்கு அப்பாற்பட்டவனானாலும், ஈகையினால், கொடுப்பவனுக்குப் புண்ணியம் சேரும் என, வேண்டி இரத்தல் வழக்கம்.

ஈரங் கொள்ளலாகாதா - மன்னிக்கலாகாதா என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 25 Oct 2010

No comments: