Wednesday, October 27, 2010

தியாகராஜ கிருதி - எவரு தெலியனு பொய்யெத3ரு - ராகம் புன்னாகவராளி - Evaru Teliyanu Poyyedaru - Raga Punnagavarali

பல்லவி
1எவரு தெலியனு பொய்யெத3ரு
விவரமு லேனி பூஜலு 2ஜேஸெத3ரு

சரணம்
சரணம் 1
முத3முன பருல ரூகலகு பர
ஸுத3துலகாஸி1ஞ்சி தா கூடு3டகு
உத3ரமு நிம்புட கொரகு சால
ஊரனூர 3திரிகெ33ராவரகு (எ)


சரணம் 2
கொன்ன தொத்துல மாட மீர லேக
அன்ன தம்முல தல்லி தண்ட்3ருல நேர-
மென்னுடே பனி கானி ஸாரமைன
பன்னக31யன நீ பத3மு நம்மெத3ரா (எ)


சரணம் 3
ஆலு பி3ட்33லனு நம்மெத3ரு வாரி-
காஸி1ஞ்சி பருல கொம்பலு முஞ்செத3ரு
காலுனி வல்ல நிண்டா3ரு ராம
கஷ்டமு ஜெந்தி3 பு4வினி புட்டெத3ரு (எ)


சரணம் 4
பெத்33லதோ கல்லலாடி3 ராம
பு3த்3தி4 லேனி த4னிகுல தா வேடி3
வத்33ன வாரிதோ மோடி3 இட்லு
ப்ரொத்3து3 போவுட கானி பதிதுல கூடி3 (எ)


சரணம் 5
ஈஸுன மரியாத3 லேது3 நிண்டு3
காஸு கல்கி3ன வானிகன்னிட வாது3
ஆஸ நீயெட3 கல்க3 போது3 நிஜ
தா3ஸுலு எவரோ கன சேத காது3 (எ)


சரணம் 6
பன்னுக3 4மனகே ஸ1க்தியனி
5அன்னி கல்லலனுசுனு தொ3ங்க34க்தி
அன்ன இதே3டி விரக்தி ராம
கன்ன தண்ட்3ரி 6இதி3யா பேத3 யுக்தி (எ)


சரணம் 7
யோகு3லு மேனெருக3 லேக தமகே
3தியனி த்4யானிந்துரு கா3
போ4கி31யன ஏலுகோக ராம
த்யாக3ராஜுனிபை நீகிங்க பராகா (எ)


பொருள் - சுருக்கம்
அரவணையோனே! இராமா! ஈன்ற தந்தையே!

  • எவர் அறியலாயினர்?
  • விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்.

    • களிப்புடன், பிறர் பணத்திற்கு, பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு,
    • தான் (அவற்றை) அடையவும், வயிறு நிரப்புவதற்கும்,
    • மிக்கு ஊரூராகத் திரிந்தனர், அதுவரை;

    • கொண்ட மனைவியரின் சொல் மீர இயலாது,
    • அண்ணன், தம்பியர், தாய், தந்தையரின் குற்றம் காண்பதுவே பணியன்றி,
    • சாரமான உனது திருவடியினை நம்பினரா?

    • இல்லாள், மக்களை நம்பினர்;
    • அவருக்கு ஆசைப்பட்டு, பிறர் குடும்பங்களைக் குலைத்தனர்;
    • நமனால் நிறைய துன்பமடைந்து, (பின்னர்) புவியில் பிறந்தனர்;

    • பெரியோர்களிடம் பொய் கூறி,
    • அறிவற்ற செல்வந்தர்களை தாம் இரந்து,
    • (அப்படி) வேண்டாம் என்றவரிடம் சினந்து, இப்படியாக,
    • வீழ்ந்தோருடன் கூடி, பொழுது போகுமேயன்றி;

    • பொறாமையினால் மரியாதை இல்லை;
    • மிக்கு செல்வம் படைத்தோனுக்கு, எதனிலும் வாது;
    • அன்பு உன்னிடம் தோன்றாது;
    • உண்மையான தொண்டவர்கள் எவரோ, காணக் கையாலாகாது;

    • தமக்கே மிக்கு வல்லமையென,
    • 'யாவும் பொய்'யென, கள்ள பக்தியுடன்,
    • ஈதென்ன பற்றின்மை?
    • இஃதா இவ்வேழையின் வழிமுறை?


  • யோகியர்கள் உடல் நினைவின்றி,
  • தமக்கே கதியென்று தியானிப்பரே யன்றி,

  • (என்னை) ஆண்டுகொள்ளாது, தியாகராசன் மீது உனக்கின்னும் அசட்டையா?

  • எவர் அறியலாயினர்?
  • விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ தெலியனு பொய்யெத3ரு/
எவர்/ அறியலாயினர்/

விவரமு/ லேனி/ பூஜலு/ ஜேஸெத3ரு/
விவரம்/ அற்ற/ வழிபாடுகள்/ செய்தனர்/


சரணம்
சரணம் 1
முத3முன/ பருல/ ரூகலகு/ பர/
களிப்புடன்/ பிறர்/ பணத்திற்கு/ பிற/

ஸுத3துலகு/-ஆஸி1ஞ்சி/ தா/ கூடு3டகு/
பெண்டிருக்கு/ ஆசைப்பட்டு/ தான்/ (அவற்றை) அடையவும்/

உத3ரமு/ நிம்புட கொரகு/ சால/
வயிறு/ நிரப்புவதற்கும்/ மிக்கு/

ஊர/-ஊர/ திரிகெ33ரு/-ஆவரகு/ (எ)
ஊர்/ ஊராகத்/ திரிந்தனர்/ அதுவரை/


சரணம் 2
கொன்ன/ தொத்துல/ மாட/ மீர/ லேக/
கொண்ட/ மனைவியரின்/ சொல்/ மீர/ இயலாது/

அன்ன/ தம்முல/ தல்லி/ தண்ட்3ருல/ நேரமு/-
அண்ணன்/ தம்பியர்/ தாய்/ தந்தையரின்/ குற்றம்/

என்னுடே/ பனி/ கானி/ ஸாரமைன/
காண்பதுவே/ பணி/ யன்றி/ சாரமான/

பன்னக3/ ஸ1யன/ நீ/ பத3மு/ நம்மெத3ரா/ (எ)
அரவு/ அணையோனே/ உனது/ திருவடியினை/ நம்பினரா/


சரணம் 3
ஆலு/ பி3ட்33லனு/ நம்மெத3ரு/ வாரிகி/-
இல்லாள்/ மக்களை/ நம்பினர்/ அவருக்கு/

ஆஸி1ஞ்சி/ பருல/ கொம்பலு/ முஞ்செத3ரு/
ஆசைப்பட்டு/ பிறர்/ குடும்பங்களை/ குலைத்தனர்/

காலுனி வல்ல/ நிண்டா3ரு/ ராம/
நமனால்/ நிறைய/ இராமா/

கஷ்டமு/ ஜெந்தி3/ பு4வினி/ புட்டெத3ரு/ (எ)
துன்பம்/ அடைந்து/ (பின்னர்) புவியில்/ பிறந்தனர்/


சரணம் 4
பெத்33லதோ/ கல்லலு/-ஆடி3/ ராம/
பெரியோர்களிடம்/ பொய்/ கூறி/ இராமா/

பு3த்3தி4/ லேனி/ த4னிகுல/ தா/ வேடி3/
அறிவு/ அற்ற/ செல்வந்தர்களை/ தாம்/ இரந்து/

வத்3து3/-அன வாரிதோ/ மோடி3/ இட்லு/
(அப்படி) வேண்டாம்/ என்றவரிடம்/ சினந்து/ இப்படியாக/

ப்ரொத்3து3/ போவுட/ கானி/ பதிதுல/ கூடி3/ (எ)
பொழுது/ போகுமே/ யன்றி/ வீழ்ந்தோருடன்/ கூடி/


சரணம் 5
ஈஸுன/ மரியாத3/ லேது3/ நிண்டு3/
பொறாமையினால்/ மரியாதை/ இல்லை/ மிக்கு/

காஸு/ கல்கி3ன வானிகி/-அன்னிட/ வாது3/
செல்வம்/ படைத்தோனுக்கு/ எதனிலும்/ வாது/

ஆஸ/ நீயெட3/ கல்க3 போது3/ நிஜ/
அன்பு/ உன்னிடம்/ தோன்றாது/ உண்மையான/

தா3ஸுலு/ எவரோ/ கன/ சேத காது3/ (எ)
தொண்டவர்கள்/ எவரோ/ காண/ கையாலாகாது/


சரணம் 6
பன்னுக3/ மனகே/ ஸ1க்தி/-அனி/
மிக்கு/ தமக்கே/ வல்லமை/ யென/

அன்னி/ கல்லலு/-அனுசுனு/ தொ3ங்க3/ ப4க்தி/
'யாவும்/ பொய்/' யென/ கள்ள/ பக்தியுடன்/

அன்ன/ இதி3/-ஏடி/ விரக்தி/ ராம/
தந்தையே/ ஈது/ என்ன/ பற்றின்மை/ இராமா/

கன்ன/ தண்ட்3ரி/ இதி3யா/ பேத3/ யுக்தி/ (எ)
ஈன்ற/ தந்தையே/ இஃதா/ (இந்த) ஏழையின்/ வழிமுறை/


சரணம் 7
யோகு3லு/ மேனு/-எருக3/ லேக/ தமகே/
யோகியர்கள்/ உடல்/ நினைவு/ இன்றி/ தமக்கே/

3தி/-அனி/ த்4யானிந்துரு/ கா3க/
கதி/ என்று/ தியானிப்பரே/ யன்றி/

போ4கி3/ ஸ1யன/ ஏலுகோக/ ராம/
அரவு/ அணையோனே/ (என்னை) ஆண்டுகொள்ளாது/ இராமா/

த்யாக3ராஜுனிபை/ நீகு/-இங்க/ பராகா/ (எ)
தியாகராசன் மீது/ உனக்கு/ இன்னும்/ அசட்டையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலியனு பொய்யெத3ரு - தெலியனு பொய்யேரு - தெலிய பொய்யேரு.

2 - ஜேஸெத3ரு - ஜேஸேரு.

3 - திரிகெ33ராவரகு - திரிகே3ராவரகு.

5 - கல்லலனுசுனு - கல்லனுசுனு : 'கல்லலனுசுனு' என்பதே சரியாகும்.

6 - இதி3யா - இதா3 : 'இதி3யா' என்பதே சரியாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - எவரு தெலியனு பொய்யெத3ரு - யார் அறியலாயினர்?. 2-வது சரணத்தில் கூறிய 'உனது திருவடியினை நம்பினரா?', 5-வது சரணத்தில் கூறிய 'அன்பு உன்னிடம் தோன்றாது', 6-வது சரணத்தில் கூறிய 'இஃதா ஏழையின் வழிமுறை?' ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், 'மக்கள், இறைவனிடம் பற்று கொள்ளாது, மற்ற பணிகளில் ஈடுபட்டு நேரத்தைக் கழிக்கின்றனரே' என தியாகராஜர் எண்ணுகின்றார் என்பது தெரியவரும்.

4 - மனகே ஸ1க்தி - நமக்கே வல்லமை. இதற்கு அடுத்து வரும் 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'வல்லமை' என்பது 'அணிமா சித்திகளை'க் குறிக்காது. தியாகராஜர், பொதுவாக 'வல்லமை' என்று கூறுகின்றார்.

5 - அன்னி கல்லலனுசுனு - 'யாவும் பொய்' - உலகினை மாயை யெனல் - இவ்விடத்தில், 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'ஊருக்கு உபதேசம்' செய்பவரைப் பற்றி தியாகராஜர் கூறுகின்றார் என்பது விளங்கும்.

அதுவரை - அவற்றினை யடையும் வரை
தமக்கே கதி - இறைவனையே கதியென

Top


Updated on 28 Oct 2010

No comments: