Monday, September 27, 2010

தியாகராஜ கிருதி - மாபால வெலஸி - ராக அஸாவேரி - Mapaala Velasi - Raga Asaveri

பல்லவி
மாபால வெலஸியிக மமு
ப்3ரோவக3 ராதா3 ஸ்ரீ ராமசந்த்3

அனுபல்லவி
நீ பாத3முல ப4க்தி நிண்டா3ரக3னிச்சி
காபாடு31க்தி நீ கரமுனனுண்ட33 (மா)

சரணம்
சரணம் 1
பாப ஸம்ஹார நா பரிதாபமுலனு துனுமனே பாடிரா
கருணா பயோ-நிதி4வைன ஸ்ரீ பதி வித்4ரு2த சாப பா3ண ஈ
பாப மதி நருலாபத3லனு நேனே பனி ஜூதுனு
ஆபத்3-பா3ந்த4வ காபாட3 நீகீ பராகேல (மா)


சரணம் 2
தீ3ன ரக்ஷக ப4க்தாதீ4ன ஸாகேத நக3ரீஸ1 நா மதி3
பத3ரின ஸுஜன மானாபி4மான பாலன ஸமான ரஹித
1ரோஸான நீது3 தா3ஸானு-தா3ஸுட3னு தா3னவாந்தக
முதா3ன நாரத3 ஸு-கா3ன லோல த3ரி கான ஸந்ததமு (மா)


சரணம் 3
2நாகா3தி4ப வினுத நாகா3ரி ரத2 நினு வினா க3தினெருக3
2நாக3 ராஜ ஹ்ரு2த்-ஸாக3ராப்34வ ஸாக3ராந்தக
ஸுராக4 ஹர கனகாக3 தீ4ர ஸுர நாக33மன
1ரணாக3தாப்த ஸ்ரீ 3த்யாக3ராஜ நுத (மா)


பொருள் - சுருக்கம்
  • இராமசந்திரா!
  • பாவம் களைவோனே! மா மணாளா! வில்லம்பு ஏந்துவோனே! இடர்கண் சுற்றமே!
  • தீனரைக் காப்போனே! தொண்டர் வயப்பட்டோனே! சாகேத நகரீசனே! நல்லோர் மானம், கௌரவம் காப்போனே! நிகரற்றோனே! அரக்கரையழித்தோனே! நாரதரின் இனிய இசை விரும்புவோனே!
  • அரவரசன் போற்றும், அரவுபகை ரதத்தோனே! கரியரசன் இதயக் கடலின் மதியே! பிறவிக்கடலினை அழிப்போனே! தேவர் இடர் களையும், பொன்மலை தீரனே! தேவர் கரி நடையோனே! சரணடைந்தோருக்கு இனியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • கருணைக் கடல் நீ.
  • எமது காவல்தெய்வமாக ஒளிர்ந்து, இனி எம்மைக் காக்கலாகாதா?

    • உனது திருவடிகளின் பக்தியினை நிரம்ப வழங்கி, காக்கும் திறமை உனது கரங்களிலுள்ளது.

    • எனது துன்பம் களைய எத்தனைக் கடினமய்யா?
    • இந்தப் பாவ உள்ள மனிதர்கள் இடர்களிடை நானென்ன பணி நோக்குவேன்?
    • காப்பாற்ற உனக்கிந்த அசட்டையேனோ?

    • எனதுள்ளம் பதறினாலும், என்றும் உனது அடியாருக்கடியேன்;
    • உன்னையன்றி கதியறியேன்;


  • புகல் காண, மகிழ்வுடன், எவ்வமயமும் எமது காவல்தெய்வமாக ஒளிர்ந்து, இனி எம்மைக் காக்கலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாபால/ வெலஸி/-இக/ மமு/
எமது காவல்தெய்வமாக/ ஒளிர்ந்து/ இனி/ எம்மை/

ப்3ரோவக3 ராதா3/ ஸ்ரீ ராமசந்த்3ர/
காக்கலாகாதா/ ஸ்ரீ ராமசந்திரா/


அனுபல்லவி
நீ/ பாத3முல/ ப4க்தி/ நிண்டா3ரக3னு/-இச்சி/
உனது/ திருவடிகளின்/ பக்தியினை/ நிரம்ப/ வழங்கி/

காபாடு3/ ஸ1க்தி/ நீ/ கரமுனனு/-உண்ட33/ (மா)
காக்கும்/ திறமை/ உனது/ கரங்களில்/ இருக்க/ எமது...


சரணம்
சரணம் 1
பாப/ ஸம்ஹார/ நா/ பரிதாபமுலனு/ துனும/-ஏ/ பாடிரா/
பாவம்/ களைவோனே/ எனது/ துன்பம்/ களைய/ எத்தனை/ கடினமய்யா/

கருணா/ பயோ-நிதி4/-ஐன/ ஸ்ரீ/ பதி/ வித்4ரு2த/ சாப/ பா3ண/ ஈ/
கருணை/ கடல்/ ஆகிய/ மா/ மணாளா/ ஏந்துவோனே/ அம்பு/ வில்/ இந்த/

பாப/ மதி/ நருல/-ஆபத3லனு/ நேனு/-ஏ/ பனி/ ஜூதுனு/
பாவ/ உள்ள/ மனிதர்கள்/ இடர்களிடை/ நான்/ என்ன/ பணி/ நோக்குவேன்/

ஆபத்3/-பா3ந்த4வ/ காபாட3/ நீகு/-ஈ/ பராகு/-ஏல/ (மா)
இடர்கண்/ சுற்றமே/ காப்பாற்ற/ உனக்கு/ இந்த/ அசட்டை/ ஏனோ/


சரணம் 2
தீ3ன/ ரக்ஷக/ ப4க்த/-அதீ4ன/ ஸாகேத/ நக3ர/-ஈஸ1/ நா/ மதி3/
தீனரை/ காப்போனே/ தொண்டர்/ வயப்பட்டோனே/ சாகேத/ நகர்/ ஈசனே/ எனது/ உள்ளம்/

பத3ரின/ ஸுஜன/ மான/-அபி4மான/ பாலன/ ஸமான/ ரஹித/
பதறினாலும்/ நல்லோர்/ மானம்/ கௌரவம்/ காப்போனே/ நிகர்/ அற்றோனே/

ரோஸான/ நீது3/ தா3ஸ/-அனு-தா3ஸுட3னு/ தா3னவ/-அந்தக/
என்றும்/ உனது/ அடியாருக்கு/ அடியேன்/ அரக்கரை/ யழித்தோனே/

முதா3ன/ நாரத3/ ஸு-கா3ன/ லோல/ த3ரி/ கான/ ஸந்ததமு/ (மா)
மகிழ்வுடன்/ நாரதரின்/ இனிய இசை/ விரும்புவோனே/ புகல்/ காண/ எவ்வமயமும்/


சரணம் 3
நாக3/-அதி4ப/ வினுத/ நாக3/-அரி/ ரத2/ நினு/ வினா/ க3தினி/-எருக3/
அரவு/ அரசன்/ போற்றும்/ அரவு/ பகை/ ரதத்தோனே/ உன்னை/ யன்றி/ கதி/ யறியேன்/

நாக3/ ராஜ/ ஹ்ரு2த்/-ஸாக3ர/-அப்3ஜ/ ப4வ/ ஸாக3ர/-அந்தக/
கரி/ யரசன்/ இதய/ கடலின்/ மதியே/ பிறவி/ கடலினை/ அழிப்போனே/

ஸுர/-அக4/ ஹர/ கனக/-அக3/ தீ4ர/ ஸுர/ நாக3/ க3மன/
தேவர்/ இடர்/ களையும்/ பொன்/ மலை/ தீரனே/ தேவர்/ கரி/ நடையோனே/

1ரணு/-ஆக3த/-ஆப்த/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (மா)
சரண்/ அடைந்தோருக்கு/ இனியோனே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ நுத ராமசந்த்3ர.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ரோஸான - இச்சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை. தமிழில் 'ரோசம்' (சினம்) எனப்படும் சொல், தெலுங்கிலும் அதே பொருளில் வழங்கும். அந்தப் பொருள், இவ்விடத்தில் சரிவரப் பொருந்தவில்லை. 'ரோஜான' (rOzAna) என்ற உருது சொல்லுக்கு 'அனுதினமும்' என்ற பொருள். அத்தகைய பொருள், இவ்விடத்தில் பொருந்தும். தியாகராஜர், தமது கீர்த்தனைகளில், பல உருது சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதுவும் அப்படியா என விளங்கவில்லை. இங்கு 'அனுதினமும்' என்ற பொருள் ஏற்கப்பட்டது.

2 - நாகா3தி4ப வினுத : நாக3 ராஜ ஹ்ரு2த்-ஸாக3ராப்3 - 'நாக' என்ற சொல்லுக்கு 'பாம்பு' என்றும் 'யானை' என்றும் பொருளாகும். இந்த இரண்டில் ஒன்று 'அரவரசன்' சேடனையும், மற்றொன்று, கரியரசனையும் குறிக்கும். முற்கூறியதற்கு, 'அரவரசன்' என்றும், பிற்கூறியதற்கு 'கரியரசன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

எத்தனைக் கடினமய்யா - கடினமல்லவென பொருள்
அரவரசன் - சேடன்
அரவு பகை - கருடன்
அரவு பகை ரதம் - கருட வாகனம்
பொன்மலை - மேரு
பொன்மலை தீரன் - மேரு நிகர் தீரன் என
தேவர் கரி - அயிராவதம்

Top


Updated on 27 Sep 2010

No comments: