Thursday, August 26, 2010

தியாகராஜ கிருதி - கத்33னு வாரிகி - ராகம் தோடி - Kaddanu Vaariki - Raga Todi

பல்லவி
கத்33னு வாரிகி கத்3து3 கத்33னி மொரலனிடு3
பெத்33ல மாடலு நேட33த்34மௌனோ

அனுபல்லவி
அத்33ம்பு செக்கிள்ளசே முத்3து3 காரு மோமு ஜூட3
பு3த்3தி4 கலிகி3னட்டி மா வத்33 ராவதே3மிரா (க)

சரணம்
நித்3து3ர நிராகரிஞ்சி முத்3து33 தம்பு3ர பட்டி
ஸு1த்34மைன மனஸுசே ஸு-ஸ்வரமுதோ
பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு ப4க்த பாலனமு ஸேயு
தத்33ய-ஸா1லிவி நீவு த்யாக3ராஜ ஸன்னுத (க)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் போற்றுவோனே!

  • உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
  • கண்ணாடிக் கன்னங்களுடன், எழில் வழியும் முகத்தினை நோக்க, எண்ணம் தோன்றியுள்ள, அத்தகைய எமதருகில், வாராயேனய்யா?

    • உறக்கத்தினைப் புறக்கணித்து,
    • அழகாக தம்புரா பிடித்து,
    • தூய உள்ளத்துடனும்,
    • இனிய சுரத்துடனும்,
    • நியமம் தவறாது,

  • பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.

  • உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கத்3து3/-அனு வாரிகி/ கத்3து3/ கத்3து3/-அனி/ மொரலனு/-இடு3/
உண்டு/ என்போருக்கு/ உண்டு/ உண்டு/ என/ முறை/ யிடும்/

பெத்33ல/ மாடலு/ நேடு3/-அப3த்34மு/-ஔனோ/
பெரியோரின்/ சொற்கள்/ இன்று/ பொய்/ ஆகுமோ/


அனுபல்லவி
அத்33ம்பு/ செக்கிள்ளசே/ முத்3து3/ காரு/ மோமு/ ஜூட3/
கண்ணாடி/ கன்னங்களுடன்/ எழில்/ வழியும்/ முகத்தினை/ நோக்க/

பு3த்3தி4/ கலிகி3ன/-அட்டி/ மா/ வத்33/ ராவு/-அதே3மிரா/ (க)
எண்ணம்/ தோன்றியுள்ள/ அத்தகைய/ எமது/ அருகில்/ வாராய்/ ஏனய்யா/


சரணம்
நித்3து3ர/ நிராகரிஞ்சி/ முத்3து33/ தம்பு3ர/ பட்டி/
உறக்கத்தினை/ புறக்கணித்து/ அழகாக/ தம்புரா/ பிடித்து/

ஸு1த்34மைன/ மனஸுசே/ ஸு-ஸ்வரமுதோ/
தூய/ உள்ளத்துடனும்/ இனிய சுரத்துடனும்/

பத்3து3/ தப்பக/ ப4ஜியிஞ்சு/ ப4க்த/ பாலனமு ஸேயு/
நியமம்/ தவறாது/ பஜனை செய்யும்/ தொண்டர்களை/ பேணும்/

தத்3/-த3ய-ஸா1லிவி/ நீவு/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (க)
அக்/ கருணையுள்ளத்தோன்/ நீ/ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
உண்டென்போர் - இறைவன் உண்டென்போர்
சுரம் - ஏழு சுரங்கள்

Top


Updated on 27 Aug 2010

No comments: