Friday, October 2, 2009

தியாகராஜ கிருதி - ஸீதா கல்யாண - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sita Kalyana - Raga Sankarabharanam

பல்லவி
ஸீதா கல்யாண வைபோ43மே
ராம கல்யாண வைபோ43மே

சரணம்
சரணம் 1
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர
ரவி ஸோம வர நேத்ர ரமணீய கா3த்ர (ஸீதா)


சரணம் 2
4க்த ஜன பரிபால ப4ரித ஸ1ர ஜால
பு4க்தி முக்தித3 லீல பூ4-தே3வ பால (ஸீதா)


சரணம் 3
பாமராஸுர பீ41பரிபூர்ண காம
ஸ்1யாம ஜக33பி4ராம ஸாகேத தா4ம (ஸீதா)


சரணம் 4
ஸர்வ லோகாதா42ஸமரைக வீர
33ர்வ மானவ தூ3ர கனகாக3 தீ4ர (ஸீதா)


சரணம் 5
நிக3மாக3ம விஹார நிருபம ஸ1ரீர
நக34ராக4 விதா3ர நத லோகாதா4ர (ஸீதா)


சரணம் 6
பரமேஸ1 நுத கீ3த ப4வ ஜலதி4 போத
தரணி குல ஸஞ்ஜாத த்யாக3ராஜ நுத (ஸீதா)


பொருள் - சுருக்கம்
  • சீதையின் திருமண வைபோகமே!

  • இராமனின் திருமண வைபோகமே!


    • வாயு மைந்தன் துதிக்கும்,

    • புனித சரிதமுடைய,

    • பரிதி, மதிகளை உயர் கண்களாயுடைய,

    • இனிய உருவமுடைய,

    • தொண்டர்களைப் பேணும்,

    • நிறைந்த அம்புகளுடைய,

    • இம்மை, மறுமை திருவிளையாடலாக அருளும்,

    • அந்தணரைக் காக்கும்,

    • தீயோர், அரக்கருக்கு அச்சமூட்டும்,

    • இச்சித்தவை அடையப்பெறும்,

    • கரு நீல வண்ண,

    • உலகிற்கு மகிழ்வூட்டும்,

    • சாகேத நகருறை,

    • பல்லுலக ஆதாரமான,

    • களத்தினில் தனியொரு வீரனாகிய,

    • செருக்குடை மனிதரினின்று விலகிய,

    • பொன் மலை நிகர் தீரனாகிய,

    • மறைகள், ஆகமங்களில் உறையும்,

    • ஒப்பற்ற உடலுடை,

    • (மந்தர) மலை சுமந்த,

    • பாவங்களைக் களையும்,

    • பணிந்தோருக்கு ஆதாரமான,

    • பரமேசன் போற்றிப் பாடும்,

    • பிறவிக் கடலின் கலமாகிய,

    • பரிதி குலத்தில் சிறக்கத் தோன்றிய,

    • தியாகராசன் போற்றும்

  • இராமனின் திருமண வைபோகமே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ கல்யாண/ வைபோ43மே/
சீதையின்/ திருமண/ வைபோகமே/

ராம/ கல்யாண/ வைபோ43மே/
இராமனின்/ திருமண/ வைபோகமே/


சரணம்
சரணம் 1
பவனஜ/ ஸ்துதி பாத்ர/ பாவன/ சரித்ர/
வாயு மைந்தன்/ துதிக்கும்/ புனித/ சரிதமுடைய/

ரவி/ ஸோம/ வர/ நேத்ர/ ரமணீய/ கா3த்ர/ (ஸீதா)
பரிதி/ மதிகளை/ உயர்/ கண்களாயுடைய/ இனிய/ உருவமுடைய/ இராமனின்...


சரணம் 2
4க்த ஜன/ பரிபால/ ப4ரித/ ஸ1ர/ ஜால/
தொண்டர்களை/ பேணும்/ நிறைந்த/ அம்புகளுடைய/

பு4க்தி/ முக்தித3/ லீல/ பூ4-தே3வ/ பால/ (ஸீதா)
இம்மை/ மறுமை அருளும்/ திருவிளையாடலாக/ அந்தணரை/ காக்கும்/ இராமனின்...


சரணம் 3
பாமர/-அஸுர/ பீ4ம/ பரிபூர்ண/ காம/
தீயோர்/ அரக்கருக்கு/ அச்சமூட்டும்/ அடையப்பெறும்/ இச்சித்தவை/

ஸ்1யாம/ ஜக3த்/-அபி4ராம/ ஸாகேத/ தா4ம/ (ஸீதா)
கரு நீல வண்ண/ உலகிற்கு/ மகிழ்வூட்டும்/ சாகேத நகர்/ உறை/ இராமனின்...


சரணம் 4
ஸர்வ லோக/-ஆதா4ர/ ஸமர/-ஏக/ வீர/
பல்லுலக/ ஆதாரமான/ களத்தினில்/ தனியொரு/ வீரனாகிய/

3ர்வ/ மானவ/ தூ3ர/ கனக/-அக3/ தீ4ர/ (ஸீதா)
செருக்குடை/ மனிதரினின்று/ விலகிய/ பொன்/ மலை/ (நிகர்) தீரனாகிய/ இராமனின்...


சரணம் 5
நிக3ம/-ஆக3ம/ விஹார/ நிருபம/ ஸ1ரீர/
மறைகள்/ ஆகமங்களில்/ உறையும்/ ஒப்பற்ற/ உடலுடை/

நக3/ த4ர/-அக4/ விதா3ர/ நத லோக/-ஆதா4ர/ (ஸீதா)
மலை/ சுமந்த/ பாவங்களை/ களையும்/ பணிந்தோருக்கு/ ஆதாரமான/ இராமனின்...


சரணம் 6
பரம-ஈஸ1/ நுத/ கீ3த/ ப4வ/ ஜலதி4/ போத/
பரமேசன்/ போற்றி/ பாடும்/ பிறவி/ கடலின்/ கலமாகிய/

தரணி/ குல/ ஸஞ்ஜாத/ த்யாக3ராஜ/ நுத/ (ஸீதா)
பரிதி/ குலத்தில்/ சிறக்கத் தோன்றிய/ தியாகராசன்/ போற்றும்/ இராமனின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'குறஞ்சி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ஸமரைக வீர - ஸமரைக தீ4ர : அந்த சரணத்திலேயே, அடுத்த வரியினில், 'தீ4ர' திரும்பவும் வருவதனால், இங்கு 'வீர' ஏற்கப்பட்டது.

3 - 3ர்வ மானவ - க3ர்வ மானஸ : எல்லா புத்தகங்களிலும், 'க3ர்வ மானவ' (செருக்குடைத்த மானவர்) என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதால், 'க3ர்வ மானவ' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
1 - பரிபூர்ண காம - இச்சித்தது நிறைவுறும். கீதையில், கண்ணன் கூறுவது (3-வது அத்தியாயம், 22-வது செய்யுள்) -

"பார்த்தா! எனக்கு முவ்வுலகத்திலும், இயற்றப்படவேண்டிய கடமைகளோ, நான் அடையாதவையோ, இனி அடையவேண்டியவையோ, சிறிதும் இல்லை. ஆயினும், நான் பணிகளைத் தொடர்ந்து செய்கின்றேன்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
வைபோகம் - பெரும் சீர் சிறப்பு
பொன் மலை - மேரு மலை
மலை சுமந்த - மந்தர மலை
பிறவிக் கடலின் கலம் - பிறவிக் கடலினைக் கடத்துவிக்கும் கலம்

Top


Updated on 02 Oct 2009

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 3 ல் பரிபூர்ண காம என்பதற்கு இச்சித்தது நிறைவுறும் என்று பொருள் கொடுத்துள்ளீர். யார் இச்சித்ததுஎன்ற சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் who accomplishes His desires என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொடுத்துள்ள கீதை (3-22) படி இச்சித்ததெல்லாம் அடையப்பெற்றோன் என்று தானே பொருள்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறியபடி திருத்தியுள்ளேன்.
வணக்கம்.
வே. கோவிந்தன்.