1த4ர்மாத்ம நன்னிபுடு3 த3ய ஜூட3வேயன
மர்மமுன பலுகுனதி3 2மஞ்சிதோ3
சரணம்
சரணம் 1
பதித பாவனுட3னி பா3க3 பேரை நீகு
3மதி லேகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 2
க3தி லேனி நனு நீவு காவவேயண்டி
ஸம்மதி லேகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 3
4நினு ஜூட3 பதி3 வேல கனுலு காவலெனண்டி
மனுபகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 4
5ஏமி நேரனு பாத3மே மிகு3ல க3தியண்டி
நா மீத3 நெபமெஞ்சுட 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 5
நீது3 மாயல சேத நிஷ்டூ2ரமேல
மம்மாது3கோகனுயுண்ட3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 6
நாடி வசனமுலெல்ல நயமு ஸேயவேயண்டி
6மாடாட3குண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
சரணம் 7
ராஜ நுத ஸ்ரீ த்யாக3ராஜ ரக்ஷக ஸ்1ரித
ஸமாஜ நனு 7மரசுனதி3 மஞ்சிதோ3 ராம (த4ர்ம)
பொருள் - சுருக்கம்
அறவுருவே! அரசர்களால் போற்றப் பெற்றோனே! தியாகராசனைக் காப்போனே! சார்ந்தோர் குழுமத்துறைவோனே! இராமா!
- 'எனக்கிவ்வமயம் கருணை புரிவாயய்யா' என்றால், மருமமாய்ப் பகர்தல் சரியாமோ?
- வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனச் சிறந்த பெயர்பெற்று, உனக்கு அறிவில்லாதிருத்தல் சரியாமோ?
- 'கதியற்ற என்னை நீ காப்பாயய்யா' என்றேன்; (அதற்கு) சம்மதிக்காதிருத்தல் சரியாமோ?
- 'உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும்' என்றேன்; கவனியாதிருத்தல் சரியாமோ?
- 'ஏதும் கற்றறியேன்; (உனது) திருவடிகளே மிக்கு கதி'யென்றேன்; என்மீது குற்றங்காணல் சரியாமோ?
- உனது மாயைகளினால் கொடுமையேனோ? எம்மை யாதரியாதிருத்தல் சரியாமோ?
- 'அன்றைய சொற்கள் யாவற்றையும் நிறைவேற்றுவாயய்யா' என்றேன்; பேசாமலுமிருத்தல் சரியாமோ?
- என்னை மறத்தல் சரியாமோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த4ர்ம/-ஆத்ம/ நன்னு/-இபுடு3/ த3ய/ ஜூட3வே/-அன/
அற/ உருவே/ எனக்கு/ இவ்வமயம்/ கருணை/ புரிவாயய்யா/ என்றால்/
மர்மமுன/ பலுகுனதி3/ மஞ்சிதோ3/
மருமமாய்/ பகர்தல்/ சரியாமோ/
சரணம்
சரணம் 1
பதித/ பாவனுடு3/-அனி/ பா3க3/ பேரை/ நீகு/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோன்/ என/ சிறந்த/ பெயர்பெற்று/ உனக்கு/
மதி/ லேக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
அறிவு/ இல்லாது/ இருத்தல்/ சரியாமோ/
சரணம் 2
க3தி/ லேனி/ நனு/ நீவு/ காவவே/-அண்டி/
கதி/ யற்ற/ என்னை/ நீ/ காப்பாயய்யா/ என்றேன்/
ஸம்மதி லேக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
(அதற்கு) சம்மதிக்காது/ இருத்தல்/ சரியாமோ/
சரணம் 3
நினு/ ஜூட3/ பதி3 வேல/ கனுலு/ காவலெனு/-அண்டி/
உன்னை/ காண/ பதினாயிரம்/ கண்கள்/ வேண்டும்/ என்றேன்/
மனுபக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
கவனியாது/ இருத்தல்/ சரியாமோ/
சரணம் 4
ஏமி/ நேரனு/ பாத3மே/ மிகு3ல/ க3தி/-அண்டி/
ஏதும்/ கற்றறியேன்/ (உனது) திருவடிகளே/ மிக்கு/ கதி/ என்றேன்/
நா/ மீத3/ நெபமு/-எஞ்சுட/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
என்/ மீது/ குற்றம்/ காணல்/ சரியாமோ/
சரணம் 5
நீது3/ மாயல சேத/ நிஷ்டூ2ரமு/-ஏல/
உனது/ மாயைகளினால்/ கொடுமை/ யேனோ/
மம்மு/-ஆது3கோகனு/-உண்ட3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
எம்மை/ ஆதரியாது/ இருத்தல்/ சரியாமோ/
சரணம் 6
நாடி/ வசனமுலு/-எல்ல/ நயமு ஸேயவே/-அண்டி/
அன்றைய/ சொற்கள்/ யாவற்றையும்/ நிறைவேற்றுவாயய்யா/ என்றேன்/
மாட-ஆட3க/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
பேசாமலும்/ இருத்தல்/ சரியாமோ/
சரணம் 7
ராஜ/ நுத/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ரக்ஷக/ ஸ்1ரித/
அரசர்களால்/ போற்றப் பெற்றோனே/ தியாகராசனை/ காப்போனே/ சார்ந்தோர்/
ஸமாஜ/ நனு/ மரசுனதி3/ மஞ்சிதோ3/ ராம/ (த4ர்ம)
குழுமத்துறைவோனே/ என்னை/ மறத்தல்/ சரியாமோ/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மஞ்சிதோ3 - மஞ்சிதோ3 ராம
5 - ஏமி நேரனு - ஏமி நேரமு : 'ஏமி நேரனு' என்றால் 'ஏதும் கற்றறியேன்' என்றும், 'ஏமி நேரமு' என்றால் 'எனது குற்றமென்ன?' என்றும் பொருளாகும். இவ்விடத்தில் 'ஏமி நேரனு' மிக்குப் பொருந்தும்
6 - மாடாட3குண்டு3னதி3 - மாடலாட3குண்டு3னதி3
7 - மரசுனதி3 - மரசினதி3
சில புத்தகங்களில் சரணங்கள் 5-ம், 6-ம் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
1 - த4ர்மாத்ம - அற உருவே - 'த4ர்மம்' என்ற சொல்லுக்கு, பொதுவாக, 'அறம்' என்று பொருளானாலும், பற்பல சந்தர்ப்பங்களில், பற்பல பொருள்கள் கொள்ளப்படும். 'த4ர்ம'த்தின் பல விளக்கங்கள் நோக்கவும்.
4 - நினு ஜூட3 பதி3 வேல கனுலு காவலெ - உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும் - திருப்பதி வேங்கடேசப் பெருமானைப் பற்றிய தனது 'வேங்கடேஸ நின்னு ஸேவிம்ப' என்ற கீர்த்தனையில், இவ்விதம் தியாகராஜர் கூறுகின்றார்.
Top
விளக்கம்
3 - மதி லேகயுண்டு3னதி3 - அறிவு இல்லாதிருத்தல் - இது 'நிந்தா3 ஸ்துதி' எனப்படும் 'இகழ்ச்சிப் போற்றி'யாகும்.
Top
Updated on 23 May 2009
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
• சரணம் 3 ன் பொருள் “'உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும்' என்றேன்; கவனியாதிருத்தல் சரியாமோ?” தெளிவாக இல்லை. தியாகராஜருக்கு இரு கண்கள் தானெ இருந்தன. அவ்வாறாயின் ராமன் அவரைக் கவனியாமல் இருந்தது சரிதானே?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
"உன்னை இப்படிப் புகழ்ந்தேனே, அப்படியும் நீ என்னைக் கவனியாதிருத்தல் சரியாமோ?" என்று பொருளாகும் என்று நான் கருதுகின்றேன்.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment