Sunday, May 10, 2009

தியாகராஜ கிருதி - ஊரகே கல்கு3னா - ராகம் ஸ1ஹான - Urake Kalgunaa - Raga Sahana

பல்லவி
ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி

அனுபல்லவி
ஸாரெகுனு ஸம்ஸாரமுன ஜொச்சி
ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன (ஊரகே)

சரணம்
சரணம் 1
ஆலு ஸுதுலு ஜுட்டாலு வர
ஸத3னாலு காய ப3லாலு கனக
4னாலு கல 1விப4வமுல கனி 2அஸ்தி2ரமு-
லனே
பா4க்3ய-ஸா1லுலகு கா3க (ஊரகே)


சரணம் 2
3மஞ்சி வாரினி பொட3கா3ஞ்சி ஸந்ததமு
ஸேவிஞ்சி மனவினாலகிஞ்சியாத3ரி
ஸாதி4ஞ்சி ஸர்வமு ஹரியஞ்சு தெலிஸி
பா4விஞ்சி மதி3னி பூஜிஞ்சு வாரிகி கா3க (ஊரகே)


சரணம் 3
ராஜஸ கு3ண யுக்த பூஜலனொனரிஞ்சக
அஜ ஸன்னுத த்யாக3ராஜுனி ஜிஹ்வபை
ராஜில்லு வர 4மந்த்ர ராஜமுனு
ஸதா3 5ஜபிஞ்சு 6மஹராஜுலகு கா3க (ஊரகே)


பொருள் - சுருக்கம்
பிரமனால் போற்றப் பெற்றோனே!
  • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

    • எவ்வமயமும் உலக வாழ்வினிலுழன்று,

    • (அதனை) சாரமென எண்ணுவோரின் மனத்தினில்

  • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

    • மனைவி, மக்கள், சுற்றம், உயர் மாளிகை, உடல் வலிமை, பொன், செல்வங்களுடைத்த கொண்டாட்டத்தினைக் கண்டு,

    • நிலையற்றவை யெனும் பேறுடைத்தோருக்கன்றி

  • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

    • நன்மக்களை தரிசித்து,

    • எவ்வமயமும் சேவித்து,

    • (அவரது) வேண்டுகோளினைச் செவி மடுத்து,

    • பணிவுடன் நிறைவேற்றி,

    • யாவும் அரியென்றறிந்து, உணர்ந்து,

    • மனதில் (இறைவனை) வழிபடுவோருக்கன்றி

  • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

    • இராசத குணமுடை பூசைகளை மேற்கொள்ளாது,

    • தியாகராசனின் நாவினில் திகழும் உயர் மந்திரங்களில் தலைசிறந்த (தாரக நாமத்தினை)

    • எவ்வமயமும் செபிக்கும் பெருந்தகைகளுக்கன்றி

  • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஊரகே/ கல்கு3னா/ ராமுனி/ ப4க்தி/
தானாகவே/ தோன்றுமோ/ இராமனின்/ பக்தி/


அனுபல்லவி
ஸாரெகுனு/ ஸம்ஸாரமுன/ ஜொச்சி/
எவ்வமயமும்/ உலக வாழ்வினில்/ உழன்று/

ஸாரமு/-அனி/-எஞ்சு வாரி/ மனஸுன/ (ஊரகே)
(அதனை) சாரம்/ என/ எண்ணுவோரின்/ மனத்தினில்/ தானாகவே...


சரணம்
சரணம் 1
ஆலு/ ஸுதுலு/ ஜுட்டாலு/ வர/
மனைவி/ மக்கள்/ சுற்றம்/ உயர்/

ஸத3னாலு/ காய/ ப3லாலு/ கனக/
மாளிகை/ உடல்/ வலிமை/ பொன்/

4னாலு/ கல/ விப4வமுல/ கனி/ அஸ்தி2ரமுலு/-
செல்வங்கள்/ உடைத்த/ கொண்டாட்டத்தினை/ கண்டு/ நிலையற்றவை/

அனே/ பா4க்3ய/-ஸா1லுலகு/ கா3க/ (ஊரகே)
எனும்/ பேறு/ உடைத்தோருக்கு/ அன்றி/ தானாகவே...


சரணம் 2
மஞ்சி/ வாரினி/ பொட3கா3ஞ்சி/ ஸந்ததமு/
நன்/ மக்களை/ தரிசித்து/ எவ்வமயமும்/

ஸேவிஞ்சி/ மனவினி/-ஆலகிஞ்சி/-ஆத3ரி/
சேவித்து/ (அவரது) வேண்டுகோளினை/ செவி மடுத்து/ பணிவுடன்/

ஸாதி4ஞ்சி/ ஸர்வமு/ ஹரி/-அஞ்சு/ தெலிஸி/
நிறைவேற்றி/ யாவும்/ அரி/ என்று/ அறிந்து,

பா4விஞ்சி/ மதி3னி/ பூஜிஞ்சு/ வாரிகி/ கா3க/ (ஊரகே)
உணர்ந்து/ மனதில்/ (இறைவனை) வழிபடுவோருக்கு/ அன்றி/ தானாகவே...


சரணம் 3
ராஜஸ/ கு3ண/ யுக்த/ பூஜலனு/-ஒனரிஞ்சக/
இராசத/ குணம்/ உடை/ பூசைகளை/ மேற்கொள்ளாது/

அஜ/ ஸன்னுத/ த்யாக3ராஜுனி/ ஜிஹ்வபை/
பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ தியாகராசனின்/ நாவினில்/

ராஜில்லு/ வர/ மந்த்ர/ ராஜமுனு/
திகழும்/ உயர்/ மந்திரங்களில்/ தலைசிறந்த (தாரக நாமத்தினை)/

ஸதா3/ ஜபிஞ்சு/ மஹராஜுலகு/ கா3க/ (ஊரகே)
எவ்வமயமும்/ செபிக்கும்/ பெருந்தகைகளுக்கு/ அன்றி/ தானாகவே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விப4வமுல - விப4வால

2 - அஸ்தி2ரமுலனே - அஸ்தி2ராலனே

4 - மந்த்ர ராஜமுனு - மந்த்ர ராஜமுனனு

5 - ஜபிஞ்சு - ஜபிஞ்சே

6 - மஹராஜுலகு - மஹாராஜுலகு

Top

மேற்கோள்கள்
4 - மந்த்ர ராஜமு - மந்திரங்களில் தலைசிறந்தது - தாரக நாமம் - 'ராமா'யெனும் நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்

Top

விளக்கம்
3 - மஞ்சி வாரி மனவினாலகிஞ்சி ஆத3ரி ஸாதி4ஞ்சி - 'நன்மக்களின் வேண்டுகோளினை செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி' - இங்கு 'நிறைவேற்றி' என்ற சொல் 'யாவும் அரியென்று அறிந்து, உணர்ந்து, இறைவனை வழிபடுவதனை'க் குறிக்கும்.

இராசத குணமுடை பூசைகள் - உலக இன்பங்களுக்காக இயற்றப்படுபவை

Top


Updated on 10 May 2009

No comments: