Saturday, April 18, 2009

தியாகராஜ கிருதி - வினதா ஸுத வாஹனுடை3 - ராகம் ஹரி காம்போ4ஜி - Vinataa Suta Vaahanudai - Raga Hari Kambhoji

பல்லவி
வினதா ஸுத வாஹனுடை3
வெட3லெனு காஞ்சி வரது3டு3

அனுபல்லவி
வனஜாஸனாதி3 ஸுருலு
ஸனகாதி3 முனுலு கொலுவ (வினதா)

சரணம்
நெர வைஸா1கோ2த்ஸவமுன ஸ1த தி3ன-
கருலுத3யிஞ்சிரோயன பஸ்1சிம
கோ3புர த்3வாரமுன சராசரமுலகு
வர த்யாக3ராஜுகு வக3 தெலுப (வினதா)


பொருள் - சுருக்கம்
  • வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்

  • மலரோன் முதலான வானோர்களும், சனகர் முதலான முனிவர்களும் சேவிக்க, வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்

    • சிறப்புமிக்க வைகாசித் திருவிழாவினில்,

    • நூறு பகலவர்கள் உதித்தனரோயென,

    • மேற்கு கோபுர வாயிலில்,

    • அசைவன, அசையாதவற்றிற்கும், சீர் தியாகராசனுக்கும், வழி காட்ட

  • வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ வாஹனுடை3/
வினதை/ மைந்தனின்/ வாகனத்தினனாகி/

வெட3லெனு/ காஞ்சி/ வரது3டு3/
எழுந்தருளினன்/ காஞ்சி/ வரதன்/


அனுபல்லவி
வனஜ-ஆஸன/-ஆதி3/ ஸுருலு/
மலரோன்/ முதலான/ வானோர்களும்/

ஸனக/-ஆதி3/ முனுலு/ கொலுவ/ (வினதா)
சனகர்/ முதலான/ முனிவர்களும்/ சேவிக்க/ வினதை...


சரணம்
நெர/ வைஸா12/-உத்ஸவமுன/ ஸ1த/
சிறப்புமிக்க/ வைகாசி/ திருவிழாவினில்/ நூறு/

தி3னகருலு/-உத3யிஞ்சிரோ/-அன/ பஸ்1சிம/
பகலவர்கள்/ உதித்தனரோ/ யென/ மேற்கு/

கோ3புர/ த்3வாரமுன/ சர/-அசரமுலகு/
கோபுர/ வாயிலில்/ அசைவன/ அசையாதவற்றிற்கும்/

வர/ த்யாக3ராஜுகு/ வக3/ தெலுப/ (வினதா)
சீர்/ தியாகராசனுக்கும்/ வழி/ காட்ட/ வினதை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய (தியாகராஜருடைய) ஓரிரு சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினதை மைந்தன் - கருடன்
மலரோன் - பிரமன்

Top


Updated on 19 Apr 2009

No comments: