Monday, March 30, 2009

தியாகராஜ கிருதி - க3ருட க3மன - ராகம் கௌ3ரி மனோஹரி - Garuda Gamana - Raga Gauri Manohari

பல்லவி
3ருட33மன வாஸுதே3
கருணதோனு ப்3ரோவு நன்னு

அனுபல்லவி
பருலன்ன மாடல தாளனு
1பரமாத்முடு3 பரம த3யாளோ (க3)

சரணம்
த்3ருபத3 ஸுதாயிப4 ராஜுடு3
த்4ருவ பா3லுடு3 மொரிலிட3 வினி
க்3ரக்குன வெட3லின 2முச்சட
க்3ரம்மிதி
த்யாக3ராஜ நுத (க3)


பொருள் - சுருக்கம்
கருடன்மேல் செல்லும் வாசுதேவா! பரம்பொருளே! பரம தயாளா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • துருபதன் மகள், கரியரசன், சிறுவன் துருவன் முறையிட, விரைவில் எழுந்தருளிய செயதியைச் செவிமடுத்துப் பெருமிதமுற்றேன்.

  • பிறர் பகன்ற சொற்களைத் தாளேன்.

  • கருணையுடன் காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ருட3/ க3மன/ வாஸுதே3வ/
கருடன்மேல்/ செல்லும்/ வாசுதேவா/

கருணதோனு/ ப்3ரோவு/ நன்னு/
கருணையுடன்/ காப்பாய்/ என்னை/


அனுபல்லவி
பருலு/-அன்ன/ மாடல/ தாளனு/
பிறர்/ பகன்ற/ சொற்களை/ தாளேன்/

பரமாத்முடு3/ பரம/ த3யாளோ/ (க3)
பரம்பொருளே/ பரம/ தயாளா/


சரணம்
த்3ருபத3/ ஸுதா/-இப4/ ராஜுடு3/
துருபதன்/ மகள்/ கரி/ யரசன்/

த்4ருவ/ பா3லுடு3/ மொரிலு-இட3/ வினி/
துருவன்/ சிறுவன்/ முறையிட/ செவிமடுத்து/

க்3ரக்குன/ வெட3லின/ முச்சட/
விரைவில்/ எழுந்தருளிய/ செயதியை/

க்3ரம்மிதி/ த்யாக3ராஜ/ நுத/ (க3)
பெருமிதமுற்றேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
திரு கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பட்டதல்லவென்று நம்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

1 - பரமாத்முடு3 - மற்ற சொற்கள் முன்னிலையில் இருக்க, இச்சொல் மட்டும் படர்க்கையிலுள்ளது.

2 - முச்சட க்3ரம்மிதி - இச்சொற்களினால் வாக்கியம் முழுமை பெறவில்லை. எனவே 'வினி' (மொரிலிட3 வினி) என்ற சொல் இங்கு சேர்க்கப்பட்டது (முச்சட வினி க்3ரம்மிதி)

துருபதன் மகள் - துரோபதை
கரியரசன் - கஜேந்திரன்

Top


Updated on 30 Mar 2009

No comments: