Sunday, October 12, 2008

ஸர்வாந்தர்யாமி - ராகம் பை4ரவி - Sarvantaryami - Raga Bhairavi

பல்லவி
ஸர்வாந்தர்யாமி நீவனே
ஸாம்ராஜ்யமு நிஜமே ராம

அனுபல்லவி
நிர்வாஹமு லேனியீ ஜனுல கனி
நிர்மலாத்முலெடு ஸைரிஞ்சிரோ கானி (ஸ)

சரணம்
தா3ரி தெலிய லேரு கொந்த3ரு
3ரித்3ருலைனாரு ஸு-
து3ரஹங்காருலை பரம நிக்ரு2ஷ்ட
மதாசாருலைனாரு
ஜாருலைனாரதி3 கா3க தாரு
மாரு பனுல ஜேஸெத3ரு
ஸம்ஸாருலைனாரு த்யாக3ராஜ
ஸ்வாந்த ஸத31கபடமேமோ தெலிய (ஸ)


பொருள் - சுருக்கம்
தியாகராசனின் உள்ளுறையே, இராமா!

  • யாவரிலும் உள்ளியங்குவோன் நீயெனும் (உனது) பேராட்சி உண்மையா?
  • கட்டுப்பாடற்ற இம்மக்களைக்கண்டு, தூயவுள்ளத்தோர் எங்ஙனம் பொறுத்தனரோ?
  • நன்னெறி யறிந்திலர் சிலர்; வறியோராயினர்;
  • தீய அகந்தையுற்று, மிக்கு இழிந்த கொள்கைகளைக் கடைபிடிப்பவராயினர்;
  • பிறர்மனை நயப்பவராயினர்; முரண்பாடான பணிகளைச் செய்தனர்;
  • இல்வாழ்வில் உழல்பவராயினர்.

  • இந்தக் கபடமென்னவோ அறியேன்

    (எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளியக்கமாக உள்ளான் என்றால், ஏன் இத்தனை முரண்பாடுகள் உள்ளன என்று இறைவனைக் கேட்கிறார்)

    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸர்வ/-அந்தர்யாமி/ நீவு/-அனே/
    யாவரிலும்/ உள்ளியங்குவோன்/ நீ/ எனும்/

    ஸாம்ராஜ்யமு/ நிஜமே/ ராம/
    பேராட்சி/ உண்மையா/ இராமா/



    அனுபல்லவி
    நிர்வாஹமு/ லேனி/-ஈ/ ஜனுல/ கனி/
    கட்டுப்பாடு/ அற்ற/ இந்த/ மக்களை/ கண்டு/

    நிர்மல/-ஆத்முலு/-எடு/ ஸைரிஞ்சிரோ/ கானி/
    தூய/ உள்ளத்தோர்/ எங்ஙனம்/ பொறுத்தனரோ/ என்னவோ/



    சரணம்
    தா3ரி/ தெலிய லேரு/ கொந்த3ரு/
    நன்னெறி/ அறிந்திலர்/ சிலர்/

    3ரித்3ருலு/-ஐனாரு/
    வறியோர்/ ஆயினர்/

    ஸு-து3ரஹங்காருலை/ பரம/ நிக்ரு2ஷ்ட/
    தீய அகந்தையுற்று/ மிக்கு/ இழிந்த/

    மத/-ஆசாருலு/-ஐனாரு/
    கொள்கைகளை/ கடைபிடிப்பவர்/ ஆயினர்/

    ஜாருலு/-ஐனாரு/-அதி3 கா3க/
    பிறர்மனை நயப்பவர்/ ஆயினர்/ மேலும்/

    தாரு மாரு/ பனுல/ ஜேஸெத3ரு/
    முரண்பாடான/ பணிகளை/ செய்தனர்/

    ஸம்ஸாருலு/-ஐனாரு/ த்யாக3ராஜ/
    இல்வாழ்வில் உழல்பவர்/ ஆயினர்/ தியாகராசனின்/

    ஸ்வாந்த/ ஸத3ன/ கபடமு/-ஏமோ/ தெலிய/
    உள்ளத்தில்/ உறைபவனே/ கபடம்/ என்னவோ/ அறியேன்/

    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்

    விளக்கம்

    1கபடம் - தந்திரம், வஞ்சகம் -

    'ப்3ரு2ஹதா3ரண்யக' உபநிடதத்தில், யாவரிலும் உள்ளியக்கமான பரம்பொருளின் தன்மையை சிறக்க விவரிக்கப்பட்டுள்ளது.

    அந்த உபநிடதத்தில் 'அந்தர்யாமி ப்3ராஹ்மணம்' எனப்படும் III.vii -வது அத்தியாயத்தினை நோக்கவும்.

    உபநிடதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு

    ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கவுரை

    பிறர் மனை நயத்தல் - மற்றவர் மனைவியை விரும்புதல்
    Top


    No comments: