Monday, October 13, 2008

நீகே தெலியக போதே - ராகம் ஆனந்த3 பை4ரவி - Neeke Teliyaka Pote - Raga Ananda Bhairavi

பல்லவி
நீகே தெலியக போதே
நேனேமி ஸேயுது3ரா

அனுபல்லவி
லோகாதா4ருட3வை நா
லோனி ப்ரஜ்வலிஞ்சு ஜாலி (நீ)

சரணம்
1எந்தெ3ந்து3 ஜூசின எந்தெ3ந்து3 பலிகின
எந்தெ3ந்து3 ஸேவிஞ்சின எந்தெ3ந்து3 பூஜிஞ்சின
அந்த3ந்து3 நீவனி தோசுடந்து3கு நீ
பாதா3ரவிந்த3முனு த்4யானிஞ்சின-
தெ3ந்து3கனி த்யாக3ராஜ ஸன்னுத (நீ)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்றோனே!

உனது திருவடித் தாமரையினை தியானித்தது, எங்கெங்கு நோக்கினும், எவருடன் பகர்ந்தாலும்,
எவரை வணங்கினாலும், எவரை வழிபட்டாலும், அங்கங்கு (அவரவர்) நீயாகவே தோன்றுதற்கு;

பல்லுலகிற்கும் ஆதாரமானவனாகியும், எனது உள்ளத்து, கொழுந்துவிட்டெரியும் துயரம்
ஏனென, உனக்கே தெரியாமற்போனால் நானென்ன செய்வேனய்யா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகே/ தெலியக/ போதே/
உனக்கே/ தெரியாமல்/ போனால்/

நேனு/-ஏமி/ ஸேயுது3ரா/
நான்/ என்ன/ செய்வேனய்யா/



அனுபல்லவி
லோக/-ஆதா4ருட3வை/ நா/
பல்லுலகிற்கும்/ ஆதாரமானவனாகியும்/ எனது/

லோனி/ ப்ரஜ்வலிஞ்சு/ ஜாலி/
உள்ளத்து/ கொழுந்துவிட்டெரியும்/ துயரம்/ உனக்கே..


சரணம்
எந்தெ3ந்து3/ ஜூசின/ எந்தெ3ந்து3/ பலிகின/
எங்கெங்கு/ நோக்கினும்/ எவருடன்/ பகர்ந்தாலும்/

எந்தெ3ந்து3/ ஸேவிஞ்சின/ எந்தெ3ந்து3/ பூஜிஞ்சின/
எவரை/ வணங்கினாலும்/ எவரை/ வழிபட்டாலும்/

அந்த3ந்து3/ நீவ-அனி/ தோசுட-அந்து3கு/ நீ/
அங்கங்கு (அவரவர்)/ நீயாகவே/ தோன்றுதற்கு/ உனது/

பாத3/-அரவிந்த3முனு/ த்4யானிஞ்சினதி3/-
திருவடி/ தாமரையினை/ தியானித்தது/

எந்து3கு-அனி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
ஏனென/ தியாகராசனால்/ சிறக்க/ போற்றப்பெற்றோனே/ உனக்கே..

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

1எந்தெ3ந்து3 ஜூசின - எங்கெங்கு நோக்கினாலும் நீயாகக் காண - ஸ்ரீமத் பகவத்கீதை, அத்தியாயம் 6-ல் கண்ணன் கூறிய வசனம் -


என்னையெங்குமாகவும் என்னில் யாவுமாகவும் எவன் காண்கின்றானோ
அவனிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவனும் பிரிவதில்லை 30

விளக்கம்

Top


No comments: