Showing posts with label Hari Kambhoji Raga. Show all posts
Showing posts with label Hari Kambhoji Raga. Show all posts

Saturday, April 18, 2009

தியாகராஜ கிருதி - வினதா ஸுத வாஹனுடை3 - ராகம் ஹரி காம்போ4ஜி - Vinataa Suta Vaahanudai - Raga Hari Kambhoji

பல்லவி
வினதா ஸுத வாஹனுடை3
வெட3லெனு காஞ்சி வரது3டு3

அனுபல்லவி
வனஜாஸனாதி3 ஸுருலு
ஸனகாதி3 முனுலு கொலுவ (வினதா)

சரணம்
நெர வைஸா1கோ2த்ஸவமுன ஸ1த தி3ன-
கருலுத3யிஞ்சிரோயன பஸ்1சிம
கோ3புர த்3வாரமுன சராசரமுலகு
வர த்யாக3ராஜுகு வக3 தெலுப (வினதா)


பொருள் - சுருக்கம்
  • வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்

  • மலரோன் முதலான வானோர்களும், சனகர் முதலான முனிவர்களும் சேவிக்க, வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்

    • சிறப்புமிக்க வைகாசித் திருவிழாவினில்,

    • நூறு பகலவர்கள் உதித்தனரோயென,

    • மேற்கு கோபுர வாயிலில்,

    • அசைவன, அசையாதவற்றிற்கும், சீர் தியாகராசனுக்கும், வழி காட்ட

  • வினதை மைந்தனின் வாகனத்தினனாகி எழுந்தருளினன் காஞ்சி வரதன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ வாஹனுடை3/
வினதை/ மைந்தனின்/ வாகனத்தினனாகி/

வெட3லெனு/ காஞ்சி/ வரது3டு3/
எழுந்தருளினன்/ காஞ்சி/ வரதன்/


அனுபல்லவி
வனஜ-ஆஸன/-ஆதி3/ ஸுருலு/
மலரோன்/ முதலான/ வானோர்களும்/

ஸனக/-ஆதி3/ முனுலு/ கொலுவ/ (வினதா)
சனகர்/ முதலான/ முனிவர்களும்/ சேவிக்க/ வினதை...


சரணம்
நெர/ வைஸா12/-உத்ஸவமுன/ ஸ1த/
சிறப்புமிக்க/ வைகாசி/ திருவிழாவினில்/ நூறு/

தி3னகருலு/-உத3யிஞ்சிரோ/-அன/ பஸ்1சிம/
பகலவர்கள்/ உதித்தனரோ/ யென/ மேற்கு/

கோ3புர/ த்3வாரமுன/ சர/-அசரமுலகு/
கோபுர/ வாயிலில்/ அசைவன/ அசையாதவற்றிற்கும்/

வர/ த்யாக3ராஜுகு/ வக3/ தெலுப/ (வினதா)
சீர்/ தியாகராசனுக்கும்/ வழி/ காட்ட/ வினதை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய (தியாகராஜருடைய) ஓரிரு சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினதை மைந்தன் - கருடன்
மலரோன் - பிரமன்

Top


Updated on 19 Apr 2009

தியாகராஜ கிருதி - லாலி லாலியனி - ராகம் ஹரி காம்போ4ஜி - Laali Laaliyani - Raga Hari Kambhoji

பல்லவி
லாலி லாலியனியூசேரா 1வன-
மாலி
மாலிமிதோ ஜூசேரா

சரணம்
சரணம் 1
தே3வ தே3வயனி பிலிசேரா
மஹானுபா42பா4வமுன தலசேரா (லா)


சரணம் 2
ராம ராமயனி பலிகேரா
நிஷ்காம காம ரிபு நுத ராரா (லா)


சரணம் 3
கோரி கோரி நின்னு கொலிசேரா 3மாயா
தா3ரி
தா3ரி ஸத்344ஜனரா (லா)


சரணம் 4
ராஜ ராஜயனி பொக3டே3ரா த்யாக3-
ராஜ ராஜயனி ம்ரொக்கேரா (லா)


பொருள் - சுருக்கம்
வனமாலி! பெருந்தகையே! இச்சைகளற்றோனே! காமனின் பகைவனால் போற்றப் பெற்றோனே! மாயையின்தலைவா!
  • 'லாலி லாலி'யெனத் தாலாட்டினேனய்யா;

  • காதலுடன் நோக்கினேனய்யா;

  • 'தேவ தேவா'யென அழைத்தேனய்யா;

  • உள்ளத்தினில் நினைத்தேனய்யா;

  • 'இராமா இராமா'யெனப் பகர்ந்தேனய்யா;

  • வேண்டி வேண்டியுன்னை சேவித்தேனய்யா;

  • நன்னெறி உனது புகழ் பாடுதலய்யா;

  • 'மன்னா மன்னா'யெனப் புகழ்ந்தேனய்யா;

  • தியாகராசனின் மன்னனென வணங்கினேனய்யா;

வாருமய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி/ லாலி/-அனி/-ஊசேரா/
'லாலி/ லாலி'/யென/ தாலாட்டினேனய்யா/

வனமாலி/ மாலிமிதோ/ ஜூசேரா/
வனமாலி/ காதலுடன்/ நோக்கினேனய்யா/


சரணம்
சரணம் 1
தே3வ/ தே3வ/-அனி/ பிலிசேரா/
'தேவ/ தேவா'/ யென/ அழைத்தேனய்யா/

மஹானுபா4வ/ பா4வமுன/ தலசேரா/ (லா)
பெருந்தகையே/ உள்ளத்தினில்/ நினைத்தேனய்யா/


சரணம் 2
ராம/ ராம/-அனி/ பலிகேரா/
'இராமா/ இராமா/' யென/ பகர்ந்தேனய்யா/

நிஷ்காம/ காம/ ரிபு/ நுத/ ராரா/ (லா)
இச்சைகளற்றோனே/ காமனின்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/ வாருமய்யா/


சரணம் 3
கோரி/ கோரி/ நின்னு/ கொலிசேரா/ மாயா/
வேண்டி/ வேண்டி/ யுன்னை/ சேவித்தேனய்யா/ மாயையின்/

தா3ரி/ தா3ரி/ ஸத்3-ப4ஜனரா/ (லா)
தலைவா/ நன்னெறி/ (உனது) புகழ் பாடுதலய்யா/


சரணம் 4
ராஜ/ ராஜ/-அனி/ பொக3டே3ரா/
'மன்னா/ மன்னா'/ யென/ புகழ்ந்தேனய்யா/

த்யாக3ராஜ/ ராஜ/-அனி/ ம்ரொக்கேரா/ (லா)
தியாகராசனின்/ மன்னன்/ என/ வணங்கினேனய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மாயா தா3ரி - மாய தா3ரி.

4 - 4ஜனரா - ப4ஜனெரா.

ஊசேரா, ஜூசேரா, பிலிசேரா... போன்ற சொற்கள் - ஊசெத3ரா, ஜூசெத3ரா, பிலிசெத3ரா... என.

Top

மேற்கோள்கள்
1 - வனமாலி - வனமாலி - வைஜயந்தி எனப்படும் மாலை அணியும் அரி. துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களாலான மாலை. 'மாலைகள்' நோக்கவும்.

Top

விளக்கம்
2 - பா4வமுன தலசேரா - இஃது உள்ளப்பாங்கினைக் காட்டுவது. இந்நிலையினை உணரத்தான் முடியும்; சொற்களினால் விவரிக்க இயலாது.

3 - மாயா தா3ரி - தா3ரி என்ற வடமொழிச்சொல்லுக்கு, 'அழிப்பவன்' என்றும் 'தலைவன்' என்றும் பொருளுண்டு. அதே தெலுங்கு சொல்லுக்கு, 'அழிப்பவன்', 'தலைவன்' மற்றும் 'அணிபவன்' என்றும் பொருளுண்டு. ஆயின், 'மாயையின் தலைவன்' என்று இங்கு
பொருள் கொள்ளல், கீழ்க்கண்ட பகவத்-கீதை அத்தியாயம் 7, செய்யுள் 14-ன் படி பொருந்தும் -

கண்ணன் பகர்வது -
"உண்மையில், குணங்களாலான எனது இந்த மாயை கடத்தற்கரியது. எனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே இந்த மாயையினை கடக்கவல்லர்." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

காமனின் பகைவன் - சிவன்
மாயையின் தலைவா - 'மாயையினை அழிப்போனே' எனவும் கொள்ளலாம்.
Top


Updated on 18 Apr 2009

Thursday, April 16, 2009

தியாகராஜ கிருதி - ராரா ப2ணி ஸ1யன - ராகம் ஹரி காம்போ4ஜி - Raaraa Phani Sayana - Raga Hari Kambhoji

பல்லவி
ராரா ப2ணி ஸ1யன ரவி ஜலதி4ஜ நயன
ராகா ஸ1ஸி1 வத3ன ரமணீயாபக4

சரணம்
சரணம் 1
ராரா ப4வ தரண ராராமித ஸுகு3
ராரா பூ4-ரமண ராராப்3ஜ ஸு-சரண (ரா)


சரணம் 2
ராரா ஸு-குமார ராராஸம ஸூ1
ராரா ரகு4 வீர ராரா யுதி4 தீ4ர (ரா)


சரணம் 3
ராரா ஜானகிதோ ராரா ஸஹஜுலதோ
ராரா பவனஜுதோ ராரா ப4க்துலதோ (ரா)


சரணம் 4
நாகா3வன நேத ராக3 கு3ண விரஹித
ஸாக3ர தனய யுத த்யாக3ராஜ வினுத (ரா)


பொருள் - சுருக்கம்
  • அரவணையோனே!

  • பரிதி மதி கண்களோனே!

  • முழுமதி வதனத்தோனே!

  • கவர்ச்சியான உடலோனே!

  • பிறவிக் கடலைக் கடத்துவோனே!

  • மிக்கு நற்குணத்தோனே!

  • பூமி கொழுநனனே!

  • கமலத் திருவடிகளோனே!

  • சுகுமாரா!

  • நிகரற்ற சூரா!

  • இரகுவீரா!

  • களத்தில் தீரா!

  • கரியைக் காத்த தலைவா!

  • இச்சை மற்றும் குணங்களற்றோனே!

  • கடல் மகளுடனுறையே!

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • வாராய்.

    • வாராய், சானகியுடன், உடன் பிறந்தோருடன், வாயு மைந்தனுடன், தொண்டர்களுடன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ ப2ணி/ ஸ1யன/ ரவி/ ஜலதி4ஜ/ நயன/
வாராய்/, அரவு/ அணையோனே/ பரிதி/ கடலுதித்தோன் (மதி)/ கண்களோனே/

ராகா ஸ1ஸி1/ வத3ன/ ரமணீய/-அபக4ன/
முழுமதி/ வதனத்தோனே/ கவர்ச்சியான/ உடலோனே/!


சரணம்
சரணம் 1
ராரா/ ப4வ/ தரண/ ராரா/-அமித/ ஸுகு3ண/
வாராய்/ பிறவிக் கடலை/ கடத்துவோனே/ வாராய்/ மிக்கு/ நற்குணத்தோனே/

ராரா/ பூ4/-ரமண/ ராரா/-அப்3ஜ/ ஸு-சரண/ (ரா)
வாராய்/, பூமி/ கொழுநனனே/ வாராய்/ கமல/ திருவடிகளோனே/


சரணம் 2
ராரா/ ஸு-குமார/ ராரா/-அஸம/ ஸூ1ர/
வாராய்/, சுகுமாரா/ வாராய்/ நிகரற்ற/ சூரா/

ராரா/ ரகு4 வீர/ ராரா/ யுதி4/ தீ4ர/ (ரா)
வாராய்/ இரகுவீரா/ வாராய்/ களத்தில்/ தீரா/


சரணம் 3
ராரா/ ஜானகிதோ/ ராரா/ ஸஹஜுலதோ/
வாராய்/ சானகியுடன்/ வாராய்/ உடன் பிறந்தோருடன்/

ராரா/ பவனஜுதோ/ ராரா/ ப4க்துலதோ/ (ரா)
வாராய்/ வாயு மைந்தனுடன்/ வாராய்/ தொண்டர்களுடன்/


சரணம் 4
நாக3/-அவன/ நேத/ ராக3/ கு3ண/ விரஹித/
கரியை/ காத்த/ தலைவா/ இச்சை/ மற்றும்/ குணங்கள்/ அற்றோனே/

ஸாக3ர/ தனய/ யுத/ த்யாக3ராஜ/ வினுத/ (ரா)
கடல்/ மகள்/ உடனுறையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இப்பபாடல் தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமிருப்பதாகவும், அவருடைய சில சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில புத்தகங்களில், 'ஸயன', 'நயன'.... போன்ற அனைத்து சொற்களும் 'ஸயனா', 'நயனா'.... என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கடல் மகள் - இலக்குமி

Top


Updated on 16 Apr 2009

Wednesday, April 15, 2009

தியாகராஜ கிருதி - ராம நன்னு ப்3ரோவ - ராகம் ஹரி காம்போ4ஜி - Rama Nannu Brova - Raga Hari Kambhoji

பல்லவி
ராம நன்னு ப்3ரோவ 1ராவேமகோ லோகாபி4(ராம)

அனுபல்லவி
சீமலோ ப்3ரஹ்மலோ ஸி1வ கேஸ1வாது3லலோ
ப்ரேம மீர மெலகு3சுண்டே3 பி3ருது3 வஹிஞ்சின ஸீதா (ராம)

சரணம்
மெப்புலகை கன்ன தாவுனப்பு பட3க விர்ர வீகி3
தப்பு பனுலு லேகயுண்டே3 த்யாக3ராஜ 2வினுத ஸீதா (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! உலகினை மகிழ்விப்போனே!

  • எறும்பிலும், பிரமனிலும், சிவன், கேசவன் முதலானோரிலும், மிக்கு கனிவுடன், இயங்கிக்கொண்டிருக்கும் விருதினை யேந்திய சீதாராமா!

  • தியாகராசனால் போற்றப் பெற்ற சீதாராமா!

    • புகழுக்காக, கண்ட இடங்களில் கடன் படாமலும்,

    • செருக்குற்று, தவறான செயல்கள் புரியாமலும் இருக்கின்றேன்.

    • அப்படியிருக்க, என்னைக் காக்க வாராயேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நன்னு/ ப்3ரோவ/ ராவு-ஏமகோ/ லோக/-அபி4ராம/
இராமா/ என்னை/ காக்க/ வாராயேனோ/ உலகினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
சீமலோ/ ப்3ரஹ்மலோ/ ஸி1வ/ கேஸ1வ/-ஆது3லலோ/
எறும்பிலும்/ பிரமனிலும்/ சிவன்/ கேசவன்/ முதலானோரிலும்/

ப்ரேம/ மீர/ மெலகு3சு-உண்டே3/ பி3ருது3/ வஹிஞ்சின/ ஸீதா/ (ராம)
கனிவு/ மிக/ இயங்கிக்கொண்டிருக்கும்/ விருதினை/ ஏந்திய/ சீதா/ ராமா!


சரணம்
மெப்புலகை/ கன்ன/ தாவுன/-அப்பு/ பட3க/ விர்ர வீகி3/
புகழுக்காக/ கண்ட/ இடங்களில்/ கடன்/ படாமலும்/ செருக்குற்று/

தப்பு/ பனுலு/ லேக/-உண்டே3/ த்யாக3ராஜ/ வினுத/ ஸீதா/ (ராம)
தவறான/ செயல்கள்/ புரியாமலும் (இல்லாமலும் )/ இருக்கும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சீதா/ ராமா!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வினுத - நுத.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ராவேமகோ - ராவு+ஏமகோ : 'ஏமகோ' என்ற சொல் தெலுங்கு அகராதியில் காணப்படவில்லை. ஆயினும், இவ்விடத்தில் 'ஏமகோ' என்ற சொல்லுக்கு 'ஏனோ' என்று பொருளாகும். அதற்கீடான (ஏனோ) தெலுங்கு சொல் 'ஏமிடிகோ'. அனேகமாக, 'ஏமகோ', 'ஏமிடிகோ' என்ற சொல்லின் திரிபாக பேச்சு வழக்கலிருக்கலாம்.

Top


Updated on 15 Apr 2009

Tuesday, April 14, 2009

தியாகராஜ கிருதி - தி3ன மணி வம்ஸ1 - ராகம் ஹரி காம்போ4ஜி - Dina Mani Vamsa - Raga Hari Kambhoji

பல்லவி
தி3ன மணி வம்ஸ1 திலக லாவண்ய
தீ3ன ஸ1ரண்ய

அனுபல்லவி
மனவினி பா3கு33 மதி3னி தலஞ்சுசு
சனுவுனனேலு சாலுகா3 ஜாலு (தி3)

சரணம்
11ர்வ வினுத நனு ஸம்ரக்ஷிஞ்சனு
3ர்வமு ஏல காசுவாரெவரே
2நிர்விகார கு3 நிர்மல கர த்4ரு2
பர்வத த்யாக3ராஜ ஸர்வஸ்வமௌ (தி3)


பொருள் - சுருக்கம்
தியாகராசனின் அனைத்துமாகிய தினமணி குலத்திலகமே! எழிலோனே! எளியோரின் புகலே! சர்வனால் போற்றப் பெற்றோனே! மாற்றம், குணங்களற்றோனே! மாசற்றோனே! கையினில் மலையை ஏந்தியவனே!
  • வேண்டுகோளை நன்கு மனதில் நினைந்து, கனிவுடன் ஆள்வாய்;

  • போதுமே தாமதம்;

  • என்னைப் பேணுதற்கு செருக்கேனோ?

  • காப்பவர் யாரே?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தி3ன/ மணி/ வம்ஸ1/ திலக/ லாவண்ய/
தின/ மணி/ குல/ திலகமே/ எழிலோனே/

தீ3ன/ ஸ1ரண்ய/
எளியோரின்/ புகலே/


அனுபல்லவி
மனவினி/ பா3கு33/ மதி3னி/ தலஞ்சுசு/
வேண்டுகோளை/ நன்கு/ மனதில்/ நினைந்து/

சனுவுன/-ஏலு/ சாலுகா3/ ஜாலு/ (தி3)
கனிவுடன்/ ஆள்வாய்/ போதுமே/ தாமதம்/


சரணம்
1ர்வ/ வினுத/ நனு/ ஸம்ரக்ஷிஞ்சனு/
சர்வனால்/ போற்றப் பெற்றோனே/ என்னை/ பேணுதற்கு/

3ர்வமு/ ஏல/ காசுவாரு/-எவரே/
செருக்கு/ ஏனோ/ காப்பவர்/ யாரே/

நிர்விகார/ கு3ண/ நிர்மல/ கர/ த்4ரு2த/
மாற்றமற்றோனே/ குணங்கள் (அற்றோனே)/ மாசற்றோனே/ கையினில்/ ஏந்தியவனே/

பர்வத/ த்யாக3ராஜ/ ஸர்வஸ்வமௌ/ (தி3)
மலையை/ தியாகராசனின்/ அனைத்துமாகிய/ தினமணி குல...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - 1ர்வ - சர்வன் - சிவன் : சிவனுடைய பெயர்களை - வியாச முனிவர் இயற்றிய 'ஸ1த ருத்3ரீயம்' என்ற நூலில் காண்க.

விளக்கம்
2 - நிர்விகார கு3 - 'நிர்' எனும் பகுதி (prefix) 'விகார' மற்றும் 'குண' - இரண்டிற்கும் பொதுவாகும் - 'நிர்விகார', 'நிர்குண'. இதனைத் தொடர்ந்து வரும் 'நிர்மல' என்ற சொல்லினால் இது விளங்கும். அப்படி இல்லையாகில், 'குண' என்ற சொல் தனியாக நிற்க இயலாது - அதற்கு பொருள் கூறுவதும் இயலாது.

தினமணி - பகலவன்
மலையை ஏந்திய - கோவர்த்தன மலை

Top


Updated on 15 Apr 2009

Monday, April 13, 2009

தியாகராஜ கிருதி - சனி தோடி3 தேவே - ராகம் ஹரி காம்போ4ஜி - Chani Todi Teve - Raga Hari Kaambhoji

பல்லவி
சனி 1தோடி3 தேவே ஓ மனஸா

அனுபல்லவி
2கனிகரமுதோ கனி கரமிடி3 சிர
காலமு ஸுக2மனுப4விம்ப வேக3மே (ச)

சரணம்
பதிதுல ப்3ரோசே 3பட்டாதி4காரினி
4பரமார்த2 மத 5வஸிஷ்டா2னுஸாரினி
த்3யுதி நிர்ஜித ஸ161ம்ப3ராரினி
7து4ரீண த்யாக3ராஜ ஹ்ரு2ச்-சாரினி (ச)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • சென்றழைத்துவாடி;

  • கனிவுடன், கண்டு, கரம்பற்றி, பல காலம் சுகமனுபவிக்க, விரைவில் சென்றழைத்துவாடி;

    • வீழ்ந்தோரைக் காக்கும் பட்டமேந்துவோனை,

    • மெய்யறிவு நெறி நிற்கும், வசிட்டரின் வழி நடப்போனை,

    • ஒளியில், நூறு சம்பரன் பகைவனை வென்றோனை,

    • உலக பளு சுமக்கும், தியாகராசனின் இதயத்தில் உலவுவோனை,

  • சென்றழைத்துவாடி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சனி/ தோடி3 தேவே/ ஓ மனஸா/
சென்று/ அழைத்துவாடி/ ஓ மனமே/


அனுபல்லவி
கனிகரமுதோ/ கனி/ கரமு/-இடி3/ சிர/
கனிவுடன்/ கண்டு/ கரம்/ பற்றி/ பல/

காலமு/ ஸுக2மு/-அனுப4விம்ப/ வேக3மே/ (ச)
காலம்/ சுகம்/ அனுபவிக்க/ விரைவில்/ சென்று...


சரணம்
பதிதுல/ ப்3ரோசே/ பட்ட/-அதி4காரினி/
வீழ்ந்தோரை/ காக்கும்/ பட்டம்/ ஏந்துவோனை/

பரம-அர்த2/ மத/ வஸிஷ்ட2/-அனுஸாரினி/
மெய்யறிவு/ நெறி நிற்கும்/ வசிட்டரின்/ வழி நடப்போனை/

த்3யுதி/ நிர்ஜித/ ஸ1த/ ஸ1ம்ப3ர/-அரினி/
ஒளியில்/ வென்றோனை/ நூறு/ சம்பரன்/ பகைவனை/

து4ரீண/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-சாரினி/ (ச)
(உலக) பளு சுமக்கும்/ தியாகராசனின்/ இதயத்தில்/ உலவுவோனை/ சென்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - வஸிஷ்ட2 - விஸி1ஷ்ட

Top

மேற்கோள்கள்
5 - வஸிஷ்டா2னுஸாரினி - வசிட்டரின் வழி நடப்போன் - வசிட்டர் இராமனின் ஆசான். வசிட்டர் இயற்றிய யோக வாசிஷ்டம் எனும் நூலின் சுருக்கம் காணவும்

6 - 1ம்ப3ராரி - சம்பரன் என்ற அரக்கனைக் கொன்றது கண்ணனின் மகன் பிரத்யும்நன். அவன் சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனின் மறுபிறவியாகும். எனவே இங்கு இச்சொல்லுக்கு 'காமன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

விளக்கம்
1 - தோடி3 தேவே - அழைத்து வாடி - மனத்தினைப் பெண்பாலில் விளிக்கின்றார் .

2 - கனிகரமுதோ கனி கரமிடி3 - கனவுடன், கண்டு, கரம் பற்றி, - சில புத்தகங்களில், இறைவன், தியாகராஜரின் கரம் பற்றுவதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப்பாடல், மனத்திற்கு வேண்டுகோளாகையால், இச்சொற்கள் மனத்தினைக் குறிக்கும்.

3 - பட்டாதி4காரினி - பொதுவாக, இச்சொல் 'பட்டமணியும் அரசனை'க் குறிக்கும். ஆனால் இங்கு 'வீழ்ந்தோரைக் காக்கும் பட்டம் (விருது) வகிக்கும்' இறைவனைக் குறிக்கும்.

Top

4 - பரமார்த2 மத - இப்பாடலின் விளக்கம் காணவும். இந்த விளக்கத்தின்படி, இச்சொல்லுக்கு 'சரணாகதி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து வரும் 'வஸிஷ்ட அனுசாரினி' - 'வசிட்டரின் வழி நடப்பவன்' சொற்களினால், 'பரமார்த்த மதம்' என்பது வசிட்டரால் இயற்றப் பெற்ற 'யோக வாசிஷ்டம்' என்ற நூலில் உரைத்த கோட்பாடுகளைக் குறிக்கவேண்டும். அந்நூலின்படி, வசிட்டர், 'அத்துவைத' வழி முறையையே விவரிக்கின்றார். அதனால் தானே என்னவோ, 'வஸிஷ்ட' என்ற சொல்லினை 'விஸிஷ்ட' என்று மாற்றி 'சரணாகதி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

'பரமார்த்த மதம்' என்பது 'மெய்யறிவு சேர்க்கும் நெறியினை'க் குறிக்கும். 'மெய்யறிவு' என்னவென்பது குறித்து அத்துவைத, துவைத, மற்றும் விஸிஷ்டாத்துவைதிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துகளைக் கொண்டுள்ளனர். 'வஸிஷ்ட' என்ற சொல் ஒரு புத்தகம் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் காணப்படுவதனால், 'வஸிஷ்ட' சரியான சொல்லாகயிருக்கும் என்றும், 'விஸிஷ்ட' என்ற சொல் திணிக்கப்ட்டதாகவும் கருத ஏதுக்களிருக்கின்றன.

7 - து4ரீண - பளு சுமக்கும் - பொதுவாக இச்சொல் இறைவனைக் குறிக்கும். ஆனால் ஒரு புத்தகத்தினில் இதனை தியாகராஜருக்குக் கூறப்பட்டுள்ளது - 'அடிமை தியாகராஜன்' என.

மெய்யறிவு நெறி நிற்கும் - வசிட்டரைக் குறிக்கும்
உலக பளு சுமக்கும் - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 14 Apr 2009

Sunday, April 12, 2009

தியாகராஜ கிருதி - ஒக மாட - ராகம் ஹரி காம்போ4ஜி - Oka Maata - Raga Hari Kaambhoji

பல்லவி
1ஒக மாட 2ஒக பா3ணமு 3ஒக பத்னீ வ்ரதுடே3 மனஸா

அனுபல்லவி
4ஒக சித்தமு-க3லவாடே3 ஒக நாடு3னு மரவகவே (ஒ)

சரணம்
5சிர ஜீவித்வமு 6நிர்ஜர வர 7மோக்ஷமொஸங்கு3னே
483ரகே3 தே3வுடே3 9த்யாக3ராஜ நுதுடு3 (ஒ)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராமன், ஓர் சொல், ஓரம்பு, ஓர்மனை விரதத்தோனடி;

  • ஓர் சித்தமுடையவனடி;

  • நீண்டாயுளும், குன்றாத, உயர் வீடும் அளிப்பானடி;

  • புவியில் திகழும் தெய்வமடி, தியாகராசனால் போற்றப் பெற்றோன்;

ஒரு நாளும் மறவாதேடி.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஒக/ மாட/ ஒக/ பா3ணமு/ ஒக/ பத்னீ/ வ்ரதுடே3/ மனஸா/
ஓர்/ சொல்/ ஓர்/ அம்பு/ ஓர்/ மனை/ விரதத்தோனடி/ மனமே/


அனுபல்லவி
ஒக/ சித்தமு/-க3லவாடே3/ ஒக/ நாடு3னு/ மரவகவே/ (ஒ)
ஓர்/ சித்தம்/ உடையவனடி/ ஒரு/ நாளும்/ மறவாதேடி/


சரணம்
சிர/ ஜீவித்வமு/ நிர்ஜர/ வர/ மோக்ஷமு/-ஒஸங்கு3னே/
நீண்ட/ ஆயுளும்/ குன்றாத/ உயர்/ வீடும்/ அளிப்பானடி/

4ர/ ப3ரகே3/ தே3வுடே3/ த்யாக3ராஜ/ நுதுடு3/ (ஒ)
புவியில்/ திகழும்/ தெய்வமடி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - சிர ஜீவித்வமு - சிரஞ்ஜீவித்வமு : வடமொழி அகராதிபடி, 'சிர ஜீவித்வமு' சரியாகும்; தெலுங்கு அகராதிபடி, இரண்டு சொற்களுமே சரியாகும்.

7 - மோக்ஷமு - ஸௌக்2யமு : 'ஸௌக்2யமு' சரியானால், 'நிர்ஜர வர ஸௌக்2யமு' என்பதற்கு 'வானுலக இன்பம்' என்று பொருளாகும். தியாகராஜர் வானுலக இன்பத்தினை ஒரு குறிக்கோளாகக் கொண்டவரல்ல. மேலும் அதனை (வானுலுக இன்பங்களை) யாருக்கும் அவர் பரிந்துரைக்க மாட்டார். 'நிர்ஜர' என்ற சொல் பொதுவாக 'வானோரை'க் குறிப்பிடும் - கீழ்க்கண்ட விளக்கத்தினையும் நோக்கவும். அதனால், அந்த பொருளில் மொழிபெயர்த்து, 'மோக்ஷமு' என்ற சொல்லுக்கு பதிலாக, 'ஸௌக்2யமு' என்ற சொல்லைத் திணித்துள்ளதாகக் கருதுகின்றேன். எனவே, 'மோக்ஷமு' என்ற சொல்தான் சரியாகும்.

8 - 3ரகே3 - ப3ரகு3

Top

மேற்கோள்கள்
1 - ஒக மாட - ஓர் சொல் - சொல் தவறாதவனென - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 18-வது அத்தியாயத்தில் ராமன் கைகேயியை நோக்கிக் கூறவது -

"தேவி! நீங்கள் என்ன சொல்லவந்தீர்களே அதனைச் சொல்லவும். அரசன் விரும்புவதனை நான் தவறாது நிறைவேற்றுவேன் - அதற்கான எனது வாக்குறுதியையும் அளிக்கின்றேன். ராமன் இருமுறைப் பகர்கிலன்."

விளக்கம்
2- ஒக பா3ணமு - ஓரம்பு : 'எவரிச்சிரிரா' என்ற கீர்த்தனையில் இராமனின் அம்பினை வெகுவாக தியாகராஜர் புகழ்ந்துள்ளார். இச்சொல்லுக்கு (ஓரம்பு), 'ஓரே குறிக்கோள்' அல்லது 'குறிக்கோளில் தவறாத' என்ற பொருளாகும்.

3 - ஒக பத்னீ - ஓர் மனை - இராமனுக்கு, 'மரியாதா புருஷோத்தமன்', அதாவது, 'வரம்பு மீறாதவன்' என்று பெயராகும். இராமனின் தந்தையான தசரதனுக்கு, 3 ராணிகளுடன், 60,000 வேறு மனைவியரும் உண்டென வழக்கு. ஆனால், இராமனோ, தனது மனைவியை, காட்டுக்கு அனுப்பிவிட்டு, மறுமணம் செய்து கொள்ளாது, 'அஸ்1வமேத4 யாக'த்திற்காக, பொன்னால் சீதையின் உருவத்தினை வடித்து, அச்சிலை முன்னிலையில், அந்த யாகத்தினைச் செய்தான். இப்படி, இராமன், நன்னடத்தையின் வரம்பினை மீறாததுடன், அந்நன்னடைத்தைக்கே புது வரம்புண்டாக்கினான்.

4 - ஒக சித்தமு - ஓர் சித்தம். எண்ணியதை முடித்தல். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இறைவனுக்கு 'ஸித்34 ஸங்கல்ப' என்ற பெயராகும். இதன் முழு விளக்கத்தையும் இங்கு காணவும்.

போர் தொடங்குமுன்பே, விபீடணனுக்கு, இலங்கையின் அரசனாக முடிசூட்டியது, இராமனின் 'எண்ணியதை முடித்தலுக்கு' ஓர் எடுத்துக்காட்டாகும்.

Top

5 - சிர ஜீவித்வமு நிர்ஜர வர மோக்ஷமு - நீண்ட ஆயுளும் குன்றாத உயர் வீடும் அளிப்பானடி - வடமொழியில், இதற்கு 'பு4க்தி முக்தி' (இம்மை, மறுமை) எனப்படும். அனுமன் 'சிரஞஜீவி'.

6 - நிர்ஜர - பொதுவாக, இச்சொல்லுக்கு 'மூப்பற்றோர்' அதாவது 'வானோர்' என்ற பொருளாகும். ஆனால், இவ்விடத்தில், இது 'குன்றாத' தன்மையுடைய வீட்டனைக் குறிக்கும்.

9 - த்யாக3ராஜ நுதுடு3 - தியாகராஜனால் போற்றப்பெற்றோன் - இச்சொற்கள் இதற்கு முன் வரும் 'த4ர ப3ரகே3 தே3வுடே3' (புவியில் திகழும் தெய்வமடி) என்பதனுடனோ, அல்லது, பல்லவியுடனோ சேர்க்கலாம். ஆனால் முன்கூறியபடி சேர்த்தலே மிக்கு பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

இப்பாடலில் வரும் 'ஏ' என்ற விளிப்பினைக் கொண்ட சொற்கள் ('மரவகவே'...) பெண்பால் விளித்தலாகும். தியாகராஜர் மனத்தினைப் பெண்பாலில் விளிப்பதனை பல பாடல்களில் காணலாம்.

மனை - மனைவி

Top


Updated on 13 Apr 2009

Saturday, April 11, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கு நிர்த3ய - ராகம் ஹரி காம்போ4ஜி - Enduku Nirdaya - Raga Hari Kaambhoji

பல்லவி
எந்து3கு நிர்த3ய எவருன்னாருரா

அனுபல்லவி
இந்து3 நிபா4னன இன குல சந்த3ன (எ)

சரணம்
சரணம் 1
பரம பாவன 1பரிமளாபக4 (எ)


சரணம் 2
நே பர தே3ஸி1 பா3பவே கா3ஸி (எ)


சரணம் 3
2உட3த ப4க்தி கனி

உப்33தில்லக3 லேதா3 (எ)


சரணம் 4
1த்ருல மித்ருல ஸமமுக3 ஜூசே நீகு-(எ)


சரணம் 5
4ரலோ நீவை த்யாக3ராஜுபை (எ)


பொருள் - சுருக்கம்
மதி நிகர் முகத்தோனே! பரிதி குல உத்தமனே! முற்றிலும் தூயோனே! மணக்கும் அங்கத்தோனே!
  • ஏன் கருணையின்மை? எவருளரய்யா?

  • நான் அனாதை; துயர் தீர்ப்பாயய்யா;

  • அணிலின் பக்தி கண்டு பொங்கவில்லையா?

  • பகைவரையும் நண்பரையும் சமமாக நோக்குமுனக்கு ஏன் கருணையின்மை?

  • புவியில் (யாவும்) நீயாயிருக்க, தியாகராசனின் மீது ஏன் கருணையின்மை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/ நிர்த3ய/ எவரு/-உன்னாருரா/
ஏன்/ கருணையின்மை/ எவர்/ உளரய்யா/


அனுபல்லவி
இந்து3/ நிப4/-ஆனன/ இன/ குல/ சந்த3ன/ (எ)
மதி/ நிகர்/ முகத்தோனே/ பரிதி/ குல/ உத்தமனே/


சரணம்
சரணம் 1
பரம/ பாவன/ பரிமள/-அபக4ன/ (எ)
முற்றிலும்/ தூயோனே/ மணக்கும்/ அங்கத்தோனே/


சரணம் 2
நே/ பர தே3ஸி1/ பா3பவே/ கா3ஸி/ (எ)
நான்/ பரதேசி (அனாதை)/ தீர்ப்பாயய்யா/ துயரினை/


சரணம் 3
உட3த/ ப4க்தி/ கனி/

உப்33தில்லக3 லேதா3/ (எ)
அணிலின்/ பக்தி/ கண்டு/ பொங்கவில்லையா/


சரணம் 4
1த்ருல/ மித்ருல/ ஸமமுக3/ ஜூசே/ நீகு-/(எ)
பகைவரையும்/ நண்பரையும்/ சமமாக/ நோக்கும்/ உனக்கு/ ஏன்...


சரணம் 5
4ரலோ/ நீவை/ த்யாக3ராஜுபை/ (எ)
புவியில்/ (யாவும்) நீயாயிருக்க/ தியாகராசனின் மீது/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - பரிமளாபக4 - மணக்கும் அங்கத்தோன் - இது குறித்து, 'Practice of Brahmacharya' (பிரமசரியத்தினை அனுஷ்டித்தல்) எனும் ஸ்வாமி சிவானந்தரின் புத்தகம் நோக்கவும். அதில் அவர் கூறுவது -

"எவனொருவன், உண்மையிலியே 'ஊர்த்4வ ரேதஸ்'-ஆக (வீரீயம் கட்டுதல்) உள்ளானோ, அவனுடைய உடல் தாமரை மலரின் இனிய மணம் உடைத்திருக்கும். மாறாக, எவன் பிரமசரியத்தை கடைப்பிடிக்காது உள்ளானோ - அதாவது எவனுடலில் வீரியம் உண்டாகின்றதோ - அவனுடல் ஆட்டுக் கடாவின் மணம் உடைத்திருக்கும்.

2 - உட3த ப4க்தி - அணிலின் பக்தி - கடல் மீது வாராவதி அமைக்க உதவியதற்கு - இது குறித்து, வால்மீகி ராமாயணத்தில் ஏதும் குறிப்பு காணப்படவில்லை. ஆனால், தமிழ் நாட்டில், அப்படியொரு வழக்குண்டு. இது குறித்து திருமழிசை ஆழ்வார் கூறியுள்ளதனைக் காணவும் - அணிலின் பக்தி

Top

விளக்கம்



Updated on 12 Apr 2009

தியாகராஜ கிருதி - எந்த ரானி - ராகம் ஹரி காம்போ4ஜி - Enta Raani - Raga Hari Kaambhoji

பல்லவி
எந்த ரானி தனகெந்த போனி நீ
1செந்த 2விடு3வ ஜால ஸ்ரீ ராம

அனுபல்லவி
3அந்தகாரி நீ செந்த ஜேரி
ஹனுமந்துடை3
கொலுவ லேதா3 (எ)

சரணம்
சரணம் 1
4ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 லக்ஷ்மண
வேஷியை கொலுவ லேதா3 (எ)


சரணம் 2
ஸி1ஷ்டுடு3 மௌனி வரிஷ்டு2டு3 கொ3ப்ப
வஸிஷ்டு2டு3 5ஹிதுடு3கா3 லேதா3 (எ)


சரணம் 3
நர வர நீகை 6ஸுர க3ணமுலு
வானருலை
7கொலுவக3 லேதா3 (எ)


சரணம் 4
ஆக3மோக்தமகு3 நீ கு3ணமுலு ஸ்ரீ
த்யாக3ராஜு பாட33 லேதா3 (எ)


பொருள் - சுருக்கம்
ஸ்ரீ ராமா! மனிதரில் உத்தமனே!
  • என்ன வரினும் தனக்கென்ன போயினும் உனதண்மை விட இயலேன்;

    • நமன் பகைவன் உனதண்மையடைந்து அனுமனாகிச் சேவிக்கவில்லையா?

    • சேடன், சிவனுக்கு அணிகலன், இலக்குவனின் வேடமணிந்து சேவிக்கவில்லையா?

    • அறிஞன், முனிவர்களில் சிறந்தோன், உயர் வசிட்டன் நல்லதுரைப்போனாக இல்லையா?

    • உனக்காக வானோர்கள் வானரராகிச் சேவிக்கவில்லையா?

    • ஆகமங்களுரைக்கும் உனது குணங்களை தியாகராசன் பாடவில்லையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ ரானி/ தனகு/-எந்த/ போனி/ நீ/
என்ன/ வரினும்/ தனக்கு/ என்ன/ போயினும்/ உனது/

செந்த/ விடு3வ/ ஜால/ ஸ்ரீ ராம/
அண்மை/ விட/ இயலேன்/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
அந்தக/-அரி/ நீ/ செந்த/ ஜேரி/
நமன்/ பகைவன்/ உனது/ அண்மை/ அடைந்து

ஹனுமந்துடை3/ கொலுவ லேதா3/ (எ)
அனுமனாகி/ சேவிக்கவில்லையா/


சரணம்
சரணம் 1
ஸே1ஷுடு3/ ஸி1வுனிகி/ பூ4ஷுடு3/ லக்ஷ்மண/
சேடன்/ சிவனுக்கு/ அணிகலன்/ இலக்குவனின்/

வேஷியை/ கொலுவ லேதா3/ (எ)
வேடமணிந்து/ சேவிக்கவில்லையா/


சரணம் 2
ஸி1ஷ்டுடு3/ மௌனி/ வரிஷ்டு2டு3/ கொ3ப்ப/
அறிஞன்/ முனிவர்களில்/ சிறந்தோன்/ உயர்/

வஸிஷ்டு2டு3/ ஹிதுடு3கா3/ லேதா3/ (எ)
வசிட்டன்/ நல்லதுரைப்போனாக/ இல்லையா/


சரணம் 3
நர/ வர/ நீகை/ ஸுர க3ணமுலு/
மனிதரில்/ உத்தமனே/ உனக்காக/ வானோர்கள்/

வானருலை/ கொலுவக3 லேதா3/ (எ)
வானரராகி/ சேவிக்கவில்லையா/


சரணம் 4
ஆக3ம/-உக்தமகு3/ நீ/ கு3ணமுலு/
ஆகமங்கள்/ உரைக்கும்/ உனது/ குணங்களை/

ஸ்ரீ த்யாக3ராஜு/ பாட33 லேதா3/ (எ)
ஸ்ரீ தியாகராசன்/ பாடவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செந்த - சிந்த : சில புத்தகங்களில் 'சிந்த' என்று ஏற்று, 'நினைவு' (உனது நினைவினை விடேன்) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அனுபல்லவியிலும், சரணங்கள் 1 - 3-லும், ராமனின் அண்மையிலிருந்து சேவை செய்வது பற்றியே கூறப்பட்டுள்ளது. எனவே, 'செந்த' தான் பொருத்தமாகும். மேலும், எதுகை மோனை (ப்ராஸ-அனுப்ராஸ) முறையிலும் 'செந்த' பொருந்தும்.

2 - விடு3வ ஜால ஸ்ரீ ராம - விடு3வ ஜால

7 - கொலுவக3 - கொலுவ

Top

மேற்கோள்கள்
3 - அந்தகாரி ஹனுமந்துடை3 - 'ஆட3 மோடி33லதே3' என்ற கிருதியில், அனுமனை, 'சிவனின் அம்சம்' (ஸ1ங்கராம்ஸு1டை3) என்று விவரிக்கின்றார். இங்கு, சிவனே அனுமனாக வந்ததாகக் கூறுகிறார். அனுமனுக்கு, அந்த பெயர் ஏன் வந்தது என்றும், அவன் எங்ஙனம் 'சிவனின் அம்சம்' என்று கூறப்படுகின்றான் என்பதனை அனுமனின் கதையினில் காணவும்.

6 - ஸுர க3ணமுலு வானருலை - வானோர்கள் வானரர்களாகி - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17 காணவும்.

Top

விளக்கம்
4 - ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 - சேடன், விஷ்ணுவுக்கு படுக்கையாகவும். சிவனுக்கு அணிகலனாகவும், உமைக்கு விரல் மோதிரமாகவும், விநாயகருக்கு கேயூரமாகவும் கூறப்படும்.

5 - ஹிதுடு3 - நல்லதுரைப்போன் - புரோகிதர் என்றும் கொள்ளலாம்

நமன் பகைவன் - சிவன்

Top


Updated on 11 Apr 2009

Friday, April 10, 2009

தியாகராஜ கிருதி - உண்டே3தி3 ராமுடு3 - ராகம் ஹரி காம்போ4ஜி - Undedi Ramudu - Raga Hari Kambhoji

பல்லவி
1உண்டே3தி3 ராமுடொ3கடு3
ஊரக செடி3 போகு மனஸா

அனுபல்லவி
சண்ட3 2மார்தாண்ட3 மத்4
மண்ட3லமுனனு
செலங்கு3சு(னுண்டே3தி3)

சரணம்
தாமஸாதி3 கு3ண ரஹிதுடு3
4ர்மாத்முடு3 3ஸர்வ-ஸமுடு3
க்ஷேம-கருடு3 த்யாக3ராஜ
சித்த ஹிதுடு3 ஜக3மு நிண்டி3(யுண்டே3தி3)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • (மெய்ப்பொருளாக) இருப்பவன் இராமன் ஒருவனே;

  • வெஞ்சுடர்க் கதிரோனின் நடு மண்டலத்தினில் திகழ்ந்துகொண்டிருப்பவன் இராமன் ஒருவனே;

  • உலகெல்லாம் நிறைந்திருப்பவன் இராமன் ஒருவனே.

    • தாமதம் முதலான குணங்களற்றவன்;

    • அறவடிவினன்;

    • யாவர்க்கும் பொதுவானவன்;

    • நலமளிப்பவன்;

    • தியாகராசனின் சித்தத்திற்கு இனியவன்.

வீணாக கெட்டுப் போகாதே.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உண்டே3தி3/ ராமுடு3/-ஒகடு3/
(மெய்ப்பொருளாக) இருப்பவன்/ இராமன்/ ஒருவனே/

ஊரக/ செடி3/ போகு/ மனஸா/
வீணாக/ கெட்டு/ போகாதே/ மனமே/


அனுபல்லவி
சண்ட3/ மார்தாண்ட3/ மத்4ய/
வெஞ்சுடர்/ கதிரோனின்/ நடு/

மண்ட3லமுனனு/ செலங்கு3சுனு/-(உண்டே3தி3)
மண்டலத்தினில்/ திகழ்ந்துகொண்டு/ இருப்பவன்...


சரணம்
தாமஸ/-ஆதி3/ கு3ண/ ரஹிதுடு3/
தாமதம்/ முதலான/ குணங்கள்/ அற்றவன்;

4ர்மாத்முடு3/ ஸர்வ/-ஸமுடு3/
அறவடிவினன்/ யாவர்க்கும்/ பொதுவானவன்/

க்ஷேம/-கருடு3/ த்யாக3ராஜ/
நலம்/ அளிப்பவன்/ தியாகராசனின்/

சித்த/ ஹிதுடு3/ ஜக3மு/ நிண்டி3-/(உண்டே3தி3)
சித்தத்திற்கு/ இனியவன்/ உலகெல்லாம்/ நிறைந்து/ இருப்பவன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3- ஸர்வ-ஸமுடு3 - ஸர்வஸ்வமுடு3

Top

மேற்கோள்கள்
2 - மார்தாண்ட3 மத்4ய மண்ட3லமுனனு - பாகவத புராணம், 5-வது புத்தகம், அத்தியாயம் 20, (செய்யுள் 43 -46) நோக்கவும்.

சிவனுக்கும் 'மார்தாண்ட3 பை4ரவ' என்று பெயருண்டு.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில், லலிதா மஹா த்ரிபுர ஸுந்த3ரிக்கு, 'மார்தாண்ட3 பை4ரவாராத்4ய' (785) என்று பெயர்.

Top

விளக்கம்
1 - உண்டே3தி3 - இருப்பது - பல்லவியில் இச்சொல் தனியாக உள்ளது. இவ்விடத்தில் இச்சொல் 'ஸத்-சித்-ஆனந்தம்' எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தினில் 'ஸத்' எனப்படும் 'மெய்ப்பொருளினை'க் குறிக்கும்.

3 - ஸர்வ-ஸமுடு3 - யாவர்க்கும் பொதுவானவன் - நண்பன், பகைவன் என்ற பாகுபாடற்ற மனநிலையை உடையவன். ஸௌந்தரிய லஹரியில், 57-வது செய்யுளில், ஆதி சங்கரர், அம்மையின் அருளுக்கு உவமை கூறுகையில், 'காட்டிலும், மாளிகையிலும் சமமாக குளிர்ந்த கிரணங்களைச் சிந்தும் மதி'யென்கின்றார். இச்செய்யுளுக்கு காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

வெஞ்சுடர்க் கதிரோன் - பகலவன்
தாமதம் - முக்குணங்களிலொன்று
சித்தம் - உள்ளம் அல்லது அறிவு

Top


Updated on 10 Apr 2009