Monday, November 22, 2010

தியாகராஜ கிருதி - துலஸீ த3ளமுலசே - ராகம் மாயாமாளவ கௌ3ள - Tulasi Dalamulace - Raga Mayamalava Gaula

பல்லவி
துலஸீ த3ளமுலசே ஸந்தோஷமுகா3 பூஜிந்து

அனுபல்லவி
பலுமாரு சிர காலமு பரமாத்முனி பாத3முலனு (து)

சரணம்
ஸரஸீருஹ புன்னாக3 சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா ஸுக3ந்த4 ராஜ ஸுமமுல்
4ரனிவியொக பர்யாயமு த4ர்மாத்முனி ஸாகேத
புர வாஸுனி ஸ்ரீ ராமுனி வர த்யாக3ராஜ நுதுனி (து)


பொருள் - சுருக்கம்
  • துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.

    • பன்முறை, நீண்ட காலம், பரம்பொருளின் திருவடிகளைத்

  • துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.

    • தாமரை, புன்னை, செண்பகம், பாதிரி, மருதாணி, அரளி, மல்லிகை - இச்சிறந்த நறுமண மலர்களால்,
    • அறவுருவினை, சாகேத நகருறைவோனை, இராமனை, உயர் தியாகராசன் போற்றுவோனை,

  • புவியில், இத்தருணம், துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
துலஸீ/ த3ளமுலசே/ ஸந்தோஷமுகா3/ பூஜிந்து/
துழாய்/ தழைகளினால்/ களிப்புடன்/ வழிபடுவேனே/


அனுபல்லவி
பலுமாரு/ சிர/ காலமு/ பரமாத்முனி/ பாத3முலனு/ (து)
பன்முறை/ நீண்ட/ காலம்/ பரம்பொருளின்/ திருவடிகளை/ துழாய்...


சரணம்
ஸரஸீருஹ/ புன்னாக3/ சம்பக/ பாடல/ குரவக/
தாமரை/ புன்னை/ செண்பகம்/ பாதிரி/ மருதாணி/

கரவீர/ மல்லிகா/ ஸுக3ந்த4/ ராஜ/ ஸுமமுல்/
அரளி/ மல்லிகை/ நறுமண/ சிறந்த/ மலர்களால்/

4ரனு/-இவி/-ஒக/ பர்யாயமு/ த4ர்மாத்முனி/ ஸாகேத/
புவியில்/ இவை/ இத்தருணம்/ அறவுருவினை/ சாகேத/

புர/ வாஸுனி/ ஸ்ரீ ராமுனி/ வர/ த்யாக3ராஜ/ நுதுனி/ (து)
நகர்/ உறைவோனை/ ஸ்ரீ ராமனை/ உயர்/ தியாகராசன்/ போற்றுவோனை/ துழாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இத்தருணம் - இப்பிறவியினிலென
சாகேத நகர் - அயோத்தி நகர்
உயர் - இறைவனைக் குறிக்கும்.

Top


Updated on 22 Nov 2010

No comments: