Thursday, July 1, 2010

தியாகராஜ கிருதி - கருண ஜூட3வய்ய - ராகம் ஸாரங்க - Karuna Judavayya - Raga Saranga

பல்லவி
கருண 1ஜூட3வய்ய மாயய்ய காவேடி ரங்க3ய்ய

அனுபல்லவி
பரம புருஷ வினு மா பாலி 2பெனு த4னமா
வரத3 நலுகு3ரிலோ வரமொஸகி3 கரமிடி3 (க)

சரணம்
சேரடே3ஸி கனுலசே செலங்கு34
3நாச்சாருலதோனு மரி ஸத்34க்துலதோ
4ஆள்வாருலதோ நீவு வர நைவேத்3யமுல-
நாரகி3ஞ்சு வேளல 5ஹரி 6த்யாக3ராஜுனி கரமிடி3 (க)


பொருள் - சுருக்கம்
  • எமதய்யா! காவேரி அரங்கய்யா!
  • பரம்பொருளே! எமது பங்கிற் பெருஞ்செல்வமே! வரதா!
  • அரி!

  • கேள்.
  • கருணை காட்டுவாயய்யா.
  • நால்வரில், வரமளித்து, கைப்பற்றிக் கருணை காட்டுவாயய்யா.
    • அகன்ற கண்களுடன் விளங்கும் இரு நாச்சியார்களுடன்,
    • மேலும் நற்றொண்டர்களுடனும், ஆழ்வார்களுடனும்,
    • நீ உயர் படையல்களினை ஏற்றருளும் வேளையில்,

  • தியாகராசனை, கைப்பற்றி கருணை காட்டுவாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அய்ய/ மா/-அய்ய/ காவேடி/ ரங்க3ய்ய/
கருணை/ காட்டுவாய்/ அய்யா/ எமது/ அய்யா/ காவேரி/ அரங்கய்யா/


அனுபல்லவி
பரம புருஷ/ வினு/ மா/ பாலி/ பெனு/ த4னமா/
பரம்பொருளே/ கேள்/ எமது/ பங்கிற்/ பெருஞ்/ செல்வமே/

வரத3/ நலுகு3ரிலோ/ வரமு/-ஒஸகி3/ கரமு/-இடி3/ (க)
வரதா/ நால்வரில்/ வரம்/ அளித்து/ கை/ பற்றி/ கருணை...


சரணம்
சேரடே3ஸி/ கனுலசே/ செலங்கு3/-உப4ய/
அகன்ற/ கண்களுடன்/ விளங்கும்/ இரு/

நாச்சாருலதோனு/ மரி/ ஸத்3-ப4க்துலதோ/
நாச்சியார்களுடன்/ மேலும்/ நற்றொண்டர்களுடனும்/

ஆள்வாருலதோ/ நீவு/ வர/ நைவேத்3யமுலனு/
ஆழ்வார்களுடனும்/ நீ/ உயர்/ படையல்களினை/

ஆரகி3ஞ்சு/ வேளல/ ஹரி/ த்யாக3ராஜுனி/ கரமு/-இடி3/ (க)
ஏற்றருளும்/ வேளையில்/ அரி/ தியாகராசனை/ கை/ பற்றி/ கருணை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜூட3வய்ய - ஜூடு3மய்ய.

2 - பெனு த4னமா - பென்னி தா4னமா : 'பென்னி தா4னமா' என்ற சொல் தவறாகும்.

6 - த்யாக3ராஜுனி கரமிடி3 - த்யாக3ராஜுனிபைனி.

Top

மேற்கோள்கள்
3 - நாச்சாருலதோனு - நாச்சியார் - இறைவனின் துணைவி - இரு நாச்சியார்கள் - இலக்குமி, பூதேவி

4 - ஆள்வாருலதோ - ஆழ்வார்களுடன் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் - ஆழ்வார்களின் விவரங்கள்

Top

விளக்கம்
5 - ஹரி - அரி! - இவ்விடத்தில், 'கேட்பதற்கு மன்னிப்பாய்' எனப் பொருள் படும்

நால்வரில் - நாலுபேர் அறிய

Top


Updated on 01 Jul 2010

No comments: