Tuesday, April 20, 2010

தியாகராஜ கிருதி - ஸுந்த3ர-தர தே3ஹம் - ராகம் பந்தவராளி - Sundaratara Deham - Raga Pantuvarali

பல்லவி
ஸுந்த3ர-தர தே3ஹம் வந்தே3ऽஹம் ராமம்

அனுபல்லவி
குந்த3 ரத3னம் ஆப்த 1குமுத31ஸா1ங்கம்
கந்த3ர்ப ஸ1த கோடி காந்திம் அதி நிஷ்களங்கம் (ஸு)

சரணம்
சரணம் 1
பதித ஜன பாவனம் பரிபாலித பு4வனம்
2ஸ்1ருதி நிகர ஸத3னம் ஸு14 கர வத3னம்
யதி வர ஜீவனம் இப4 ராஜ பாலனம்
தி3திஜ மத33மனம் தீ3ன ஜனாவனம் (ஸு)


சரணம் 2
நவ 3தூ3ர்வ3ள நீலம் நந்தி3தாமர ஜாலம்
4அவனத ஸுர பாலம் அத்3பு4த லீலம்
4வ ப4ய ஹரண காலம் ப4க்த ஜன வத்ஸலம்
ஸி1வம் அத்3வைதம் அமலம் ஸ்ரீமத்-கனகாப4 சேலம் (ஸு)


சரணம் 3
ஆக3ம ஸஞ்சாரம் அகி2ல லோகாதா4ரம்
வாக3தி4ப குமாரம் வர வீர வீரம்
ராகா3தி3 ஸம்ஹாரம் ராக4வம் உதா3ரம்
த்யாக3ராஜ ஹ்ரு2த்-ஸஞ்சாரம் காருண்ய பாராவாரம் (ஸு)


பொருள் - சுருக்கம்
  • எழில்மிகு உடலோனை, இராமனை வணங்குகின்றேன்

    • முல்லைப் பற்களோனை,
    • நண்பருக்கு, குமுத-முயல் சின்னத்தோனை,
    • மதனர்கள் நூறு கோடி ஒளியுடையோனை,
    • சிறிதும் களங்கமற்றோனை,

    • வீழ்ந்தோரை மேம்படுத்துவோனை,
    • புவனத்தைப் பேணுவோனை,
    • மறைகளின் சாரத்துறைவோனை,
    • நன்மையருளும் வதனத்தோனை,
    • உயர் இருடிகளின் வாழ்வினை,
    • கரியரசனைக் காத்தோனை,
    • அரக்கர்களின் செருக்கினை யழித்தோனை,
    • எளியோரைக் காப்போனை,

    • இளம் அறுகு தள நீல வண்ணனை,
    • வானோருக்கு மகிழ்வூட்டுவோனை,
    • பணிவோர், வானோரைக் காப்போனை,
    • அற்புதத் திருவிளையாடல்களோனை,
    • பிறவி அச்சம் நீக்கும் நமனை,
    • தொண்டரிடம் கனிவானவனை,
    • மங்களமானவனை,
    • இரண்டற்றோனை,
    • மலமற்றோனை,
    • உயர் பொன்னிற ஆடைகளோனை,

    • ஆகமங்களில் உலவுவோனை,
    • பல்லுலகிற்கும் ஆதாரமானவனை,
    • நாவரசி கேள்வனை மைந்தனாயுடையோனை,
    • உயர் வீராதி வீரனை,
    • இச்சை முதலானவற்றினை யழித்தோனை,
    • உதார குண இராகவனை,
    • தியாகராசனின் இதயத்தினில் உலவுவோனை,
    • கருணைக் கடலினை,

  • எழில்மிகு உடலோனை, இராமனை வணங்குகின்றேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ர-தர/ தே3ஹம்/ வந்தே3-அஹம்/ ராமம்/
எழில்மிகு/ உடலோனை/ வணங்குகின்றேன்/ இராமனை/


அனுபல்லவி
குந்த3/ ரத3னம்/ ஆப்த/ குமுத3/ ஸ11/-அங்கம்/
முல்லை/ பற்களோனை/ நண்பருக்கு/ குமுத/-முயல்/ சின்னத்தோனை/

கந்த3ர்ப/ ஸ1த/ கோடி/ காந்திம்/ அதி/ நிஷ்களங்கம்/ (ஸு)
மதனர்கள்/ நூறு/ கோடி/ ஒளியுடையோனை/ சிறிதும்/ களங்கமற்றோனை/ எழில்மிகு...


சரணம்
சரணம் 1
பதித ஜன/ பாவனம்/ பரிபாலித/ பு4வனம்/
வீழ்ந்தோரை/ மேம்படுத்துவோனை/ பேணுவோனை/ புவனத்தை/

ஸ்1ருதி/ நிகர/ ஸத3னம்/ ஸு14/ கர/ வத3னம்/
மறைகளின்/ சாரத்து/ உறைவோனை/ நன்மை/ அருளும்/ வதனத்தோனை/

யதி/ வர/ ஜீவனம்/ இப4/ ராஜ/ பாலனம்/
இருடிகளின்/ உயர்/ வாழ்வினை/ கரி/ அரசனை/ காத்தோனை/

தி3திஜ/ மத3/ த3மனம்/ தீ3ன ஜன/-அவனம்/ (ஸு)
அரக்கர்களின்/ செருக்கினை/ யழித்தோனை/ எளியோரை/ காப்போனை/ எழில்மிகு...


சரணம் 2
நவ/ தூ3ர்வ/ த3ள/ நீலம்/ நந்தி3த/-அமர ஜாலம்/
இளம்/ அறுகு/ தள/ நீல/ வண்ணனை/ மகிழ்வூட்டுவோனை/ வானோருக்கு/

அவனத/ ஸுர/ பாலம்/ அத்3பு4த/ லீலம்/
பணிவோர்/ வானோரை/ காப்போனை/ அற்புத/ திருவிளையாடல்களோனை/

4வ/ ப4ய/ ஹரண/ காலம்/ ப4க்த ஜன/ வத்ஸலம்/
பிறவி/ அச்சம்/ நீக்கும்/ நமனை/ தொண்டரிடம்/ கனிவானவனை/

ஸி1வம்/ அத்3வைதம்/ அமலம்/ ஸ்ரீமத்/-கனக/-ஆப4/ சேலம்/ (ஸு)
மங்களமானவனை/ இரண்டற்றோனை/ மலமற்றோனை/ உயர்/ பொன்/ நிற/ ஆடைகளோனை/ எழில்மிகு...


சரணம் 3
ஆக3ம/ ஸஞ்சாரம்/ அகி2ல லோக/-ஆதா4ரம்/
ஆகமங்களில்/ உலவுவோனை/ பல்லுலகிற்கும்/ ஆதாரமானவனை/

வாக்3/-அதி4ப/ குமாரம்/ வர/ வீர/ வீரம்/
நாவரசி/ கேள்வனை/ மைந்தனாயுடையோனை/ உயர்/ வீராதி/ வீரனை/

ராக3/-ஆதி3/ ஸம்ஹாரம்/ ராக4வம்/ உதா3ரம்/
இச்சை/ முதலானவற்றினை/ அழித்தோனை/ இராகவனை/ உதார குண/

த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸஞ்சாரம்/ காருண்ய/ பாராவாரம்/ (ஸு)
தியாகராசனின்/ இதயத்தினில்/ உலவுவோனை/ கருணை/ கடலினை/ எழில்மிகு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'காம வர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - குமுத31ஸா1ங்கம் - முயல் சின்னத்தோன் - மதி - குமுத-முயல் சின்னத்தோன் - குமுதத்தினை மலரச்செய்யும் மதியென.

2 - ஸ்1ருதி நிகர ஸத3னம் - 'நிகர' என்ற சொல் பன்மையினைக் குறிக்கும். எனவே, இதற்கு, 'மறைகளில் உறைவோன்' என்றும் பொருள் கொள்ளலாம்.

3 - தூ3ர்வ - அறுகு - அறுகு தளம் - இளம் அறுகம்புல்.

Top

4 - அவனத ஸுர பாலம் - 'அவனத' என்பதனை, அடுத்துவரும், 'ஸுர' என்பதற்கு அடைமொழியாகக் கொண்டு, 'பணியும் வானோரைக் காப்போன்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், அத்தகைய பொருள் உகந்ததாகத் தோன்றவில்லை.

இரண்டற்றோன் - அத்துவைதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனல்.
உயர் பொன்னிற ஆடை - பீதாம்பரம்.
நாவரசி கேள்வன் - பிரமன்

Top


Updated on 20 Apr 2010

3 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
பதம் பிரித்துத் தாங்கள் பொருள் கொடுத்துள்ள போதும் சில பகுதிகளைப் புருந்து கொள்வது எளிதாக இல்லை.
(எ.டு) ”ஆப்த/ குமுத3/ ஸ1ஸ1/-அங்கம்”.
நண்பர்கள், நீலாம்பல், முயல், சின்னம் எனும் நான்கு சொற்கள் தானே உள்ளன. இதற்கு ‘நண்பர்களெனும் குமுதமலர்களுக்கு முயலைச் சின்னமாகக் கொண்டவன் (சந்திரன்) போன்றவனே என்று பொருள் கொள்ளவேண்டுமா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
உங்களுடைய ஐயத்தினை நான் விளக்கப் பகுதியில் (comments) விளக்கியுள்ளேன். நீங்கள் கூறுவதற்கும், நான் கூறுவதற்கும் சொல் வேறுபாடிருந்தாலும் பொருள் வேறுபாடில்லை.

வணக்கம்
கோவிந்தன்.

Govindaswamy said...
This comment has been removed by a blog administrator.