Saturday, December 19, 2009

தியாகராஜ கிருதி - வின ராதா3 - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Vina Raada - Raga Deva Gandhari

பல்லவி
வின ராதா3 1நா மனவி

அனுபல்லவி
2கனகாங்க3 காவேடி ரங்க3 ஸ்ரீ
காந்த காந்தலெல்ல காமிஞ்சி 3பிலிசிதே (வி)

சரணம்
சரணம் 1
தேஜினெக்கி பா33 தெருவுன ராக
4ராஜ ஸதுலு ஜூசி ரம்மனி 3பிலிசிதே (வி)


சரணம் 2
பா43தே4ய வைபோ43 ரங்க3 ஸ்ரீ
த்யாக3ராஜ நுத தருணுலு 3பிலிசிதே (வி)


பொருள் - சுருக்கம்
பொன்னங்கத்தோனே! காவேரியின் அரங்கா! இலக்குமி மணாளா! எமது பேறாகிய, பெருஞ்சிறப்புடை, அரங்கா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • கேளலாகாதா, எனது விண்ணப்பத்தினை?
  • பெண்கள் யாவரும், இச்சித்து அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?
  • குதிரையேறி, அழகாக, தெருவினில் (நீ) வர, அரச மடந்தையர் கண்டு, வாருமென்று அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?
  • வனிதையர் அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வின/ ராதா3/ நா/ மனவி/
கேளல்/ ஆகாதா/ எனது/ விண்ணப்பத்தினை/


அனுபல்லவி
கனக/-அங்க3/ காவேடி/ ரங்க3/ ஸ்ரீ/
பொன்/ அங்கத்தோனே/ காவேரியின்/ அரங்கா/ இலக்குமி/

காந்த/ காந்தலு/-எல்ல/ காமிஞ்சி/ பிலிசிதே/ (வி)
மணாளா/ பெண்கள்/ யாவரும்/ இச்சித்து/ அழைத்தால்/ கேளலாகாதா...


சரணம்
சரணம் 1
தேஜினி/-எக்கி/ பா33/ தெருவுன/ ராக/
குதிரை/ ஏறி/ அழகாக/ தெருவினில்/ (நீ) வர/

ராஜ/ ஸதுலு/ ஜூசி/ ரம்மு/-அனி/ பிலிசிதே/ (வி)
அரச/ மடந்தையர்/ கண்டு/ வாரும்/ என்று/ அழைத்தால்/ கேளலாகாதா...


சரணம் 2
பா43தே4ய/ வைபோ43/ ரங்க3/ ஸ்ரீ/
எமது/ பேறாகிய/ பெருஞ்சிறப்புடை/ அரங்கா/ ஸ்ரீ/

த்யாக3ராஜ/ நுத/ தருணுலு/ பிலிசிதே/ (வி)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வனிதையர்/ அழைத்தால்/ கேளலாகாதா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனவி - மனவினி.

சில புத்தகங்களில், அனுபல்லவியை முதலாவது சரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த புத்தகங்களில் மூன்று சரணங்கள் உள்ளன.

3 - பிலிசிதே - பிலசிதே : 'பிலிசிதே' என்பதே சரியான சொல் என்று கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நா மனவி - 'நா' (எனது) என்ற சொல் ஒருமையாகும். ஆனால், அனுபல்லவியும் சரணங்களும் பன்மையில் உள்ளன. எனவே, அனுபல்லவி மற்றும் சரணங்களை பல்லவியுடன் இணைக்கையில், பன்மையில் 'எமது' என்று கொள்ளப்பட்டது.

2 - கனகாங்க3 - பொன்னங்கத்தோனே. முதலாவது சரணத்தினில், 'குதிரையேறி தெருவினில் வர' என்று தியாகராஜர் கூறுகின்றார். எனவே, இச்சொல் (பொன்னங்கத்தோனே) உற்சவ மூர்த்தியினைக் குறிக்கும்.

4 - ராஜ ஸதுலு - அரச மடந்தையர். இந்த கீர்த்தனை 'நாயகி பாவனை'யில் உள்ளது. எனவே, இச்சொல் (அரச மடந்தையர்), பெரும் தொண்டர்களை (பாகவதர்களை) குறிக்கும். அங்ஙனமே, அனுபல்லவி மற்றும் 2-வது சரணத்தினில், 'மடந்தையர்' மற்றும் 'வனிதையர்' என்ற சொற்களும் தொண்டர்களையே குறிக்கும்.

Top


Updated on 19 Dec 2009

No comments: