Tuesday, November 24, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீப ப்ரிய - ராகம் அடா2ணா - Sripa Priya - Raga Athana

பல்லவி
ஸ்ரீப ப்ரிய 1ஸங்கீ3தோபாஸன
சேயவே ஓ மனஸா

அனுபல்லவி
தாபஸ ஜன மானஸ த4னமு 2த்ரி-
தாப
ரஹித ஸப்த ஸ்வர சாரி (ஸ்ரீ)

சரணம்
3ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு
மஞ்ஜுளமகு3னவதாரமுலெத்தி
4மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு
மஹிம தெலியு த்யாக3ராஜ நுதுட3கு3 (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, மாமணாளனுக்கு விருப்பமான இசை வழிபாட்டினைச் செய்வாய்;

  • தவசிகளின் உள்ளச் செல்வமவன்; முவ்வெம்மைகளற்றவன்; ஏழு சுரங்களிலுறைவோன்.


  • களிப்பூட்டும் இராகங்கள், எழிலான வடிவங்களெடுத்து, சதங்கைகள் கலீரென, நடமிடும் பெருமை, தியாகராசன் அறிவான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ப/ ப்ரிய/ ஸங்கீ3த/-உபாஸன/
மா/ மணாளனுக்கு/ விருப்பமான/ இசை/ வழிபாட்டினை/

சேயவே/ ஓ மனஸா/
செய்வாய்/ ஏ மனமே/


அனுபல்லவி
தாபஸ ஜன/ மானஸ/ த4னமு/
தவசிகளின்/ உள்ள/ செல்வம் (அவன்)/

த்ரி-தாப/ ரஹித/ ஸப்த/ ஸ்வர/ சாரி/ (ஸ்ரீ)
முவ்வெம்மைகள்/ அற்ற/ ஏழு/ சுரங்களில்/ உறையும்/ மாமணாளனுக்கு...


சரணம்
ரஞ்ஜிம்ப ஜேஸெடு3/ ராக3ம்பு3லு/
களிப்பூட்டும்/ இராகங்கள்/

மஞ்ஜுளமகு3/-அவதாரமுலு/-எத்தி/
எழிலான/ வடிவங்கள்/ எடுத்து/

மஞ்ஜீரமு/ க4ல்லனி/ நடிஞ்சு/
சதங்கைகள்/ கலீரென/ நடமிடும்/

மஹிம/ தெலியு/ த்யாக3ராஜ/ நுதுட3கு3/ (ஸ்ரீ)
பெருமை/ அறியும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ மாமணாளனுக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஸங்கீ3தோபாஸன - நாதோபாஸனை என்றும் அழைக்கப்படும் இசை வழிபாடு. இது குறித்து மேற்கொண்டு விவரங்கள் அறிய நோக்கவும் - நாதோபாஸன-1; நாதோபாஸன-2

2 - த்ரி-தாப - முவ்வெம்மைகள் - அத்தியாத்துமிகம், ஆதி-தெய்வீகம், ஆதி-பௌதீகம்.

3 - ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு - களிப்பூட்டும் இராகங்கள் - 'ரஞ்ஜயதி இதி ராக3:' (களிப்பூட்டுவது இராகமாகும்) என்பது பழங்காலத்திலிருந்து வழக்கிலுள்ள பொருளாகும். இதனை, தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார். இராகம் பற்றிய விளக்கங்கள் அறிய - இராகம்-1; இராகம்-2

Top

விளக்கம்
1 - உபாஸன - இதற்கு 'வழிபாடு' என்ற சொல்லுக்கும் மிகுதியான பொருளாகும்.

4 - மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு - சதங்கைகள் கலீரென நடிக்கும். அனைவரும் பங்கேற்கும் பாகவத வழிபாட்டு முறையினைக் குறிக்கும்; இன்றைய கச்சேரி முறைக்கு அப்பாற்பட்டதாகும்.

Top


Updated on 24 Nov 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு - சதங்கைகள் கலீரென நடிக்கும்- சத(ல)ங்கைகள் கலீரென (ஒலிக்க) என்பது பொருள். இதற்கு இணையான தெலுங்குச் சொல் ‘க4ல்லென’ அல்லவா? ‘க்ல்லனி’ என்பது சலங்கைகள் கலீரென நடிக்கும் என்று பொருள் தரும். க4ல்லென என்பது க4ல்லனி என்று மறுவிவிட்டதா?
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்கு அகராதியின்படி 'க4ல்லுமனி' என்பது சரியான சொல்லாகும். அதனைத்தான் தியாகராஜர் 'க4ல்லனி' என்று சுருக்கிக் கூறுகின்றார் என்று கருதுகின்றேன்.

எனக்குத் தெரிந்தவரை, 'க4ல்லென' என்பது தவறாகும்.

வணக்கம்
கோவிந்தன்.