Thursday, October 15, 2009

தியாகராஜ கிருதி - சூதாமு ராரே - ராகம் ஆரபி4 - Chutaamu Raare - Raga Arabhi

பல்லவி
1சூதாமு ராரே ஸு-த3துலார ரங்க3 பதினி

அனுபல்லவி
2ஸீதா பதி பூஜ்யுட3 ஸ்1ரு2ங்கா3ர ஸே12ருட3ட (சூ)

சரணம்
சரணம் 1
ஸரிக3ஞ்சு ஸா1லுவட 3சௌகட்ல போகு3லட
4பருவம்பு ப்ராயமட பரமாத்முட3ட ரங்க3னி (சூ)


சரணம் 2
முக2 நிர்ஜித சந்த்3ருட3ட முத்3து3 மாடலாடு3னட
ஸுக2மொஸங்கி3 ப்3ரோசுனட ஸுந்த3ராங்கு33ட ரங்க3னி (சூ)


சரணம் 3
ஆக3ம ஸஞ்சாருட3ட அகி2ல ஜக3த்பாலுட3
த்யாக3ராஜ ஸன்னுதுட3ட தருணுலார ரங்க3 பதினி (சூ)


பொருள் - சுருக்கம்
அழகிய பற்களுடைய மடந்தையரே!
  • காண்போம் வாரீர், அரங்க நாதனை!

    • சீதாபதியினால் தொழப்பெற்றவனாம்;

    • எழிலின் சிகரமாம்;

    • சரிகைக்கரை சால்வையாம்;

    • முத்துக் கடுக்கன்களாம்;

    • பருவ வயதாம்;

    • பரம்பொருளாம்;

    • முகம் வெல்லுமாம் மதியினையும்;

    • முத்தாகப் பேசுவானாம்;

    • சுகமளித்துக் காப்பானாம்;

    • சுந்தர அங்கங்களோனாம்;

    • ஆகமத்துள்ளுறைவோனாம்;

    • அனைத்துலகைக் காப்போனாம்;

    • தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்றவனாம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சூதாமு/ ராரே/ ஸு-த3துலார/ ரங்க3/ பதினி/
காண்போம்/ வாரீர்/ அழகிய பற்களுடையோரே/ அரங்க/ நாதனை/


அனுபல்லவி
ஸீதா/ பதி/ பூஜ்யுட3ட/ ஸ்1ரு2ங்கா3ர/ ஸே12ருட3ட/ (சூ)
சீதா/ பதியினால்/ தொழப்பெற்றவனாம்/ எழிலின்/ சிகரமாம்/


சரணம்
சரணம் 1
ஸரிக3/-அஞ்சு/ ஸா1லுவட/ சௌகட்ல/ போகு3லட/
சரிகை/ கரை/ சால்வையாம்/ முத்து/ கடுக்கன்களாம்/

பருவம்பு/ ப்ராயமட/ பரமாத்முட3ட/ ரங்க3னி/ (சூ)
பருவ/ வயதாம்/ பரம்பொருளாம்/ அரங்கனை/ காண்போம்...


சரணம் 2
முக2/ நிர்ஜித/ சந்த்3ருட3ட/ முத்3து3/ மாடலு-ஆடு3னட/
முகம்/ வெல்லுமாம்/ மதியினையும்/ முத்தாக/ பேசுவானாம்/

ஸுக2மு/-ஒஸங்கி3/ ப்3ரோசுனட/ ஸுந்த3ர/-அங்கு33ட/ ரங்க3னி/ (சூ)
சுகம்/ அளித்து/ காப்பானாம்/ சுந்தர/ அங்கங்களோனாம்/ அரங்கனை/ காண்போம்...


சரணம் 3
ஆக3ம/ ஸஞ்சாருட3ட/ அகி2ல/ ஜக3த்/-பாலுட3ட/
ஆகமத்து/ உள்ளுறைவோனாம்/ அனைத்துலகை/ காப்போனாம்/

த்யாக3ராஜ/ ஸன்னுதுட3ட/ தருணுலார/ ரங்க3/ பதினி/ (சூ)
தியாகராசனால்/ சிறக்கப் போற்றப்பெற்றவனாம்/ மடந்தையரே/ அரங்க/ நாதனை/ காண்போம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சூதாமு - ஜூதாமு.

Top

மேற்கோள்கள்
2 - ஸீதா பதி பூஜ்யுட3 - சீதா பதியினால் தொழப்பெற்றவனாம் - திருவரங்கத் தல புராணம் நோக்கவும்.

4 - பருவம்பு ப்ராயமட - பருவ வயதாம் - லலிதா ஸஹஸ்ர நாமம் 430 - நித்ய யௌவனா - என்றும் இளமையானவளே!

Top

விளக்கம்
3 - சௌகட்ல போகு3லட - நான்கு முத்துக்கள் பதித்த கடுக்கன் - சௌ - நான்கு

அழகிய பற்களுடையோர் - பெண்டிர்
சால்வை - போர்வை

Top


Updated on 16 Oct 2009

No comments: