Thursday, September 24, 2009

தியாகாராஜ கிருதி - ராம ஸீதா ராம - ராகம் ஸ1ங்கராபரணம் - Rama Sita Rama - Raga Sankarabharanam

பல்லவி
1ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம

சரணம்
சரணம் 1
தப்புலென்ன போதே மாகு கொ3ப்பதனமு ராது3 மா-
யப்ப த3ய சேஸி கண்ட்3ல கப்புகொனி பாலிம்பவே (ராம)


சரணம் 2
தா3பு லேக நேனு நீது3 ப்ராபு கோருகொண்டி கானி
ரேபு மாபனுசு தோ3வ ஜூபக ராவய்ய ப்3ரோவ (ராம)


சரணம் 3
நீல வர்ண பாபமுலகாலயமைதினி நாது3
ஜாலி தீர்சி ப4யமு நீகேலயனியாது3கோவே (ராம)


சரணம் 4
வாலாயமுக3 க்ரு2பாலவால ரக்ஷிஞ்சு கனக
சேலயிந்த3ரிலோ நாது3 செயி லாகி3ய்ய ஸமயமு (ராம)


சரணம் 5
இதருலந்து3 மனஸு போது3 வெதலு நீகு தெலிய ராது3
3தியு 2மும்மாடிகி லேது3 க்ஷிதினெவ்வரினி வேட3 போது3 (ராம)


சரணம் 6
ராம ராம நித்ய ஸ1த்ரு பீ43பீ4ம நுத3
காம காம வைரி நுத நாம நா மதி3னி ராவே (ராம)


சரணம் 7
தே3வ தே3வார்சித ஸர்வ ஜீவ ஜீவன
மஹானுபா4வ பா4வஜ ரூப 4ஸ்ரீ-பாவ பாவன ராக4வ (ராம)


சரணம் 8
மாய மாயெட3 5வத்3து3ராத்4யேய த்4யேய விஷயாலேல
ரோயரோயெப்புடு3 தே3வ ராய 6ராயாயீ தே3ஹமு (ராம)


சரணம் 9
ராஜ ராஜ வந்தி3த விராஜ ராஜ ஹரே தி3
ராஜ ராஜ நயன த்யாக3ராஜ ராஜ த31ரத2 (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! சீதாராமா! எமது அய்யனே! நீல வண்ணா! கருணைக் கடலே! பொன் ஆடைகளோனே!

  • என்றுமிருப்போனே! பகைவருக்கு அச்சமே! வல்லோரால் போற்றப் பெற்றோனே! இச்சைகள் அற்றவனே! காமன் பகைவனால் போற்றப் பெற்ற நாமத்தோனே!

  • இறைவா! தேவரால் தொழப்பெற்றோனே! அனைத்துயிர்களின் வாழ்வே! பெருந்தகையே! காமன் (நிகர்) உருவத்தோனே! இலக்குமி மணாளா! புனிதனே! இராகவா!

  • அறியவியலாதவனே! அறியப்படு பொருளே! தேவர் தலைவா!

  • பேரரசர்களால் வணங்கப் பெற்றோனே! கருடன் தலைவா! அரியே! பரிதி, மதிக் கண்களோனே! தியாகராசனின் தலைவனே! தசரதராமா!


    • தவறுகளை யெண்ணப்போனால் எமக்கு மேன்மை வாராது; தயவு செய்து கண்களை மூடிக்கொண்டு காப்பாயய்யா;

    • தஞ்சமின்றி, நானுனது புகல் கோரினேன்; ஆயினும் (ஆகவே) காலை மாலையென போக்குக் காட்டாது வாருமய்யா, காக்க;

    • பாவங்களுக்கு இருப்பிடமானேன்; எனது துயர் தீர்த்து, 'அச்சமுனக்கேன்' என, ஆதரிப்பாயய்யா;

    • தவறாது காப்பாய்; இவர்களிடை எனக்கு கைகொடுக்க சமயமிது;

    • மற்றவர்களிடம் மனது செல்லாது; வேதனையுனக்குத் தெரிய வாராது; கதியென்றுமே கிடையாது; புவியில் எவரை வேண்டப் போவேன்?

    • எனதுள்ளத்தினில் வாராய்; காப்பாய்; மாயைகள் எம்மிடம் வேண்டாமய்யா;


    • விடயங்களை (மனிதர்கள்) ஏனோ வெறுக்கமாட்டார், எவ்வமயமும்? கல்லோ யிவ்வுடல்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா ராம/ ராம/ ராம/ ஸீதா ராம/ ராம/
இராமா/ சீதாராமா/ இராமா/ இராமா/ சீதாராமா/ இராமா/


சரணம்
சரணம் 1
தப்புலு/-என்ன/ போதே/ மாகு/ கொ3ப்பதனமு/ ராது3/ மா/-
தவறுகளை/ எண்ண/ போனால்/ எமக்கு/ மேன்மை/ வாராது/ எமது/

அப்ப/ த3ய/ சேஸி/ கண்ட்3ல/ கப்புகொனி/ பாலிம்பவே/ (ராம)
அய்யனே/ தயவு/ செய்து/ கண்களை/ மூடிக்கொண்டு/ காப்பாயய்யா/


சரணம் 2
தா3பு/ லேக/ நேனு/ நீது3/ ப்ராபு/ கோருகொண்டி/ கானி/
தஞ்சம்/ இன்றி/ நான்/ உனது/ புகல்/ கோரினேன்/ ஆயினும் (ஆகவே)/

ரேபு/ மாபு/-அனுசு/ தோ3வ/ ஜூபக/ ராவய்ய/ ப்3ரோவ/ (ராம)
காலை/ மாலை/ என/ போக்கு/ காட்டாது/ வாருமய்யா/ காக்க/


சரணம் 3
நீல/ வர்ண/ பாபமுலகு/-ஆலயமைதினி/ நாது3/
நீல/ வண்ணா/ பாவங்களுக்கு/ இருப்பிடமானேன்/ எனது/

ஜாலி/ தீர்சி/ ப4யமு/ நீகு/-ஏல/-அனி/-ஆது3கோவே/ (ராம)
துயர்/ தீர்த்து/ 'அச்சம்/ உனக்கு/ ஏன்'/ என/ ஆதரிப்பாயய்யா/


சரணம் 4
வாலாயமுக3/ க்ரு2பா/-ஆலவால/ ரக்ஷிஞ்சு/ கனக/
தவறாது/ கருணை/ கடலே/ காப்பாய்/ பொன்/

சேல/-இந்த3ரிலோ/ நாது3/ செயி லாகு3-இய்ய/ ஸமயமு/ (ராம)
ஆடைகளோனே/ இவர்களிடை/ எனக்கு/ கைகொடுக்க/ சமயம் (இது)/;


சரணம் 5
இதருல-அந்து3/ மனஸு/ போது3/ வெதலு/ நீகு/ தெலிய/ ராது3/
மற்றவர்களிடம்/ மனது/ செல்லாது/ வேதனை/ உனக்கு/ தெரிய/ வாராது/

3தியு/ மும்மாடிகி/ லேது3/ க்ஷிதினி/-எவ்வரினி/ வேட3/ போது3/ (ராம)
கதி/ என்றுமே/ கிடையாது/ புவியில்/ எவரை/ வேண்ட/ போவேன்/


சரணம் 6
ராம/ ராம/ நித்ய/ ஸ1த்ரு/ பீ4ம/ பீ4ம/ நுத/ க3த/
இராமா/ இராமா/ என்றுமிருப்போனே/ பகைவருக்கு/ அச்சமே/ வல்லோரால்/ போற்றப் பெற்றோனே/ அற்றவனே/

காம/ காம/ வைரி/ நுத/ நாம/ நா/ மதி3னி/ ராவே/ (ராம)
இச்சைகள்/ காமன்/ பகைவனால்/ போற்றப் பெற்ற/ நாமத்தோனே/ எனது/ உள்ளத்தினில்/ வாராய்/


சரணம் 7
தே3வ/ தே3வ/-அர்சித/ ஸர்வ/ ஜீவ/ ஜீவன/
இறைவா/ தேவரால்/ தொழப்பெற்றோனே/ அனைத்து/ உயிர்களின்/ வாழ்வே/

மஹானுபா4வ/ பா4வஜ/ ரூப/ ஸ்ரீ/-ப/-அவ/ பாவன/ ராக4வ/ (ராம)
பெருந்தகையே/ காமன் (நிகர்)/ உருவத்தோனே/ இலக்குமி/ மணாளா/ காப்பாய்/ புனிதனே/ இராகவா/


சரணம் 8
மாய/ மாயெட3/ வத்3து3ரா/-அத்4யேய/ த்4யேய/ விஷயால/-ஏல/
மாயைகள்/ எம்மிடம்/ வேண்டாமய்யா/ அறியவியலாதவனே/ அறியப்படு பொருளே/ விடயங்களை/ (மனிதர்கள்) ஏனோ/

ரோயரோ/-எப்புடு3/ தே3வ/ ராய/ ராயா/-ஈ/ தே3ஹமு/ (ராம)
வெறுக்கமாட்டார்/ எவ்வமயமும்/ தேவர்/ தலைவா/ கல்லோ/ இந்த/ உடல்/


சரணம் 9
ராஜ ராஜ/ வந்தி3த/ விராஜ/ ராஜ/ ஹரே/
பேரரசர்களால்/ வணங்கப் பெற்றோனே/ கருடன்/ தலைவா/ அரியே/

தி3ன ராஜ/ ராஜ/ நயன/ த்யாக3ராஜ/ ராஜ/ த31ரத2/ (ராம)
பகலவன் (பரிதி)/ மதி/ கண்களோனே/ தியாகராசனின்/ தலைவனே/ தசரத/ ராமா...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம (சில புத்தகங்களில், பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது).

4 - ஸ்ரீ-பாவ பாவன - ஸ்ரீ-பாப பாவன : 'ஸ்ரீ-பாவ பாவன' என்பதனை 'ஸ்ரீ-ப+அவ+பாவன' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'ஸ்ரீ-பாப பாவன' என்பதற்கு பொருளேதும் இருப்பதாகத்தோன்றவில்லை.

5 - வத்3து3ராத்4யேய த்4யேய - வத்3து3ரா தே4ய தே4ய :'வத்3து3ராத்4யேய த்4யேய' என்பதனை 'வத்3து3ரா+அத்4யேய+த்4யேய' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'வத்3து3ரா தே4ய தே4ய' என்பதனில் 'தே4ய தே4ய' என்பதற்குப் பொருளேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

6 - ராயாயீ தே3ஹமு - ராமாயீ தே3ஹமு : 'ராயாயீ தே3ஹமு' என்பதற்கு 'இவ்வுடம்பு கல்லா?' என்று பொருளாகும். ஆனால் 'ராமாயீ தே3ஹமு' என்பதனில் உள்ள 'ஈ தே3ஹமு' தனித்து நிற்கின்றது. எனவே அதற்குப் பொருள் கூறவியலாது.

Top

மேற்கோள்கள்
5 - த்4யேய - அறியப்படு பொருள் - கடவுள். இதுகுறித்து, அக்ரூரரின் உரை பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 38 (செய்யுள் 6) நோக்கவும்

5 - அத்4யேய - அறியவியலாதவன் - சொல், மனம், அறிவிற்குப் புறம்பான பரம்பொருள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (254), பரதேவதைக்கு, 'த்4யான த்4யாத்ரு2 த்4யேய ரூபா' என்று ஓர் பெயருண்டு. இதற்கு 'தியானமும், தியானிப்பவனும், தியானிக்கப்படு பொருளும்' என்று பொருளாகும். இவை மூன்றுமே ஒரே பொருளில் அடக்கமென்றால், அப்பொருளை அறிவதெங்ஙனம்? அதனால் 'அறிவியலாதவன்' என்று பரம்பொருள் கூறப்படும்.

Top

விளக்கம்
2 - மும்மாடிகி - மும்முறை - ஒரு சொல்லினை மும்முறை பகர்தல், அதனை உறுதிப்படுத்தவதாகும்.

3 - பீ4ம நுத - 'பீமனால் போற்றப்பெற்றோன்'. 'பீமன்' என்று சிவனுக்கும் ஓர் பெயருண்டு. ஆனால், அதே சரணத்தில் 'காம வைரி நுத நாம' என்று சிவனைக் கூறப்பட்டுள்ளதால், இங்கு 'பீ4ம' என்ற சொல்லுக்கு 'வல்லோர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில் 'பீ4ம' என்பது, பாண்டவர் ஐவரில் ஒருவனான 'பீமன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றவர்களிடம் - மற்ற கடவுளர்களிடம்

காமன் பகைவன் - சிவன்

விடயங்கள் - புலன் நுகர்ச்சி

Top


Updated on 24 Sep 2009

No comments: