Wednesday, April 29, 2009

தியாகராஜ கிருதி - செந்தனே ஸதா3 - ராகம் குந்தள வராளி - Chentane Sadaa - Raga Kuntala Varaali

பல்லவி
செந்தனே ஸதா3யுஞ்சுகோவய்ய

அனுபல்லவி
மந்துகெக்கு ஸ்ரீமந்துடௌ3
ஹனுமந்து ரீதிகா3 ஸ்ரீ காந்த (செந்தனே)

சரணம்
தலசின பனுலனு நே தெலிஸி
1தலதோ நட3சி ஸந்தஸில்லுது3ரா
பலுமாரு பல்க 2பனி லேது3ரா ராம
4ரதுனி வலெ த்யாக3ராஜ நுத (செந்தனே)


பொருள் - சுருக்கம்
மா மணாளா! ராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!

  • மாட்சிமையில் மிக்கு மேன்மையான அனுமனைப் போன்று, அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!

    • (நீ) எண்ணிய பணிகளை நானறிந்து, தலையால் நடந்து, களிப்பேனய்யா;

    • பன்முறை பகரத் தேவையில்லையைய்யா;

  • பரதனைப் போன்று அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
செந்தனே/ ஸதா3/-உஞ்சுகோ/-அய்ய/
அருகிலேயே/ (என்னை) எவ்வமயமும்/ வைத்துக்கொள்ளும்/ ஐயா/


அனுபல்லவி
மந்துகு/-எக்கு/ ஸ்ரீமந்துடௌ3/
மாட்சிமையில்/ மிக்கு/ மேன்மையான/

ஹனுமந்து/ ரீதிகா3/ ஸ்ரீ/ காந்த/ (செந்தனே)
அனுமனை/ போன்று/ மா/ மணாளா/ அருகிலேயே...


சரணம்
தலசின/ பனுலனு/ நே/ தெலிஸி/
(நீ) எண்ணிய/ பணிகளை/ நான்/ அறிந்து/

தலதோ/ நட3சி/ ஸந்தஸில்லுது3ரா/
தலையால்/ நடந்து/ களிப்பேனய்யா/

பலுமாரு/ பல்க/ பனி/ லேது3ரா/ ராம/
பன்முறை/ பகர/ தேவை/ இல்லையைய்யா/ ராமா/

4ரதுனி/ வலெ/ த்யாக3ராஜ/ நுத/ (செந்தனே)
பரதனை/ போன்று/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ அருகிலேயே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பனி லேது3ரா ராம - பனி லேது3ரா - பனி லேது3 ராம

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தலதோ நட3சி - தலையால் நடந்து - முழுமனதுடனும் பணிவுடனும் இயற்றுதல்

காரைக்காலம்மையார் கைலாயம் செல்கையில், காலால் அங்கு நடக்கக் கூடாதென தலையால் நடந்து சென்றாராம். 12-வது திரமுறை - 24 - காரைக்காலம்மையார் புராணம், செய்யுள் 55 நோக்கவும்.

Top


Updated on 29 Apr 2009

No comments: