Sunday, February 15, 2009

தியாகராஜ கிருதி - நகு3 மோமு க3ல வானி - ராகம் மத்4யமாவதி - Nagu Momu Galavaani - Raga Madhyamavati

பல்லவி
நகு3 மோமு க3ல வானி நா மனோ-ஹருனி
ஜக3மேலு ஸூ1ருனி ஜானகீ வருனி

சரணம்
சரணம் 1
தே3வாதி3 தே3வுனி தி3வ்ய ஸுந்த3ருனி
ஸ்ரீ 1வாஸுதே3வுனி ஸீதா ராக4வுனி (நகு3)


சரணம் 2
ஸுக்3ஞான நிதி4னி ஸோம ஸூர்ய லோசனுனி
அக்3ஞான தமமுனு அணசு பா4ஸ்கருனி (நகு3)


சரணம் 3
நிர்மலாகாருனி நிகி2லாக4 ஹருனி
24ர்மாதி3 மோக்ஷம்பு33ய சேயு க4னுனி (நகு3)


சரணம் 4
போ34தோ பலுமாரு பூஜிஞ்சி நே-
நாராதி4ந்து ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி (நகு3)


பொருள் - சுருக்கம்
  • புன்னகை வதனமுடைத்தோனை,

  • எனதுள்ளம் கவர்ந்தோனை,

  • புவியாளும் சூரனை,

  • சானகி மணாளனை,

  • வானோர் முதலானோருக்கிறைவனை,

  • தெய்வீக சுந்தரனை,

  • வாசுதேவனை,

  • சீதாராகவனை,

  • மெய்யறிவுக் களஞ்சியத்தினை,

  • மதி, பரிதி கண்களோனை,

  • அறிவீனமெனும் இருளினை யடக்கும் பகலவனை,

  • மாசற்ற வடிவினனை,

  • அனைத்து பாவங்களைக் களைவோனை,

  • அறம் முதலாக வீட்டினை யருளும் மேலோனை,

  • தியாகராசனால் சிறக்க போற்றப் பெற்றோனை,

தெரிவுடன், எவ்வமயமும் தொழுது, நான் வழிபடுவேனே!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நகு3/ மோமு/ க3ல வானி/ நா/ மனோ/-ஹருனி/
புன்னகை/ வதனம்/ உடைத்தோனை/ எனது/ உள்ளம்/ கவர்ந்தோனை/

ஜக3மு/-ஏலு/ ஸூ1ருனி/ ஜானகீ/ வருனி/
புவி/ யாளும்/ சூரனை/ சானகி/ மணாளனை/


சரணம்
சரணம் 1
தே3வ/-ஆதி3/ தே3வுனி/ தி3வ்ய/ ஸுந்த3ருனி/
வானோர்/ முதலானோருக்கு/ இறைவனை/ தெய்வீக/ சுந்தரனை/

ஸ்ரீ வாஸுதே3வுனி/ ஸீதா/ ராக4வுனி/ (நகு3)
ஸ்ரீ வாசுதேவனை/ சீதா/ ராகவனை/


சரணம் 2
ஸுக்3ஞான/ நிதி4னி/ ஸோம/ ஸூர்ய/ லோசனுனி/
மெய்யறிவு/ களஞ்சியத்தினை/ மதி/ பரிதி/ கண்களோனை/

அக்3ஞான/ தமமுனு/ அணசு/ பா4ஸ்கருனி/ (நகு3)
அறிவீனமெனும்/ இருளினை/ யடக்கும்/ பகலவனை/


சரணம் 3
நிர்மல/-ஆகாருனி/ நிகி2ல/-அக4/ ஹருனி/
மாசற்ற/ வடிவினனை/ அனைத்து/ பாவங்களை/ களைவோனை/

4ர்ம/-ஆதி3/ மோக்ஷம்பு3/ த3ய சேயு/ க4னுனி/ (நகு3)
அறம்/ முதலாக/ வீட்டினை/ யருளும்/ மேலோனை/


சரணம் 4
போ34தோ/ பலுமாரு/ பூஜிஞ்சி/ நேனு/-
தெரிவுடன்/ எவ்வமயமும்/ தொழுது/ நான்/

ஆராதி4ந்து/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ (நகு3)
வழிபடுவேனே/ ஸ்ரீ தியாகராசனால்/ சிறக்க போற்றப் பெற்றோனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - 4ர்மாதி3 மோக்ஷம்பு3 - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு

விளக்கம்
1 - வாஸுதே3வுனி - யாவரின் உள்ளியக்கமாகவுள்ள பரம்பொருள்.

இப்பாடல் இயற்றப்பெற்ற முறையினை அனுசரித்து, பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 ஆகியவற்றினை, சரணம் 4-உடன் இணைத்தே பாடவேண்டும். அன்றேல் பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 பொருள் முற்றுப் பெறாது.

Top


Updated on 15 Feb 2009

No comments: