Showing posts with label Yamuna Kalyani Raga. Show all posts
Showing posts with label Yamuna Kalyani Raga. Show all posts

Monday, July 12, 2010

தியாகராஜ கிருதி - ஹரி தா3ஸுலு - ராகம் யமுனா கல்யாணி - Hari Dasulu - Raga Yamuna Kalyani

பல்லவி
ஹரி தா3ஸுலு 1வெட3லு முச்சட கனி
ஆனந்த3மாயெ த3யாளோ

அனுபல்லவி
ஹரி கோ3விந்த3 நர ஹரி ராம க்ரு2ஷ்ணயனி
வருஸக3 2நாமமு கருணதோ ஜேயுசு (ஹ)

சரணம்
சரணம் 1
3ஸங்க3திகா3னு ம்ரு23ங்க3 கோ4ஷமுலசே
பொங்கு3சு வீது4லகேகு3சு மெரயுசு (ஹ)


சரணம் 2
சக்கனி ஹரிசே சிக்கிதிமனி 4மதி3
ஸொக்குசு நாமமே தி3க்கனி பொக3டு3சு (ஹ)


சரணம் 3
தி3ட்டமுக3 நடு3 கட்டுதோனடு3கு3லு
பெட்டுசு தாளமு பட்டி க3ல்க3ல்லனக3 (ஹ)


சரணம் 4
ஞானமுதோ ராம த்4யானமுதோ மஞ்சி
கா3னமுதோ மேனு தா3னமொஸங்கு3சு (ஹ)


சரணம் 5
ராஜ ராஜுனிபை ஜாஜுலு சல்லுசு
ராஜில்லுசு த்யாக3ராஜுனிதோ கூடி3 (ஹ)


பொருள் - சுருக்கம்
தயாளா!

  • அரியின் தொண்டர்கள் செல்லும் அழகினைக் கண்டு, ஆனந்தமாகியது.
    • 'அரியே', 'கோவிந்தா', 'நர சிங்கமே', 'இராமா', 'கண்ணா' யென, வரிசையாக, பெயர், கருணையுடன் பாடிக்கொண்டு,

    • ஒருமித்த குரலில், மிருதங்கத்தின் ஒலியுடன்,
    • பெருமிதத்துடன், வீதிகளுக்குச் சென்றுகொண்டு, மிளிர்ந்துகொண்டு,

    • சிறந்த அரியின் கையில் அகப்பட்டோமென, உள்ளத்தினில் சொக்கி,
    • (இறைவனின்) நாமமே புகலெனப் போற்றிக்கொண்டு,

    • திண்ணமாக, இடைக்கட்டுடன், அடிகளை வைத்துக்கொண்டு,
    • தாளத்திற்குகந்து, (சலங்கைகள்) கலீர் கலீரென,

    • ஞானத்துடனும், இராமனின் தியானத்துடனும், நல்ல இசையுடனும்,
    • உடல் தானமளித்துக்கொண்டு,

    • அரசர்க்கரசனின் மீது மல்லிகை மலர் தூவிக்கொண்டு,
    • களித்து, தியாகராசனுடன் கூடி,

  • அரியின் தொண்டர்கள் செல்லும் அழகினைக் கண்டு, ஆனந்தமாகியது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹரி/ தா3ஸுலு/ வெட3லு/ முச்சட/ கனி/
அரியின்/ தொண்டர்கள்/ செல்லும்/ அழகினை/ கண்டு/

ஆனந்த3மாயெ/ த3யாளோ/
ஆனந்தமாகியது/ தயாளா/


அனுபல்லவி
ஹரி/ கோ3விந்த3/ நர/ ஹரி/ ராம/ க்ரு2ஷ்ண/-அனி/
'அரியே'/ 'கோவிந்தா'/ 'நர/ சிங்கமே/, 'இராமா/, 'கண்ணா/ யென,

வருஸக3/ நாமமு/ கருணதோ/ ஜேயுசு/ (ஹ)
வரிசையாக/ பெயர்/ கருணையுடன்/ பாடிக்கொண்டு/ அரியின்...


சரணம்
சரணம் 1
ஸங்க3திகா3னு/ ம்ரு23ங்க3/ கோ4ஷமுலசே/
ஒருமித்த குரலில்/ மிருதங்கத்தின்/ ஒலியுடன்/

பொங்கு3சு/ வீது4லகு/-ஏகு3சு/ மெரயுசு/ (ஹ)
பெருமிதத்துடன்/ வீதிகளுக்கு/ சென்றுகொண்டு/ மிளிர்ந்துகொண்டு/ அரியின்...


சரணம் 2
சக்கனி/ ஹரி/ சே/ சிக்கிதிமி/-அனி/ மதி3/
சிறந்த/ அரியின்/ கையில்/ அகப்பட்டோம்/ என/ உள்ளத்தினில்/

ஸொக்குசு/ நாமமே/ தி3க்கு/-அனி/ பொக3டு3சு/ (ஹ)
சொக்கி/ (இறைவனின்) நாமமே/ புகல்/ என/ போற்றிக்கொண்டு/ அரியின்...


சரணம் 3
தி3ட்டமுக3/ நடு3/ கட்டுதோனு/-அடு3கு3லு/
திண்ணமாக/ இடை/ கட்டுடன்/ அடிகளை/

பெட்டுசு/ தாளமு/ பட்டி/ க3ல்க3ல்லு/-அனக3/ (ஹ)
வைத்துக்கொண்டு/ தாளத்திற்கு/ உகந்து/ (சலங்கைகள்) கலீர் கலீர்/ என/ அரியின்...


சரணம் 4
ஞானமுதோ/ ராம/ த்4யானமுதோ/ மஞ்சி/
ஞானத்துடனும்/ இராமனின்/ தியானத்துடனும்/ நல்ல/

கா3னமுதோ/ மேனு/ தா3னமு/-ஒஸங்கு3சு/ (ஹ)
இசையுடனும்/ உடல்/ தானம்/ அளித்துக்கொண்டு/ அரியின்...


சரணம் 5
ராஜ/ ராஜுனிபை/ ஜாஜுலு/ சல்லுசு/
அரசர்க்கு/ அரசனின் மீது/ மல்லிகை மலர்/ தூவிக்கொண்டு/

ராஜில்லுசு/ த்யாக3ராஜுனிதோ/ கூடி3/ (ஹ)
களித்து/ தியாகராசனுடன்/ கூடி/ அரியின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வெட3லு - வெட3லே.

2 - நாமமு - நாமமுலு.

4 - மதி3 - மதி.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
3 - ஸங்க3திகா3னு - சங்கதியாக. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு, 'ஒருமித்த குரலில்' (chorus) என்று பொருளாகும்.

ஆனால், 'சங்கதி' என்ற சொல்லுக்கு, இசையில் தனித்த பொருளுண்டு. Glossary of Carnatic Music Terminology நோக்கவும்.

உடல் தானமளித்துக்கொண்டு - உடலினால் இறைவன் தொண்டு பூண்டு
அரசர்க்கரசன் - இராமன்

Top


Updated on 12 Jul 2010

Sunday, July 11, 2010

தியாகராஜ கிருதி - ஸாக3ருண்டு3 - ராகம் யமுனா கல்யாணி - Sagarundu - Raga Yamuna Kalyani - Prahlada Bhakti Vijayam

பல்லவி
ஸாக3ருண்டு3 வெட3லெனிதோ3 ஸாரெகு கன ராரே

அனுபல்லவி
பா3கு33 ப்ரஹ்லாது3னி வர யோகி3னி கௌகி3ட ஜேர்சி (ஸா)

சரணம்
சரணம் 1
மந்த3ர த4ருடா3னந்த3 கந்து3டு3 தன
ஹ்ரு23யாரவிந்த3ம்பு3ன நெலகொன்ன ஸௌந்த3ர்யமுலனு தலசுசு (ஸா)


சரணம் 2
வாரணமுலபை பே4ரீ வாத்3யம்பு3லு ம்ரோயக3 ஸுர
வார ஸ்த்ரீல நாட்யபு வருஸல ஜூசுசு வேட்3கக3 (ஸா)


சரணம் 3
ராஜில்லின ஸ்ரீ த்யாக3ராஜ ஸகு2னி மனஸார
பூஜிஞ்சுசுனுண்டு33னுஜ ராஜ குமார ஸஹிதுடை3 (ஸா)


பொருள் - சுருக்கம்
  • கடலரசன் புறப்பட்டனன் இதோ.
  • யாவரும் காண வாரீர்!

    • மந்தர மலையைச் சுமந்தோன், ஆனந்தத்தின் மூலம், தனது இதயக் கமலத்தினில் நிலைபெற்ற எழிலினை நினைத்துக் கொண்டு,
    • வாரணங்களின் மீது பேரி வாத்தியங்கள் முழங்க,
    • வானோரின் நடன மங்கையரின் நாட்டிய வரிசைகளைக் கண்டுகொண்டு,
    • பிரகலாதனை, உயர் யோகியினை, இறுகத் தழுவிக் கொண்டு,
    • திகழும், தியாகராசனுக்கு இனியோனை மனதார தொழுதுகொண்டிருக்கும், அரக்கர் அரச குமாரனுடன்,

  • களிப்புடன், கடலரசன் புறப்பட்டனன்.

  • யாவரும் காண வாரீர்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாக3ருண்டு3/ வெட3லெனு/-இதோ3/ ஸாரெகு/ கன/ ராரே/
கடலரசன்/ புறப்பட்டனன்/ இதோ/ யாவரும்/ காண/ வாரீர்/


அனுபல்லவி
பா3கு33/ ப்ரஹ்லாது3னி/ வர/ யோகி3னி/ கௌகி3ட/ ஜேர்சி/ (ஸா)
இறுக/ பிரகலாதனை/ உயர்/ யோகியினை/ தழுவி/ கொண்டு/ கடலரசன்...


சரணம்
சரணம் 1
மந்த3ர/ த4ருடு3/-ஆனந்த3/ கந்து3டு3/ தன/ ஹ்ரு23ய/-
மந்தர மலையை/ சுமந்தோன்/ ஆனந்தத்தின்/ மூலம்/ தனது/ இதய/

அரவிந்த3ம்பு3ன/ நெலகொன்ன/ ஸௌந்த3ர்யமுலனு/ தலசுசு/ (ஸா)
கமலத்தினில்/ நிலைபெற்ற/ எழிலினை/ நினைத்துக் கொண்டு/ கடலரசன்...


சரணம் 2
வாரணமுலபை/ பே4ரீ/ வாத்3யம்பு3லு/ ம்ரோயக3/ ஸுர/
வாரணங்களின் மீது/ பேரி/ வாத்தியங்கள்/ முழங்க/ வானோரின்/

வார/ ஸ்த்ரீல/ நாட்யபு/ வருஸல/ ஜூசுசு/ வேட்3கக3/ (ஸா)
நடன/ மங்கையரின்/ நாட்டிய/ வரிசைகளை/ கண்டுகொண்டு/ களிப்புடன்/ கடலரசன்...


சரணம் 3
ராஜில்லின/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸகு2னி/ மனஸார/
திகழும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனை/ மனதார/

பூஜிஞ்சுசுனு-உண்டு3/ த3னுஜ/ ராஜ/ குமார/ ஸஹிதுடை3/ (ஸா)
தொழுதுகொண்டிருக்கும்/ அரக்கர்/ அரச/ குமாரன்/ உடன்/ கடலரசன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

பிரகலாதனை, அவனுடைய தந்தையான, இரணிய கசிபு, நாக பாசத்தினால் கட்டி கடலில் எறியும்படி உத்திரவிட, அங்ஙனமே எறியப்பட்ட பிரகலாதனை, கடலரசன் மீட்டு, அவனை தன்னுடைய நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரும் காட்சியினை, தியாகராஜர் இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார்.

மந்தர மலையைச் சுமந்தோன் - அரியைக் குறிக்கும்
ஆனந்தத்தின் மூலம் - அரியைக் குறிக்கும்
தியாகராசனுக்கு இனியோன் - அரியைக் குறிக்கும்
அரக்கர் அரச குமாரன் - பிரகலாதன்

Top


Updated on 11 Jul 2010

Saturday, July 10, 2010

தியாகராஜ கிருதி - விதி41க்ராது3லகு - ராகம் யமுனா கல்யாணி - Vidhi Sakradulaku - Raga Yamuna Kalyani

பல்லவி
விதி41க்ராது3லகு தொ3ரகுனா இடுவண்டி
ஸன்னிதி4 வேடு3க ஜூதாமு ராரே

அனுபல்லவி
ஸுதீ4 ஜன ரக்ஷகி
4ர்மாம்பு3தி4 ஸா1யி ஸேவ ஜூட3 (வி)

சரணம்
சரணம் 1
உடு3-பதி முகு2லெல்ல வருஸகா3 பி3ருது3லனு பட்டி
அடு33டு3கு3 ஜய ஜயமனகா3 ஆ வேல்புல வெல
படு3சுலு நிஜ நாட்யமாட3கா3 ஆ ஸமயமுன பஸிடி3
ஸும வர்ஷமு குரியக3 வடி3 வடி3கா3மர கோடுலு
தட333 பூ4மினி த3ண்ட3முலிட3கா3
ஸந்தோஷமுனனு கட3-கண்டினி ஜூசு ஸொக3ஸு (வி)


சரணம் 2
ஸ்ரீ ரமணினி ஜூசி பல்கக3 1நவ ரத்னால
ஹாரபு ஸருலல்லாட33 ஆ மொலக நக3வு
கௌ3ரவமந்தடனு மெரயக3னா வேள ஸனக
நாரதா3து3லெல்ல பொக33கா3 கீரமுனனு பூனி ஸரிக3
சீர காந்தி மெரயகா3 ஸ்1ரு2ங்கா3ரி கொலுவுயுண்டு3
ஸு1க்ர வாரபு ஸொக3ஸெல்ல ஜூட3 (வி)


சரணம் 3
தருணாருண வத3ன கமலினி அத்யந்தமைன
கருணா ரஸ பூர்ண நேத்ரினி ஸ்ரீ பஞ்ச நத3
புரமுன நெலகொன்ன தல்லினி ஸ்ரீ த்யாக3ராஜ
பரிபாலினி 2ஸர்வ ரூபிணி1ரணாக3த வத்ஸலினி
வர மணுலு த4343யனி
மெரயு கங்கண யுத கர பர தே3வினி ஸேவிம்ப (வி)


பொருள் - சுருக்கம்
  • பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ இத்தகைய சன்னிதி?
  • வேடிக்கை பார்ப்போம், வாரீர்!

    • அறிஞர்களைக் காப்பவள்,
    • அறக் கடலினில் துயில்பவள்,

  • சேவையினைக் காணப் பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • மதி வதனத்தினர் யாவரும், வரிசையாக விருதுகளையேந்தி, அடிக்கடி 'வெற்றி, வெற்றி' யென,
    • அந்த வானோரின் விலை மாதர்கள் தமது நடனமாட,
    • அவ்வமயம் பொன் மலர் மழை பொழிய,
    • அவசரவசரமாக, அமர கோடிகள் தடபடென, நிலத்தினில் தெண்டனிட,

  • மகிழ்வுடன், கடைக் கண்ணினால் காணும் சொகுசு பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • திருமகளைக் கண்டு பகர,
    • நவரத்தின மாலைச் சரங்களசைந்தாட,
    • அந்த புன்னகையின் கௌரவம் யாவற்றிலும் மிளிர,
    • அவ்வேளை, சனகர், நாரதர் முதலானோர் யாவரும் புகழ,
    • கிளியினை யேந்தி,
    • சரிகைச் சேலையொளி மிளிர,

  • சிங்காரி கொலுவிருக்கும், வெள்ளிக் கிழமை சொகுசெல்லாம் காண பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • இளங்காலைப் பரிதி (நிகர்) கமல வதனத்தினளை,
    • மிக்கு கருணை உணர்வு நிரம்பிய கண்ணாளை,
    • திருவையாறு நகரத்தினில் நிலைபெற்ற அம்மையை,
    • தியாகராசனைப் பேணுபவளை,
    • அனைத்துருவினளை,
    • புகலடைந்தோரிடம் கனிவுடையவளை,
    • உயர் மணிகள் தக தகயென ஒளிரும் வளையல்களணி கை,

  • பரதேவியினைச் சேவிக்க பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

  • வேடிக்கை பார்ப்போம், வாரீர்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விதி4/ ஸ1க்ர-ஆது3லகு/ தொ3ரகுனா/ இடுவண்டி/
பிரமன்/ இந்திராதியருக்கும்/ கிடைக்குமோ/ இத்தகைய/

ஸன்னிதி4/ வேடு3க/ ஜூதாமு/ ராரே/
சன்னிதி/ வேடிக்கை/ பார்ப்போம்/ வாரீர்/


அனுபல்லவி
ஸுதீ4 ஜன/ ரக்ஷகி/
அறிஞர்களை/ காப்பவள்/

4ர்ம/-அம்பு3தி4/ ஸா1யி/ ஸேவ/ ஜூட3/ (வி)
அற/ கடலினில்/ துயில்பவள்/ சேவையினை/ காண/ பிரமன்...


சரணம்
சரணம் 1
உடு3/-பதி/ முகு2லு/-எல்ல/ வருஸகா3/ பி3ருது3லனு/ பட்டி/
தாரை/ அரசன் (மதி)/ வதனத்தினர்/ யாவரும்/ வரிசையாக/ விருதுகளை/ ஏந்தி/

அடு3கு3-அடு3கு3/ ஜய/ ஜய/-அனகா3/ ஆ/ வேல்புல/ வெல/
அடிக்கடி/ வெற்றி/ வெற்றி/ யென/ அந்த/ வானோரின்/ விலை/

படு3சுலு/ நிஜ/ நாட்யமு/-ஆட3கா3/ ஆ ஸமயமுன/ பஸிடி3/
மாதர்கள்/ தமது/ நடனம்/ ஆட/ அவ்வமயம்/ பொன்/

ஸும/ வர்ஷமு/ குரியக3/ வடி3 வடி3கா3/-அமர/ கோடுலு/
மலர்/ மழை/ பொழிய/ அவசரவசரமாக/ அமர/ கோடிகள்/

தட333/ பூ4மினி/ த3ண்ட3முலு/-இட3கா3/
தடபடென/ நிலத்தினில்/ தெண்டன்/ இட/

ஸந்தோஷமுனனு/ கட3/-கண்டினி/ ஜூசு/ ஸொக3ஸு/ (வி)
மகிழ்வுடன்/ கடை/ கண்ணினால்/ காணும்/ சொகுசு/ பிரமன்...


சரணம் 2
ஸ்ரீ/ ரமணினி/ ஜூசி/ பல்கக3/ நவ/ ரத்னால/
திரு/ மகளை/ கண்டு/ பகர/ நவ/ ரத்தின/

ஹாரபு/ ஸருலு/-அல்லாட33/ ஆ/ மொலக நக3வு/
மாலை/ சரங்கள்/ அசைந்தாட/ அந்த/ புன்னகையின்/

கௌ3ரவமு/-அந்தடனு/ மெரயக3/-ஆ/ வேள/ ஸனக/
கௌரவம்/ யாவற்றிலும்/ மிளிர/ அந்த/ வேளை/ சனகர்/

நாரத3/-ஆது3லு/-எல்ல/ பொக33கா3/ கீரமுனனு/ பூனி/ ஸரிக3/
நாரதர்/ முதலானோர்/ யாவரும்/ புகழ/ கிளியினை/ யேந்தி/ சரிகை/

சீர/ காந்தி/ மெரயகா3/ ஸ்1ரு2ங்கா3ரி/ கொலுவு/-உண்டு3/
சேலை/ ஒளி/ மிளிர/ சிங்காரி/ கொலுவு/ இருக்கும்/

ஸு1க்ர/ வாரபு/ ஸொக3ஸு/-எல்ல/ ஜூட3/ (வி)
வெள்ளி/ கிழமை/ சொகுசு/ எல்லாம்/ காண/ பிரமன்...


சரணம் 3
தருண/-அருண/ வத3ன/ கமலினி/ அத்யந்தமைன/
இளம் காலை/ பரிதி (நிகர்)/ வதன/ கமலத்தினளை/ மிக்கு/

கருணா/ ரஸ/ பூர்ண/ நேத்ரினி/ ஸ்ரீ பஞ்ச நத3/
கருணை/ உணர்வு/ நிரம்பிய/ கண்ணாளை/ ஸ்ரீ திருவையாறு/

புரமுன/ நெலகொன்ன/ தல்லினி/ ஸ்ரீ த்யாக3ராஜ/
நகரத்தினில்/ நிலைபெற்ற/ அம்மையை/ ஸ்ரீ தியாகராசனை/

பரிபாலினி/ ஸர்வ/ ரூபிணி/ ஸ1ரணு/-ஆக3த/ வத்ஸலினி/
பேணுபவளை/ அனைத்து/ உருவினளை/ புகல்/ அடைந்தோரிடம்/ கனிவுடையவளை/

வர/ மணுலு/ த43/ த43/-அனி/
உயர்/ மணிகள்/ தக/ தக/ யென/

மெரயு/ கங்கண/ யுத/ கர/ பர/ தே3வினி/ ஸேவிம்ப/ (வி)
ஒளிரும்/ வளையல்கள்/ கூடிய (அணி)/ கை/ பர/ தேவியினை/ சேவிக்க/ பிரமன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸர்வ ரூபிணி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது 'ஸர்வ ரூபிணினி' என்றோ 'ஸர்வ ரூபினி' என்றோ இருக்கவேண்டும்.

Top

மேற்கோள்கள்
1 - நவ ரத்ன - நவரத்தினங்கள் - வைரம், முத்து, மாணிக்கம், பவளம், மரகதம், கோமேதகம், வைடூரியம், நீலம், புருடராகம்.

Top

விளக்கம்



Updated on 10 Jul 2010

Thursday, July 8, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம ராம மாம் - ராகம் யமுனா கல்யாணி - Rama Rama Rama Mam - Raga Yamuna Kalyani

பல்லவி
1ராம ராம ராம மாம் பாஹி

சரணம்
சரணம் 1
வனமுன சனி முனி ஜன க3ணமுனு கனு-
கொ3னி நெனருன க4னமுன பாலிஞ்சின (ரா)


சரணம் 2
வனஜ நயன நினு மனஸுன தி3ன தி3னமுனு
கனுகொ3னு நனுனனகு4னி ஸேயவே (ரா)


சரணம் 3
ஸுர நர வர நுத சரண கமல யுக3
கர த்4ரு2த கி3ரி வர அரமர ஸேயக (ரா)


சரணம் 4
2முர 32 ஹர ஹரி பரிசர கருணா-
கர க3ர த4ர நுத கரி வரத3 வரத3 (ரா)


சரணம் 5
1ரணனுகொனி நிரதமுனனு நினு ஹ்ரு2த்-
4ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு (ரா)


சரணம் 6
கலி யுக3முன நெலகொன்ன இதரலே
விபு4டு3ல கனி நினுகா3 மதி3னி ப4ஜிந்துனு (ரா)


சரணம் 7
3ஹு வசனமுலெந்து3கு இக நீவே
இஹ பரமுலு மரி நா ஸர்வஸ்வமு (ரா)


சரணம் 8
ஸரஸிஜ ப4வ ஸுர பதி வந்தி3த பத3
புர ஹர நுத பாலித த்யாக3ராஜ (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • கமலக்கண்ணா!
  • வானோர், சிறந்த மனிதர் போற்றும், திருவடிக் கமல இணையோனே! கரத்தினில் புனித மலை சுமந்தோனே!
  • முரன், கரனை வதைத்தோனே! வானரர் சேவகம் கொண்டோனே! கருணாகரனே! நஞ்சு மிடற்றோன் போற்றும், கரி வரதா! வரதா!
  • மலரோன், வானோர் தலைவன் வணங்கும் திருவடியோனே! புரமெரித்தோன் போற்றுவோனே! தியாகராசனைப் பேணுவோனே!

  • என்னைக் காப்பாய்.
    • வனத்திற்குச் சென்று, முனிவர்களை (தேடிக்) கண்டு, கனிவுடன், சிறக்கக் காத்தாய்.

    • உன்னை, மனதினில் தினந்தினமும் கண்டுகொள்ளும் என்னைப் பாவமற்றவனாகச் செய்வாயய்யா.
    • (என்னை) வேறாக்காதே (நான் உன்னவன்).
    • (உன்னிடம்) சரணடைந்து, இடையறாது, உன்னை இதயக் கமலத்தினில் மலர்களினால் தொழுவேன்.
    • கலி யுகத்தினில் நிலைபெற்ற மற்றெந்த கடவுளரையும் கண்டு, நீயாக (எண்ணி), உள்ளத்தினில் தொழுவேன்.
    • மிக்கு வசனங்கள் எதற்கு? இனி நீயே இம்மை, மறுமை, மற்றும், எனது அனைத்துமே.


  • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ மாம்/ பாஹி/
இராமா/ இராமா/ இராமா/ என்னை/ காப்பாய்/


சரணம்
சரணம் 1
வனமுன/ சனி/ முனி ஜன க3ணமுனு/
வனத்திற்கு/ சென்று/ முனிவர்களை/

கனுகொ3னி/ நெனருன/ க4னமுன/ பாலிஞ்சின/ (ரா)
(தேடிக்) கண்டு/ கனிவுடன்/ சிறக்க/ காத்த/ இராமா...


சரணம் 2
வனஜ/ நயன/ நினு/ மனஸுன/ தி3ன தி3னமுனு/
கமல/ கண்ணா/ உன்னை/ மனதினில்/ தினந்தினமும்/

கனுகொ3னு/ நனு/-அனகு4னி/ ஸேயவே/ (ரா)
கண்டுகொள்ளும்/ என்னை/ பாவமற்றவனாக/ செய்வாயய்யா/


சரணம் 3
ஸுர/ நர/ வர/ நுத/ சரண/ கமல/ யுக3/
வானோர்/ மனிதரில்/ சிறந்தோர்/ போற்றும்/ திருவடி/ கமல/ இணையோனே/

கர/ த்4ரு2த/ கி3ரி/ வர/ அரமர ஸேயக/ (ரா)
கரத்தினில்/ சுமந்தோனே/ மலை/ புனித/ (என்னை) வேறாக்காதே/


சரணம் 4
முர/ க2ர/ ஹர/ ஹரி/ பரிசர/
முரன்/ கரனை/ வதைத்தோனே/ வானரர்/ சேவகம் கொண்டோனே/

கருணாகர/ க3ர/ த4ர/ நுத/ கரி/ வரத3/ வரத3/ (ரா)
கருணாகரனே/ நஞ்சு/ (ஏந்துவோன்) மிடற்றோன்/ போற்றும்/ கரி/ வரதா/ வரதா/


சரணம் 5
1ரணு/-அனுகொனி/ நிரதமுனனு/ நினு/ ஹ்ரு2த்/
(உன்னிடம்) சரண்/ அடைந்து/ இடையறாது/ உன்னை/ இதய/

ஸரஸிஜமுனு/ விருலனு/ பூஜிந்துனு/ (ரா)
கமலத்தினில்/ மலர்களினால்/ தொழுவேன்/


சரணம் 6
கலி/ யுக3முன/ நெலகொன்ன/ இதரலு/-ஏ/
கலி/ யுகத்தினில்/ நிலைபெற்ற/ மற்று/ எந்த/

விபு4டு3ல/ கனி/ நினுகா3/ மதி3னி/ ப4ஜிந்துனு/ (ரா)
கடவுளரையும்/ கண்டு/ நீயாக (எண்ணி)/ உள்ளத்தினில்/ தொழுவேன்/


சரணம் 7
3ஹு/ வசனமுலு/-எந்து3கு/ இக/ நீவே/
மிக்கு/ வசனங்கள்/ எதற்கு/ இனி/ நீயே/

இஹ/ பரமுலு/ மரி/ நா/ ஸர்வஸ்வமு/ (ரா)
இம்மை/ மறுமை/ மற்றும்/ எனது/ அனைத்துமே/


சரணம் 8
ஸரஸிஜ ப4வ/ ஸுர/ பதி/ வந்தி3த/ பத3/
மலரோன்/ வானோர்/ தலைவன்/ வணங்கும்/ திருவடியோனே/

புர/ ஹர/ நுத/ பாலித/ த்யாக3ராஜ/ (ரா)
புரம்/ எரித்தோன்/ போற்றுவோனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம மாம் பாஹி - சில புத்தகங்களில் பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

4 - ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது 'ஸரஸிஜமனு விருலனு பூஜிந்துனு' (இதயக்) கமலமெனும் மலரினால் தொழுவேன்' என்றோ 'ஸரஸிஜமுன விருலனு பூஜிந்துனு' (இதயக் கமலத்தினில் மலர்களினால் தொழுவேன்) என்றோ இருக்கவேண்டும்.

4 - பூஜிந்துனு - பூஜிந்து.

Top

மேற்கோள்கள்
2 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்.

3 - 2 - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்.

Top

விளக்கம்
புனித மலை - கோவர்த்தன மலை
வேறாக்காதே - உன்னவன் என
நஞ்சு மிடற்றோன் - சிவன்
கரி வரதன் - கஜேந்திரனைக் குறிக்கும்
புரமெரித்தோன் - சிவன்

Top


Updated on 09 Jul 2010

Wednesday, July 7, 2010

தியாகராஜ கிருதி - நாராயண ஹரி - ராகம் யமுனா கல்யாணி - Narayana Hari - Raga Yamuna Kalyani

பல்லவி
நாராயண ஹரி நாராயண ஹரி
நாராயண ஹரி நாராயண ஹரி

சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன த4னாஸ்1வமுலனு நே
விஸ்1வஸிஞ்ச 1பூ4ஜேஸ்1வர ஹரி ஹரி (நா)


சரணம் 2
கோடீஸு1ல கனி ஸாடி லேனி பல்கு
போ3டினொஸகி3 மும்மாடிகி வேட3னு (நா)


சரணம் 3
ஆஸ1 2பிஸா1சாவேஸ1மு கலுகு3
4னேஸு13காசெடு3 தே31முனேலனு (நா)


சரணம் 4
நா லோனே நீ சேலோ சிக்கிதி
நீ லோப4மு 4விடு3வவேலோ தெலியது3 (நா)


சரணம் 5
பூ4-லோகமுலோ மேலோர்வரு விதி4
வ்ராலோ 5நீதௌ3 ஜாலோ தெலியது3 (நா)


சரணம் 6
தூ3ரெடு3 பனுலகு தூ3ரெத3ரு கட3
தேரெடு3 பனுலனு தேரே மனஸுகு (நா)


சரணம் 7
தொலி தா ஜேஸின ப2லமே கலத3னி
இலனெஞ்சனி மர்த்யுல செலிமியெந்து3கு (நா)


சரணம் 8
6தூ3ஷண ஹர பர தூ3ஷண ஜன க3
பீ4ஷண ஸுகு3ண விபீ4ஷண ஸன்னுத (நா)


சரணம் 9
நோரெப்புடு3 நீ பேரே பலுகனி
வேரேயெவருன்னாரே ராக4வ (நா)


சரணம் 10
மித்ர குலேஸ1 சரித்ர ரஸிக ஜன
மித்ரமு கோருது3 7வ்ரு2த்ராரி 8வினுத (நா)


சரணம் 11
வீன விமான 9கவீன ஹ்ரு2தா3லய
தீ3ன ஜனாவன தா3னவ ஹர ஸ்ரீ (நா)


சரணம் 12
நா ஜூபுலு மீ நாஜூகு தனமுனே
ஜூட3னி த்யாக3ராஜுல்லமலரு (நா)


பொருள் - சுருக்கம்
  • நாராயணா! அரியே! புவிமகள் மணாளா! தூஷணனை வதைத்தோனே! பிறரை நிந்திப்போருக்கு அச்சமே! நற்குணத்தோனே! விபீடணனால் போற்றப்பெற்றோனே! இராகவா! விருத்திரன் பகைவனால் போற்றப் பெற்றோனே! புள்ளரசன் வாகனனே! கவியரசன் உள்ளத்துறைவோனே! எளியோரைக் காப்போனே! அரக்கரையழித்தோனே! தியாகராசனின் உள்ளத்தினை மலரச்செய்யும் நாராயணா!

    • நிலையற்ற, செல்வம், வாகனங்களை நான் ஒரு நாளும் நம்பமாட்டேன்.
    • கோடீசுவரர்களைக் கண்டு, ஒப்பற்ற நாமகளினை யளித்து, உறுதியாக வேண்ட மாட்டேன்.
    • ஆசைப் பிசாசுகளின் ஆவேசம் கொண்ட செல்வந்தர்களைப் பேணும் நாடு (எனக்கு) எதற்கு?

    • என்னுள்ளேயே உன் கையினில் சிக்கினேன்; உனது கருமித்தனத்தினை விடமாட்டாய், ஏனோ அறியேன்.

    • புவியினில் (மற்றவரின்) மேன்மையினைச் சகியார்; பிரமனின் எழுத்தோ, அன்றி உனது மாயையோ, அறியேன்.
    • வெறுக்கத் தக்கப் பணிகளில் ஈடுபடுவர்; கடைத் தேறும் பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு.
    • முன்னம் தான் செய்வினையின் பயனே கிடைக்குமென இங்கு எண்ணாத மனிதரின் நேசமெதற்கு?

    • (எனது) நாவெப்போழ்தும் உனது பெயரினையே உரைக்கட்டும்; வேறே எவருளரே?
    • பரிதி குலத் தலைவனின் சரிதத்தினை விரும்புவோரின் நட்பு கோருவேன்.
    • எனது பார்வை உமது நேர்த்தியினையே காணட்டும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/

நாராயண/ ஹரி/ நாராயண/ ஹரி/
நாராயணா/ அரியே/ நாராயணா/ அரியே/


சரணம்
சரணம் 1
நஸ்1வரமைன/ த4ன/-அஸ்1வமுலனு/ நே/
நிலையற்ற/ செல்வம்/ குதிரைகளை (வாகனங்களை)/ நான்/

விஸ்1வஸிஞ்ச/ பூ4ஜா/-ஈஸ்1வர/ ஹரி ஹரி/ (நா)
நம்பமாட்டேன்/ புவிமகள்/ மணாளா/ அய்யய்யோ (ஒரு நாளும்)/


சரணம் 2
கோடி/-ஈஸு1ல/ கனி/ ஸாடி லேனி/ பல்கு/
கோடி/-ஈசுவரர்களை/ கண்டு/ ஒப்பற்ற/ நா/

போ3டினி/-ஒஸகி3/ மும்மாடிகி/ வேட3னு/ (நா)
மகளினை/ யளித்து/ உறுதியாக/ வேண்ட மாட்டேன்/


சரணம் 3
ஆஸ1/ பிஸா1ச/-ஆவேஸ1மு/ கலுகு3/
ஆசை/ பிசாசுகளின்/ ஆவேசம்/ கொண்ட/

4ன-ஈஸு1ல/ காசெடு3/ தே31மு/-ஏலனு/ (நா)
செல்வந்தர்களை/ பேணும்/ நாடு/ (எனக்கு) எதற்கு/


சரணம் 4
நா லோனே/ நீ/ சேலோ/ சிக்கிதி/
என்னுள்ளேயே/ உன்/ கையினில்/ சிக்கினேன்/

நீ/ லோப4மு/ விடு3வ/-ஏலோ/ தெலியது3/ (நா)
உனது/ கருமித்தனத்தினை/ விடமாட்டாய்/ ஏனோ/ அறியேன்/


சரணம் 5
பூ4-லோகமுலோ/ மேலு/-ஓர்வரு/ விதி4/
புவியினில்/ (மற்றவரின்) மேன்மையினை/ சகியார்/ பிரமனின்/

வ்ராலோ/ நீதௌ3/ ஜாலோ/ தெலியது3/ (நா)
எழுத்தோ/ (அன்றி) உனது/ மாயையோ/ அறியேன்/


சரணம் 6
தூ3ரெடு3/ பனுலகு/ தூ3ரெத3ரு/ கட3/
வெறுக்கத் தக்க/ பணிகளில்/ ஈடுபடுவர்/ கடை/

தேரெடு3/ பனுலனு/ தேரே/ மனஸுகு/ (நா)
தேறும்/ பணிகளை/ கொண்டுவாராரே/ உள்ளத்திற்கு/


சரணம் 7
தொலி/ தா/ ஜேஸின/ ப2லமே/ கலது3/-அனி/
முன்னம்/ தான்/ செய் (வினையின்)/ பயனே/ (கிடைக்கும்) உளது/ என/

இலனு/-எஞ்சனி/ மர்த்யுல/ செலிமி/-எந்து3கு/ (நா)
இங்கு/ எண்ணாத/ மனிதரின்/ நேசம்/ எதற்கு/


சரணம் 8
தூ3ஷண/ ஹர/ பர/ தூ3ஷண ஜன க3ண/
தூஷணனை/ வதைத்தோனே/ பிறரை/ நிந்திப்போருக்கு/

பீ4ஷண/ ஸுகு3ண/ விபீ4ஷண/ ஸன்னுத/ (நா)
அச்சமே/ நற்குணத்தோனே/ விபீடணனால்/ போற்றப்பெற்றோனே/


சரணம் 9
நோரு/-எப்புடு3/ நீ/ பேரே/ பலுகனி/
(எனது) நா/ எப்போழ்தும்/ உனது/ பெயரினையே/ உரைக்கட்டும்/

வேரே/-எவரு/-உன்னாரே/ ராக4வ/ (நா)
வேறே/ எவர்/ உளரே/ இராகவா/


சரணம் 10
மித்ர/ குல/-ஈஸ1/ சரித்ர/ ரஸிக ஜன/
பரிதி/ குல/ தலைவனின்/ சரிதத்தினை/ விரும்புவோரின்/

மித்ரமு/ கோருது3/ வ்ரு2த்ர/-அரி/ வினுத/ (நா)
நட்பு/ கோருவேன்/ விருத்திரன்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/


சரணம் 11
வி/-இன/ விமான/ கவி/-இன/ ஹ்ரு2த்3/-ஆலய/
புள்/ அரசன்/ வாகனனே/ கவி/ யரசன்/ உள்ளத்து/ உறைவோனே/

தீ3ன ஜன/-அவன/ தா3னவ/ ஹர/ ஸ்ரீ/ (நா)
எளியோரை/ காப்போனே/ அரக்கரை/ யழித்தோனே/ ஸ்ரீ/ நாராயண...


சரணம் 12
நா/ ஜூபுலு/ மீ/ நாஜூகு தனமுனே/
எனது/ பார்வை/ உமது/ நேர்த்தியினையே/

ஜூட3னி/ த்யாக3ராஜு/-உல்லமு/-அலரு/ (நா)
காணட்டும்/ தியாகராசனின்/ உள்ளத்தினை/ மலரச்செய்யும்/ நாராயண...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூ4ஜேஸ்1வர - பூ4தேஸ்1வர.

2 - பிஸா1சாவேஸ1மு - பிஸா1ச வேஸ1மு : இவ்விடத்தில் 'பிஸா1ச வேஸ1மு' என்பது பொருந்தாது.

3 - காசெடு3 தே31முனேலனு - காசே தே31முனேலுது3 : பிற்கூறப்பட்டது மாறான பொருள் தருவதனால், பொருந்தாது.

4 - விடு3வவேலோ தெலியது3 - விட3வேலோ தெலியனு.

5 - நீதௌ3 ஜாலோ தெலியது3 - நீகௌஸா1லோ தெலியனு.

8 - வினுத - ஸன்னுத.

Top

மேற்கோள்கள்
6 - தூ3ஷண - தூஷணன் - இராமனால் வதைக்கப் பெற்ற இராவணின் உறவினன்

7 - வ்ரு2த்ராரி - விருத்திரன் பகைவன் - இந்திரன். இந்திரன், விருத்திரனைக் கொன்ற நிகழ்ச்சியினை, மகாபாரதத்தினில் (உத்தியோக பருவம், அத்தியாயம் 10) காணலாம்.

9 - கவீன - கவியரசன் - வால்மீகி முனிவன். இச்சொல்லினை தியாகராஜர் 'ஜக3தா3னந்த3 காரக' என்ற (பஞ்ச ரத்தின) கீர்த்தனையிலும் (சரணம் 8) பயன்படுத்துகின்றார்.

Top

விளக்கம்
5 - நீதௌ3 - நீது3+ஔ - 'அவு' என்பது 'ஔ' என்றும் வழங்கும்.

வாகனம் - குதிரை முதலானவை
நாமகளினை யளித்து - அவர்தம் புகழ்பாடி
கருமித்தனத்தினை விடமாட்டாய் - இரங்குவதற்கு
பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு - பணிகனைப் பற்றி நினைக்கமாட்டார்
பரிதி குலத் தலைவன் - இராமன்
பரிதி குலத் தலைவன் சரிதம் - இராமாயணம்
புள்ளரசன் - கருடன்

Top


Updated on 08 Jul 2010