Showing posts with label Ananda Bhairavi Raga. Show all posts
Showing posts with label Ananda Bhairavi Raga. Show all posts

Monday, October 20, 2008

க்ஷீர ஸாக3ர விஹார - ராகம் ஆனந்த3 பை4ரவி - Ksheera Sagara Vihara - Raga Ananada Bhairavi

பல்லவி
க்ஷீர ஸாக3ர விஹார அபரிமித
கோ4ர பாதக விதா3
க்ரூர ஜன க3ண விதூ3ர நிக3
ஸஞ்சார ஸுந்த3ர ஸ1ரீர

சரணம்
சரணம் 1
1தமகா2ஹித விப4ங்க3 ஸ்ரீ ராம
1மன ரிபு ஸன்னுதாங்க3
ஸ்1ரித மானவாந்தரங்க3 ஜனகஜா
ஸ்1ரு2ங்கா3ர ஜலஜ ப்4ரு2ங்க3 (க்ஷீ)

சரணம் 2
ராஜாதி4 ராஜ வேஷ ஸ்ரீ ராம
ரமணீய கர ஸு-பூ4
ராஜ நுத லலித பா4ஷ ஸ்ரீ த்யாக3-
ராஜாதி34க்த போஷ (க்ஷீ)


பொருள் - சுருக்கம்
பாற்கடலுறைவோனே!
எண்ணிலடங்கா கொடும் பாதகங்களைக் களைவோனே!
கொடியோருக்கெட்டாதவனே!
மறைகளில் உறைவோனே! எழிலுருவத்தோனே!

இந்திரனின் பகைவரை முறிப்போனே, இராமா!
நமன் பகைவனால் மிக்கு போற்றப்பெற்றோனே!
சார்ந்த மானவருள்ளுறையே!
சனகன் மகளின் சிங்காரமெனும் தாமரையை மொய்க்கும் வண்டே!

மன்னாதி மன்னனின் வேடமணிந்தோனே, இராமா!
எழிலூட்டும் உயரணிகலன்களணிவோனே!
அரசரால் போற்றப்பெற்றோனே! கனிந்த சொல்லோனே!
தியாகராசன் முதலான பத்தர்களைப் பேணுவோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீர ஸாக3ர/ விஹார/ அபரிமித/
பாற்கடல்/ உறைவோனே/ எண்ணிலடங்கா/

கோ4ர/ பாதக/ விதா3ர/
கொடும்/ பாதகங்களை/ களைவோனே/

க்ரூர ஜன க3ண/ விதூ3ர/ நிக3ம/
கொடியோருக்கு/ எட்டாதவனே/ மறைகளில்/

ஸஞ்சார/ ஸுந்த3ர/ ஸ1ரீர/
உறைவோனே/ எழில்/ உருவத்தோனே/

சரணம்
சரணம் 1
1தமக2/-அஹித/ விப4ங்க3/ ஸ்ரீ ராம/
ஸதமகனின்/ பகைவரை/ முறிப்போனே/ ஸ்ரீ ராமா/

1மன/ ரிபு/ ஸன்னுதாங்க3/
நமன்/ பகைவனால்/ மிக்கு போற்றப்பெற்றோனே/

ஸ்1ரித/ மானவ/-அந்தரங்க3/ ஜனகஜா/
சார்ந்த/ மானவர்/ உள்ளுறையே/ சனகன் மகளின்/

ஸ்1ரு2ங்கா3ர/ ஜலஜ/ ப்4ரு2ங்க3/
சிங்காரமெனும்/ தாமரையை (மொய்க்கும்)/ வண்டே/


சரணம் 2
ராஜ-அதி4 ராஜ/ வேஷ/ ஸ்ரீ ராம/
மன்னாதி மன்னனின்/ வேடமணிந்தோனே/ ஸ்ரீ ராமா/

ரமணீய கர/ ஸு-பூ4ஷ/
எழிலூட்டும்/ உயரணிகலன்களணிவோனே/

ராஜ/ நுத/ லலித/ பா4ஷ/
அரசரால்/ போற்றப்பெற்றோனே/ கனிந்த/ சொல்லோனே/

ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ ப4க்த/ போஷ/
ஸ்ரீ தியாகராசன்/ முதலான/ பத்தர்களை/ பேணுவோனே/

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்

ஸதமகன் - இந்திரன்

நமன் பகைவன் - சிவன்




Wednesday, October 15, 2008

ராம ராம நீவாரமு - ராகம் ஆனந்த3 பை4ரவி - Rama Rama Neevaramu - Raga Ananda Bhairavi

பல்லவி
ராம ராம நீவாரமு கா3மா ராம ஸீதா
ராம ராம ஸாது4 ஜன ப்ரேம ராரா

சரணம்
சரணம் 1
மெருகு3 சேலமு 1கட்டுக மெல்ல ராரா ராம
கரகு33ங்கா3ரு ஸொம்முலு கத3ல ராரா (ராம)

சரணம் 2
வரமைனட்டி ப4க்தாபீ4ஷ்ட வரத3 ராரா ராம
2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம ராரா (ராம)

சரணம் 3
மெண்டை3ன கோத3ண்ட3 காந்தி மெரய ராரா கனுல
பண்டு3வக3யுண்டு3 3உத்33ண்ட3 ராரா (ராம)

சரணம் 4
சிரு நவ்வு க3ல மோமு ஜூப ராரா ராம
கருணதோ நன்னெல்லப்புடு3 காவ ராரா (ராம)

சரணம் 5
கந்த3ர்ப ஸுந்த3ரானந்த3 கந்த3 ராரா நீகு
வந்த3னமு ஜேஸெத3 கோ3விந்த3 ராரா (ராம)

சரணம் 6
ஆத்3யந்த ரஹித வேத3 வேத்3ய ராரா 44
வேத்3
நே நீவாட3னைதி வேக3 ராரா (ராம)

சரணம் 7
ஸு-ப்ரஸன்ன 5ஸத்ய ரூப ஸுகு3ண ராரா ராம
அ-ப்ரமேய த்யாக3ராஜுனேல ராரா (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! நல்லோரின் அன்பே! ஒளிரும் உடையணிந்தோனே!
வரம் நிகர், தொண்டருக்கு வேண்டியதருள்வோனே!
திரையிட்டது போன்ற மகிமை உடையோனே!
கண்களுக்கு விருந்தாக, கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே!
காமனின் எழிலுடையோனே! ஆனந்தக் கிழங்கே!
கோவிந்தா! முதல் முடிவற்றோனே! மறைகளில் அறிப்படுவோனே!
சிவனால் மதிக்கப்பெற்றோனே! அமைதியானவனே!
மெய்ம்மையின் உருவே! நற்குணத்தோனே! அளவிடற்கரியனே!

நான் உன்னவனன்றோ, வாராய்;
மெள்ள வாராய்;
உருக்கிய தங்க அணிகலன்கள் அசைய வாராய்;
கோதண்டத்தின் காந்தி மிக்கொளிர வாராய்;
புன்னகை தவழும் முகத்தைக்காட்ட வாராய்;
கருணையுடன் என்னை யெந்நாளும் காக்க வாராய்;
வந்தனம் செலுத்தினேன், வாராய்;
உன்னவனானேன்; விரைவில் வாராய்;
தியாகராசனையாள வாராய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ நீவாரமு/ கா3மா/ ராம/ ஸீதா/
இராமா/ இராமா/ உன்னவன்/ அன்றோ/ இராமா/ சீதா-/

ராம/ ராம/ ஸாது4 ஜன/ ப்ரேம/ ராரா/
ராமா/ இராமா/ நல்லோரின்/ அன்பே - காதலே/ வாராய்/

சரணம்
சரணம் 1
மெருகு3/ சேலமு/ கட்டுக/ மெல்ல/ ராரா/ ராம/
ஒளிரும்/ உடை/ அணிந்தோய்/ மெள்ள/ வாராய்/ இராமா/

கரகு3/ ப3ங்கா3ரு/ ஸொம்முலு/ கத3ல/ ராரா/
உருக்கிய/ தங்க/ அணிகலன்கள்/ அசைய/ வாராய்/


சரணம் 2
வரமு/-ஐனட்டி/ ப4க்த/-அபீ4ஷ்ட/ வரத3/ ராரா/ ராம/
வரம்/ நிகர்/ தொண்டருக்கு/ வேண்டியதை/ அருள்வோனே/ வாராய்/ இராமா/

மருகு3/ ஜேஸுகொனு/-அட்டி/ மஹிம/ ராரா/
திரை/ இட்டது/ போன்ற/ மகிமை உடையோனே/ வாராய்/


சரணம் 3
மெண்டை3ன/ கோத3ண்ட3/ காந்தி/ மெரய/ ராரா/ கனுல/
மிக்கு/ கோதண்டத்தின்/ காந்தி/ ஒளிர/ வாராய்/ கண்களுக்கு/

பண்டு3வக3/-உண்டு3/ உத்33ண்ட3/ ராரா/
விருந்தாக/ உள்ள/ கோதண்டத்தினை உயர்த்தி நிற்போனே/ வாராய்/


சரணம் 4
சிரு நவ்வு/ க3ல/ மோமு/ ஜூப/ ராரா/ ராம/
புன்னகை/ தவழும்/ முகத்தை/ காட்ட/ வாராய்/ இராமா/

கருணதோ/ நன்னு/-எல்லப்புடு3/ காவ/ ராரா/
கருணையுடன்/ என்னை/ எந்நாளும்/ காக்க/ வாராய்/


சரணம் 5
கந்த3ர்ப/ ஸுந்த3ர/-ஆனந்த3/ கந்த3/ ராரா/ நீகு/
காமனின்/ எழிலுடை/ ஆனந்த/ கிழங்கே/ வாராய்/ உனக்கு/

வந்த3னமு/ ஜேஸெத3/ கோ3விந்த3/ ராரா/
வந்தனம்/ செலுத்தினேன்/ கோவிந்தா/ வாராய்/


சரணம் 6
ஆதி3/-அந்த/ ரஹித/ வேத3/ வேத்3ய/ ராரா/ ப4வ/
முதல்/ முடிவு/ அற்ற/ மறைகளில்/ அறிப்படுவோனே/ வாராய்/ சிவனால்/

வேத்3ய/ நே/ நீவாட3னு/-ஐதி/ வேக3/ ராரா/
மதிக்கப்பெற்றோனே/ நான்/உன்னவன்/ ஆனேன்/ விரைவில்/ வாராய்/


சரணம் 7
ஸு-ப்ரஸன்ன/ ஸத்ய/ ரூப/ ஸுகு3ண/ ராரா/ ராம/
அமைதியானவனே/ மெய்ம்மையின்/ உருவே/ நற்குணத்தோனே/ வாராய்/ இராமா/

அ-ப்ரமேய த்யாக3ராஜுனு-ஏல ராரா (ராம)
அளவிடற்கரியனே/ தியாகராசனை/ ஆள/ வாராய்/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1கட்டுக - கட்டுகோ : 'கட்டுக' என்ற சொல் சரியாகும்

44வ வேத்3 - ப4வ வைத்3ய : 'ப4வ - வைத்3ய' என்பது சரியானால், இதனை
'உலக வாழ்வெனும் நோயினைப் போக்கும் மருத்துவன் (வைத்தியன்)' என பொருள் கொள்ளப்படும்; ('ப4வ' என்ற சொல்லுக்கு 'சிவனெ'ன்றும், 'உலக வாழ்வெ'ன்றும் பொருள் உண்டு)
Top

மேற்கோள்கள்

2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம - வால்மீகி இராமயணம் யுத்த காண்டம் அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது -


"நான் என்னை, ராமன் எனும் பெயர்கொண்ட, தசரதமன்னனுக்குப் பிறந்த, மனிதனாகவே கருதுகின்றேன்;
நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதனை, கடவுளர் தாங்களே தெரிவிப்பீராக" (11)
ஆனால், அகலிகையினை உயர்த்திய மகிமையோ, கழுகு ஜடாயுவுக்கும், பணிப்பெண் சபரிக்கும் மோக்ஷம் அளித்த மகிமையோ, மனித இலக்கணத்தினில் வாராது. எனவே தியாகராஜர் 'மகிமை திரையிட்டது போன்று' என்கின்றார்.
Top

விளக்கம்

3உத்33ண்ட3 - 'கோல் பிடித்து (உயர்த்தி) நிற்போன்' என பொருள் - இங்கு, 'கோல்', 'கோதண்டத்தினை'க் குறிக்கும்

முதல் முடிவற்ற - இராமன் பரம்பொருளென

5ஸத்ய ரூப : பரம்பொருளின் இலக்கணம் - 'சச்சிதானந்தம்' (ஸத்-சித்-ஆனந்தம்); ஸத்' என்பது 'உண்மை' - 'இன்மை (பொய்)' எனும் உலக வழக்கின் 'இருமை'க்கு மேற்பட்ட, இரண்டும் அடங்கிய (சதாசிவ) நிலையைக் குறிக்கும். இராமன் பரம்பொருள் என்பதனால் 'ஸத்' எனப்படும் 'உண்மை'யின் வடிவாகவோ அல்லது இராமன் தனது அவதாரத்தில் உண்மையின் இலக்கணமாகத் திகழ்ந்ததனால் அந்த 'உண்மை' (இருமை) வடிவென்றோ கொள்ளலாம்.
Top



Monday, October 13, 2008

நீகே தெலியக போதே - ராகம் ஆனந்த3 பை4ரவி - Neeke Teliyaka Pote - Raga Ananda Bhairavi

பல்லவி
நீகே தெலியக போதே
நேனேமி ஸேயுது3ரா

அனுபல்லவி
லோகாதா4ருட3வை நா
லோனி ப்ரஜ்வலிஞ்சு ஜாலி (நீ)

சரணம்
1எந்தெ3ந்து3 ஜூசின எந்தெ3ந்து3 பலிகின
எந்தெ3ந்து3 ஸேவிஞ்சின எந்தெ3ந்து3 பூஜிஞ்சின
அந்த3ந்து3 நீவனி தோசுடந்து3கு நீ
பாதா3ரவிந்த3முனு த்4யானிஞ்சின-
தெ3ந்து3கனி த்யாக3ராஜ ஸன்னுத (நீ)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்றோனே!

உனது திருவடித் தாமரையினை தியானித்தது, எங்கெங்கு நோக்கினும், எவருடன் பகர்ந்தாலும்,
எவரை வணங்கினாலும், எவரை வழிபட்டாலும், அங்கங்கு (அவரவர்) நீயாகவே தோன்றுதற்கு;

பல்லுலகிற்கும் ஆதாரமானவனாகியும், எனது உள்ளத்து, கொழுந்துவிட்டெரியும் துயரம்
ஏனென, உனக்கே தெரியாமற்போனால் நானென்ன செய்வேனய்யா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகே/ தெலியக/ போதே/
உனக்கே/ தெரியாமல்/ போனால்/

நேனு/-ஏமி/ ஸேயுது3ரா/
நான்/ என்ன/ செய்வேனய்யா/



அனுபல்லவி
லோக/-ஆதா4ருட3வை/ நா/
பல்லுலகிற்கும்/ ஆதாரமானவனாகியும்/ எனது/

லோனி/ ப்ரஜ்வலிஞ்சு/ ஜாலி/
உள்ளத்து/ கொழுந்துவிட்டெரியும்/ துயரம்/ உனக்கே..


சரணம்
எந்தெ3ந்து3/ ஜூசின/ எந்தெ3ந்து3/ பலிகின/
எங்கெங்கு/ நோக்கினும்/ எவருடன்/ பகர்ந்தாலும்/

எந்தெ3ந்து3/ ஸேவிஞ்சின/ எந்தெ3ந்து3/ பூஜிஞ்சின/
எவரை/ வணங்கினாலும்/ எவரை/ வழிபட்டாலும்/

அந்த3ந்து3/ நீவ-அனி/ தோசுட-அந்து3கு/ நீ/
அங்கங்கு (அவரவர்)/ நீயாகவே/ தோன்றுதற்கு/ உனது/

பாத3/-அரவிந்த3முனு/ த்4யானிஞ்சினதி3/-
திருவடி/ தாமரையினை/ தியானித்தது/

எந்து3கு-அனி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
ஏனென/ தியாகராசனால்/ சிறக்க/ போற்றப்பெற்றோனே/ உனக்கே..

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

1எந்தெ3ந்து3 ஜூசின - எங்கெங்கு நோக்கினாலும் நீயாகக் காண - ஸ்ரீமத் பகவத்கீதை, அத்தியாயம் 6-ல் கண்ணன் கூறிய வசனம் -


என்னையெங்குமாகவும் என்னில் யாவுமாகவும் எவன் காண்கின்றானோ
அவனிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவனும் பிரிவதில்லை 30

விளக்கம்

Top