Sunday, July 12, 2009

தியாகராஜ கிருதி - ராமா நினு நம்மின - ராகம் மோஹனம் - Rama Ninu Nammina - Raga Mohanam

பல்லவி
1ராமா 2நினு நம்மின வாரமு
காமா ஸகல லோகாபி4(ராம)

அனுபல்லவி
பாமர ஜன தூ3ர வர கு3
க்4ரு2ணாபாங்க3 ஸு1பா4ங்க3
3முனி ஹ்ரு23ப்3 ப்4ரு2ங்க3 (ராம)

சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு ரானு
ஜாகே3ல ஸுகு3ண ஸ்ரீ த31ரத2
ந்ரு2பால ஹ்ரு23யானந்த3 கர 4ஸ்ரீ
லோல
பால வெலயுமிக
பா2ல லோசன ஹ்ரு23-
யாலயாப்த ஜன பால கனக மய
சேலயிக பராகேலயிபுடு3
மம்மேல நீது3 மனஸேல ராது3 (ராம)


சரணம் 2
நீவே க3தியண்டினி கானி
நே வேரேமியெருக3னு முந்த3
ராவே நீ பத3 பங்கஜ ப4க்தி-
நீவே பா4வஜாரி நுத
தே3வ நீது3 பத3 ஸேவா ப2லமு மமு
காவுனே பதித
பாவன 5த்ரி-த31 நாத2 நீய முனி
ஜீவனானிஸ1மு ப்3ரோவவேல ஸ்ரீ ராம (ராம)


சரணம் 3
தா4ரா த4ர நிப4 தே3
ஜனாதா4ர து3ரிதாக4 ஜலத3
ஸமீர த்யாக3ராஜ ஹ்ரு23-
யாகா3ர ஸார ஹீன
ஸம்ஸாரமந்து3 வேஸாரி நின்னு
மனஸார நம்முகொன 6நேர லேனி நே-
நூரகயிக 7விசாரமந்து3டகு
மேர காது3 ஸ்ரீ ராம (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! பல்லுலகிற்கும் களிப்பூட்டுவோனே!

  • இழிந்த மக்களினின்றும் தூரமானவனே! நற்குணத்தோனே! கருணை கடைக்கண்ணோனே! நல்லுடலுறுப்புக்களோனே! முனிவரிதயக் கமலத்தின் வண்டே!

  • நற்பண்புகளோனே! தசரத மன்னனின் இதயத்தினை மகிழ்விப்போனே! இலக்குமியிடம் திளைப்போனே! நெற்றிக் கண்ணனின் இதயத் துறையே! சேர்ந்தோரைக் காப்போனே! பொன்மயமான ஆடைகளோனே!

  • காமன் பகைவனால் போற்றப் பெற்றோனே! தேவா! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! முப்பத்து மூவர் தலைவனை ஆள்வோனே! முனிவர்களின் வாழ்வே!

  • கார்முகில் நிகருடலோனே! மக்களுக்கு ஆதாரமானவனே! கொடிய பாவங்களெனும் முகிலை விரட்டும் புயலே! தியாகராசனின் இதயத்துறையே!


    • உன்னை நம்பினவனன்றோ?

    • தவறாது வரத் தாமதமேனோ? எம்மிடை ஒளிர்வாயினி; இனியும் அசட்டையேனோ? இவ்வமயம் எம்மையாள உனது மனதேன் வாராதோ?

    • நீயே புகலென்றேனே யன்றி நான் வேறேது மறியேன்; எதிரில் வாராயய்யா; உனது திருவடிக் கமலத்தின் பற்றினைத் தாராயய்யா; உனது திருவடிச் சேவையின் பயன் எம்மைக் காக்குமே; எப்போழ்தும் எம்மைக் காவாயேனோ?

    • சாரமற்ற உலக வாழ்வினில் களைப்புற்று உன்னை மனதார நம்பிக்கொள்ள நேராத நான் வீணாகயினித் துயருறல் முறையன்று.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நினு/ நம்மின வாரமு/
இராமா/ உன்னை/ நம்பினவன்/

காமா/ ஸகல லோக/-அபி4(ராம)/
அன்றோ/ பல்லுலகிற்கும்/ களிப்பூட்டுவோனே/


அனுபல்லவி
பாமர/ ஜன/ தூ3ர/ வர கு3ண/
இழிந்த/ மக்களினின்றும்/ தூரமானவனே/ நற்குணத்தோனே/

க்4ரு2ணா/-அபாங்க3/ ஸு14/-அங்க3/
கருணை/ கடைக்கண்ணோனே/ நல்/ உடலுறுப்புக்களோனே/

முனி/ ஹ்ரு2த்/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/ (ராம)
முனிவர்/ இதய/ கமலத்தின்/ வண்டே/


சரணம்
சரணம் 1
வாலாயமுகா3னு/ ரானு/
தவறாது/ வர/

ஜாகு3/-ஏல/ ஸுகு3ண/ ஸ்ரீ த31ரத2/
தாமதம்/ ஏனோ/ நற்பண்புகளோனே/ ஸ்ரீ தசரத/

ந்ரு2பால/ ஹ்ரு23ய/-ஆனந்த3 கர/ ஸ்ரீ/
மன்னனின்/ இதயத்தினை/ மகிழ்விப்போனே/ இலக்குமியிடம்/

லோல/ பால/ வெலயுமு/-இக/
திளைப்போனே/ எம்மிடை/ ஒளிர்வாய்/ இனி/

பா2ல/ லோசன/ ஹ்ரு23ய/-
நெற்றி/ கண்ணனின்/ இதயத்து/

ஆலய/-ஆப்த ஜன/ பால/ கனக/ மய/
உறையே/ சேர்ந்தோரை/ காப்போனே/ பொன்/ மயமான/

சேல/-இக/ பராகு/-ஏல/-இபுடு3/
ஆடைகளோனே/ இனியும்/ அசட்டை/ ஏனோ/ இவ்வமயம்/

மம்மு/-ஏல/ நீது3/ மனஸு/-ஏல/ ராது3/ (ராம)
எம்மை/ ஆள/ உனது/ மனது/ ஏன்/ வாராதோ/


சரணம் 2
நீவே/ க3தி/-அண்டினி/ கானி/
நீயே/ புகல்/ என்றேனே/ அன்றி/

நே/ வேரு/-ஏமி/-எருக3னு/ முந்த3ர/
நான்/ வேறு/ ஏதும்/ அறியேன்/ எதிரில்/

ராவே/ நீ/ பத3/ பங்கஜ/ ப4க்தினி/-
வாராயய்யா/ உனது/ திருவடி/ கமலத்தின்/ பற்றினை/

ஈவே/ பா4வஜ/-அரி/ நுத/
தாராயய்யா/ காமன்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/

தே3வ/ நீது3/ பத3/ ஸேவா/ ப2லமு/ மமு/
தேவா/ உனது/ திருவடி/ சேவையின்/ பயன்/ எம்மை/

காவுனே/ பதித/
காக்குமே/ வீழ்ந்தோரை/

பாவன/ த்ரி-த31/ நாத2/ நீய/ முனி/
புனிதப்படுத்துவோனே/ முப்பத்து (மூவர்)/ தலைவனை/ ஆள்வோனே/ முனிவர்களின்/

ஜீவன/-அனிஸ1மு/ ப்3ரோவவு/-ஏல/ ஸ்ரீ ராம/ (ராம)
வாழ்வே/ எப்போழ்தும்/ எம்மை/ காவாய்/ ஏனோ/ ஸ்ரீ ராமா/


சரணம் 3
தா4ரா த4ர/ நிப4/ தே3ஹ/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/

ஜன/-ஆதா4ர/ து3ரித/-அக4/ ஜலத3/
மக்களுக்கு/ ஆதாரமானவனே/ கொடிய/ பாவங்களெனும்/ முகிலை/

ஸமீர/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-
(விரட்டும்) புயலே/ தியாகராசனின்/ இதயத்து/

ஆகா3ர/ ஸார/ ஹீன/
உறையே/ சாரம்/ அற்ற/

ஸம்ஸாரமந்து3/ வேஸாரி/ நின்னு/
உலக வாழ்வினில்/ களைப்புற்று/ உன்னை/

மனஸார/ நம்முகொன/ நேர லேனி/ நேனு/-
மனதார/ நம்பிக்கொள்ள/ நேராத/ நான்/

ஊரக/-இக/ விசாரமு/-அந்து3டகு/
வீணாக/ இனி/ துயர்/ உறுதல்/

மேர/ காது3/ ஸ்ரீ ராம/ (ராம)
முறை/ அன்று/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம.

2 - நினு - நின்னு.

3 - முனி ஹ்ரு23ப்3 - முனி ஹ்ரு23யாப்3ஜ.

4 - ஸ்ரீ லோல - லோல : 'ஸ்ரீ' என்ற சொல்லில்லாது, 'லோல' என்ற சொல்லுக்குப் பொருள் கூறவியலாது.

Top

மேற்கோள்கள்
5 - த்ரி-த31 நாத2 - முப்பத்து மூவர் - தேவர்கள் : முப்பத்து மூவர் தலைவன் - இந்திரன்

Top

விளக்கம்
6 - நேர லேனி - 'நேரு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'அறிதல்' என்றும் பொருளாகும். எனவே, '(நம்பிக்கொள்ள) நேராத' என்பதனை- '(நம்பிக்கொள்ள) அறியாத' என்றும் கொள்ளலாம்.

7 - அந்து3டகு - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவ்விடத்தில், 'அந்து3ட' என்பதே சரியான சொல்லாகப் படுகின்றது.

காமன் பகைவன் - சிவன்

Top


Updated on 12 Jul 2009

4 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
ராமா 2நினு நம்மின வாரமு காமா - இது பன்மையில் அல்லவா உள்ளது. நம்மின வாடு கானா என்பது தானே ஒருமை.
ஆனால் சரணம் 2 ல் நீவே க3தியண்டினி என்பது ‘தன்மை ஒருமையில்’ உள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜர், பல கீர்த்தனைகளில், தன்னிலையில், ஒருமையையும் பன்மையையும் கலந்து பயன்படுத்துகின்றார்.

வணக்கம்
கோவிந்தன்

Anonymous said...

மதிப்புக்குரிய கோவிந்தன் அவர்களே,
ரமா நினு நம்மின என்ற பாடலை கேட்டு இன்புற்று இணையத்தில் அப்பாட்டின் பொருள் தேட முனைந்த சமயம் உங்கள் தளம் கண்டு பயனும் இன்பும் உற்று உங்களுக்கு நன்றி சொல்ல விழைந்தேன். உங்கள் பணி தொடர வேண்டும். அன்பு, விக்னராஜா

Seetharam said...

Wonderful translation thank you immensely