Sunday, February 22, 2009

தியாகராஜ கிருதி - வேங்கடேஸ1 - ராகம் மத்4யமாவதி - Venkatesa - Raga Madhyamavati

பல்லவி
1வேங்கடேஸ1 நினு ஸேவிம்பனு பதி3
வேல 2கனுலு காவலெனய்ய

அனுபல்லவி
பங்கஜாக்ஷ பரிபாலித முனி ஜன
பா4வுகமகு3 தி3வ்ய ரூபமுனு கொன்ன (வேங்க)

சரணம்
சரணம் 1
எக்குவ நீவனி 3தி3க்குல 4பொக33
அக்கர கொனி மதி3 ஸொக்கி கனுகொ3
நிக்கமு நீவே க்3ரக்குன ப்3ரோவு
தளுக்கனி மெரஸே சக்க தனமு க3ல (வேங்க)


சரணம் 2
ஏ நோமு ப2லமோ நீ நாமாம்ரு2
பானமு அனு 5ஸோபானமு தொ3ரிகெனு
ஸ்ரீ நாயக பரமானந்த3 நீ ஸரி
கானமு ஸோ1பா4யமானாங்க்4ரு2லு க3ல (வேங்க)


சரணம் 3
யோகி3 ஹ்ரு23ய நீவே க3தியனு ஜன
பா43தே4ய வர போ4கீ311யன
பா43வத ப்ரிய த்யாக3ராஜ நுத
நாகா3சலமுபை பா3கு33 நெலகொன்ன (வேங்க)


பொருள் - சுருக்கம்
  • மங்களமான, தெய்வீக உருவமேற்றுக்கொண்ட வேங்கடேசா! தளுக்கென மின்னும் களையுடை வேங்கடேசா! மங்கலமான திருவடிகளையுடை வேங்கடேசா! சேடாத்திரி மீது நன்கு நிலைபெற்ற வேங்கடேசா!

  • பங்கயற் கண்ணா! முனிவர்களைப் பேணுவோனே! திருமகள் நாயகா! பரமானந்தமே! யோகியர் இதயத்துறையே! நீயே கதியெனும் மக்களுக்கு உகந்தவையருளும் உயர் அரவரசன் மேற்றுயில்வோனே! பாகவதர்களுக்கினியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


    • உன்னை சேவிக்க பதினாயிரம் கண்கள் வேணுமய்யா;

    • மேலோன் நீயென நாற்றிசையும் புகழ, அக்கறை கொண்டு, மனது சொக்கி, கண்டுகொள்ள உண்மை நீயே;

    • எந்த நோன்பின் பயனோ, உனது நாம அமிழ்து பருகலெனும் ஏணி கிடைத்தது;

    • உனக்கீடு காணோம்;

    • விரைவினில் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேங்கடேஸ1/ நினு/ ஸேவிம்பனு/
வேங்கடேசா/ உன்னை/ சேவிக்க/

பதி3 வேல/ கனுலு/ காவலெனு/-அய்ய/
பதினாயிரம்/ கண்கள்/ வேணும்/ அய்யா/


அனுபல்லவி
பங்கஜ/-அக்ஷ/ பரிபாலித/ முனி ஜன/
பங்கயற்/ கண்ணா/ பேணுவோனே/ முனிவர்களை/

பா4வுகமகு3/ தி3வ்ய/ ரூபமுனு/ கொன்ன/ (வேங்க)
மங்களமான/ தெய்வீக/ உருவம்/ ஏற்றுக்கொண்ட/ வேங்கடேசா...


சரணம்
சரணம் 1
எக்குவ/ நீவு/-அனி/ தி3க்குல/ பொக33/
மேலோன்/ நீ/ என/ நாற்றிசையும்/ புகழ/

அக்கர/ கொனி/ மதி3/ ஸொக்கி/ கனுகொ3ன/
அக்கறை/ கொண்டு/ மனது/ சொக்கி/ கண்டுகொள்ள/

நிக்கமு/ நீவே/ க்3ரக்குன/ ப்3ரோவு/
உண்மை/ நீயே/ விரைவினில்/ காப்பாய்/

தளுக்கு/-அனி/ மெரஸே/ சக்க தனமு/ க3ல/ (வேங்க)
தளுக்கு/ என/ மின்னும்/ களை/ உடை/ வேங்கடேசா....


சரணம் 2
ஏ/ நோமு/ ப2லமோ/ நீ/ நாம/-அம்ரு2த/
எந்த/ நோன்பின்/ பயனோ/ உனது/ நாம/ அமிழ்து/

பானமு/ அனு/ ஸோபானமு/ தொ3ரிகெனு/
பருகல்/ எனும்/ ஏணி/ கிடைத்தது/

ஸ்ரீ/ நாயக/ பரம/-ஆனந்த3/ நீ/ ஸரி/
திருமகள்/ நாயகா/ பரம/ ஆனந்தமே/ உனக்கு/ ஈடு/

கானமு/ ஸோ1பா4யமான/-அங்க்4ரு2லு/ க3ல/ (வேங்க)
காணோம்/ மங்கலமான/ திருவடிகளை/ யுடை/ வேங்கடேசா...


சரணம் 3
யோகி3/ ஹ்ரு23ய/ நீவே/ க3தி/-அனு/ ஜன/
யோகியர்/ இதயத்துறையே/ நீயே/ கதி/ யெனும்/ மக்களுக்கு/

பா43தே4ய/ வர/ போ4கி3/-ஈஸ1/ ஸ1யன/
உகந்தவையருளும்/ உயர்/ அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/

பா43வத/ ப்ரிய/ த்யாக3ராஜ/ நுத/
பாகவதர்களுக்கு/ இனியோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

நாக3-அசலமு/ பை/ பா3கு33/ நெலகொன்ன/ (வேங்க)
சேடாத்திரி/ மீது/ நன்கு/ நிலைபெற்ற/ வேங்கடேசா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

சில புத்தகங்ககளில், பல்லவி, அனுபல்லவி மற்றும் எல்லா சரணங்களின் கடைசியல் 'ஸ்ரீ' என்ற பதம் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - வேங்கடேஸ1 - வெங்கடேஸ1 : 'வேங்கடம்' என்பது தமிழ்ச்சொல். திருமலையானின் ஸுப்ரபாதத்தினில் அவனை 'வேங்கடாசல பதே தவ ஸுப்ரபாதம்' என்றுதான் கூறப்படுகின்றது. எதுகை-மோனை வகையில் நோக்கினாலும், இரண்டாவது வரியில் வரும் 'வேல' என்ற சொல்லினால், முதல் வரியில், 'வேங்கட' என்றுதானிருக்க வேண்டும்.

2 - கனுலு - கன்னுலு : இரண்டு சொற்களுக்கும் ஒரு பொருளே.

3 - தி3க்குல - தி3க்குலு

4 - பொக33 - பொக333

Top

மேற்கோள்கள்

விளக்கம்

5 - ஸோபானமு - ஏணிப்படி - இச்சொல் பக்தி நூல்களிலும் ஞான நூல்களிலும் காணப்படுகின்றன.

ஸ்வாமி தேசிகனின் பரம பத ஸோபானம் நோக்கவும்.

ஆதி சங்கரரின் ஸோபான பஞ்சகம் எனப்படும் உபதேச பஞ்சகம் விளக்கம் மற்றும் செய்யுட்களும் பொருளும் நோக்கவும்.

முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது 'பார்வதி பரமேஸ்வரௌ' என்ற கீர்த்தனையில் அவர்களை (பார்வதி பரமேஸ்வரர்களை) 'ஸோபான மார்க3 முக்2யாதா4ரௌ' (சோபான மார்க்கத்தின் முக்கியமான ஆதாரம்) என்கிறார்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு விழித்திருந்து 'பாம்பு ஏணி'யெனப்படும் 'பரம பத ஸோபானம்' விளையாடுவர். பரம பத சோபானம் - படம் காண்க.

சேடாத்திரி - வேங்கடேச பெருமாளின் கோயிலுள்ள மலை

Top


Updated on 22 Feb 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவியில் ரூபமனுகொன்ன என்பதற்குப் பதிலாக ரூபமுனு கொன்ன என்பது சரியா.
 நீங்கள் ரூபமு+ அனுகொன்ன என்று பதம் பிரித்துள்ளீர். எனக்கு இது சரியாகத் தோன்றவில்லை. அனுகொன்ன என்பதற்கு ஏற்றுக்கொண்ட என்று பொருளா?  ரூபமுனு கொன்ன என்றால் உருவத்தைக் கொண்ட என்று பொருள்.
 
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'ரூபமுனு கொன்ன' என்று திருத்திவிட்டேன். தவற்றினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

வணக்கம்
கோவிந்தன்