Monday, December 13, 2010

தியாகராஜ கிருதி - ராகா ஸ1ஸி1 வத3ன - ராகம் டக்க - Raakaa Sasi Vadana - Raga Takka

பல்லவி
ராகா ஸ1ஸி1 வத3ன இங்க பராகா

அனுபல்லவி
நீகா கு3ணமு காராத3வனீ
காந்த கருணா ஸ்வாந்த (ரா)

சரணம்
சரணம் 1
நம்மியுன்ன நிஜ தா3ஸுலகு
நம்மிகலனொஸகி3 1மரதுரா
தம்மி கனுலனொக பாரி நனு
13ய ஜூட3 ராதா3 1மரியாதா3 (ரா)


சரணம் 2
பாரி பாரி நின்னனுதி3னமு
கோரி கோரின வாரினியீ
தா3ரி ப்3ரோசிதிவா 1மாயா
தா4ரி 1ராரா1யேலுகோரா (ரா)


சரணம் 3
நீவே தெலுஸுகொந்து3வனுசுனு
பா4விஞ்சுசுனு நேனு நீ பத3
ஸேவ ஜேஸிதி மாஹானு-
பா4வ த்யாக3ராஜுனிபை (ரா)


பொருள் - சுருக்கம்
  • முழுமதி வதனனே!
  • புவிமகள் மணாளா! கருணை யுள்ளத்தோனே!
  • மாயையின் ஆதாரமே!
  • பெருந்தகையே!

  • இன்னமும் அசட்டையா?
  • உனக்கு அந்த குணம் கூடாதய்யா,
    • நம்பியுள்ள உண்மைத் தொண்டர்களுக்கு, நம்பிக்கையூட்டி (பின்) மறப்பரோ?
    • கமலக்கண்களாலொரு முறை என்னைக் கருணிக்கலாகாதா? மரியாதையோ?

    • திரும்பத்திரும்ப உன்னை அன்றாடம் விரும்பி வேண்டியவர்களை இந்த விதமாகக் காத்தாயோ?
    • வாருமைய்யா! ஆளுமைய்யா!

    • நீயே தெரிந்துகொள்வாயென்று கருதிக் கொண்டு, நான் நினது திருவடிச் சேவை செய்தேன்.


  • தியாகராசனின் மீது இன்னமும் அசட்டையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராகா/ ஸ1ஸி1/ வத3ன/ இங்க/ பராகா/
முழு/ மதி/ வதனனே/ இன்னமும்/ அசட்டையா/


அனுபல்லவி
நீகு/-ஆ/ கு3ணமு/ காராது3/-அவனீ/
உனக்கு/ அந்த/ குணம்/ கூடாதய்யா/ புவிமகள்/

காந்த/ கருணா/ ஸ்வாந்த/ (ரா)
மணாளா/ கருணை/ யுள்ளத்தோனே/


சரணம்
சரணம் 1
நம்மி/-உன்ன/ நிஜ/ தா3ஸுலகு/
நம்பி/ யுள்ள/ உண்மை/ தொண்டர்களுக்கு/

நம்மிகலனு/-ஒஸகி3/ மரதுரா/
நம்பிக்கை/ யூட்டி/ (பின்) மறப்பரோ/

தம்மி/ கனுலனு/-ஒக/ பாரி/ நனு/
கமல/ கண்களால்/ ஒரு/ முறை/ என்னை/

3ய ஜூட3 ராதா3/ மரியாதா3/ (ரா)
கருணிக்கலாகாதா/ மரியாதையோ/


சரணம் 2
பாரி/ பாரி/ நின்னு/-அனுதி3னமு/
திரும்ப/ திரும்ப/ உன்னை/ அன்றாடம்/

கோரி/ கோரின வாரினி/-ஈ/
விரும்பி/ வேண்டியவர்களை/ இந்த/

தா3ரி/ ப்3ரோசிதிவா/ மாயா/
விதமாக/ காத்தாயோ/ மாயையின்/

தா4ரி/ ராரா/-ஏலுகோரா/ (ரா)
ஆதாரமே/ வாருமைய்யா/ ஆளுமைய்யா/


சரணம் 3
நீவே/ தெலுஸுகொந்து3வு/-அனுசுனு/
நீயே/ தெரிந்துகொள்வாய்/ என்று/

பா4விஞ்சுசுனு/ நேனு/ நீ/ பத3/
கருதிக் கொண்டு/ நான்/ நினது/ திருவடி/

ஸேவ/ ஜேஸிதி/ மாஹானுபா4வ/
சேவை/ செய்தேன்/ பெருந்தகையே/

த்யாக3ராஜுனிபை/ (ரா)
தியாகராசனின் மீது/ முழுமதி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மரதுரா - த3ய ஜூட3 ராதா3 - மரியாதா3 - மாயா - ராரா - ஏலுகோரா : மரதுர - த3ய ஜூட3 ராத3 - மரியாத3 - மாய - ரார - ஏலுகோர

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 13 Dec 2010

2 comments:

  1. அன்புளள கோவிந்தன் அவர்களே
    சரணம் ஒன்றில் கனுலனொக பாரி என்பதற்கு கண்களை ஒருமுறை என்றுதானே பொருள்.
    கோவிந்தஸ்வாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

    நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால், அடுத்து வரும் 'தயஜூட ராதா' என்பதுடன் சேர்த்து நோக்குகையில், 'கண்களை' என்று பொருள் கொண்டால் பொருந்தாது. அதனால்தான் 'கண்களால்' என்று பொருள் கூறினேன்.

    வணக்கம்,
    கோவிந்தன்

    ReplyDelete