Monday, November 29, 2010

தியாகராஜ கிருதி - எந்த பாபினைதி - ராகம் கௌ3ளிபந்து - Enta Paapinaiti - Raga Gaulipantu - Prahlada Bhakti Vijayam

பல்லவி
எந்த பாபினைதினேமி ஸேயுது3 ஹா
ஏலாகு3 தாளுது3னே ஓ ராம

அனுபல்லவி
அந்த து3:க2முலனு தீர்சு ஹரினி ஜூசி
எந்த வாரைனனு பா3ய ஸஹிந்துரே (எ)

சரணம்
சரணம் 1
மச்சிகதோ தானு முச்சடாடி3 மோஸ
பு3ச்சியேச மதி3 வச்செனோ கடகடா (எ)


சரணம் 2
ஆஸ மிஞ்சி ஆயாஸ பட3னு விதி4
வ்ராஸுனா நா முத்3து3 வேஸுனி கானமே (எ)


சரணம் 3
ஸேவ ஜேயுடே ஜீவனமனியுண்டி
தை3வமா நா பாலி பா4க்3யமிட்லாயெனே (எ)


சரணம் 4
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜு தா பொங்கு3சு
பூஜிஞ்சு ஸ்ரீ ரகு4 ராஜிந்து3 லேனந்து3(கெந்த)


பொருள் - சுருக்கம்

  • எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?

    • அனைத்துத் துயரங்களையும் தீர்க்கும் அரியைக் கண்டு, எப்படிப்பட்டவரும் (அவனைப்) பிரிய சகிப்பரோ?
    • கனிவுடன், தான் உரையாடி, (பிறகு) மோசம் செய்து ஏய்க்க மனது வந்ததோ? ஐயையோ!
    • ஆசை மிகுந்து, அயர்ச்சி யடைய, பிரமன் (தலையில்) எழுதுவானா? எனதினிய வேடத்தோனைக் காணோமே!
    • சேவை செய்வதுவே பிழைப்பென இருந்தேன்; என்பங்கிற் பேறு இப்படியானதே!


  • திகழும் தியாகராஜன், தான் பேருவகையுடன் தொழும் ரகுராஜன் இங்கு இல்லாததற்கு, எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ பாபி/-ஐதினி/-ஏமி/ ஸேயுது3/ ஹா/
எத்தனை/ பாவி/ யானேன்/ என்/ செய்வேன்/ ஐயகோ/

ஏலாகு3/ தாளுது3னே/ ஓ ராம/
எவ்விதம்/ தாங்குவேன்/ ஓ இராமா/


அனுபல்லவி
அந்த/ து3:க2முலனு/ தீர்சு/ ஹரினி/ ஜூசி/
அனைத்து/ துயரங்களையும்/ தீர்க்கும்/ அரியை/ கண்டு/

எந்த வாரைனனு/ பா3ய/ ஸஹிந்துரே/ (எ)
எப்படிப்பட்டவரும்/ (அவனைப்) பிரிய/ சகிப்பரோ/


சரணம்
சரணம் 1
மச்சிகதோ/ தானு/ முச்சட-ஆடி3/ மோஸ/
கனிவுடன்/ தான்/ உரையாடி/ (பிறகு) மோசம்/

பு3ச்சி/-ஏச/ மதி3/ வச்செனோ/ கடகடா/ (எ)
செய்து/ ஏய்க்க/ மனது/ வந்ததோ/ ஐயையோ/


சரணம் 2
ஆஸ/ மிஞ்சி/ ஆயாஸ/ பட3னு/ விதி4/
ஆசை/ மிகுந்து/ அயர்ச்சி/ யடைய/ பிரமன்/ (தலையில்)

வ்ராஸுனா/ நா/ முத்3து3/ வேஸுனி/ கானமே/ (எ)
எழுதுவானா/ எனது/ இனிய/ வேடத்தோனை/ காணோமே/


சரணம் 3
ஸேவ/ ஜேயுடே/ ஜீவனமு/-அனி/-உண்டி/
சேவை/ செய்வதுவே/ பிழைப்பு/ என/ இருந்தேன்/

தை3வமா/ நா/ பாலி/ பா4க்3யமு/-இட்லு/-ஆயெனே/ (எ)
தெய்வமே/ என்/ பங்கிற்/ பேறு/ இப்படி/ யானதே/


சரணம் 4
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ தா/ பொங்கு3சு/
திகழும்/ ஸ்ரீ தியாகராஜன்/ தான்/ பேருவகையுடன்/

பூஜிஞ்சு/ ஸ்ரீ ரகு4 ராஜு/-இந்து3/ லேனி-அந்து3கு/-(எந்த)
தொழும்/ ஸ்ரீ ரகு ராஜன்/ இங்கு/ இல்லாததற்கு/ எத்தனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், பிரகலாதன் அரியை மறுபடியும் காண முறையிடுவதாக

Top


Updated on 30 Nov 2010

2 comments:

  1. திரு கோவிந்தன்அவர்களே
    சரணம் 3- சுருக்கவுரையிலும் பதவுரையிலும் ‘ஸேவ ஜேயுடே’ என்பதற்கு   ‘சேவை செய்துவே’ என்று பொருள் கொடுத்துள்ளீர். இது “சேவை செய்வதுவே” என்று இருக்கவேண்டும்.
     சரணம் 4- என்பங்கிற் பேறு இப்படியானதே! - என்னுடைய/என்னிடத்தைய என்பதுசரியாகுமா.
    வணக்கம்
    கோவிந்தசாமி

    ReplyDelete
  2. திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

    தவற்றினைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    எனக்குத் தெரிந்தவரையில் 'என்பங்கிற் பேறு' என்பதற்கும் 'என்னுடைய பங்கிற் பேறு' என்பதற்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

    வணக்கம்,
    வே கோவிந்தன்

    ReplyDelete